Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

முகாவின் முடிவு சரியா?

சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் (முகா)அரசுக்கு யாப்பு தொடர்பான இருமாற்றங்களுக்கு ஆதரவு வழங்குவதற்கு ஜனாதிபதி மகிந்தவுடன் உடன் படிக்கைக்கு வந்திருக்கிறது..

முதலில் மக்கள் ஏன் முகா வுக்கு ஆதரிவளிதார்கள் என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும்?

மகிந்த அரசின் மீதான வெறுப்பினாலா?

இல்லை என்பதை நீங்கள் அறியாவிட்டால் நீங்கள் இன்னும் அரசியல் களத்தில் போதிய அறிவு பெறவில்லை என்பது நிரூபணமாகும். ஒரு சிலர் கொண்ட வெறுப்புக்கும் காரணமாக இருப்பது முகாவை மகிந்த பிரித்திருக்கிறார் என்பதே தவிர மகிந்த மீது தீரா பகை கொள்ள வேறு காரணம் இல்லை..

மஹிந்த அரசு சேவை செய்யவில்லையா?
அது யுத்தத்தை முடிக்கவில்லையா?
தொழில் வாய்ப்புகளை வழங்கவில்லையா?
அபிவிருத்திகள் செய்யவில்லையா?
இன்னும் 6 வருடத்திற்கு அல்லது பெரும்பாலும் 12 வருடத்திற்கு இவ்வரசு ஆட்சியில் இருக்காதா?

இல்லை என்ற பதில் நீங்கள் மகிந்த மீது கொண்ட காழ்புணர்ச்சியின் வெளிபாடாகதான் அமையும்.
I supported Ranil in the 2005 election, but he didn’t run in 2010, so there isn’t really anything to support. I don’t see why a guy who won’t run for President still wants to retain control of the opposition though, in reality, he no longer has control. Some people really believe in the UNP or are simply to incompetent to cross, and that’s who’s left. Most of the bright lights have left the UNP and now it looks like Rauf Hakeem and the Sri Lanka Muslim Congress are on the way out.

indi.ca

ஐதேக ஆட்சிக்கு வரும் அறிகுறி எங்காவது தெரிகிறதா?
இல்லை என்பது ரணிலுக்கும் தெரியும்.. அடுத்த தலைவராக வரக்கூடிய சஜித்க்கும் தெரியும்.. இவ்வளவு ஏன்? தனக்கும் சஜித்துக்கும் இடையே புரிந்துணர்வு இருப்பதாக நாமல் பகிரங்கமாக சொல்லியிருப்பதும் வாக்களித்து வந்த நாமலை சஜித் இன் அம்மா ஹேமா உச்சிமோர்ந்ததும் ரகசியம் அல்ல..

இன்னும் எதிர்கட்சி தலைவர் பதவிக்காக மகிந்தவை தனியாக ரணில் சந்தித்ததும் சபா நாயகர் பதவியை விட்டுகொடுக்க முன்வந்ததும் நேற்றுவரை மகிந்தவுடன் தேநீர் அருந்தி பேசிக்கொண்டிருப்பதும் நடந்துகொண்டிருக்கும்போது
முகாவுக்கு வாக்களித்த மக்கள் ஏன் இந்த தலைவர் மட்டும் ஐதேகவுடன் ஒட்டிகொண்டிருக்கிறார் என்று விமர்சிக்க மாட்டார்களா?

ஒற்றை உறுப்பினரை கொண்ட கணேசனின் கட்சியில் பிரபா கணேசன் அரசுக்கு தாவிவிட்டார். மின்னலில் சீறிக்கொண்டிருந்த ரங்கா நாமளுடன் சேர்ந்து கிரிக்கட் விளையாட எல்லையில்லா ஆசைகொண்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் பதவி தராததால் ஐதேக மீது கோபம் கொண்டிருந்த மனோ கணேசன் பிரபா கணேசனை பிரித்த கோபத்தினால் மட்டும் ஐதேகவுடன் ஒட்டி இருப்பார். ஆனால் அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் பிரபா கணேசன் ஊடாக வேண்டிய அரச ஒத்தாசைகள் கிடைக்கும் .

ததேகூ கூட என்று அரசிலிருந்து ஒரு கண்சாடை கிட்டும்.. ஓடிப்போய் சேரலாம் என்று தருணம் பார்த்திருக்கும்போது ஏன் முகா மட்டும் எதிர்த்து நின்று கால விரயம் செய்யவேண்டும்? இந்த ததேகூ ஆதரவு ஊடகங்கள்தான் இப்போது முகா அரசுடன் சேர்ந்துவிட்டது என்றுஓலமிடுகின்றன.

இவற்றையெல்லாம் கவனித்தால் ரவூப் ஹக்கீம் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்திருக்கிறார் என்பதே தெளிவாகின்றது..

இதில் மிகப்பெரிய கோமாளியாகியிருக்கிறார் ஐதேக பிரதி தலைவர் கரு. முகா யானை சின்னத்தில் போட்டியிட்டது என்றும் அது ஐதேகவுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்றும் அவர் சொல்லியிருக்கிறார். ஐதேக பலமாக இருந்தபோது பல தலைகளை மஹிந்த அணிக்கு கூடிச்சென்று வெறும்கையுடன் திரும்பி வந்தவர் இந்த லாஜிக் தனக்கு பொருந்தாது என்றுநினைத்திருக்கிறாரோ..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

இவர்களால் என்னபயன்?

இலங்கையில் நடக்கும் ஒருநாள் போட்டி தொடரை பார்க்கும் வாய்ப்பு கிட்டாவிட்டாலும் இணையங்களிநூடாக செய்திகளை அறிந்துவருகிறேன்..

இலங்கையின் பதிவுலகில் சில முக்கிய பதிவர்கள் செய்யும் அழிச்சாட்டியங்களை பார்க்கும்போது எரிச்சலாக வருகிறது.. வெறுமனே ஹிட்ஸ் தான் இவர்களின் இலக்காக மாறியிருப்பதால் ஆக கூடுதலான ஹிட்ஸ் வரக்கூடிய இந்தியாவுக்கு சார்பாகவே எதையாவது எழுதுவதுதான் இவர்களின் வேலையாக போயிருக்கிறது.. ரண்டிவ் மற்றும் தர்மசேன பற்றி எழுத நேரம் இருக்கும் இவர்களுக்கு இந்தியா டெஸ்ட் போட்டிகளில் தீர்ப்புகளுக்கு எதிராக மேல் முறையீடு செய்ய இருக்கும் வாய்பை நிராகரித்தது ஒரு உபரி செய்தியே..

The Umpire Decision Review System (abbreviated as UDRS or DRS) is a new technology based system currently being used on an experimental basis in the sport of cricket. The system is being used only in Test Cricket for the sole purpose of reviewing the controversial decisions made by the on field umpires in the case of a batsman being dismissed or not. The new revived system was officially launched by International Cricket Council on 24 November 2009 during the first test match between Pakistan and New Zealand at the University Oval in Dunedin.



இவர்கள் எதை எழுதினாலும் தான் இலங்கையன் என்ற உணர்வுட எழுதாவிட்டாலும் இந்த இந்தியாவுக்கு வால் பிடுத்து தான் ஹிட்ஸ் சம்பாதிக்கணும் என்றிருந்தால் இவர்களால் என்னபயன்?

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

Tag பண்ண விடாதீங்க

Facebookல உங்கள நிறைய பேர் attention எடுக்கிறதுக்காக tag பண்ணுவாங்க. நாமளும் கண்டுக்காம இருந்திருக்கிறோம்.
ஆனா அதுல இருக்கிற ரோதனைகள தெரியுமா?

இலங்கை பதிவர்களின் அச்சுறுத்தல் காரணமாக நான் புலம் பெயர்ந்தது உங்களுக்கு தெரியும்தானே.. (அப்படிதான் எல்லா புலம்பெயர்ந்தவங்க்களும் சொல்வாங்க. நிஜ காரணம் ஊருக்கே தெரியும்) என்னதான் புலம் பெயர்ந்தாலும் facebookக விட்டு புலம் பெயரமுடியுமா?

ஆனா இங்க வந்து facebookல log ஆக பார்த்தா இப்படி ஒரு message வருது..

சரி என்னதான் நடக்குது பாப்போம்னு போனா


4 வது stepல வந்தது பெரிய ஆப்பு..
இந்த படத்துல இருக்கிறது யாருன்னு கேக்குது .

இவனுங்க என்ன அனுஷ்காவா இல்ல நமீதாவா? பார்த்து அடையாளம் காண..

மக்கா இனி யாரும் என்ன tag பண்ணாதீங்க.. பண்ணினீங்க கெட்டவார்த்த யால திட்டிபுடுவேன் ஆமா..

வாசிச்ச நீங்க செய்யவேண்டியது உங்கள facebookல tag பண்ணினவங்கள remove பண்றதுதான்..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

மனசாட்சிக்குவிரோதமில்லாமல் காரணத்தை சொல்ல முடியுமா?

நண்பர்களே.. ஒரு ஓய்வுக்கு பின் மீண்டும் நான் வந்தாச்சு..

நேற்று ஒரு துயர சம்பவம் நடந்து 20 வருசமாகியிருக்கு..
40, 50 வருசத்துக்கு முன்னாடி நடந்ததெல்லாம் இன்னமும் சொல்லப்படுகின்ற வேளையில் இதெல்லாம் சொல்லத்தான் யாரும் இல்லை.

இந்த பதிவுலகம் மனிதாபிமானம் பற்றி பேசும் அதேவேளை, உள்ளே வஞ்சகத்தை சுமந்திருப்பதை இது தெளிவாக்குகிறது.

இலங்கையில் இருந்து எழுதும் பதிவர்களே, காத்தான்குடி படுகொலைகள் பற்றி நீங்கள் இதுவரை எழுதியிருக்கிறீர்களா? காரணத்தை சொல்ல முடியுமா? மனசாட்சிக்குவிரோதமில்லாமல்..

காத்தான்குடி படுகொலைகள் பற்றி தெரிய இந்த linkகளை பின்தொடரலாம்
http://www.spur.asn.au/kattankudi_muslim_mosque_massare_by_ltte_1.htm
http://en.wikipedia.org/wiki/Kattankudy_mosque_massacre

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்