Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

ஊடகங்களில் மதத்திணிப்பா "வணக்கம்"?

இன்று சக்தி TV இல் Grand Master நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தபோது "வணக்கம்" ஊடகங்களில் ஒரு மதத்திணிப்பின் கருவியாக இருக்கிறதா என்றொரு சந்தேகம் வந்தது.

முஸ்லிம் மாணவி ஒருவருக்கு நிகழ்ச்சியின் அறிவிப்பாளரும் நிகழ்ச்சி நடத்துபவரும் "வணக்கம்" என்றே வரவேற்றனர். (இங்கு வரவேற்றனர் என்ற வார்த்தை பிரயோகம் சரியானதாக தெரியவில்லை.)

முதல் சந்தேகம்
வணக்கம் என்பதால் கருதப்படுவது என்ன? எனக்கு தெரிந்த தமிழின் படி வணக்கம் என்றால் வணங்குதல் என்றல்லவா பொருள்படும்? அப்படி பொருள்படுமாயின் "வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே" என்ற முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கையோடு அது முரண்படுகிறது. அதேவேளை அறிவிப்பாளர் நேயரின் மதம்தொடர்பான வரவேற்பு முறையத்தான் கையாளவேண்டும் என்பது என் வாதமல்ல. அதுவும் அறிவிப்பாளர் மீதான மத திணிப்பா என்ற கேள்வியெழுகிறது.

இரண்டாவது சந்தேகம்
இது அனுசரித்துப்போதல், இன நல்லுறவு, சகிப்புத்தன்மை போன்ற ஏதாவது ஒரு விடயத்தின் கீழ் வருகிறதா? அப்படியாயின் அறிவிப்பாளர் எம்மதத்தை சார்ந்தவராக இருக்கிறாரோ அவரது மத வழக்கப்படி உள்ள சொல்லை பிரயோகிக்கப்படவேண்டும். சகிப்புத்தன்மை, நல்லுறவு போன்றன இரு பக்கமும் இருக்கவேண்டுமல்லவா? ஒரு பக்கம் மாத்திரம் இருந்தால் அது திணிப்பாகவே அமையுமல்லவா? ஆனால் தமிழ் ஊடகங்களில் மத நிகழ்ச்சிகள் அல்லாத மற்ற நிகழ்ச்சிகளில் அவ்வாறு பிரயோகிக்கப்பட அனுமதிக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது.

மூன்றாவது சந்தேகம்
மதங்களை தாண்டிய வரவேற்புச்சொல் ஏதாவது தமிழில் இருக்கிறதா? ஏன் அவ்வாறான ஒரு ஆன சொல்லை எல்லா அறிவிப்பாளர்களும் பயன்படுத்தக்கூடாது?

குறிப்பு: சந்தேகங்களைத்தான் கேட்கிறேன். எனவே சந்தேகங்களை தீர்க்க நாகரிகமான சொற்பிரயோகங்களையே பிரயோகிக்கவும்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

48 comments:

Anonymous said...

இருக்கிறது, ஒரு நிகழ்ச்சியை நடத்துபவர் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் பொதுவான ஒரு சொல்லை பயன் படுத்தலாம் அதுதான்: " இந்த நிகழ்ச்சியை காண உங்கள் அனைவரையும் மன மகிழ்வுடன் வரவேற்கிறோம்". இது ஒன்று போதாத ? எந்த மதத்தினரையும் புண் படுத்தாத ஒரு சொல், இதை சம்மந்தப்பட்டவர்கள் யோசிக்க வேண்டும்.

கன்கொன் || Kangon said...

எனக்குத் தெரிந்து வணக்கம் என்பது வெறுமையான ஒரு வரவேற்புச் சொல்.
வணக்கம் என்றால் வணங்குதல் என்று அர்த்தமல்ல.
வணக்கம் என்பது ஆங்கிலத்தின் greeting என்பதன் தமிழ்ப்பதம்.
வேண்டுமானால் இதைச் சென்று பாருங்கள்.
http://www.google.com/dictionary?langpair=ta|en&q=%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&hl=en&aq=f

அதைத்தவிர ஊடகங்களில் ஒவ்வொரு மதத்தினரையும் அவர்களது மதப்படி அழைக்க முடியாது.
ஊடகங்கள் பிறகு மதஸ்தாபனங்களாக மாறிவிடும்.

வணக்கம் என்பது மதம் எல்லாவற்றையும் சார்ந்த ஒரு சொல் தான்.
இந்துக்கள் அதைப் பயன்படுத்துகிறார்கள் என்பதற்காக அது இந்துக்களுக்குரிய சொல் கிடையாது.

நான் உங்களிடம் சொல்வது ஒன்று தான்.
எல்லா விடயங்களையும் மதங்களோடு சம்பந்தப்படுத்தி குழப்பிக் கொள்ளாதீர்கள்.
அப்படிக் குழப்பிக் கொள்ளப் போகிறீர்கள் என்றால் ஒன்று சொல்கிறேன்,
ஷக்தி அல்லது சக்தி என்பது ஏறத்தாழ இந்து சமயத்தில் நிறையவே பயன்படுத்தப்படும் சொல், கடவுளை அழைக்கும் சொல், ஆகவே சக்தி நிறுவனத்திடம் அதன் பெயரை மாற்றச் சொல்லுங்கள்.

Bavan said...

வணக்கம்,

நீங்கள் ஏன் இதை மதம் சார்பாகப் பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை.

தவிர அந்த பெண்ணுக்கு வணக்கம் சொன்னது தப்பில்லை,

வணக்கம் என்ற வார்த்தை வணக்குவதாக அமையாது, தவிர வணக்கம் என்பது கும்பிடுவதாக அமையாது.

வணங்குதல் வேறு, வணக்கம் சொல்வது வேறு..

தமிழில் GOOD MORNINGக்கு காலைவணக்கம், என்றுதானே சொல்கிறோம்?

ஆனால் நீங்கள் மதசார்பாக இவற்றை ஏன் ஆராய்கிறீர்கள்,

ஊடகங்களை பார்த்தால் பத்திரிகைகள் எல்லாம் சூரியன், கதிரவனின் பெயரைக்குறிப்பதாகவே இருக்கிறது. அதற்காக அது இந்துக்கடவுளின் பெயரில் வருகிறது என்று மற்றவர்கள் படிப்பதில்லையா?

//இது அனுசரித்துப்போதல், இன நல்லுறவு, சகிப்புத்தன்மை போன்ற ஏதாவது ஒரு விடயத்தின் கீழ் வருகிறதா? //

ஊடகங்கள் மதச்சார்பற்ற நிறுவனங்கள்தான், அங்கு இனமுமில்லை, மதத்திணிப்பு இடம்பெறுவதில்லை, அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் ஒரு முஸ்லிம் மதத்தவர் ஆனால் அவர் ஒலிபரப்பிய நிகழ்ச்சிகளில் வணக்கம் சொன்னதில்லையா?

அதாவது நீங்கள் தேவையில்லாமல் மதத்தையும் ஊடகங்களையும் போட்டுக்குழப்பிக்கொள்கிறீர்கள், மதம் வேறு ஊடகம் வேறு, நாம் பேசுவது வேறு,

//மதங்களை தாண்டிய வரவேற்புச்சொல் ஏதாவது தமிழில் இருக்கிறதா?//

வணக்கம் என்பதையே நீங்கள் அச்சொல் என்று வைத்துக்கொள்ளலாம்...

EKSAAR said...

நன்றி www.podakkuditntj.com . ஆம் நீங்கள் சொல்வதுபோல் பொதுவான வரவேற்புச்சொற்கள் பாவிக்கப்படவேண்டும் என்பதே என் அவா.

கன்கொன் வெறுமையான ஒரு சொல் வரவேற்புச்சொல்லாக இருக்கமுடியாது. அர்த்தமற்ற ஒரு சொல்லை நீங்கள் வாழ்த்தாக வரவேற்பாக ஏற்பீர்களா? greeting என்பதன் தமிழ்ப்பதம் வாழ்த்து. வணக்கம் அல்ல. (உம் தமிழ் தாய் வாழ்த்து என்று தான் கூறுகிறார்கள், அதை வணக்கம் என்று கூறுவதில்லையே. ) என்றால் சிலர் காலை வணக்கம் என மொழி பெயர்க்கக்கூடும். ஆனால் சரியான மொழிபெயர்ப்பு "நல்ல / சிறந்த காலை" என்றுதான் இருக்கக்கூடும்.

//அதைத்தவிர ஊடகங்களில் ஒவ்வொரு மதத்தினரையும் அவர்களது மதப்படி அழைக்க முடியாது.
ஊடகங்கள் பிறகு மதஸ்தாபனங்களாக மாறிவிடும்.//

அதைத்தான் நானும் சொல்கிறேன். பொதுவான சொல் ஒன்று இருக்கவேண்டும் என்றுதான் நான் எழுதியிருக்கிறேன்.

எல்லா விடயங்களையும் மதத்தோடு குழப்பிக்கொள்ளவில்லை. ஆனால் வணக்கம் என்பது வணங்குதல் என்ற சொல்லோடு தொடர்பு பட்டிருந்தால், இன்னொரு மனிதனை வணங்க முடியாது என்ற கருத்தில் இருக்கும் ஒருவரை கட்டாயப்படுத்த முடியாதல்லவா?

மற்றும் சக்தி என்பதன் அர்த்தம் Energy என்றுதான் வருகிறது. எனவே அது இந்து மதத்திற்குரிய சொல்லாக கருதப்பட முடியாது.

தமிழில் துரைபோன யாராவது வணக்கம் என்ற சொல்லுக்கு அர்த்தம் இருக்கிறதா இல்லையா என்று
சொல்லி தருவீர்களா? அச்சொல் எதிலிருந்து பிறந்தது என்றாவது?

EKSAAR said...

நன்றி Bavan வருகைக்கு,
//ஊடகங்களை பார்த்தால் பத்திரிகைகள் எல்லாம் சூரியன், கதிரவனின் பெயரைக்குறிப்பதாகவே இருக்கிறது. அதற்காக அது இந்துக்கடவுளின் பெயரில் வருகிறது என்று மற்றவர்கள் படிப்பதில்லையா?//

வணக்கம் என்று சொன்னால் பதிலளிக்க வேண்டியவர்களாகிறோம். பெயர்களுக்கு பதிலளிக்க வேண்டியதில்லையே..

//அப்துல் ஹமீத் நிகழ்ச்சிகளில் வணக்கம் சொன்னதில்லையா?//

அறிவிப்புத்துறை மீது கொண்ட காதலால் அவர் இவ்வாறான திணிப்புகளிக்கு இயைந்து போனதாக் கூட கருதலாமே..?

நான் கேட்டிருப்பது சந்தேகம். சந்தேகத்தை தீர்க்க வரும்போது சண்டைக்கான ஆயத்தத்துடன் வர வேண்டாமே ;)

கன்கொன் || Kangon said...

நான் உங்களுக்கு கூகுள் அகராதியில் அர்த்தம் தந்த பின்பும் வணக்கம் என்பது greeting என்பதன் அர்த்தம் என்பதைத் தான் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல...

கண்ணாடியை கழற்றிவிட்டு உலகைப் பாருங்கள்.

வணக்கம் என்பது எந்தவகையிலும் ஒரு மதத்தைக் குறிக்கும் சொல் கிடையாது.

அப்படிப் பார்க்கப் போனால் சக்தி என்பது இந்து சமயச் சொல்லே.

சக்தி வழிபாடு என்று ஒன்றே இருக்கிறது தெரியுமா?
வேண்டுமானால் கூகிளிட்டுப் பாருங்கள் சக்தி வழிபாடு என்பதைப் பற்றி அறிவீர்கள்.

வணக்கம் என்பது மதம் சார்ந்தது அல்ல.
மீண்டும் தருகிறேன் பாருங்கள்.
http://bit.ly/bMNuJS

EKSAAR said...

கன்கொன் ,
அதில் இரண்டாவதாக தரப்பட்டுள்ள பொருள் பல தெய்வ வணக்கம் என்று இருக்கிறதே. அப்படியாயின் அதனுடன் தொடர்பு பட்ட சொல் ஆக இல்லையா?

மற்றும்
greeting message = வாழ்த்துச் செய்தி
e - mail greeting = மின்னஞ்சல் வாழ்த்து
இங்கே greeting என்றால் வாழ்த்து என்று தானே வருகிறது.

Bavan said...

//நான் கேட்டிருப்பது சந்தேகம். சந்தேகத்தை தீர்க்க வரும்போது சண்டைக்கான ஆயத்தத்துடன் வர வேண்டாமே ;)//

ஏன் இதை சண்டைக்கான ஆயத்தமாகக் கருதுகிறீர்கள் அப்படி நான் ஒன்றும் கூறவில்லையே..

//சக்தி என்பதன் அர்த்தம் Energy என்றுதான் வருகிறது.//

ஆம் இந்து மதத்தில் சிவனின் சக்தி(Energy)தான் சக்தி..

அப்படி என்றால் சக்தி என்ற சொல்லை விஞ்ஞானத்தில் கூடப்பாவிக்கக்கூடாது..

//அதில் இரண்டாவதாக தரப்பட்டுள்ள பொருள் பல தெய்வ வணக்கம் என்று இருக்கிறதே. அப்படியாயின் அதனுடன் தொடர்பு பட்ட சொல் ஆக இல்லையா?//

ஆம் அங்குஒரு மதத்தை சுட்டிக்காட்டி தெய்வ வணக்கம் என்று தெரிவிக்கப்படவில்லை,பல தெய்வ வணக்கம் என்றுதானே தெரிவிக்கிறார்கள்,

தவிர முதலில் கொடுக்கப்பட்ட பொருள் முதன்மையானது, மற்றவை இரண்டாம் பட்சம் எனக் கொள்ளுங்கள்..;)

அல்லது

சில சொற்கள் சில இடங்களில் வெவ்வேறு பொருள்படும் எனவே அந்தந்த இடங்களில் அந்தந்த பொருளை கருதினால் இந்தப்பிரச்சினை வராது..;)

EKSAAR said...

எந்த மதத்திலும் சக்தி இறைவனுக்கானதாக இருக்கிறது. பிள்ளையார் என்றோ, முருகன் என்றோ இருப்பவற்றைத்தான் இந்து சமய சொற்களாக கருதமுடியும்.

ஆயினும் இங்கு பிரச்சினை சொல் எந்த மதத்தில் பயன்படுத்தப்படுகின்றது என்பதல்ல. வணக்கம் என்பதன் பொருள் பற்றியே.

கன்கொன் சொல்கிறார் அது ஓர் அர்த்தமற்ற வரவேற்புச்சோல் என்று

Bavan சொல்கிறார் முதலாவதாக வரும் பொருளை எடுத்துக்கொள்ளுங்கள் என்று

இதில் எதை எடுத்துக்கொள்வது?

"பல தெய்வ வணக்கம்" என்பதில் "பல தெய்வ" என்ற சொற்றொடர், இந்துக்களில் கடவுளர்கள் பலர் இருப்பதால் பாவிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் "ஒரிறைவன்" என்ற கோட்பாடு "பல தெய்வ" என்ற கோட்பாடுடன் சமரசம் செய்யாதல்லவா?

வணக்கம் என்பது வணங்குதலுடன் தொடர்பற்ற சொல்லாக இல்லாவிட்டால் எனக்கும் பிரச்சினையில்லை..

virutcham said...

இப்படி எல்லாம் வேறு கிளப்பி விட ஆரம்பிச்சுட்டிங்களா ?
ஒருவரின் பெயரை மட்டும் வைத்து அவர் இன்ன மதத்தை சார்ந்தவர் என்றே முடிவுக்கு வந்து அந்த மதத்தின் அடிப்படையில் வரவேற்க வேண்டும் என்று சொல்லுகிறிர்களா ? அல்லது ஒவ்வொருவரும் அவரவர் மதத்தின் அடையாளத்தோ டேயே அலைய வேண்டும்( மற்றவர் குழம்பாமல் இருக்க வேண்டுமே) என்றுசொல்லுகிறீர்களா


உலகத்தில் இருக்கும் மதங்களின் எண்ணிக்கை, அவற்றின் சம்பிரதாயங்கள் எல்லாம் தெரிந்து கொண்டு அப்படி அப்படி அழைத்தால் தான் ஏற்றுக் கொள்வீங்களோ ?

http://www.virutcham.com

virutcham said...

entha mathathaiyum sarathavargalai eppadi azhaippathu?

virutcham said...

இந்திய மொழிகளில் பெரும் பான்மையான வார்த்தைகள் இந்து மதத்தோடு நெருங்கி இருப்பதை தவிர்க்க முடியாது. மொழியின் வளர்ச்சியே இலக்கியத்தின் வழியாகவும், இலக்கியம் என்பது பெரும்பாலும் தெய்வ வழிப்பாட்டுக்கு உரியதாகவுமே இருந்து வந்துள்ளது.
நீங்கள் மத அர்த்தம் செய்யத் துவங்கினால் இந்திய மொழிகளை தவிர்க்க வேண்டியது தான்.

வணங்குதல் என்பது மனிதனை வணங்குதல் அல்ல, மரியாதைக் குரிய வார்த்தை என்றும் கொள்ளலாம், மனிதனில் உள்ள தெய்வத்தை வணங்குதல் என்றும் கொள்ளலாம். வயதில் பெரியவர் கூட சிறியவரை வணக்கம் என்று அழைப்பது அதனால்தான்

http://www.virutcham.com

Think Why Not said...

உங்களுடைய முதலாவது சந்தேகம் அடிப்படையில் தவறானது அன்பரே...
எந்த ஒரு நபரையும் (பெரியவராக இருப்பினும் சிறியவராக இருப்பினும்) வணக்கம் என்று கூறி வரவேற்பது தமிழ் மரபு... வணக்கம் என்பது வெறுமனே இறைவணக்கம் என்ற கருத்தில்/அர்த்தத்தில் மட்டும் கருதுவது தவறானது.. சிங்களத்தில் ஆயுபோவனுக்கு ஒத்தது.. ஆங்கிலத்தில் greeting செய்வதற்கு இடம் காலம் பொருள் என்பதை பொறுத்து Good morning, Good Afternoon, Good Evening, Welcome, etc.. போன்ற பல வார்த்தைகள் பாவிக்கப்படுகின்றன.. ஆனால் வணக்கம் என்ற சொல் தமிழில் இடம் காலம் பொருள் என்பதைத் தாண்டி வரவேற்று உபசரிக்கும் சொல்லாகவே பயன்படுத்தப்படிகிறது.. ஆனால் தனியே வரவேற்க மட்டும் பயன்படும் சொல் அல்ல... இறைவணக்கத்தையும் குறிக்கலாம்.. ஆயினும் இறைவனை வணங்குதல் என்பதுடன் வணக்கம் என்ற வரவேற்பு அர்த்தத்தை உடைய சொல்லுடன் போட்டு குழப்பி கொள்ள கூடாது....

ஒரு சொல் பேசப்படும் காலம், சூழல், பொருள், தொனி என்பவற்றை பொறுத்து அர்த்தம் வேறுபடும்...
தமிழில் பல சொற்கள் இவ்வாறு தான் என்பது நான் சொல்லி தங்களுக்கு தெரியவேண்டியதில்லை...
உதாரணமாக "பார்த்து படி" என்பது படிக்கும் ஒருவரை பார்த்து கவனமாக படிக்கவும் என்ற தொனியிலும் சொல்லலாம்... அதே வார்த்தைகள் படி ஏறும் போது தடுக்கிய ஒருவரை பார்த்தும் கூறலாம்... ஓரே வார்த்தைகள் ஒரு வேறு இடங்களில் இரு முழுமையான வேறுபட்ட அர்த்தங்களை தருகிறது...

இது மொழியின் இலக்கணம் அழகியல் சார்ந்த விடயமே தவிர, மதத்தை போட்டு குழப்பி கொள்ள வேண்டிய அவசியமில்லை...
ஆகவே முதல் சந்தேகமே அடிப்படையில் மாறானது என்பதால் இரண்டாவது சந்கேத்துக்குரிய தேவை இல்லை என நினைக்கிறேன்...

மூன்றாவது சந்தேகம்: "வணக்கம்" என்பதே மிகச்சிறந்த மதங்களை தாண்டிய வரவேற்பு சொல்லாகும்...

ARV Loshan said...

ஆகா மறுபடி ஆரம்பிச்சுட்டாருய்யா..
வணக்கம் ஒரு பொது சொல்.. அது இந்து மதத்தை சார்ந்தது அல்ல..
யாராவது துறைபோன பேராசிரியர்களை அழைத்துக் கேளுங்கள்..

அன்புள்ள என்ன கொடும சார்.. இப்பொழுது மிகத் தெளிவாகவே புரிகிறது என் நீங்களை உங்கள் பெயரில் வெளிப்படுத்தாமல் புனை பெயரில் மறைந்து வாழ்கிறீர்கள் என்று..

எல்லாவற்றையும் மதக்கண்ணாடி கொண்டு பார்க்காதீர்கள்..

இதையும் சண்டைக்கான ஆயத்தம் என்று சொல்லாதீர்கள்..
உங்கள் அனைத்துப் பதிவுகளிலும் ஒரு வித பிரிந்து போதல் மற்றும் துவேஷம் காண்கிறேன்..

நான் சமயம் சார்ந்தவன் அல்லன் என்பதால் வணக்கம் குறித்து தெளிவாகவே சொல்கிறேன்...
வணங்குதல்,வழிபடுதல்,வணக்கம் எல்லாவற்றிற்கும் தனித்தனியான வேறுபாடுகள் உள்ளன.

//உலகத்தில் இருக்கும் மதங்களின் எண்ணிக்கை, அவற்றின் சம்பிரதாயங்கள் எல்லாம் தெரிந்து கொண்டு அப்படி அப்படி அழைத்தால் தான் ஏற்றுக் கொள்வீங்களோ ?

http://www.virutcham.com

February 23, 2010 8:14 PM

Virutcham said...
entha mathathaiyum sarathavargalai eppadi azhaippathu?//

:) agreed

கன்கொன் || Kangon said...
This comment has been removed by a blog administrator.
EKSAAR said...

நன்றி Virutcham, Thinks Why Not , LOSHAN, கன்கொன்

//ஒருவரின் பெயரை மட்டும் வைத்து அவர் இன்ன மதத்தை சார்ந்தவர் என்றே முடிவுக்கு வந்து அந்த மதத்தின் அடிப்படையில் வரவேற்க வேண்டும் என்று சொல்லுகிறிர்களா ?//

//entha mathathaiyum sarathavargalai eppadi azhaippathu?//

நீங்கள் பதிவை விளங்க முயற்சிகக்வில்லை என்று தெரிகிறது.
ஏன் மதங்களை தாண்டிய
வரவேற்புச் சொல்லை ஏன் எல்லா அறிவிப்பாளர்களும் பயன்படுத்தக்கூடாது? என்றுதான் எழுதிருக்கிறேன்.

ஆனால் இங்கு பல்ர் இதை புரிந்துகொள்ளவில்லை
என்றே தோன்றுகிறது.

//ஒரு வித பிரிந்து போதல் மற்றும் துவேஷம் காண்கிறேன்..//

முதலில் நியாயம் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். வீரகேசரியில் ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வாக்குகள் அட்டவணைப்படுத்தப்பட்டபோது 3 ஆவது இடத்தில் சிவாஜிலிங்கத்தை வைத்தார்கள். (அவர் 9ஆவது இடத்தில் இருந்தபோது!) ஒன்று பெற்ற வாக்கின் ஒழுங்கில் இருந்திருக்க வேண்டும். அல்லது தமிழ் பேசுபவர்கள் எல்லாரையும் தமிழர்கள் என்று கருதியிருந்தால் 4 ஆவது இடத்தில் சிவாஜிலிங்கத்தை வைத்திருக்க வேண்டும். தமிழ் என்ற போர்வையில் ஹிந்து ென்பதைத்தானே
கருதினார்கள்? அதை கேள்விக்குட்படுத்தியபோது கூட துவேஷம் என்கிறார்கள். நியாயம் இல்லாமல் விதண்டாவாதம் செய்தால் தான் துவேஷம் என்று சொல்லலாம். ஊடகங்களில் மதச்சார்பினமை பற்றி பேசினால் துவேஷம் என்றால்?

//நான் சமயம் சார்ந்தவன் அல்லன் என்பதால் //
இதை வன்மையாக மறுக்கிறேன். நீங்கள் அதில் குறைந்த அளவு ஈடுபடுகிறீர்கள் என்பதே உண்மை. நீங்கள் நம்பாவிட்டால் ஏன் சில நிகழ்ச்சிகளிலாவது கலந்து
கொள்கிறீர்கள்?

கன்கொன் || Kangon said...

//நீங்கள் பதிவை விளங்க முயற்சிகக்வில்லை என்று தெரிகிறது.
ஏன் மதங்களை தாண்டிய
வரவேற்புச் சொல்லை ஏன் எல்லா அறிவிப்பாளர்களும் பயன்படுத்தக்கூடாது? என்றுதான் எழுதிருக்கிறேன். //

அதைத்தான் எல்லோரும் சொல்கிறோம் வணக்கம் என்பது மதம் சார்ந்த சொல் அல்ல என்று.
அந்தக் கருத்தைப் புரிந்து கொள்ளும் பக்குவம் உங்களிடமில்லை.


//முதலில் நியாயம் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். வீரகேசரியில் ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வாக்குகள் அட்டவணைப்படுத்தப்பட்டபோது 3 ஆவது இடத்தில் சிவாஜிலிங்கத்தை வைத்தார்கள். (அவர் 9ஆவது இடத்தில் இருந்தபோது!) ஒன்று பெற்ற வாக்கின் ஒழுங்கில் இருந்திருக்க வேண்டும். அல்லது தமிழ் பேசுபவர்கள் எல்லாரையும் தமிழர்கள் என்று கருதியிருந்தால் 4 ஆவது இடத்தில் சிவாஜிலிங்கத்தை வைத்திருக்க வேண்டும். தமிழ் என்ற போர்வையில் ஹிந்து ென்பதைத்தானே
கருதினார்கள்? அதை கேள்விக்குட்படுத்தியபோது கூட துவேஷம் என்கிறார்கள். நியாயம் இல்லாமல் விதண்டாவாதம் செய்தால் தான் துவேஷம் என்று சொல்லலாம். ஊடகங்களில் மதச்சார்பினமை பற்றி பேசினால் துவேஷம் என்றால்?//

வணக்கத்தையும் வீரகேசரியையும் இப்போது இணைப்பானேன்?
முதலில் வணக்கம் என்பது மதச் சார்பற்ற சொல் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாத நீங்கள் இன்னொன்றைப் பற்றி எவ்வாறு கதைக்கலாம்?
மற்றையது சிவாஜிலங்கத்தை முன்னால் போட்டதற்கும் இந்து (எனக்குத் தெரிந்து இலங்கையில் பொதுவாக ஹிந்து என்ற சொல் பயன்படுவதில்லை) என்பதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
அவர்கள் தமிழ் என்று தான் போட்டார்கள்.
மதம் ஒருபோதும் அங்கு வரவில்லை.

அவர்கள் ஏன் இட்டார்கள், அற்குக் காரணம் எல்லாம் வேறு விடயம், அல்லது இந்தப் பதிவுக்கு சம்பந்தமி்ல்லாத விடயம். ஆனால் அங்கு மதம் முன்னிறுத்தப்படவில்லை.

Think Why Not said...

என்ன கொடுமை சார் அவர்களுக்கு...

நீங்கள் இன்னும் "வணக்கம்" என்பது மத அடிப்படையான சொல் என்பதை எந்த அடிப்படையில் விவாதிக்கிறீர்கள் எனபது புரியவில்லை...

மேலே commentஇன் மூலம் தெளிவாக அதை விபரித்தேன்.. சரி என்று இன்னும் ஏற்றுக் கொண்டது வெளிப்படையாக கூறவில்லை அதுதான் கேட்டேன்..

இருந்தாப் பதிவுக்கு சம்பந்தமில்லாத கருத்துக்கள் மின்னஞ்சலுக்கு வந்ததாலேயே இவற்றை கேட்டேன்...

அல்லது வலைப்பதிவுக்கு இவ்வாறு சம்பந்தமற்ற விசயங்களை கோர்பதன் மூலம் அதிக traffic கொண்டு வருவதற்கா யுக்தியா..?
அப்படியாயின் நமக்கும் சொல்லுங்க பாஸ்... நாமளும் பயன்படுத்தி கொள்வோமில்ல...

EKSAAR said...

நன்றி கன்கொன் Thinks Why Not
இங்கு துவேஷம் என்ற வார்த்தை என்னை நோக்கி பிரயோகிக்கப்பட்டதால், அவ்வாறான வார்த்தை பிரயோகம் முன்பொருமுறை பிரயோகிக்கப்பட்ட சந்தர்ப்பத்தை ஞாபகமூட்டினேன்.

//அவர்கள் தமிழ் என்று தான் போட்டார்கள்.//

அப்படியாயின் வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் 3ஆம் இடத்தில் இருந்தது யார்? இந்த சுட்டியை பாருங்கள் http://www.slelections.gov.lk/presidential2010/AIVOT.html

நீங்கள்தான் அவரை 3ஆம் இடத்தில் போட்டிருக்கிறார்கள் என்று twitter இல் சொன்னீர்கள். அவர் ஹிந்து என்பதால் 3ஆம் இடத்தில் போட்டிருக்கிறார்களா என்று
கேட்டபோது, துவேஷம் காட்டுவதாக வேறொருவரால் சொல்லப்பட்டது! அப்படியாயின் இதை எவ்விதத்தில் நியாயப்படுத்துவது?

//"வணக்கம்" என்பது மத அடிப்படையான சொல் என்பதை எந்த அடிப்படையில் விவாதிக்கிறீர்கள் எனபது புரியவில்லை..//

விவாதிக்கவில்லை. எழும் சந்தேகங்களையே கேட்கிறேன்.. :D

கன்கொன் || Kangon said...

ஐயா கொடுமை... (உங்கள் பெயரை சுருக்கிக் கூப்பிட்டேன்)

நான் வீரகேசரியை இங்கு சரி என்றோ அவர்களை பாதுகாத்தோ கதைக்கவில்லை.
இதை விரும்பாமல் ருவிற்றரில் முதலில் போட்டதே நான் தான். அதை ஞாபகமும் வைத்திருக்கிறீர்கள்.

ஆனால் உங்களுக்கு தெளிவாகச் சொன்னேன்,
மற்றையது சிவாஜிலங்கத்தை முன்னால் போட்டதற்கும் இந்து (எனக்குத் தெரிந்து இலங்கையில் பொதுவாக ஹிந்து என்ற சொல் பயன்படுவதில்லை) என்பதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

ஐயா...
சிவாஜிலிங்கத்தை அவர்கள் முன்னிறுத்தியதது சிவாஜிலிங்கம் பெரிதாக வாக்குகளைப் பெறவில்லை என்பதை ஒப்பிட என்று நினைக்கிறேன், ஏனென்றால் சிவாஜிலிங்கள் உள்ளுக்குள் 'வாங்கியதாக' குற்றச்சாட்டுக்கள் இருந்ததால் அவருக்கு தமிழ்மக்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்தது... தை எடுத்துக் காட்டப் போட்டிருக்கலாம்.
ஆனால் நான் வீரகேசரி செய்ததை நியாயப்படுத்த எப்போதும் முயலவில்லை, அது எனக்கு அப்பாற்பட்டது, அது அரசியல் ரீதியாக எதைக் குறிக்கிறது என்றும் எனக்குத் தெரியாது.

ஆனால் அதற்கும் மதத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
அதைத் தான் சொன்னேன்.


//விவாதிக்கவில்லை. எழும் சந்தேகங்களையே கேட்கிறேன்.. :D//

விளக்கமளித்தும் அதை உள்வாங்கியதாகத் தெரியவில்லையே?

உமர் | Umar said...

அப்பொழுது எனக்கு 12 வயது. ஒரு நாள் பள்ளிவாசலில் அரபி வகுப்பிற்குச் சென்றிருந்தேன். அப்பொழுது ஹஸ்ரத் இஸ்லாத்தில் இருக்கும் சில உன்னதங்கள் என்று வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். என்னிடம், நீ ஒருவரைக் காலை வேளையில் பார்க்கும்போது என்ன கூறுவாய் என்று கேட்டார். நான் Good Morning என்று கூறுவேன் என்றேன்.

மாலையில் பார்க்கும்போது? - Good Evening.

மரண வீட்டில் சந்திக்கும்போது? - Morning அல்லது Evening என்றேன்.

அப்படியானால் ஆங்கில மொழியில் பொதுவான வார்த்தைகள் இல்லை அல்லவா? அதுதான் உலகில் பெரும்பகுதி நாடுகளில் பேசப்படுகிறது. ஆனால், அது எல்லா நேரங்களிலும் பேசக் கூடிய வார்த்தைகளை கொண்டிருக்கவில்லை. ஆனால், அரபி மொழி தனிச்சிறப்பு வாய்ந்தது. நாம் கூறும் அஸ்ஸலாமு அலைக்கும் எல்லா நேரங்களிலும், எல்லா சூழ்நிலைகளிலும் பயன்படுத்தக் கூடியது. எனவே, நாம் அவசியம் அரபி மொழியை முழுவதுமாகக் கற்றுக்கொள்ள வேண்டும். - இவ்வாறு எங்கள் அனைவருக்கும் வேதம் ஓதினார். ஏதோ மையமாய் தலையாட்டி வைத்தேன். அப்பொழுது, தமிழ் மொழியின் சிறப்புகளை நான் அறிந்திருக்கவில்லை.

அந்த அரபிப் பள்ளியிலேயே நான் மிகவும் துடிப்பானவனாக இருந்ததனால், குர் ஆன், ஹதீஸ் என்று பலவற்றையும் எனக்கு சிறப்பு வகுப்புகள் மூலமும் போதித்து வந்தனர். அவற்றுள் நம்ப முடியாத சில விஷயங்களை, நான் ஏன் என்று கேட்பேன்? குர் ஆனில் இருக்கும் எதனையும் கேள்வி கேட்கக்கூடாது; அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறினர். எனக்கு முதன் முறையாய் குர் ஆன் மீதே சந்தேகம் வந்தது. பல இடங்களில் குர் ஆனில் இருக்கும் தவறுகளைச் சுட்டிக் காட்டினேன். அப்படியெல்லாம் பேசக்கூடாது என்பதே பதிலாய் வந்தது.

இந்த நிலையில்தான், எனக்கு தமிழ் இலக்கியம் அறிமுகமானது. தமிழின் சொற்சுவையில் நான் மயங்கத் தொடங்கியபோதுதான், வணக்கம் என்ற சொல்லின் முழுப் பரிமாணமும் தெரிந்தது. எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட அஸ்ஸலாமு அலைக்கும் என்னும் வாக்கியத்தை விட வணக்கம் என்ற சொல்லின் வீச்சும், அழகும் என்னை கவர்ந்தது. வணக்கம் என்னும் வார்த்தையின், முழுமையான விளக்கத்தினை, இந்தப் பதிவின் comments பகுதியில், Thinks Why Not, மிக அழகாக அளித்திருந்தார்.

சர்வ நிச்சயமாய், எல்லா சூழ்நிலைகளிலும், எல்லாத் தரப்பினராலும், பயன்படுத்தக்கூடிய ஒரு வார்த்தையாகவே, நான் வணக்கத்தினைப் பார்க்கின்றேன். இறை வணக்கம் என்ற ஒரே அர்த்தத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு, வணக்கம் என்பது மதத்திற்கு அப்பாற்ப்பட்டது என்பதை உணர்ந்து கொண்டு, அனைவருக்கும் வணக்கம் கூறி வளமாய் வாழ்க. வணக்கம்.

பி.கு. ஒருவேளை நானும் சிறுவயதில் சலவை செய்யப்பட்டவாறே வளர்ந்திருந்தால், இப்படிதான் இருந்திருப்பேன். என் அறிவுக்கண்ணைத் திறந்த அனைத்து நூல் ஆசிரியர்களுக்கும் எனது வணக்கங்கள்.

EKSAAR said...

கும்மி,
உங்கள் comment ஐ பார்த்தால் சிரிப்பு சிரிப்பாய் வருகிறது.

//ஒரு நாள் பள்ளிவாசலில் அரபி வகுப்பிற்குச் சென்றிருந்தேன//

//அந்த அரபிப் பள்ளியிலேயே நான் மிகவும் துடிப்பானவனாக இருந்ததனால், குர் ஆன், ஹதீஸ் என்று பலவற்றையும் எனக்கு சிறப்பு வகுப்புகள் மூலமும் போதித்து வந்தனர//

இஸ்லாமியராக நடிப்பதற்கு முன்
ஆக குறைந்தது முஸ்லிம்கள் என்ன செய்கிறார்கள் என்று கொஞ்சம் தேடி தெரிந்திக்கலாம். பாவம்.

இதுவரை எல்லாரும் வணக்கம் மதங்களை தாண்டிய சொல், வணக்கம் என்பது தமிழரின் வரவேற்புமுறை (ஒரு சிலர் பொங்கல் தமிழர் பண்டிகை. அதை எல்லா தமிழ் பேசுபவர்களும் கொண்டாடவேண்டும் என்பது போல)என்று சொல்கிறார்களே
தவிர,

அதற்குள் அடங்கியிருக்கும் பொருள் என்ன என்று விளக்கவேயில்லை! வெறுமனே தமிழர் வரவேற்பு முறை என்ற ஒற்றை நூலில்தான் தொங்கிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் வணக்கம் என்பது அர்த்தமற்ற ஒருசொல் என்கிறார்கள்.

சிவாஜிலிங்கம் வாக்குகளை பெறவில்லை என்று
காட்ட விரும்பியிருந்தால் 9 ஆவது இடத்திலேயே
காட்டியிருக்கவேண்டும். பார்க்கும் மக்கள் 3,4,5.. என அவர் பெயரை தேடி கடைசியில் "நீ இங்க இருக்கியா ராசா," அன்று 9 இடத்தில் கண்டுபிடித்திருப்பார்கள். ;)

கன்கொன் || Kangon said...

ஐயா கொடுமை, (உங்களைச் செல்லமாக அழைக்கிறேன்)

நீங்கள் ஏன் இப்போது வீரகேசரியை இங்கே இழுத்து வைத்திருக்கிறீர்கள்?

நான் வீரகேசரி செய்ததை நியாயப்படுத்த முயலவில்லையே?
நான் செய்தேனா?
ஏனய்யா?

வணக்கம் என்றால் வணக்கம் தான். அதற்கு அர்த்தம் greetings.
அதைவிட விளக்கம் எங்கும் கிடைக்காது.
அதை ஏற்கனவே சொல்லியாயிற்று,
ம்ஹ்ம்... திருந்த வாய்ப்பில்லை.

உமர் | Umar said...

நான் இஸ்லாத்தை விட்டு வெளியேறி 20 வருடங்களுக்கு மேலாகிவிட்டன அன்பரே!

எங்கள் ஊரில் (தஞ்சை மாவட்டம்) ஓதப் போவது என்று கூறுவோம். ஓதுரியா? என்ன ஓதுரே? போன்று வட்டார வழக்கு இருக்கும். அந்த வார்த்தைகளை உபயோகித்தால், பலருக்கும் புரியாது என்பதால் பொதுவான வார்த்தையாக அரபி வகுப்பு என்று குறித்திருந்தேன். எங்கள் ஊரில், சில வீடுகளுக்கு ஒஸ்தாபி (ஓதுரம்மா) வந்தாலும், பலரும் பள்ளிவாசலுக்குச் சென்று ஓதுவதே வழக்கம்.

குர் ஆன் ஓதிக் கொண்டிருந்தபோதே, சில ஹதீஸ்களை கூறி, அவற்றின் அடிப்படையில், சில பொது விஷயங்களின் அடிப்படையிலும், பயான் (உரை) தயாரிக்குமாறு என்னிடம் ஹஸ்ரத் கூறுவார். ஒவ்வொரு வாரமும், ஜும் ஆ (குத்பா, எங்கள் ஊரில் கொத்துவாத் தொழுகை) தொழுகைக்கு முன்பு நடைபெறும் பயானில், நான் தயாரித்த உரையே அவர் நினைவில் நிறுத்தி வாசிப்பார்.

குர் ஆன் ஓதி முடித்த பின்பு சிந்து சுப்யான் ஓதத் தொடங்கியதும்தான், குர் ஆன் குறித்து பல சந்தேகங்கள் எனக்கு எழுந்தன. பிறகு சில வருடங்கள் கழித்து, குர் ஆன் ஆங்கில மொழிபெயர்ப்பு வாசித்தபின்புதான், குர் ஆன் என்பதே Book of correlations, என்று தெரிந்தது. இன்னும் சில நாட்களில் ஜாகிர் நாயக் வெளியிடப்போகும் ஒரு அறிவிப்பை (நிலவில் நீர்) பார்த்த பின்பு, நீங்களும் உணர்வீர்கள்.

குர் ஆனில் இருக்கும் முரண்பாடுகள் குறித்து ஒரு blog தொடங்கவுள்ளேன். அதில் வந்துப் பார்த்து உண்மையை உணர முயற்சி செய்யுங்கள். அதுவரை தமிழ் மொழியின் வளமைப் பற்றியும் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

வணக்கம்.

alex paranthaman said...

தோழர்களுக்கு வணக்கம்,

என்னையும் இதில் இணைத்துக் கொண்டமையால் சில கருத்துக்களை முன் வைக்கிறேன். தவறிருந்தால் திருத்தவும்.

வணக்கம் என்பது தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அனைவரும் வயது வேறுபாடின்றி ஒருவருக்கு ஒருவர் தெரிவித்துக் கொள்ளும் வரவேற்பு வார்த்தைப் பதமாகும். சிறியவர் பெரியவருக்கும், பெரியவர் சிறியவருக்கும், ஆண் பெண்ணுக்கும் என எவரும், எவ்வேளைகளிலும் வணக்கம் சொல்ல முடியும். ஆனால் கால ஓட்டத்தில் வணக்கத்தை சிறியவர் தான் முதலில் பெரியவருக்கு சொல்ல வேண்டும், பெண் முதலில் ஆணுக்கு சொல்ல வேண்டும் என மாற்றிக் கொண்டார்கள்.

வணக்கம் எனும் சொல் வணங்குதல் என்ற பொருளைக் கொண்டிருக்கிறது என்பது சரிதான். இறைவனை வணங்கும்போது, இறைவன் முன் மனிதன் தன்னைத் தானே தாழ்த்திக் (பக்தி, பணிவு) கொள்கிறான்.

ஒவ்வொரு மனிதனுள்ளும் இறைவன் (நற்பண்புகள்) இருக்கிறான். (கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது)

பணிவை வெளிப்படுத்துவதற்காகவே நாமும் வணக்கம் சொல்லிக் கொள்கிறோம். மற்றவரும் வணக்கம் (அவர்களுடைய பயன்பாட்டு மொழியில்) சொல்லும் போது அவரும் அதை ஏற்றுக் கொண்டு பேச்சின் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறார்கள்.

தெரிந்த அல்லது அறிமுகமில்லாத ஒருவரைக் காணும் போது அவர்களுடன் உரையாட வேண்டிய சூழலில் வணக்கம், சலாம், ஆசிர்வதிக்கப்பட்ட நாளாக அமையட்டும் (Have a blessed day) போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப் படுவது மதக் கருத்துக்களைப் பரப்புவதற்காகவோ, திணிப்பதற்காகவோ அல்ல. மனித மனங்களை இணைப்பதற்காக. ஆகையால் வணக்கம்.

GOOD MORNING - ஆங்கில மொழி - யாவரும் பயன்படுத்தலாம்
HAVE A BLESSED DAY - ஆங்கில மொழி - யாவரும் பயன்படுத்தலாம்
SALAM - அரபு மொழி - யாவரும் பயன்படுத்தலாம்
VANAKKAM - தமிழ் மொழி - யாவரும் பயன்படுத்தலாம்

வணக்கம் என்றால் என்ன?
தன் இஷ்டத்திற்கு வாழ்வதை குழி தோண்டி புதைத்து விட்டு அல்லாஹ்வின் இஷ்டத்திற்கு ஐக்கியப்பட்டு வாழ்வதற்கு பெயர் தான் வணக்கம்.
-- ஷைகு பைஜி ஷாஹ் நூரி (ரஹ்)


சலாம் என்றால் ---- இறைவனின் அமைதி, சாந்தம் உங்களுக்கு உண்டாகட்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும் ---- இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!
பதில் சொல்பவரும் ----- வ அலைக்கும் சலாம் (உங்களின் மீது அவ்வாறே சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டுமாக)
சலாம் - சலாம் என்று ஒரு வார்த்தையில்கூட ஒருவருக்கொருவர் சலாம் கூறி கொள்ளலாம்.
இந்த வார்த்தை முஸ்லீம்களுக்கு மட்டும் சொந்தமில்லை. கடவுள் நம்பிக்கை உடைய எல்லோருக்கும் பொதுவான வார்த்தை இன்னும் அழகான வார்த்தையும்கூட. யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் சொல்லலாம்.

சலாம் சொல்வதற்கு மதக் கட்டுப் பாடுகள் இல்லை. அதே போல் வணக்கத்திற்கும் இல்லை. இச்சொற்கள் மொழியினால் மட்டுமே வேறுபடுகின்றன. பொருளினால் மற்றொரு மனிதனுக்கான பிரார்த்தனைகளையும், நல்வாழ்வையும், இறையாசியையும், அடிப்படைப் பண்பான பணிவையுமே வேண்டி நிற்கின்றன.

வணக்கத்திற்கும் மதத்திற்கும் தொடர்பில்லை. வணக்கம் கூறலாம் என்பதே என் பணிவான கருத்து

Think Why Not said...

நல்ல கருத்து மன்னார் அமுதன்...

உண்மையில் தூங்குபவர்களை எழுப்பலாம்...
தூங்குவது போல் நடிப்பவர்களை!!!

எதையும் குறுகிய வட்டத்தில் குறுகிய மனபாங்குடன் தான் பார்ப்பேன் என்று அடம் பிடிப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது....

Anonymous said...

வணக்கம்!- சன் டிவியின் காமெடி நிகழ்ச்சியில் சிட்டிபாபு, அர்ச்சனா சொல்லும் வணக்கம் ஒருவகை. எதிரில் இருப்பவரின் கண்களைப் பார்த்து, கம்பீரமாகக் கமலாஹாசன் சொல்லும் வணக்கம் இன்னொரு வகை.தலைக்கு மேல் கைகளைக் கூப்பியும் நெஞ்சில் கைகைகளைக் குவித்தும் சொல்லப்படும் வணக்கம் மற்றொரு வகை. அனேகமாக இலவசமாகக் கிடைப்பனவற்றில் ‘வணக்கம் ‘ என்ற வாழ்த்தும் ஒன்று.

தமிழில் வணக்கம் என்ற பதம் பிறரை வாழ்த்தப் பயன்படுத்தப் படுகிறது. சாதாரணமாக மதிப்புக்குரியவர்களை ‘வணக்கம்’ என்று வாழ்த்துகிறோம். தமிழ் இலக்கியங்களில் இறைவனை, தலைவன் என்றும் போற்றுவர். இறைவனுக்கு மட்டும் உரித்தான வணக்கம் என்ற மரியாதைச் சொல் மனிதர்களுக்கும் பயன் படுத்தப்படுகிறது. உண்மையில் வணக்கம் என்ற வார்த்தை பொருத்தமான வகையில் பயன் படுத்தப்படுகிறதா என்பதை, ஒரு முஸ்லிமுடைய கண்ணோட்டத்தில் இங்குப் பார்ப்போம்.

முஸ்லிம்களைத் தவிர மற்றவர்கள் வணக்கம் என்று பரஸ்பரம் வாழ்த்திக் கொள்வர்.ஓரளவு இஸ்லாத்தின் கோட்பாடுகளை விளங்கியவரிடம் “வணக்கம்” என்று சொல்லப்பட்டால், முடிந்தமட்டும் வேறு வார்த்தைகளில் பதில் சொல்வார் ; அல்லது பதில் சொல்லாமல் தவிர்த்து விடுவார்.பிறமத நண்பர்களுடன் பணியாற்றும் இடங்களில் சிலநேரம் முஸ்லிம்கள் இவ்வாறு பதில் சொல்லாமல் இருப்பதால் தவறாக நினைக்கத் தோன்றும். நன்கு அறிந்த நண்பர்களோ சக ஊழியர்களோ ஓரளவு இதற்கான காரணத்தை அறிந்திருப்பர். பெரும்பாலோர் முஸ்லிம்கள் ஏன் வணக்கம் சொல்லப்பட்டால்,பதிலுக்கு “வணக்கம்” என்று சொல்வதில்லை என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

“வணக்கத்திற்குரியவன் இறைவன் மட்டுமே!” என்பது இஸ்லாத்தின் அடிப்படை. படைத்த இறைவனைத் தவிர வேறு யாரையும் வணங்கக்கூடாது என்பது முஸ்லிம்களின் ஆழ்ந்த நம்பிக்கை.பரஸ்பரம் மனிதர்களுக்குள் வணக்கம் என்று சொல்லிக் கொள்வதால் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லையே; வாயளவில் வணக்கம் என்று சொல்லப்பட்டால் பதிலுக்கு வணக்கம் என்று சொல்லிச் செல்லலாமே; ஏன் அதை இறைவனுக்கு இணைவைப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும்? நெருப்பு என்று சொன்னால் வாயைச் சுட்டு விடுமா?” என்று அடுக்கடுக்காய்க் கேள்விகள் எழும். நியாயமானக் கேள்விகள்!

இருவர் சந்தித்துக் கொள்ளும்போது வணக்கம் என்று சொல்வது ஒருவர் மற்றொருவரை வழிபடுவதாக அர்த்தம் அல்ல. இருந்தாலும் ‘வணக்கம்’ என்பது இருவர் சந்தித்துக் கொள்ளும்போதோ மரியாதைக்காகவோ பரிமாறிக் கொள்ளும் சொல் மட்டுமல்ல என்பது முஸ்லிம்களின் கருத்து.சொல்லும் செயலும் ஒன்றாக இருந்தால்தான் ஒருவன் உண்மையானவனாக இருக்க முடியும்.சொல்வது ஒன்று செய்வது வேறு என்பது நாகரிகமுள்ளவர்களுக்கு அடையாளம் அல்ல.

மண்ணை வணங்கிப் பாடுவதாக உள்ளதாலேயே வந்தே மாதரம் பாடலை முஸ்லிம்கள் பாடத் தயங்குவர். இந்திய முஸ்லிம்களின் தேசப் பற்றை அளவிடுவதற்கு வந்தே மாதரம் பாட வேண்டும் என எதிர்பார்ப்பது நகைப்பிற்கு உரியது – அதுவும் மனிதனை சகமனிதனாக மதிக்காத கோட்பாட்டில் இருக்கும் கும்பலைச் சார்ந்தவகள் இதை வலியுறுத்துவதுதான் இன்னும் வேடிக்கை!

வாயளவில் வணக்கம் என்பது, உண்மையில் சகமனிதனை மதிப்பதாகாது. வணக்கம் என்பது மரியாதை நிமித்தமாகப் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளும் முகமன்/ வாழ்த்து என்றால் ‘ தாய் மண்ணே வணக்கம்’ என்பது நேரெதிரான மரியாதையாகும். அதாவது மனிதனுக்கும் வணக்கம் மண்ணுக்கும் வணக்கம் என்பது நியாயமாகச் சிந்தித்தால் மனிதனுக்கு அவமரியாதை ! மனிதர்களுக்கு மட்டுமுள்ள மரியாதையை மண்ணுக்கும் கொடுப்பது எந்த வகையில் நியாயம்? சொல்லும் வணக்கத்துக்கு மனிதரா...

EKSAAR said...

நன்றி கன்கொன்,
//ஏன் இப்போது வீரகேசரியை இங்கே
இழுத்து வைத்திருக்கிறீர்கள்?//
உங்களுக்கு சொல்லவில்லை நண்பரே.. புரிபவர்களுக்கு புரியும்.

//நான் வீரகேசரி செய்ததை நியாயப்படுத்த முயலவில்லையே?
நான் செய்தேனா?
ஏனய்யா?//
ஒருவர் நியாயப்படுத்தினார் ஐயா.. எது துவேஷம் என்று கொஞ்சம் விளக்கினேன். பதிவுக்கு பொருத்தமில்லாத போதும் கூட.. (காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளல் ):D

நான் யாருக்கோ பதில் சொல்லப்போக, நீங்கள் இடையில் பொறுப்பேற்று மாட்டிக்கொண்டீர்கள். அவ்வளவவே.. ;)

கும்மி நன்றி, மீண்டும் நீங்கள் முஸ்லிமாக ஒரு போதும் இருந்ததில்லை என்று நிரூபித்ததற்காக..

கும்மி என்ற பெயரில் நீங்கள் இருப்பது குர் ஆனை குறைகூறத்தான் என்பது எப்போதோ பரகசியமான விடயம்.

http://www.onlinepj.com/ என்ற இணையத்தில் இஸ்லாம் பற்றி விவாதிக்க பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நீங்கள நேரடியாக விவாதிக்கலாமே.. அவர்களும் அப்படியே படப்பிடிப்பு செய்து
வெளியிடுவார்கள். நாங்களும் உங்கள் வாதத்தின் நியாயத்தை (அப்படி இருந்தால்) அறிந்து பயன்பெறலாம்.

நன்றி மன்னார் அமுதன், உங்கள் மனம் மற்றவர்களைக்காட்டிலும் விசாலப்பட்டிருப்பது தெரிகிறது.

//ஒவ்வொரு மனிதனுள்ளும் இறைவன் (நற்பண்புகள்) இருக்கிறான்.//

இறைவனை இஸ்லாம் மனிதர்கட்குள் தேடுவதில்லை.

//மனித மனங்களை இணைப்பதற்காக//
அதனால் தான், மதங்களை தாண்டிய சொல்லால் ஊடகங்களில் வரவேற்கப்படவேண்டும் என்றேன்.

இன்னொரு சந்தேகம், HAVE A BLESSED DAY, GOOD MORNING, SALAM போன்றவற்றின் தமிழ்ப்பதங்களை ஏதாவது ஒரு
ஊடகத்தில் பயன்படுத்தினால் என்ன நடக்கும்? இவற்றை தவிர்த்து "வணக்கம்" என்பதைத்தான் பயன்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாக ஊடகங்கள் நிற்பது "வணக்கம்" என்பதில் ஏதோ இருக்கிறது என்று
சந்தேகத்தை தருவது
நியாயமில்லையா?

நன்றி Thinks Why Not வருகைக்கு

நன்றி Anonymous

//இறைவனுக்கு மட்டும் உரித்தான வணக்கம் என்ற மரியாதைச் சொல் மனிதர்களுக்கும் பயன் படுத்தப்படுகிறது. //

அது இறைவனை நோக்கிய சொல்லாக இருந்தால் மனிதர்களில் பிரயோகிக்கமுடியாது என்றே நான் கருதுகிறேன்.

//பெரும்பாலோர் முஸ்லிம்கள் ஏன் வணக்கம் சொல்லப்பட்டால்,பதிலுக்கு “வணக்கம்” என்று சொல்வதில்லை//

அவ்வாறு சொல்ல விரும்பாதோரை கட்டாயப்படுத்தல் திணிப்புத்தானே..

இன்னும் வந்தே மாதரத்தை நினைவு
படுத்தியமைக்கு நன்றி. இந்திய உயர் நீதிமன்றம் "தாய் மண்ணே வணக்கம்" என்று பாட நிர்ப்பந்திக்க முடியாது என்று தீர்ப்பு
வழங்கியுள்ளதல்லவா? முஸ்லிம்களின் வாதத்தில் நியாயமில்லாவிட்டால் உயர் நீதிமன்றம் அவ்வாறு தீர்ப்பு வழங்கிருக்க மாட்டாது தானே..

உமர் | Umar said...

//http://www.onlinepj.com/ என்ற இணையத்தில் இஸ்லாம் பற்றி விவாதிக்க பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நீங்கள நேரடியாக விவாதிக்கலாமே.. அவர்களும் அப்படியே படப்பிடிப்பு செய்து
வெளியிடுவார்கள். நாங்களும் உங்கள் வாதத்தின் நியாயத்தை (அப்படி இருந்தால்) அறிந்து பயன்பெறலாம்.//

ஆமாம்! உங்களுடைய விவாதத்தின் முடிவு எப்படி இருக்கும் என்று, TNTJ- சுன்னத் ஜமாஅத் விவாதத்தைப் பார்த்துத் தெரிந்துகொண்டோம்

//கும்மி நன்றி, மீண்டும் நீங்கள் முஸ்லிமாக ஒரு போதும் இருந்ததில்லை என்று நிரூபித்ததற்காக..

கும்மி என்ற பெயரில் நீங்கள் இருப்பது குர் ஆனை குறைகூறத்தான் என்பது எப்போதோ பரகசியமான விடயம்.//

மூன்று கால்களை மட்டுமேப் பார்த்துவிட்டு, வாதம் செய்பவருக்கு புரிந்தால்தான் அதிசயம்.

virutcham said...

Hi Kodumai Sir ( I now understand why you have this name)

Everyone who has commented here has put enough effort to explain you. But you have a preconceived mind. So you should'nt have opened this topic at all.

I want to repeat this "நீங்கள் மத அர்த்தம் செய்யத் துவங்கினால் இந்திய மொழிகளை தவிர்க்க வேண்டியது தான்"

Its only your or muslims beleifs that only you'll bow to GOD. For a HINDU any life on universe is GODly. You have your beleif within you. Don't try to force others into it.

Excerpt from Swami Vivekananda's Chicago speech,

As the different streams having their sources in different places all mingle their water in the sea, so, O Lord, the different paths which people take through different tendencies, various though they appear, crooked or straight, all lead to Thee.

Whosoever comes to Me, through whatsoever form, I reach them; all are struggling through paths which in the end lead to Me.(Bagvad Geetha)

----
He called the audience Brothers and Sisters by this brought all in one umbrella.

So for us, everyone including you whatsoever beleif you have reach the same He.

Try to focus on something constructive than trying to gain the hatreds of your brothers/sisters

http://www.virutcham.com

virutcham said...

இறைவனை இஸ்லாம் மனிதர்கட்குள் தேடுவதில்லை.

good that u accepted the truth. Then what you are searching in another man? another muslim?
Atleast if you see man as a man you won't be arguing like this

EKSAAR said...

//Its only your or muslims beleifs that only you'll bow to GOD. For a HINDU any life on universe is GODly. You have your beleif within you. Don't try to force others into it.//

So how can u force muslims to believe what you believe? so u too Don't try to force others into it! (see you are not practicing what you are trying to preach me)

Virutcham ,
நீங்கள் எவ்வாறு மாற்று மதத்தவர்கள் உங்கள் மீது கருத்தை திணிக்க கூடாது என்று எதிர்பார்க்கிறீர்களோ, அதே உரிமை அந்த மாற்று மதத்தவர்கட்கும் உண்டு. எனவே திணிக்காதீர்கள் என்றுதான் பதிவு எழுதினேன். புரியலையா? Kodumai Sir (As u all dnt understand basic logics, such things written in this blog)

now its proofd tht, you have a preconceived mind.

You are thinking Swami Vivekananda is perfect. How can We? There are hell a lot of swamis in india (some behind the bars)

If I don't like it how can you force it on me? Then why Indian supreme court ordered "no one to force vanthe maatharam"? coz court found there are valid reasons for muslims to refrain from using the word "வணக்கம்". You got it?

EKSAAR said...

//good that u accepted the truth. Then what you are searching in another man? another muslim?
Atleast if you see man as a man you won't be arguing like this//

man is man! God is God! There is no way to make a man as God!

அமலன் said...

கிளம்பீற்றாங்கய்யா கிளம்பீற்றாங்க...

வடிவேலு சொல்ற மாதிரி மூக்குப் புடைப்பா இருந்தா இப்பிடியெல்லாம் யோசிக்கத் தோணும்.

முதலாவது விசியம், இது உங்கட சொந்தச் சந்தேகமில்ல...

http://bit.ly/bbEn5O என்ற தளத்திலிருந்து எடுத்த விசியம்.
நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?

தமிழை மாற்றுவது அப்படியா?
தமிழ் என்றால் அது தமிழ் தான். அதன் அர்த்தங்களை ஒவ்வொரு மதத்தினருக்குமாக மாற்றிக் கொண்டிருக்க முடியாது.

எத்தனை பேர் விளக்கமாக வணக்கம் என்றால் வாழ்த்து என்ற அர்த்தப்பட வரும் என்று சொல்ல நீங்கள் விளங்காத மாதிரி அடம்பிடிப்பது வியப்பில்லை.
உங்கள் மதத்திற்காக தனிய மொழியை வேண்டுமானால் உண்டாக்கிக் கொள்ளுங்கள், ஆனால் தமிழை பிழையாக அர்த்தப்படுத்தி அதனுள் பிரிவுகளை ஏற்படுத்த முயல வேண்டாம்.

Think Why Not said...

நன்றி மன்னார் அமுதன் பாராட்டியமைக்கு..

@Virutcham:
as brothers and sisters we will not hate him, but we will pity for his ignorance and narrow mindedness to accept the well explained truth....

By the way, who did force you to say "வணக்கம்".. When it is said, if you really dont like to say "வணக்கம்", you can say "வஅலைக்கும் சலாம்".. any human who can understand human will accept it..

Well what do you know about Swami Vivekananda..? just bcz some of them the fake swamiyars in some places, it does not mean all the monks in the world are bad.. I can still point out some of your moulavis who are still alive... but I never do that, as a simple man who knows truth will understand all religions consists of humans who are good and bad.. and saying a religion is bad based on few who following it shows you are immmatured...

and I just now understood your intentions is not about clearing doubts or understanding a language but trying create differentiations among religions and humans...

I'm sorry my friend.. hope the almighty God of yours will save you...

Anonymous said...

விளங்குது விசயம்

http://eksaar.blogspot.com/2010/02/blog-post_3646.html

பேசாம தமிழை விட்டிட்டு அரபு மொழியில நீங்க பேசுங்க.எங்களுக்கும் தொல்லையில்லை

Senthan

அமலன் said...

விவேகானந்தரைப் பற்றி உனக்கென்ன தெரியும்? உருவமே இல்லாத ஒன்றை வணங்குற உங்களுக்கெல்லாம் ஒசாமாவும்,இடி அமீனும்,சதாம் குசேனும்,கசாபும் தாண்டா சரி.திருந்துங்கடா

Anonymous said...

Anonymous 1st...

மிக முக்கியமாக 'வணக்கம்' என்ற சொல்லை முஸ்லிம்கள் பயன்படுத்துவதில் சிரமம் இருக்கத்தான் செய்கிறது.'மகளிர் உலகம்' என்ற நேரலை நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கு கொள்ளக்கூடிய பெண், சுபைதா என்ற முஸ்லிம் பெண்.ஒருமுறை அறிவிப்பாளர் 'வணக்கம்' – 'வணக்கம்' என்று பல முறை சொன்ன போது, மௌனமாக இருந்து விட்டு, ஹலோ என்று சொல்லி தனது பேச்சை ஆரம்பித்தார், அந்த முஸ்லிம் பெண். இருந்தும் அந்த அறிவிப்பாளர் 'வணக்கம்' என்று மீண்டும் சொல்லி பதிலை எதிர்பார்த்தார், பதில் ஏதும் வரவில்லை. 'முஸ்லிம்கள் தங்கள் மத விஷயங்களில் விடாப்பிடியாக இருக்கிறார்கள்' என்ற விமர்சனத்தை செய்து விட்டு நிகழ்ச்சிக்கு வந்து விட்டார்.

இதே நிகழ்ச்சியில் இன்னொரு முறை ஒரு பெண், 'வணக்கம்' என்று அறிவிப்பாளர் சொன்னதற்கு 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்று சொன்னார். அநேகமாக மக்கள் தொலைக்காட்சியினர் அவரது தொலைத் தொடர்பை துண்டித்து இருக்கக் கூடும். ஏனெனில் அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொன்ன உடன் நிகழ்ச்சி நடத்துபவரிடமிருந்து எந்த பதிலும் இல்லாமல் இணைப்பு துண்டிக்கப்பட்டு, வேறொருவர் இணைப்பில் வந்துவிட்டார்.

அப்பொழுதிலிருந்து எனது மனதில் ஓர் எண்ண ஓட்டம் ஓடிக்கொண்டிருந்தது, அதாவது,'வணக்கம்' என்கிற சொல் இறைவனுக்கு மட்டுமே செலுத்த வேண்டிய வணக்கத்தை குறிக்கும். இந்த சொல்லை வேறு எதற்கும் எவருக்கும் பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தினால் இஸ்லாமிய நம்பிக்கைப்படி ஷிர்க் எனும் இணைவைத்தலாகும். அதாவது அவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுவார்.

'வணக்கம்' என்று சொல்லப்படும் போது, முஸ்லிம்கள் என்ன மறுமொழி சொல்வது? என்பது தான் எனது எண்ண ஓட்டமாக இருந்தது.அதுமட்டுமின்றி இதே விஷயத்தை 'களத்து மேடு' நிகழ்ச்சியில் பேரா.நன்னன் அவர்களிடம் கேட்க வேண்டும் என்பதும் எனது எண்ணமாக இருந்தது.ஆனால் கடந்த 9.11.2008, களத்து மேடு நிகழ்ச்சியில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது, பேரா.நன்னன் அவர்கள், 'முஸ்லிம்கள், குறிப்பாக நல்ல முஸ்லிம்கள் தங்களது கோட்பாடுகளில் தெளிவாக இருக்கிறார்கள். அதை உடனே நடைமுறைப்படுத்தவும் செய்கிறார்கள். ஆனால் சைவ, வைணவ சமயங்களில் அழுக்குகள் மண்டிக் கிடக்கின்றது. எவர் எதைச் சொன்னாலும் இந்த சமயங்கள் அவற்றை உள்வாங்கிக் கொள்கின்றது. ஆனால் முஸ்லிம்கள் 'வணக்கம்' என்பதை இறைவனுக்கு மட்டும் தான் செலுத்த வேண்டும், மனிதர்களுக்கு செலுத்தக் கூடாது, என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்' என்றார் (உரையின் சுருக்கம்)

இன்னொரு முஸ்லிம் சகோதரி பேரா.நன்னனிடம் வித்தியாசமான முறையில் தனது பேச்சை ஆரம்பித்தார். நிகழ்ச்சியின் அறிவிப்பாளரின் வழக்கமான 'வணக்க'த்திற்கு 'வாழ்த்துக்கள்' என்றார். பேரா.நன்னனையும் 'வாழ்த்துக்கள் ஐயா' என்று விளித்தார்.
மற்றொரு சகோதரர், 'சீதக்காதி' என்ற பெயர், ஷேக் அப்துல் காதிர் என்ற பெயரின் மருவுதலாகும் என்ற தகவலை சொன்னார்.
அடுத்த சகோதரர், பேராசிரியரிடம் நேரடியாகவே 'வணக்கம்' என்ற சொல்லை முஸ்லிம்கள் பயன்படுத்த முடியவில்லை, அதனால் வேறொரு சொல்லை எங்களுக்கு சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

அதற்கு நன்னன் அவர்கள், 'முன்பு தொடர்பில் வந்த சகோதரி எனக்கு வாழ்த்துக்கள் என்று சொன்னார். நானும் வாழ்த்துக்கள் என்று பதில் சொன்னேன்' என்று பதில் சொன்னார்.அதோடு, 'வணக்கம்' என்ற சொல்லை முந்தைய தமிழ் இலக்கியங்களில் காண முடியவில்லை, பண்டைய மன்னர்களை புலவர்கள் சந்திக்கும் போது, வணக்கம் மன்னா! என்று சொல்ல வில்லை, மாறாக 'வாழ்த்துக்கள்' என்ற சொல்லைத் தான் பயன்படுத்தியுள்ளார்கள். பின்னர் வந்த ஆரியர்கள் தான் கீழ்மக்கள், தங்களை வணங்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் 'வணக்கம்' என்ற சொல்லை அறிமுகம் செய்திருக்கிறார்கள். 'வணக்கம்' என்ற சொல்லை பயன்படுத்துவது தமிழ் மரபும் அல்ல, தமிழர் பண்பாடும் அல்ல. அதனால் அதனை பயன்டுத்துவதை தவிர்ப்பது நல்லது என்றார்.

தனக்கு சரி என்று பட்டதை போட்டு உடைக்கும் பேரா.நன்னன், தான் கடவுள் நமபிக்கை அற்றவன் என்றும் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.

முஸ்லிம்களை வணக்கம் என்ற பெரும் சிக்கலில் இருந்து காப்பாற்றிய பேரா.நன்னன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

EKSAAR said...

அமலன்,
அர்த்தங்களை ஒவ்வொரு மதத்தினருக்குமாக மாற்றிக் கொண்டிருக்க முடியாது.

ஒருபோதும் மாற்றுமாறு கேட்கவில்லையே!

//விளக்கமாக வணக்கம் என்றால் வாழ்த்து என்ற அர்த்தப்பட வரும் என்று சொல்ல நீங்கள் விளங்காத மாதிரி அடம்பிடிப்பது//

இரண்டும் ஒன்றென்றால் இனி வணக்கத்துக்கு பதில் வாழ்த்துக்கள் என பாவியுங்கள். அது மதம்தாண்டிய சொல் என்பதில் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை.
நீங்கள் விடாப்பிடியாக "வணக்கத்தில்" நிற்பது ஏன்?

//உருவமே இல்லாத ஒன்றை வணங்குற உங்களுக்கெல்லாம்//

உருவங்களை நீங்களே செய்து.. என்று ஒன்றும் நான் சாடவில்லையே..

Thinks Why Not
//u can say "வஅலைக்கும் சலாம்".. //

"வஅலைக்கும் சலாம்" means "and upon you be peace". How it can be used to answer "வணக்கம்". Different menings na?

Senthan,
என்ன விளங்கிற்று? இலங்கையில் திரைப்படம் வெற்றிபெற்றால் கூட உங்களுக்கு குடையுதா?

Anonymous,
நான் அறிந்திராத சில முக்கியமான விடையங்களை பகிர்ந்து கொண்டீர்கள். நன்றி

அமலன் said...

இந்தக் கருத்துப் பகிர்தலிலிருந்து நான் விடைபெறுகிறேன்.
இது மதங்களைப் பற்றி மாறிக் கொண்டிருக்கிறது.

தயவுசெய்து உங்களுக்கு மண்டையில் ஏதாவது இருந்தால், யோசி்க்கும் திறன் இருந்தால் உங்கள் 2 கருத்துக்களுக்குமிடையேயான வித்தியாசத்தைப் பாருங்கள்...

1. ஒருபோதும் மாற்றுமாறு கேட்கவில்லையே!

2. இரண்டும் ஒன்றென்றால் இனி வணக்கத்துக்கு பதில் வாழ்த்துக்கள் என பாவியுங்கள். அது மதம்தாண்டிய சொல் என்பதில் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை.

தமிழ் வழக்கத்தை மாற்றச் சொல்கிறீர்களா இல்லையா?

//நீங்கள் விடாப்பிடியாக "வணக்கத்தில்" நிற்பது ஏன்?//

அது தான் ஆரம்பத்தில் சொல்லிவிட்டேனே.
தமிழின் வழக்கத்தை மாற்ற முடியாது என்று.
உங்கள் தமிழறிவை நினைத்து வெட்கப்படுகிறேன்.
greeting என்பதன் மாற்று வடிவமே தமிழ் என்றாலும் வாழ்த்துக்களுக்கம் வணக்கத்திற்கும் இடையே நிறையவே வித்தியாசம் உண்டு.

//Anonymous,
நான் அறிந்திராத சில முக்கியமான விடையங்களை பகிர்ந்து கொண்டீர்கள். நன்றி //

எது? எதை உங்களுக்கு விளங்கப்படுத்தினார்?
//ஆனால் சைவ, வைணவ சமயங்களில் அழுக்குகள் மண்டிக் கிடக்கின்றது. //
இதையா?

ஒரு சமயத்தை அழுக்கு என்று சொல்கிறார்? ஒரு நியாயவாதியாக இருந்திருந்தால் நீங்கள் அதை எதிர்த்திருக்க வேண்டும்.
ஆனால் நீங்கள் தான் துவேஷி ஆயிற்றே.

முன்னர் சொல்லப்பட்ட துவேஷி என்ற வார்த்தையை நான் முழுமையாக உங்களுக்கு வழங்குகிறேன்.

(எனது பெயரில் இரண்டாவதாக சொல்லப்பட்டது என் கருத்து அல்ல. யாரோ விளையாடியிருக்கிறார்கள்)

alex paranthaman said...

தோழர் ”கொடுமை ஐயா”வுக்கு மீண்டும் வணக்கம். தவறுகள் இருந்தால் திருத்தவும்.

(thinks why not? தோழருக்கும் மற்ற அனைத்துத் தோழர்களுக்கும் நன்றிகள்.)

இதில் மீண்டும் கருத்துக் கூறுவதில் எனக்கு விருப்பமில்லை. இருந்தாலும் மனம் கேட்காததால் பகிர்கிறேன் .

ஒன்றை நாம் கற்றுக் (அறிந்து) கொள்ள வேண்டும் எனும் எண்ணத்துடன் ஒரு விவாதத்தைத் தொடங்கினால் அது அனைவருக்கும் நன்மை பயக்கும்.

ஏதோ சிலவற்றை மட்டும் தெரிந்து கொண்டு (அறியாமை), முடிவையும் நாமே முடிவு செய்துவிட்டு, சர்ச்சை செய்தல் யாருக்கும் நலம் பயக்காது. மேலும் மனக் கசப்புகளைத் தான் உருவாக்கும்.

விவாதங்களின் ஒரு நிமிட வெற்றி நமது பால்ய கால நல்ல நட்புகளைக் கூட முறித்துவிடும். ஏனெனில், விவாதம் யார் சரி என்றே தீர்மானிக்கிறது. எது (எக்கருத்து) சரியென தீர்மானிக்காது.

ஒன்றை அறிந்து கொள்ள முன் நமது மனதை வெறுமையாக்கிக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் ஏற்றுக் கொள்ளும் பக்குவமும், சரியானவற்றை இனங்கானவும் முடியும்.

நமக்குரிய முகநன்னை யார் எம்மொழியில் கூறினால் என்ன... ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நம்மிடம் இருந்தால் போதும் தானே ஐயா...


இன்னும் எத்தனை காலம் இதே மதத்தையும், கடவுளையும் வசை பாடிக் கொண்டே காலத்தைக் கடத்துவது.

பிற மதங்களைப் பற்றிய நல்லெண்ணமும், அறிந்து கொள்ளும் ஆர்வமும் உண்டாகும் போது மட்டும் தான் இதற்கெல்லாம் தீர்வு கிடைக்கும்.

நாளை நானும் நீங்களும் சந்தித்துப் பிரியும் போதோ, அலைபேசியில் பேசி முடிக்கும் போதோ “god bless you" என்று நான் கூறினால் கூட நீங்கள் அதை மதத் திணிப்பாகத் தான் எடுப்பீர்களா?

உங்களுக்கான எனது பிரார்த்தனையாக நினைக்க மாட்டீர்களா?

சர்ச்சைகள் வேண்டாம் தோழர்... சாதிக்க இன்னும் பல விசயங்கள் இருக்கின்றன... விரும்பினால் எம் இலக்கியப் பாசறையில் இணைந்து கொள்ளுங்கள்...

மதங்களைக் கடந்து
மனிதத்தை சுவாசிப்போம்...
மாற்றுக் கருத்தினை
மதித்தே நேசிப்போம்

virutcham said...

My final word to you on this in this blog,

//நீங்கள் எவ்வாறு மாற்று மதத்தவர்கள் உங்கள் மீது கருத்தை திணிக்க கூடாது என்று எதிர்பார்க்கிறீர்களோ, அதே உரிமை அந்த மாற்று மதத்தவர்கட்கும் உண்டு.//

A basic common sense. The religion you follow itself is forced upon us on this country. So every thing about it also is forced on us.
As beciause Hindus see everything as GODLY we gave our people( our brothers/sisters, son/daughter) to this religion and were our land and everything and still talk secularism and extend our helping hands. But what is the use? We only have to remember Bagvad Geetha again - Do your duty and don't expect the reward.

//Then why Indian supreme court ordered "no one to force vanthe maatharam"? coz court found there are valid reasons for muslims to refrain from using the word "வணக்கம்". You got it?//

Even this is a result of the secular approach India is following. But it is clear that you guys are not going to stop here.

Because we see GOD in man we respect him. Because you don't do that the bad elements among you guys get into terrorist activities beyond boundaries all over the world and are making the whole world look muslims in a different perspective. By this you are making good muslims also to suffer.

I am sorry for you guys. I hope the Thee
will save us all(incuding you) from this.

EKSAAR said...

நன்றி அமலன்,
1.அர்த்தங்களை மாற்றமுடியுமா? சொல்லைத்தான் மாற்றலாம்.

2.அந்தச்சொல் மதங்களை தாண்டிய சொல்லாக ஊடகங்களில் இருப்பவர்கள் பயன்படுத்தவேண்டும். வணக்கத்தை ஏற்றுக்கொண்ட இருவரிடையே தாராளமாக பாவியுங்கள். ஏற்றுக்கொள்ளாதவர்களிடம் திணிக்கவேண்டாம்.

தயவுசெய்து உங்களுக்கு மண்டையில் ஏதாவது இருந்தால், யோசி்க்கும் திறன் இருந்தால் 2 க்குமிடையேயான வித்தியாசத்தைப் பாருங்கள்...

//தமிழின் வழக்கத்தை மாற்ற முடியாது //
இறைவன் இருப்பதாக நம்புவோருக்கு மொழியை விட நம்பிக்கை முக்கியமில்லையா?

தமிழ் வழக்கப்படி இரு கைகூப்பித்தான் வணக்கம் சொல்லப்படுகிறது. இது கைகூப்புதல் இந்து மத வழிபாட்டுமுறை. கைகூப்பாதோரை எதற்கு வணக்கம் சொல்ல திணிக்கிறீர்கள்?

//greeting என்பதன் மாற்று வடிவமே தமிழ் என்றாலும் வாழ்த்துக்களுக்கம் வணக்கத்திற்கும் இடையே நிறையவே வித்தியாசம் உண்டு.//

நன்றி ஏற்றுக்கொண்டமைக்கு. ஆம். அதனால்தான் வணக்கத்தை நிராகரிக்கிறோம்.

//எதை உங்களுக்கு விளங்கப்படுத்தினார்?//
பேராசிரியர் நன்னன் ஊடகத்தில் வணக்கம் பற்றி சொன்ன, அது தமிழ் வழக்கமாக இருந்ததில்லை என்ற விளக்கத்தை விளக்கினார். வாசிக்கவில்லையா?

//ஒரு சமயத்தை அழுக்கு என்று சொல்கிறார்? ஒரு நியாயவாதியாக இருந்திருந்தால் நீங்கள் அதை எதிர்த்திருக்க வேண்டும்.
ஆனால் நீங்கள் தான் துவேஷி ஆயிற்றே.//

மற்றும் மதங்கள் பற்றி விமர்சிப்பது இங்கு நோக்கமல்ல.

நன்றி மன்னார் அமுதன்,
//விவாதம் யார் சரி என்றே தீர்மானிக்கிறது. எது (எக்கருத்து) சரியென தீர்மானிக்காது.//

அது சில மனங்களில் உள்ள கறை. என்னைபொருத்தவரையில் எக்கருத்து சரி என்பதே முக்கியம். நான் அதை சொல்லும் மனிதரை குறைகாண்பதில்லை.

//ஒன்றை அறிந்து கொள்ள முன் நமது மனதை வெறுமையாக்கிக் கொள்ள வேண்டும்.//

ஆம். இங்கு நடந்த விவாதத்தில் ப்கிரப்பட்ட தலைப்புக்கு பொருத்தமான கருத்துக்களை மாத்திரம் தொகுத்து பதிவாக விரைவில் தருகிறேன். அப்போது கவன கலைப்பான்கள் இன்றி எந்த ஒரு வாசகரும் "வணக்கம்" பற்றி தனக்கான கொள்கையை வகுத்துக்கொள்ளமுடியும்.

எதை கொள்கையாக தேர்ந்தெடுப்பது என்பது அவரவரின் சொந்த விடயம். திணிப்பு ஒருபோதும் இருக்கக்கூடாது.

//நமக்குரிய முகநன்னை யார் எம்மொழியில் கூறினால் என்ன... ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நம்மிடம் இருந்தால் போதும் தானே ஐயா...//

ஏற்றுக்கொள்கிறேன். முகமன் வரம்புமீறாததாக இருக்கவேண்டும். "வணக்கம்" என்பது வணங்கிகிறேன் என்ற சொல்லிலிருந்து பிறந்ததாக முஸ்லிம்கள் கருதுவதால், ஒருவர் எம்மை வணங்குவதையோ, நாம் இன்னொருவரை வணங்குவதையோ தடுக்கிறோம்.

//இன்னும் எத்தனை காலம் இதே மதத்தையும், கடவுளையும் வசை பாடிக் கொண்டே காலத்தைக் கடத்துவது.//

இல்லை ஐயா, வசைபாடுவது இங்கு நோக்கமல்ல. திணிக்கவேண்டாம் என்பதே விடயதானம்.

//“god bless you" என்று நான் கூறினால் கூட நீங்கள் அதை மதத் திணிப்பாகத் தான் எடுப்பீர்களா?//

ஒருபோதும் இல்லை. கடவுளின் ஆசீர்வாதம் கடவுளை நம்பும் எல்லோருக்கும் தேவை. இங்கு "வணக்கம்" வணங்குகிறேன் என்று பொருள்படுவதாக கருதப்படுவதால் தான் இக்குறிப்பிட்ட வார்த்தையை மட்டும் வேண்டாம் என்கிறோம். பிரார்த்தனைகள் எப்போதும் வரவேற்கப்படுகின்றன.

//மதங்களைக் கடந்து
மனிதத்தை சுவாசிப்போம்...
மாற்றுக் கருத்தினை
மதித்தே நேசிப்போம்//


மதங்களை கடந்து என்பதில் உடன்பாடு இல்லை. மாற்றுக்கருத்துக்களை மதிப்பதில் மிகுந்த உடன்பாடு உண்டு. அத்துடன் உணர்வுகளை மதிப்பதிலும்.

நன்றி Virutcham
//Because we see GOD in man we respect him. Because you don't do that the bad elements among you guys get into terrorist activities beyond boundaries all over the world and are making the whole world look muslims in a different perspective. By this you are making good muslims also to suffer.//

குட்டக்குட்ட குனிபவன் மடையன் என்று அறிந்ததில்லையா? உலகெங்கும் முஸ்லிம்களுக்கு எதிராக கொடுமைகள் நடத்தியபின் அதன் எதிர்விளைவுகளை குற்றஞ்சொல்லி பலனில்லை. இந்தியாவில் பாபரி மஸ் ஜித் உடக்கப்பட்ட பின்புதான் முஸ்லிம்கள் வன்முறையில் இறங்கினார்கள். வரலாறு மறந்துவிட்டீர்களா?

நீங்கள் நிறைய வாசிக்கவேண்டும். இந்த இணையத்தையாவது படியுங்கள்.

http://kalaiy.blogspot.com/

Anonymous said...

Anonymous 1 st...
வணக்கம் என்ற வார்த்தையை தவிர்போம் ! ! !

சுயமரியாதையை காப்போம் ! ! !

வணக்கம் : பொருள் "நான் தங்களை வணங்குகிறேன்” எதற்க்காக வணங்க வேண்டும் எந்த விதத்தில் ஒருவர் மற்றவரை விட உயர்ந்துவிட்டார் என்னிடம் உள்ள திறமை உங்களிடம் இருக்காது உங்களிடம் உள்ள திறமை என்னிடம் இருக்காது ஆகையால் இந்த உலகில் உள்ள அனைவரும் சமம் சிறியவராக இருந்தாலும் பெரியவறாக இருந்தாலும் இந்த உலகி ஒருவர் மற்றவறிடம் பாடம் கற்க்க வேண்டிய அவசியத்தில் நாம் அனைவரும் உள்ளோம் ஏனென்றால் அனைத்தையும் அறிந்தவர் இந்த உலகில் இல்லை.

for more information click the link
http://home.eegarai.com/-f42/-t13167.htm

virutcham said...

பதில் எழுதுவதில்லை என்று முடிவெடுத்து இருந்தாலும் சகோதரரிடம் எதற்கு பிணக்கம் என்று மறுபடியும்.

சகோதரரே,

Pre-Muslim era, vedic era பற்றி யாராவது ஏதாவது சொன்னால் அது திரிக்கப்பட்டது என்று சொல்லி சமாதானப் படுத்திக் கொள்ளலாம்.
இப்போ muslim தீவிரவாதம் Babri Masjid இடித்தலுக்கு பிறகு தான் துவங்கியது என்ற உங்கள் புரிதல் பற்றி நான் எதுவும் சொல்லுவதற்கு இல்லை. ஒருவேளை நீங்கள் வயதில் மிகவும் சிறியவராக இருக்க வேண்டும். படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

நான் கூறும் எல்லை தாண்டிய என்பது உலகளாவிய. அவன் நானில்லை என்று சொல்ல முயன்றால், இவனும் நீங்க இல்லை என்பது எங்களுக்குப புரியும். ஆதரித்தல் என்கிற நிலையில் கொஞ்சம் சம நிலையையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நாங்கள் உங்களை சகோதரத்துவத்துடன் பார்ப்பதற்கு நிறைய காரணங்கள் உண்டு. 786 பற்றிய மின்னஞ்சல் கிடைத்ததா ? இல்லையானால் கேட்டுப் பெற்று பயன் அடையவும்.

இன்னும் நிலா, அது தொடர்ந்து காபா வை நோக்கிய தொழுகை என்று ஒவ்வொன்றாக உங்களவர்களே மின்னஞ்சல் ஆனுப்பும் வரை காத்திருக்கவும்.

இதை எல்லாம் நான் பிரிவினை நோக்கோடு சொல்லவில்லை. நீங்கள் எங்களில் ஒருவர் என்றால் இல்லை நாங்கள் தனி என்று நீங்கள் தான் அடம் பிடிப்பீர்கள்.

இப்போ இதையெல்லாம் ஏன் சொல்லறேன் அப்படின்னா,

மொழியில் இந்துத்துவத்தை தேடும் முயற்சியில் செலவழிக்கும் நேரத்தை கொஞ்சம் உங்கள் மதத்தில் இஸ்லாத்தை தேடுவதில் செலவழித்துப் பாருங்கள். ஒரு முடிவுக்கு வந்த பின், இந்தியமொழிகளில் இந்துத்துவத்தின் ஆதிக்கம் குறித்து கவலைப் படலாம்.
நன்றி.
(நன்றி என்பது பற்றிய ஒரு பதிவு போடலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறேன்.)

Vathees Varunan said...

அனைவருக்கும் வணக்கம்.
உண்மையிலே இந்த சந்தேகம் ஒரு நியாயமா சந்தேகமல்ல. வணக்கம் என்பது பொதுவாக தமிழ் மொழிபேசுவோர் பயன்படுத்தும் ஒன்று. ஒருவர் இன்னொருவரை சந்திக்கும்போது அவரை கனம் பண்ணுவதற்காக கூறும் ஒரு வார்த்தை. ஆதிகாலம் தொட்டே இதனை எம்மவர்கள் பயன்படுத்தி வருகின்றார்கள்.

தமிழ் பேசுபவர்களின் பொதுவான மரியாதையான கொளரவமான ஒரு வார்த்தையை மதங்கள் எனும் வட்டத்திற்குள் வைத்து குழப்பி கொள்ளாதீர்கள்.

Anonymous said...

hooooo... ithellaaam oru pathivaa??

Anonymous said...

Mugavari attra unakku ithu oru polappaa?? Thamizhaiyum mathathayaiyum inaiththu paarkiraaye...che maanam ketta jenmame...........

nee ean thamizh mozhiyai pesugiraai..

poi un Arabu mozhiyai pesu.. inavaatham enbathu unnaippondra.. kaattu miraandigalaal thaan...
atpapathare...
poi nalla soru saappidu..

Nesan