Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

ஐதேக கட்சிக்குழப்பம்



ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் மாற்றம்கோரி ஆர்ப்பாட்டத்தில் ரணில் விக்கிரமசிங்ஹவுக்கெதிராக பாவிக்கப்பட்ட வசனங்கள் பிஸ்ஸு பூசா, மிஸ்டர் பீன்.

“A politician should have a lot of patience not only to head a government but also to be an opposition leader. Although social service is good, you cannot win only by doing social service. Some others think they can win by doing politics through the media. One cannot go forward in politics through the media. Politicians who are limited to the media are like papdams,”
Ranil Wickremesinghe
<!-- adsense -->
ரணில் விக்கிரமசிங்ஹவை மிஸ்டர் பீன் ஆக சித்தரித்து நாடுமுழுவதும் சுவரொட்டிகள் ஒரு காலத்தில் ஒட்டப்பட்டிருந்தது. அன்று அதை எதிர்க்கட்சி செய்தது. இன்று அவர் கட்சிக்காரர்களே செய்கிறார்கள்.


ரணில் ஒரு வசீகரமற்ற தலைவர்தான். ஆனாலும் அவரது காய்நகர்த்தல்கள் தேர்ந்த அரசியல்வாதிக்குரியவை. இல்லாவிட்டால் 94க்குப்பின் தொடர்தோல்வியை கட்சி அடைந்துகொண்டிருந்தபோதும் அவரால் தலமைப்பதவியில் தொடர்ந்து இருக்கமுடியுமா?

ரணில் புலிகள் மீது மென்மையான போக்கை கையாண்டது 94க்குப்பின் பெரும்பாலான இலங்கையர்களின் வெறுப்பை சம்பாதித்தது. இவ்வெறுப்புத்தான் இவரது ஆட்சிக்கும் ஆப்பானது. தேர்தலில் புலிகளும் இவருக்கு ஆப்பு வைக்க அரசுக்கட்டிலை இழந்தார் ரணில். அதே ஆப்பு புலிகளுக்கு மாறி இறங்கியது வேறுகதை.

அதன்பின் மஹிந்தவின் வசீகரத்திற்குமுன் இவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. யுத்தத்தை ஜனாதிபதி மஹிந்த வெற்றிகரமாக நிறைவு செய்தபின் ரணிலால் மட்டுமல்ல வேறுயாராலும் ஆட்சியை பிடிப்பது யாதார்த்தமற்ற ஒன்றும் கூட.

ஆயினும் மஹிந்த மேலதிகமாக ஐதேக உறுப்பினர்களை தனது ஆட்சிக்குள் உள்வாங்க தயாராக இல்லாமையால் விலைபோகாத சரக்காகிப்போயுள்ள ஐதேக பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் வெறுமனே செலவு செய்வது மட்டும்தானா, உழைப்பதில்லையா என்ற வெறிய்ல் இருக்கிறார்கள்.

எனவே ரணிலுக்கோ வேறொரு ஐதேக தலைவருக்கோ கிடைக்ககூடிய மிகப்பெரிய பதவி எதிர்க்கட்சித்தலைவர் பதவி மட்டும்தான். அதனை உறுதி செய்யத்தான் கட்சிக்கும் தெரிவிக்காமல் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார். சஜித் குழு எதிர்கட்சித்தலைவர் பதவியை தொடர்ந்து ரணிலுக்கு வழங்க விருப்பம் தெரிவித்தாலும், அதிகாரம்மிக்க தலைமைப்பதவி போனபின் அவ்வாக்குறுதி எத்தனை நாட்களுக்கு காக்கப்படும்?

ஐதேகவுக்கு கரு ஜயசூரியவோ சஜித் பிரேமதாசவோ தலைமைவகித்தாலும் இந்நிலவர்த்தில் மாற்றங்களுக்கு வாய்ப்பில்லை. இவர்களால் கொழும்பு மாநகர சபையைதானும் வெல்லமுடியுமா என்பதே கேள்விக்குறி. அப்படி வென்றால்கூட அது சாதனையாக கணக்கில் எடுக்கப்படாது. இது தெரிந்த சஜித், தனது இமேஜை பாதுகாக்க கருவை தலைமைப்பதவிக்கு போட்டியிடச்செய்கிறார் என்றே அனுமானிக்கமுடிகிறது. பிஸ்ஸு பூசா என்று தாம் அழைத்த தலைவரை வைத்துக்கொண்டு தேர்தலில் போட்டியிட்டால் ஐதேகவின் அடிமட்ட தொண்டர்களில் பாதிப்பேராவது வாக்களிக்கச்செல்வார்களா?

மஹாராஜா நிறுவனங்களுடன் மோதல்
மஹாராஜா ஊடக நிறுவனத்துடனான ரணிலின் மோதல் இன்னுமொரு சுவார்ஷ்யம். எமக்குத்தெரிந்து மிலிந்த மொரகொட, ரோசி சேனநாயக்க, ஹர்ஷா டி சில்வா, புத்திக்க பத்திரண, சிறீ ரங்கா ஆகியோர் மஹாராஜா ஊடகத்தின் ஆதரவு காரணமாக பதவிக்கு வந்தவர்கள். சிறீ ரங்கா கூட தனது கட்சிக்கு தேசியப்பட்டியலில் ஒரு இடம் கேட்டமை சன்டே டைம்ஸில் வந்திருந்தது. எனவே மஹாராஜ நிறுவனம் இரண்டு தேசியப்பட்டியல் இடங்கள் கேட்டது என்பதில் கொஞ்சமாவது உண்மையிருக்கும் என்றே தோன்றுகின்றது.

இல்லாவிட்டால் பல விடயங்களில் அடக்கி வாசிக்கும் மஹாராஜா ஊடகம் ஐதேக தலைமை விடயத்தில் மாத்திரம் மூக்கை நுழைக்கவேண்டிய அவசியம் என்ன.

ரணில் இப்போதாவது விரல்களை தாண்டி வளர்த்த நகத்தை கவனித்திருக்கிறார்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

மர்ம மனிதர்கள்

மர்ம மனிதர்கள் தொடர்பான அச்ச உணர்வுகளால் மக்கள் அடிக்கடி பாதுகாப்பு படையினரோடு மோதிவருகிறார்கள். இது தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய ஊடகங்களோ இதைவிட்டால் நல்ல வாய்ப்பு கிடைக்காது என்று நினைப்பவர்கள் போல் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகிறார்கள்.

It was funny for a while, but people are dying over what? Grease Yakas are not real. Crime is, and sometimes you have to tie people to trees, but when people are dying I think things have gotten out of hand.
indi.ca

பொத்துவிலில் அமைச்சர் பௌசி சொன்ன ஒரு உப விடயத்தை தூக்கிப்பிடித்து வெற்றி FM மற்றும் தமிழ் மிரர் ஆகியன செய்திகளை வெளியிட்டிருந்தன. (ஏனைய ஊடகங்களை பின்தொடராமையால் அவை என்ன சொன்னன என்ற நான் அறியேன்) ஒருவர் சொன்ன ஒரு விடயத்தை வித்தியாசமான சொற்களைப்பாவித்து வேறொரு கருத்து மக்களிடம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் செய்திகளை வெளியிடுவது நீண்ட கால நோக்கில் குறிப்பிட்ட ஊடகம் தொடர்பில் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை இல்லாமலாக்கி விடும் என்பதை இவ்வூடகங்களை வழிநடாத்துபவர்கள் கவனிக்கமாட்டார்களா?




மர்ம மனிதர்கள் தொடர்பாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம்

அதேவேளை இந்திய படங்களில் நடப்பதுபோல் சட்டத்தை மக்கள் கையில் எடுப்பதையும் தவிர்ந்துகொள்ளவேண்டும். அப்பாவிகளை அடித்துக்கொல்வது ஒரு நாகரீகமான சமூகத்திற்கு அழகல்ல. இன்னும் பாதுகாப்பு படையினருடனான சுமூக உறவுகளை சீர்குலைக்கும் வண்ணம் பொதுமக்கள் நடந்துகொள்வது நல்லதல்ல.

ஒருவரை பிடித்து பொலிஸில் கையளிக்க முன் அவரை படமெடுக்க கூடிய வசதி இன்று எல்லாரிடமும் மொபைல் இல் இருக்கிறது. அப்படி இருக்கும் நிலையில் பாதிகாப்பு படையினர் நியாயமாக நடக்கவில்லை என்று சந்தேகம் இருந்தால் அவ்வாறான ஆதாரங்களை பயன்படுத்தி நீதியை நிலைநாட்டலாம். பொதுமக்கள் மர்ம மனிதர்கள் தொடர்பில் கொஞ்சம் நிதானமாக இருப்பது நல்லது.

இல்லாவிட்டால் தனக்கு பிடிக்காத ஒருவரை கிறீஸ்பூதம் என சொல்லி ஊரைக்கூட்டி கொல்வது இலகுவாக போய்விடும்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

யாழ் பாரளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை

அண்மையில் தேர்தல் ஆணையாளரினால் எடுக்கப்பட்ட யாழ்ப்பாண பிரதிநிதித்துவத்தை 9 இலிருந்து 6 ஆக குறைக்கும் முடிவு பற்றி பல்வேறு கருத்துக்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

கடந்த சில தசாப்தங்களாக யுத்தம் காரணமாக யாழ் மக்கள் நாட்டிற்குள்ளேயும், யுத்தத்தை காரணமாக காட்டி பொருளாதார நலன்களுக்காக வெளிநாட்டிற்கும் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். இடப்பெயர்வு தற்காலிகமானதாவோ அல்லது நிரந்தரமானதாவோ வகைப்படுத்தப்படமுடியுமானபோதும்து பெரும்பாலும் பல சலுகைகளுக்காகவும் வசதிகளுக்காகவும் தற்காலிகமான இடப்பெயர்வுகளாகவே ஒரு பக்கச்சார்பாளர்களினால் காட்டப்படுகின்றது.

இவ்வாறான பல நிரந்தர இடப்பெயர்வுகள் கிராம சேவை உத்தியோகத்தர்கள் சுயாதீனமாக செயற்பட அனுமதிக்கப்படாமையினால் அரச புள்ளிவிபரங்களில் கணக்கெடுக்கப்படமுடியாமல் போயிருந்தது.

வாக்காளர் இடாப்பு இற்றைப்படுத்தப்படாமல் இருந்ததால்

1.) கள்ள வாக்கு பதிவோருக்கும் சவுகரியமாக இருந்தது.

 2) உண்மையில் அப்பிரதேசத்தில் இருந்த வாக்காளர்கள் பதுவுசெய்யப்பட்ட வாக்காளர்களைக்காட்டிலும் குறைவாக இருந்தமையால் யாழ்ப்பாணத்தில் மக்கள் தேர்தல்களில் ஆர்வம் காட்டவில்லை என்று அரச எதிர்ப்பாளர்களுக்கு சொல்ல முடியுமாக இருந்தது.

மக்கள் தொகைக்கேற்ப பிரதிநிதித்துவம் வழங்கப்படவேண்டும் என்பது நியாயமானது. இந்த அடிப்படையில் ஏதேனும் ஒரு பிரதேசத்தில் மக்கள் எண்ணிக்கை குறைந்தால் அதற்கேற்ப பிரதிநிதித்துவம் குறைக்கப்படலும், சனத்தொகை அதிகரிக்கும் இடங்களில் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படலும் கட்டாயமானதாகும்.

ஆயினும் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவு தற்காலில் இடப்பெயர்வுகள் காரணமாக ஏற்பட்டது என்ற வாதம் முன்வைக்கப்பட்டு அரசு அநீதியிழைப்பதாக காட்ட சிலர் முயற்சிக்கின்றனர்.

இதைவிடுத்து குறிப்பிட கால இடைவெளிகளில் பாரளுமன்ற பிரதிநிதித்துவம் இலங்கை பூராவும் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பகிரப்படும் என்ற உறுதி மொழியை அரசு வழங்கவேண்டும். இது குழப்பக்காரர்களின் வாயை அடைக்கும்.

இன்னும் வேறு இடங்களில் குடிபெயர்ந்துள்ளவர்களை அந்தந்த பிரதேசங்களிலேயே வாக்காளர் பதிவுகளை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படவேண்டும்.

இதேபோல் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பகிரப்படும் அரச வளங்கள் மீண்டும் ஒரு கணக்கெடுப்பு செய்யப்பட்டு சரியாக பகிரப்பட வேண்டும். இதன் மூலம் நாடலாவிய ரீதியில் மக்கள் அனைவருக்கும் நியாயம் கிடைக்கும்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்