Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

எக்சார் எழுதும் கடிதம்

நலம். உங்கள் நலத்திற்கு இறைவன் எப்போதும் அருள்பாலிக்க வேண்டிக்கொள்கிறேன்.

முதலில் பதிவுலகில் நான் இருப்பதற்கான காரணங்களையும் சொல்லவேண்டும்.

லோசனின் பதிவுகளினூடாக பதிவுலகு பற்றிய அறிமுகத்தை பெற்றுக்கொண்டபோதும் அதே காலத்தில் ஹிஸாம் எழுதிய "வடபுல சோனிகள் .." என்று ஆரம்பிக்கும் பதிவில் நடந்த விமரிசனங்கள்தான் என் பாதையை தீர்மானித்தது.

எல்லோரும் ஒன்றை பற்றி மற்றும் பேசுகின்ற கடிவாளம் போட்டமாதிரியான இலங்கை பதிவுலகில், எனக்குத்தோன்றுகின்ற கருத்துக்களையும் பதிவுசெய்தல் அவசியம் என உணர்ந்தேன். கருத்துக்கள் சரியோ பிழையோ (அது அவரவர் பார்வையை பொறுத்து என்பது நீங்கள் அறிந்ததே) அவை சொல்லப்படுவதன்மூலம் இப்படியும் ஒரு கருத்து இருக்கிறது என்று உணரச்செய்வதே என் எழுத்தின் நோக்கம். இது ஆரோக்கியமான ஜனநாயத்திற்கு அவசியம் என்று நான் கருதுகிறேன்.

எனது முதல் 3 பதிவுகள் நானே எழுதி நான் மட்டுமே படித்திருக்கிறேன். அதை பெரிதாக ரீச் ஆகவில்லை.
நவீன தொடர்பாடல் தொழிநுட்பமும் பெட்ரோலும்
ROBIN HOOD அரசாங்கம்
பெட்ரோல் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பும் அமைச்சரவையும்
ஆனால் இவையே நான் எழுத நினைக்கும் பதிவுகள். என்ன செய்ய.. இவை எவை பற்றியும் தமிழ் பேசும் மக்களுக்கு ஆர்வமிலலை. இவையெல்லாம் சிங்களத்தில் அல்லது ஆங்கிலத்தில் எழுதினால் கொஞ்சம் ரீச் ஆகும். ஆனால் அது பற்றி எழுத அங்கு நிறையப்பேர் இருக்கிறார்கள்.

அதன்பின் கொஞ்சம் தமிழ் மக்கள் படிக்கிறமாதிரி பதிவுகள். ஆனால் அவற்றைபற்றி பதிவுலக ஆசானிடம் கருத்து கேட்டால் எல்லாம் மொக்கை என்றார். பிறகு நான் கவலைப்படுவேன் என்று நினைத்தாரோ என்னவோ பலருடையதும் மொக்கைதான் என்றார்.

ஆக மீண்டும் எழுதவேண்டிய தலைப்புகள் பற்றி என்னுடைய சீர்தூக்கலை செய்தேன். இப்போது என் பதிவுகளை "என்ன கொடுமை சார்" என்கிறார்கள். அப்பாடா.. அது போதும்.. இந்தப்பாதையிலேயே இனியும் தொடர இருக்கிறேன்.

ஆயினும் பலர் குற்றஞ்சாட்டுதல் போல் கவனிக்கப்படவேண்டும், பெருமை பெறவேண்டும் என்பது என் நோக்கமல்ல. அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

ஏறத்தாள 10 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது "அறிவிப்பாளர்கள் ஏன் சமூகத்திற்கு பெரிதாய் எதுவும் செய்வதில்லை" என்ற பேச்சு வந்தது. அப்போது என் நண்பன் ஒருவன் கூறிய காரணம், "அது புகழை மையமாக கொண்டு இயங்கும் உலகு.. அவ்வாறான உலகில் தனது புகழுக்கு களங்கம் வரக்கூடும் என்று நினைப்பதை எதிர்ப்புகள் வரக்கூடும் என்று நினைப்பதை அவர்கள் செய்யமாட்டார்கள்" என்பது இன்றும் என் மனதில் இருக்கிறது.(அண்ணண் மாரே இதுக்கு பின்னூட்டம் இடுவதற்கு முன் 10 வருஷத்திற்கு முன் இருந்த பிரபல அறிவிப்பாளர்கள் பற்றியே குறிப்பிட்டிருக்கிறேன் என்பதை கவனித்தல் நலம்)

அதனால்தான் நான் எக்சார் ஆகவே அடையாளம் காட்டுகிறேன். எனது தனிப்பட்ட அடையாளம் இருந்தால்தானே புகழுக்கு ஆசை வரும்...

யாழ் நூலக எரிப்பு தொடர்பாக என்னுடைய பதிவு தொடர்ந்தும் பிழையாகவே விளங்கப்பட்டுள்ளது என்றே கருதுகிறேன். எனவே என்பார்வையில் பொருத்தமற்ற பின்னூட்டங்களை நீக்க நான் முடிவெடுத்தால் ஏறத்தாள எல்லா பின்னூட்டங்களையும் நீக்கவேண்டிவரும்.

ஆனாலும்

நான் பின்னூட்டங்களை ஒருபோதும் மட்டுறுத்தியதில்லை. அதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறேன். எனவேதான் என்னைப்பற்றி மிக கீழ்த்தரமாக விமர்சித்துவந்த பின்னூட்டங்கள் கூட அப்படியே இன்றும் இருக்கின்றன. (என்னுடைய பெயரை இழுத்த ஓரிரண்டு பின்னூட்டங்களை நீக்கியிருக்கிறேன். எடிட் செய்திருக்கிறேன்.)

ஆயினும் இப்பின்னூட்டங்களை நீக்கவேண்டும் என்று தொடர்ந்து வந்த அழுத்தங்களை தொடர்ந்து, பின்னூட்டங்களை மட்டுறுத்துவதிலலை என்ற கொள்கையை உறுதிப்படுத்தும் முகமாக, பதிவை நீக்க முடிவெடுத்தேன்.

அம்முடிவு உலகில் யாரையும் விட எனக்கே வலிதருவது. ஆயினும் அம்முடிவை எடுக்கவெண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. என்ன செய்ய..

தொடர்ந்தும் உங்களது கருத்துக்களை எதிர்பார்க்கும்

எக்சார்

குறிப்பு
1) தம்பி அசோக்பரனுக்கு, நான் உங்களை சாரு என்று கூறியதாக குறைப்பட்டிருக்கிறீர்கள். நான் குறிப்பிட்டது உண்மை. அது உங்கள் எழுத்து நடைக்காக அலல.. Buy me a Coffee என்ற உங்களது widget க்காக மட்டுமே. சாருதான் எல்லாத்துக்கும் காசு கேக்கிறார். அவர் பாசையில் சொல்வதானல் உங்கள் "அது" (சிறுவர் என்றால் என்ன பெரியவர் என்றால் எனக்கு என்ன?) விறைப்படைவதற்காக எழுதினால் சுகம் உங்களுக்கு. எதற்கு எங்களிடம் காசு கேட்கிறீர்கள்? நாங்கள் ஏன் காசு செலவழித்து உங்களுக்கு "சரக்கு" புடிச்சுத்தரணும்? மற்றப்படி நீங்கள் நன்றாகவே எழுதுகிறீர்கள். வாகன தீர்வை பற்றி நீங்கள் மட்டும்தான் எழுதியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

2) லோசன் அண்ணா, கங்கொன், ஆதிரை போல் சண்டைபிடுச்சுக்கிட்டே என்னோடு நட்பாக இருக்க நீங்கள் தயார் என்றால் வலது இடது பக்கத்தில் இருக்கும் Facebook, Twitter link களை click செய்யவும். :D :D :D


3) பதிவுலகிலிருந்து இடைவெளி எடுக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். (இதற்கும் கண்டனங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.)

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

ஒன்றில் நீங்கள் இஸ்லாத்தை ஏற்கவேண்டும் இல்லை என்றால் நான் கிறிஸ்த்த்வத்தை தழுவ வேண்டும் - சாகிர் நாயக்

என்னுடைய பிரமிக்கவைத்த மாற்று மதத்தவர்களின் கேள்விகள்
என்ற தலைப்பிலான பதிவில் சில கேள்விகள் பற்றி சிலாகித்து எழுதியிருந்தேன்.

Naik has held many debates and lectures around the world as well as in Mumbai, India. One of Naik's most cited debates took place in Chicago in April, 2000 featuring Dr. William Campbell of Pennsylvania, USA on the topic "The Qur'an and the Bible: In the Light of Science".[20] Following a lecture by Pope Benedict XVI in September 2006, Naik offered to engage in a live public debate with him, but the Pope has not responded to this invitation

அதற்கு வந்த பின்னூட்டத்தில்

Robin said...
//பைபிளில் இன்னொரு இறைதூதர் வருவார் என்பதற்கான ஆதாரங்களையும், அவர் பெயர் முஹம்மத் என்பதற்கான ஆதாரங்களையும் அள்ளி வழங்கினார்.// தெரிந்து கொள்ள ஆவல்.

என்று கேட்டிருந்தார்.

அந்த video இப்போதுதான் You tube இல் வெளியிடப்பட்டுள்ளது.

நண்பர் ரொபினுக்காகவும் இஸ்லாம் பற்றிய கேள்விகள் வைத்திருக்கும் பிற நண்பர்களுக்காகவும் அந்த வீடியோ இங்கு தரப்பட்டுள்ளது..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

இலங்கையில் விடுமுறை

விடுமுறைக்கு பெயர்போன நாடான இலங்கையில் இன்றும் ஒரு விடுமுறை. யுத்த நிறைவின் ஓராண்டை முன்னிட்டு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஒத்திகையில் விமானப்படை விமானங்கள்

ஒரு சிலர் இவ்விடுமுறைகள் இலங்கையை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் உள்ள முதல் தடைக்கல் என்கிறார்கள். ஆயினும் ஒவ்வொருநாளும் இயங்கவேண்டிய சேவைத்துறைகள் இந்த நாட்களிலும் இயங்குகின்றன. ஆனால் ஊழியர்கட்கு சாதாரண சம்பளத்திலும் 2, 3 பங்கு அதிகம் சம்பளம் இந்த நாட்களில் வேலை செய்யும் ஊழியர்கட்கு கிடைக்கிறது. துறைமுகம் போன்ற இடங்களில் இலங்கையில் நீண்ட விடுமுறைக்காலமான புத்தாண்டு வெசக் காலப்பகுதியில் அதிகளவான சிறுபான்மை இன ஊழியர்கள் வேலைசெய்து அதிகமாக தேடிக்கொள்கிறார்கள்.

இன்னும் எம்மை விட அபிவிருத்தியடைந்திருக்கும் மத்தியகிழக்கு நாடுகளில் நோன்பு காலங்களில் வழமையான சம்பளத்திற்கு 2 மணித்தியாலம் குறைவாக அதாவது 6 மணித்தியாலம் வேலை செய்தால் போதும். அதேபோல் இரு பெருநாட்களுக்கும் ஏறத்தாள ஒரு வாரம் விடுமுறை வழங்குகிறார்கள். இது நாட்டின் அபிவிருத்திக்கு விடுமுறைகள் தடையாக அமையாது என்பதற்கான சான்றாக அமைகிறது.

Poya or Poya Day is the name given to a Buddhist public holiday in Sri Lanka which occurs every full moon day. The Full moon is important to Buddhists all around the world, who have adopted the Lunar Calendar for their religious observances. Owing to the moon's fullness of size as well as its effulgence, the full moon day is treated as the most auspicious of the four lunar phases occurring once every lunar month (29.5 days) and thus marked by a holiday.


இலங்கயில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினம் விடுமுறையாகும். அந்த நாளில் திரையரங்கோ ஏனைய களியாட்ட அரங்குகளோ திறக்கப்படுவதில்லை. இனி வரும் காலத்தில் தனியார் வகுப்புகளும் நடத்தப்படமுடியாது.

பௌத்த மத அனுட்டானங்களுக்காக கொண்டுவரப்பட்ட இவ்விடுமுறைகள் இலங்கையின் கலாசாரத்தை விழுமியங்களை பாதுகாப்பதில் மதங்களை தாண்டி செயற்படுகிறது. இந்நாட்களில் உறவினர் நண்பர்கள் ஒருவரை ஒருவர் சென்று சந்திப்பது இலங்கையில் காலாகாலமாக பாதுகாத்து வரப்படும் குடும்ப பாசம், நட்பு போன்றன தழைப்பதற்கு இது பெரிதும் உதவுகிறது. அதேபோல் மத நிகழ்வுகளை / போதனைகளை நடாத்துவதற்கு இவ்வாறான எல்லோருக்கும் பொதுவான விடுமுறை நாள் இருப்பது வசதியாக இருக்கிறது.

இன்னும் முழுவீட்டையும் சுத்தப்படுத்த வீட்டுத்தலைவியான பெண்ணிற்கு முழுக்குடும்பத்தின் உதவியையும் பெற்றுத்தருகிறது. இன்னும் தனது தோட்டத்தில் சில பணிகளை செய்வதற்கும் அயற்பிரதேசங்களை சுத்தப்படுத்துவதில் அயலவர்கள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கும் இவ்வாறான நாட்கள் உகந்தவை.

விடுமுறைகளை பயனுள்ள வகையில் குடும்பத்துடன் செலவிடுவோம்

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

ராவணண் படத்தை தமிழ் உணர்வாளர்கள் எதிர்க்கவேண்டும்


மணிரத்தினத்தின் இயக்கத்தில் நாளை ராவணண் படம் வெளியாகிறது. நாளை இலங்கையில் புலிகளுக்கெதிரான யுத்தத்தில் பெற்ற வெற்றியை குறிக்கும் விழாவையும் இலங்கை அரசு நடாத்துகிறது.


Raavan (Hindi: रावण) is a forthcoming Hindi film directed and co-written by Mani Ratnam. It stars Abhishek Bachchan, Aishwarya Rai and Vikram in the lead roles while Govinda, Ravi Kishan, Nikhil Dwivedi, Tejaswini Kolhapure and Priyamani feature in key supporting roles. It is simultaneously being made in Tamil as Raavanan with a slightly different cast, which would also be dubbed into Telugu[1] and other regional languages. The film's score and soundtrack is composed by A. R. Rahman.[2][3] The film is scheduled to be released on 18 June 2010.[4] The film's premiere was held in London on 16 June 2010.[5]

ஏற்கெனவே ஐபா விழாவில் கலந்துகொள்ளாமைக்கு மணிரத்தினம் மற்றும் பச்சன் குடும்பத்தினர் ஆகியோர் சப்பைக்கட்டு காரணம் கூறியிருப்பது தமிழ் உணர்வாளர்களை புண்படுத்தியிருக்கிறது.

இச்சந்தர்ப்பத்தில் வெற்றி விழா நடைபெறும் நாளிலேயே ராவணண் படமும் வெளியாவது குறித்து சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.

போதாதற்கு படத்தில் கோடு போட்டா கொன்னு போடு என்று ஒரு பாடல் வேறு. ரஹ்மான் பாடலை கோடு போட்டா குண்டு போடு என்று கேட்குமாறு ரெக்கார்ட் பண்ணியிருக்கிறார். இப்பாடலின் வரிகளை உன்னிப்பாக கவனித்தால் இலங்கை அரசின் வெற்றி பெருமித பாடல் போல் இருக்கிறது.

கோடு போட்டா கொன்னு போடு
வேலி போட்டா வெட்டி போடு
நேத்துவரைக்கும் உங்க சட்டம் இன்னைக்கிருந்து எங்க சட்டம்
கோடு போட்டா கொன்னு போடு
வேலி போட்டா வெட்டி போடு
வில்லப் போல வளஞ்ச கூட்டம்
வேலப் போல நிமிர்ந்து விட்டோம்

சோத்துல பங்கு கேட்டா அட எலையப்போடு எலைய
சொத்துல பங்கு கேட்டா அவன் தலைய போடு தலைய
ஊரான் வீட்டு சட்டத்துக்கு ஊரு நாடு மசியாது
மேகம் வந்து சத்தம் போட்டா ஆகாயம்தான் கேக்காது
பாட்டன் பூட்டன் பூமிய யாரும் பட்டா போடக் கூடாது

பாம்பக் கூடப் பழகி பசும் பால ஊத்தும் சாதி
தப்பு தண்டா செஞ்சா அட அப்ப தெரியும் சேதி
கள்ளிக் காட்டுப் புள்ளத்தாச்சி கல்ல பெத்த வீரனடா
ஜல்லிக்கட்டு மாடு கிழிச்சா சரியும் குடலே மாலையடா
செத்த கெழவன் எழுதிவெச்ச ஒத்த சொத்து வீரமடா

கோடு போட்டா கொன்னு போடு
வேலி போட்டா வெட்டி போடு

எங்க காத்து மீன்சுட்ட வாசம் அடிக்கும்
எங்க தண்ணி எரி சாராயம் போல் ஒரைக்கும்
வத்திப் போன உசுரோட வாழ்வானே சம்சாரி
ஒரு சப்பாத்திக் கள்ளி வாழ வேணாமே மும்மாரி
எட்டுக்காணி போனா அட எவனும் ஏழை இல்ல
மானம் மட்டும் போனா நீ மய்க்கா நாளே ஏழ
மனைவி மாதா மட்டும் இல்ல மண்ணும் கூட மானம்தான்
சீயான் காட்டத் தோண்டிப் பாத்தா செம்மண் ஊத்து ரத்தம்தான்

கோ கோ கோ கோடு போட்டா கொன்னு போடு
வேலி போட்டா வெட்டி போடு
நேத்துவரைக்கும் உங்க சட்டம்
இன்னைக்கிருந்து எங்க சட்டம்

கோடு போட்டா கொன்னு போடு
வேலி போட்டா வெட்டி போடு
நேத்துவரைக்கும் உங்க சட்டம்
நேத்துவரைக்கும் உங்க சட்டம்
நேத்துவரைக்கும் உங்க சட்டம்
இன்னைக்கிருந்து எங்க சட்டம்


இதில் கோடு போட்டா கொன்னு போடு என்பது தனி நாடு கேட்டு நாட்டுக்குள் கோடு (எல்லை) வரைபவரைக்குறிக்கும் என்பது தமிழ் உணர்வாளர்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாக தெளிவாகிறது.

தமிழ் மக்களின் மனதில் ஆறாத வடுவை சுமந்திருக்கும் நிலையில் இலங்கையரசு போரின் வெற்றியை பெருமிதத்தோடு கொண்டாடுகையில் அதே நாளில் ராவணண் படத்தை வெளியிடுவதன் அவசியம்தான் என்ன? ஒரு நாள் பிந்தி வெளியிட்டால் மணிரத்தினத்தின் குடியா முழுகிப்போய்விடும்?

எனவே மணிரத்தினத்தின் சதியை முறியடித்து இப்படத்தை உலகெங்கும் நாளை வெளியிடப்படுவதையாவது தடுக்கவேண்டும்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

மட்டக்களப்பு -அவதானித்த விடயங்கள்

பாசிக்குடா
அலைகள் அற்ற கடற்கரையான பாசிக்குடா கடற்கரை பிரதேசம் சுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. பொலிஸ் பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களிலிருந்து பஸ்களில் அதிகமானோர் வருகின்றனர். ஏறத்தாள ஒரு கிலோமீட்டர் தூரம் வரை தோள் அளவுக்குத்தான் தண்ணீர்மட்டம் இருக்கும் என்கிறார்கள். நான் ரிஸ்க் எடுக்கவில்லை.

பாசிக்குடா பிரதேசத்தில் "அண்ணே நொங்கு அண்ணே" என்று கெஞ்சும் இளநீர் மற்றும் நுங்கு விற்கும் சிறுவர்களை பார்ப்பதற்கு பாவமாக இருக்கிறது. 15/- ஒரு நுங்கு. இதே பிரதேசத்திற்கு அண்மையில் உள்ள செங்கலடி திரையரங்கில் சிங்கம் முதல் காட்சி பார்ப்பதற்கு அரங்கு கொள்ளாத கூட்டம்.

பாதைகள்
ஜனவரிமாதம் காபட் போடப்பட்டுக்கொண்டிருந்த பாதைகள் பெருமளவில் முடிந்துவிட்டன. அம்பாந்தோட்டையிலிருந்து காரைதீவு சந்திக்கான அதிவேக பாதை முடியுமாயின் இப்பிரதேச போக்குவரத்து பிரச்சினைகள் பல முடிந்துவிடும்.

சோதனை சாவடிகள்
கொழும்பு மட்டக்களப்பு பாதையில் சோதனைக்காக நிறுத்தப்படுவதில்லை. ஆனால இரத்தினபுரியினூடான அம்பாறை பாதையில் 4 சோதனை சாவடிகள் இப்போதும் இருக்கிறது என்று கேள்வி.

குடிநீர்
அம்பாறை கல்முனை அக்கரைப்பற்று பிரதேசங்களில் குடிநீர் வழங்கும் திட்டம் பூர்த்தியாகியிருக்கிறது. ஆனால கல்முனைபிரதேசத்தில் ஒரு நாளைக்கு பல தடவைகள் நீர் வெட்டு முன்னறிவித்தல் இன்றி மேற்கொள்ளப்படுகிறது.

பிள்ளையான் மற்றும் கருணா
பிள்ளையான் அதிக பிரபலம் என்று தெரிகிறது. ஆனால் பாராளுமன்றத்தேர்தல் தோல்வி ஏன் என்பதுதான் தெளிவில்லை. ஏதாவது ஒரு பெரிய கட்சியுடன் சேர்ந்து அரசியல் செய்வது பிள்ளையானுக்கு நல்லது.

புதிய பிரதேச சபை
தீகவாபி என்ற புதிய பிரதேச சபை உருவாக்கப்படப்போகிறதாக பேசிக்கொள்கிறார்கள். தற்போது அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கீழ் இருக்கும் தீகவாபி, பாலமுனை, ஒலுவில் பிரதேசங்களை இணைத்து இப்பிரதேச சபை உருவாகப்போகிறதாம். ஆகக்கூடியது 200 குடும்பங்களை மாத்திரம் கொண்ட தீகவாபியின் பெயரை ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடும்பங்களை கொண்ட பாலமுனை ஒலுவில் பிரதேசத்திற்கு வைக்க முயல்வது பற்றி மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள். புதிதாக உருவாகியிருக்கும் ஒலுவில் துறைமுகத்தின் வருமானத்தைக்கொண்டு தீகவாபி பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் திட்டமாக மக்கள் இதை பார்க்கிறார்கள்.

In Deegavapi area, Muslims has possessing more than 6000 acres of paddy lands while Sinhalese has less than 150 acres of paddy lands.


இத்திட்டத்திற்காக புதிய சிலைகள் மண்ணுக்குள் இருந்து இனி கண்டெடுக்கப்படும் என்றும் மக்கள் எதிர்வுகூறுகிறார்கள்.

அபிவிருத்திப்பணியில் வேலையாட்கள்
இப்பிரதேசத்தில் பாரிய அபிவிருத்திப்பணிகள் இடம்பெற்றபோதும் அதற்கான ஆள் வளம் வெளியிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவும் பிரதேச மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் முஸ்லிம்கள் தனித்தனியாக இருக்கும் இப்பிரதேசத்தில் இப்பிரதேசத்தின் கலாச்சாரம் பற்றிய போதிய அறிவற்றவர்கள் தங்குவதால் தேவையற்ற மனத்தாபங்களே ஏற்படும். அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இது தொடர்பாக தமது வேலையாட்களுக்கு அறிவுறுத்தல் நல்லது.


நிந்தவூர்
நிந்தவூர் பிரதேசத்தை இரண்டு தொகுதிகளுக்கு பங்கிட்டு கொடுக்கப்படுவதன்மூலம் நிந்தவூரைச்சேர்ந்தவர் பாராளுமன்ற உறுப்பினராவதை தடுப்பதற்கு அதாவுல்லா முயற்சிப்பதாக நிந்தவூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதாவுல்லா
தீகவாபி பிரதேசத்தை புதிதாக உருவாக்கும் அரச ஆவணங்களிலும் நிந்தவூர் பிரதேசத்தை பிரிக்கும் அரச ஆவணங்களிலும் கையெழுத்திட்ட பின் மாண்புமிகு அமைச்சர் அதாவுல்லா அரசியலிலிருந்து விலகுவார் என்றும் ஒரு கதையடிபடுகிறது. அதற்காகத்தான் அவருக்கு அந்த அமைச்சும் வழங்கப்பட்டது என்கிறார்கள். எது உண்மை என்பதை காலம் தான் தீர்மானிக்கும்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

நாடோடி பார்வையில் தமிழா?முஸ்லிமா?

நாடோடி பார்வையில் என்ற வலைப்பூவில் தமிழா?முஸ்லிமா? என்ற தலைப்பில் ஒரு பதிவு இடப்பட்டிருந்தது.

காசா முஸ்லிம்கள் தொடர்பாக அக்கறைப்படும் இலங்கை முஸ்லிம் சமூகம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பாக எதையும் செய்யவில்லை என்ற தொனியில் இப்பதிவு இருந்தது.

இப்பதிவிற்கு நான் இட்ட பின்னூட்டம் இதுவரை பிரசுரமாகாத நிலையில், அதை ஒரு பதிவாக இடவேண்டிய நிலமை இப்போது ஏற்பட்டுவிட்டது.

முஸ்லிம்கள் சமய ரீதியாக தனித்துவமானவர்கள் என்பதை புரிந்துகொள்வதில் இன்னும் பல தமிழ் சகோதரர்களுக்கு சிக்கல் இருக்கிறது. அல்லது அவ்வாறு இருப்பதில் விருப்பம் இல்லை.

ஆயினும் தனித்துவம் என்பது மனிதநேயத்திற்கு குறுக்காக ஒருபோதும் இருந்ததில்லை.

காசாவிற்கு நிவாரண பொருட்களை ஏற்றிச்சென்ற கப்பலில் பிரபல அரசியல்வாதியான பாகீர் மாக்காரின் உறவினரான அஹமட் லுக்மான் தாலிப் இன் குடும்பமும் இருந்தது. இது பதிவு எழுதும்போது நாடோடி பார்வைக்கு தெரிந்திருக்கவில்லை. ஆயினும் அப்படி ஒருவர் இல்லாதிருந்தாலும் இலங்கை முஸ்லிம் சமூகம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும்.



A Sri Lankan shot by Israeli commandos during last week's deadly raid on a Gaza-bound aid flotilla has recounted the ordeal he had to face at the time of the incident. He is now receiving treatment at a hospital in Istanbul.

"Ahmad Luqman Talib received gunshot injuries in the leg and is now recovering in a hospital in Istanbul," said Nihad Issa, office director for the Representative Office of Sri Lanka to the Palestinian National Authority in Ramallah.

ஆப்கானிஸ்த்தானில் பாமியான் சிலைகள் உடைக்கப்பட்டபோதும் இலங்கை முஸ்லிம் சமூகம் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை முஸ்லிம்கள் ஒருபோதும் புலிகள் இயக்கத்தை அனுதாப கண்ணோட்டத்தில் பார்க்கமுடியாது. ஆனால் முஸ்லிம்கள் ஒருபோதும் அப்பாவி தமிழ் மக்களின் இன்னல்களை ரசித்ததும் இல்லை.

முஸ்லீம் மக்கள் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டபோது எந்தவொரு தமிழ் அமைப்பும் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தவோ உண்ணாவிரதம் மேற்கொள்ளவோ இல்லை என்ற வருத்தம் இன்னமும் முஸ்லிம்களிடையே இருக்கிறது.

பழையன பேசி இனி பயனில்லை. ஆயினும் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கு முஸ்லிம்கள் செய்த உதவிகள் தொடர்பாக இணையத்தில் வந்த செய்திகள் சிலவற்றை கீழே காணலாம்




வன்னி மக்களுக்கு முஸ்லீம் மக்களின் மனிதாபிமான உதவி முதலமைச்சர் சந்திரகாந்தனிடம் முஸ்லீம் அமைப்புக்களால் கையளிப்பு!
http://www.neruppu.com/?p=5261

காத்தான்குடி பிரதேச பள்ளிவாசல்கள் சம்மேளனம் ,ஜாமி - யத்துல் உலமா சபை வர்த்தகர் சங்கம் மற்றும் நகர சபை ஆகியன இணைந்து இந் நிவாரணப் பொருட்களை வைபவ ரீதியாக முதலமைச்சரிடம் கையளித்தனர்.
http://www.viyapu.com/news/?p=9858

வன்னியில் இருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வருகின்ற தமிழ் சகோதரர்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்ய அகில இலங்கை ஜம் இயத்துல் உலமா மற்றும் முஸ்லிம் கவுன்சில் இணைந்து நடவடிக்கை எடுத்துள்
http://www.unmaikal.com/2009/04/blog-post_5209.html

யுத்த அகதிகளுக்கான நிவாரணப் பணியில் காத்தான்குடி தொண்டர் குழு
http://www.unmaikal.com/2009/04/blog-post_8921.html

தமிழின மக்களின் துக்கத்தில் பங்குகொள்ளும் முஸ்லீம் உறவுகள்..
http://www.vaavimagal.com/?p=1500

இது தொடர்பாக பிபிசி தமிழோசை கூட ஒரு செய்தியை தந்திருந்தது. அதன் சுட்டியை தேடிக்கண்டுபிடிக்கமுடியவில்லை. முடிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

நாடோடியின் பார்வையில் இருந்த தெளிவாகும் ஒரு விசயம், இவ்வாறான நல்லெண்ண நடவடிக்கைகள் தொடர்பாக பொதுமக்களுக்கு தெரிவிக்கவேண்டிய தமிழ் அச்சு இலத்திரனியல் ஊடகங்களின் மௌனம் இவ்வூடகங்களின் உண்மையான சொரூபத்தை தோலுரிக்கின்றது என்பதே..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

மட்டக்களப்பு - தொடர்கிறது

மட்டக்களப்பு சந்தியில் நின்றால் திருகோணமலையிலிருந்து வரும் பஸ்ஸில் போகமுடியும் என்றும் நேரம் பற்றி சரியாக கூறமுடியாது எனவும் ஆட்டோ சாரதி கூறினார்..

ஒரு 10 நிமிடம் நின்றிருப்பேன். ஒரு கார் ஹோர்ன் அடித்தவாறு ரிவேர்சில் வந்தது. என்னை விலகச்சொல்கிறார் போலும் என்று நினைத்து விலகி நின்றபோதும் கார் என்னை நோக்கி வந்தது. என்னை அழைத்து தான் கல்முனை வரை போகப்போவதாகவும் நானும் அவருடன் இணையமுடியும் எனவும் கூறினார். நானும் தொற்றிக்கொண்டேன்.

இந்தக்காலத்தில் முன் பின் அறிமுகம் இல்லாத ஒருவருக்கு லிப்ட் கொடுப்பது என்பது அபூர்வம். ஆனால் அவர் என்னைப்பற்றி எதுவும் கேட்கவுமில்லை. மிகுந்த சாதுவான தோற்றமும் சாந்தமான பேச்சுமாக ஒரு கனவான் தோற்றம். அவரும் என்னைப்பற்றி கேட்காத நிலையில் நானும் அவரைப்பற்றி அதிகம் கேட்கவில்லை. UN நிறுவனமொன்றில் பணிபுரியும் அவர் வடக்கு கிழக்குமாகாணத்தில் பல திட்டங்களுக்கு பொறுப்பாளராக இருக்கிறார். இவர் திருகோணமலையை சேர்ந்தவர்.

தான் எப்போது பயணிக்கும்போதும் லிப்ட் கொடுப்பதை வழமையாக கொண்டிருப்பதாக கூறினார் - மனிதம் மிழிர்கிறது - உங்களுக்கு இப்பதிவுனூடக நன்றி செலுத்துகிறேன்

மட்டக்களப்பில் பாதைகள் புதிதாய் அமைக்கப்பட்டு அழகாய் காட்சிதந்தது. 80kmph க்கும் மேற்பட்ட வேகத்தில் மிக சாதாரணமாக வாகனத்தை செலுத்த கூடியதாக இருந்தது. கொழும்பு வீதிகளை விடவும் சீரிய முறையில் அமைக்கப்பட்டிருந்தது. ஆனாலும் காத்தான்குடி நகர்ப்பிரதேசம் முழுவதும் பாதை செப்பனிடப்படவில்லை. இவ்வளவிற்கும் காத்தான்குடியில்தான் முதன்முதலாக பாதை செப்பனிடப்படும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டதாக இவர் சொன்னார்.

காத்தான்குடி நகரில் பாதையின் மத்தியில் ஈச்ச மரங்கள் நடப்பட்டு அழகாக காட்சி தருகின்றது. மத்திய கிழக்கின் பாதை போன்ற எண்ணத்தை தருகின்றது.

Phoenix dactylifera commonly known as the Date Palm, is a palm in the genus Phoenix, extensively cultivated for its edible sweet fruit. Due to its long history of cultivation for fruit, its exact native distribution is unknown, but probably originated somewhere in the desert oases of northern Africa, and also Western Asia. It is a medium-sized plant, 15–25 m tall, often clumped with several plants from a single root system, but often growing singly as well. The leaves are pinnate, 3–5 m long, with spines on the petiole and about 150 leaflets; the leaflets are 30 cm long and 2 cm broad. The full span of the crown ranges from 6 to 10 m.
Wiki
அன்று வைசாக பௌர்ணமி தினம் என்பதால் எல்லா கோயிலிலும் கூட்டம்.. முழு மட்ட்க்களப்பும் கோலாகலமாக கொண்டாடிக்கொண்டிருந்தது.

கடந்தமுறை நான் மட்டக்களப்பு வந்தபோது மட்டக்களப்பு முழுவதும் தீபமாய் காட்சியளித்தது. பல இடங்களில் பெரிய பந்தங்களையும் டயரையும் போட்டு எரிந்துகொண்டிருந்தது. அது என்ன நிகழ்வு என்ற தெரியாத நிலையில் டயர்களும் பந்தங்களும் அச்சமூட்டின. கோயில்களில் மணிச்சத்தம் கேட்டது. twitter இனூடாக விசாரித்ததில் கார்த்திகை தீபம் என்று நண்பன் கன்கோன் சொன்னார்.

மட்டக்களப்பு மாவட்டமுமே யுத்தத்திற்குப்பின் எழில் பெற்றிருகிறது. நிறைய வீட்டுத்திட்டங்களும் காணப்படுகின்றன. ஆயிரக்கணக்கான வீடுகள் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. இவை அவ்வவ் பிரதேசங்களில் வதியும் மக்களுக்கே கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழ் மக்களுக்கு. ஆனால் அக்கரைப்பற்றில் சவூதியின் உதவியினால் கட்டப்பட்ட வீடுகள் சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு கொடுக்கப்படாமல் வழக்கில் இருக்கிறது.

மட்டக்களப்பு - தொடரலாம்..



சென்ற பதிவில் விடுபட்டுப்போன படங்கள்
உதயதேவி முதல் வகுப்பு
உதயதேவி மாஹோ சந்தியில்

உதய தேவி பயணம்

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

ஐபாவைப்போல் சீபாவையும் தமிழர்கள் புறக்கணிப்பர் - சீமான்

ஐபாவை புறக்கணித்த தமிழ் உணர்வாளர்கட்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் சீமான் இப்போது சீபாவை இந்தியா நிராகரிக்கவேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதற்கு ஆயத்தம் ஆவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக தமிழின் தலை சிறந்த நடிகனான ரஜனியையும் உலகத்தர திரைப்படங்களை தந்த கமலையும் அவர் சந்தித்திருக்கிறார்.

இதன்போது எந்திரன் திரைப்படத்தினை இலங்கையில் சீபா ஊடாக நல்ல இலாபத்திற்கு விற்கமுடியுமென்றபோதும், தமிழ் உணர்வை பறைசாற்றும் முகமாக சீபாவில் இந்தியா கையெழுத்திடக்கூடாது என்ற தன் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று உறுதி மொழி வழங்கினார்.

காவிரி நீர்ப்பிரச்சினையில் தெலுங்கு தேசத்திடம் தான் மண்டியிட்டதைப்போல் இதில் மண்டியிடமாட்டேன் என்றும் உறுதிபடக்கூறினார்.

Sri Lanka's Industries and Commerce Minister Rishad Bathiudeen told the parliament today (08) that the government is yet to arrive at a final decision on signing the Comprehensive Economic Partnership Agreement (CEPA) with India.

He said the government had not made any final decision on the matter yet.

Bathiudeen further noted that the government was currently exploring the possibility of entering in to similar trade agreements with Pakistan.

Colombo Page

கமல்ஹாசன், சீபாவுக்கு இலங்கையில் எதிர்ப்பு வலுத்து வருவதால் அதை இலங்கையின் நலன்களுக்கு எதிராக பாவிக்கும் முகமாக அதை ஆதரிக்கவேண்டும் என்று கமல் சொல்லியிருக்கிறார். ஆயினும் சீமான் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

இயக்குனர் ராம் இது தொடர்பாக பல பதிவுகளை இடப்போவதாகவும், தன்னைப்போன்ற புகழ் பூத்த இயக்குனர்களை தமிழ் சினிமா உலகம் பின்பற்றும் என்றும் தெரிவித்திருந்தது அறிந்ததே..

இதேவேளை இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த சீமான், சீபா இந்தியாவின் நலன்களை உறுதிசெய்தபோதும், இலங்கை தொடர்பாக தொடர்ந்தும் எதிர்ப்போக்கை கடைப்பிடித்து தான் இலங்கையை பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கி ஈழம் பெற்றுத்தருவதாக முழங்கினார்.

தமிழ்நாட்டின் உணர்வுகளை மதித்து இந்திய நடுவன் அரசு நடந்துகொள்ளாவிடின் அது தமிழ்நாடு தனிநாடாவதற்கு சகல நியாயங்களையும் உறுதிப்படுத்தும் எனவும் தன் உயிரைக்கூட அர்ப்பணித்தேனும் அடை பெற்றுக்கொடுப்பேன் என்றும் அவர் எச்சரித்தார்..

இன்னும் இந்திய திரைப்படங்கள், முக்கியமாக தமிழ் திரைப்படங்கள் இலங்கையில் இனி இலவசமாக திரையிடப்படும் என்றும் தெரிவித்தார். இது ஐபாவை எதிர்க்கும் தமிழ் சினிமா உலகம் நிர்க்கதியான நிலையில் அநாதரவான நிலையில் பட்டினியில் இருக்கும் தமிழர்களை திரைப்படங்கள் ஊடாக சுரண்டுகிறது என்று சிலர் சக்திகள் சொல்வதை கேள்விக்குட்படுத்தும்..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

மட்டக்களப்பு - இரயில் பயணம்

நீண்ட இடைவெளிக்குப்பிறகு வலைப்பூவினூடாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.. ஒரு 10 நாள் மட்டக்களப்பில் தங்கியிருக்க நேரிட்டதால் பதிவுலகில் பல விடயங்களை தொடர முடியாது போய்விட்டது.

கடந்த ஜனவரிக்குப்பிறகு மீண்டும் மட்டக்களப்பு சென்றிருந்தேன். இவ்விரு பயணங்களையும் ஒப்பிட்டு சில விடயங்களை பேசுவது மட்டக்களப்பு பற்றி பலருக்கு அறிய உதவக்கூடும்..

The famed “Uthaya Devi” Express Train has been re launched after a lapse of more than 25 years by the Sri Lanka Railway Department. The service was launched on the 5th of April 2009 as the first morning Intercity Express (ICE) train service to Batticaloa, and people in the east can now travel to Colombo in just 8 hours.

The Intercity Express train will commence its journey from Colombo Fort at 10.30 AM in the morning and reach Batticaloa at 6:30 PM in the evening. The return train will leave Batticaloa at 7:45 AM and reach Colombo Fort Station by 3:40 PM in the evening.

The “Uthaya Devi” Express Train will run seven days a week between Colombo Fort and Batticaloa.

The Uthaya Devi express train will have a first class observation saloon, a buffet, a second-class reserved compartment, two second-class non-reserved compartments and three third class non-reserved compartments.

Passengers will be able to reserve their seats from the Colombo Fort booking office, the Batticaloa booking office and other stopping stations on the route. Seat reservations can be made 10 days in advance of the intended date of travel.


இரண்டு பயணங்களின்போதும் மட்டக்களப்புக்கு சென்றது "உதயதேவி" புகையிரதத்தில்தான். அன்று புதிய இரயில். இன்று பழையது.

பழையது என்றவுடன் சேவை தரமற்றது என்று எண்ணிவிடாதீர்கள். புதிய இரயிலில் முதல் வகுப்புக்கும் 2 ஆம் வகுப்புக்கும் இடையேயான வித்தியாசம் சன்னல் திரைச்சீலைகள்தான்! ஒரே வகையான ஆசனங்கள், வசதிகள். 2ஆம் வகுப்பிற்கு கட்டணம் 550/- . திரைச்சீலைக்கு 350/- வாடகை போல.. முதல்வகுப்பு கட்டணம் 900/-

முன்னொரு காலத்தில் முதல் வகுப்பு என்றால் Berth என்றிருந்தது. பின்னர் அதே முதல்வகுப்பில் AC Compartment வந்தது. புதிய இரயில் சேவை என்று தொலைக்காட்சியில் செய்தியில் சொல்லப்பட்ட்து வெறுமனே இரயில் பெட்டிகள் மாற்றப்பட்டமையே..

இப்போது மீண்டும் பழைய இரயில் பெட்டிகள். இதில் ஆசனங்கள் புதிய இரயில் பெட்டியை காட்டிலும் சொகுசு.. ஆனால் புதிய இரயிலில் இருக்கும் மடிக்கக்கூடிய மேசைகள் இதில் இல்லை என்பது ஒரு குறையே..

அன்றும் இன்றும், புதிய இரயிலுக்கும் பழைய இரயிலுக்கும் இடையேயான ஒற்றுமை - நேரம் தவறல்.. 2 மணித்தியாலம் பிந்துவது எனக்கு இரு சந்தர்ப்பத்திலும் நடந்தது..

கொழும்பிலிருந்து மாகோ சந்திவரை 1ஆம் வகுப்பு; இரயில் என்ஜின் க்கு அடுத்ததாக இருக்கும். மாகோவில் என்ஜின் அடுத்த பக்கம் பிடித்து இழுக்கத்தொடங்குவதால் 3 ஆம் வகுப்பு தலையாகவும் 1ஆம் வகுப்பு வாலாகவும் மாறும்.

மட்டக்களப்பு இரயில் நிலையத்தில் கல்முனைக்கு ஒன்றாகவும் அக்கரைப்பற்று ஒன்றாகவும் இரண்டு பஸ் வண்டிகள் காத்திருக்கும். பிறகு கல்முனை பஸ் நிறுத்தப்பட்டதாகவும் அறிந்தேன். ஒரு இரயிலில் வரும் சனக்கூட்டத்தில் 25% ஏனும் கல்முனைவரை பயணம் செய்வதால் கால்வைக்கும் அளவுக்கு கூட பஸ்ஸில் இடம் கிடைப்பது கஷ்டம். ஆனால் அதற்கு பின் வேறு எந்த பஸ் சேவையும் இல்லாததால் எப்படியேனு இதில் ஏறியே ஆகவேண்டும்.

இதனால் ஏறாவூர் வந்ததும் மக்கள் 3ஆம் வகுப்பு பெட்டியில் சேர்ந்துவிடுவார்கள். இரயில் நிறுத்தப்பட முன்பே பாய்ந்து இறங்கி பஸ்ஸில் இடம்பிடிக்க போட்டியே நடக்கும். ஆனால் இதுதான் மட்ட்க்களப்பிலிருந்து கடைசி பஸ் என்பதால் மட்டக்களப்பில் தொழில்செய்யும்பலர் இந்த பஸ்ஸில் ஏற்கெனவே இடம் பிடித்திருப்பார்கள்.

இதுபற்றி ஜனவரி பயணத்தில் அறிந்திருந்ததால் நான் மட்டக்களப்பு அண்மிக்கும்போது இரயிலின் தலைப்பகுதியை நோக்கி நடக்கத்தொடங்கினேன். என்னைப்போல் யாரும் நடக்கவில்லை. கொஞ்சம் சந்தேகம் வந்ததும் ஒரு ஆசனத்தில் அமர்ந்துவிட்டேன். அருகில் இருந்தவர் நீங்கள் எங்கு போகவேண்டும் என்று கேட்டார். நான் சொன்னதும் எப்படி போவீர்கள் என்று கேட்டார். ஏன் பஸ் இல்லையா என்று கேட்டபோது மட்டக்களப்புக்கு கடைசியாக எப்போது வந்தீர்கள் என்று கேட்டார். இரயில் ஒவ்வொருநாளும் பிந்திவருவதால் காத்திருக்கும் நேரத்திற்கு மேலதிக கொடுப்பனவு வேண்டும் என பஸ் சாரதியும் நடத்துனரும் கேட்டது கிடைக்காததால் அந்த பஸ் சேவை இப்போது நிறுத்தப்ப்பட்டு விட்டது. மட்ட்க்களப்பில் 6மணிக்கு மேல் பஸ் இல்லை என்றும் சொன்னார்.

மட்டக்களப்பு - தொடரலாம்..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

IIFA இல் தமிழ் திரையுலகின் கபடம்


இலங்கையில் நடைபெறவுள்ள இந்திய திரைப்பட விழாவான IIFA பல எதிர்ப்புகளை கடந்து நாளை ஆரம்பமாக இருக்கிறது.

The International Indian Film Academy (IIFA) Awards, are presented annually by the International Indian Film Academy to honour both artistic and technical excellence of professionals in Bollywood, the Hindi language film industry. Instituted in 2000, the ceremony is held in different countries around the world every year.

இலங்கையில் தமிழர்கள் துன்புறுவதாக கூறி தமிழ் நாட்டு திரையுலகம் இவ்விழாவையும் பங்குபற்றுபவர்களையும் பகிஷ்கரிப்பதாக அறிவித்திருக்கிறது.

இது தொடர்பாக சில கேள்விகளை நான் உங்களிடம் முன்வைக்கிறேன்..

இலங்கையில் தமிழர் துன்பத்திற்கு கவலைப்படும் தமிழ் சினிமா அமைப்புக்கள் ஏன் இலங்கையில் இசை நிகழ்ச்சி நடாத்தும் இந்திய ஜூனியர் சீனியர் யாரையும் கண்டுகொள்வதில்லை?
சிங்கம் சுறா ஆகிய படங்கள் இலங்கையில் திரைடப்படுகின்றன. இலங்கை வாழ் தமிழ் மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றம் என்ன? இதன்மூலம் இலங்கை தமிழர்களுக்கு என்ன லாபம்?

இந்திய தமிழ் சினிமா துறை இலங்கை தமிழர்களிடம் தனது பொருட்களை சந்தைப்படுத்துகிறது. அதன்மூலம் பிச்சைகாரனிடம் மாமூல் வாங்கும் பொலிஸ் போல் நடக்கிறது .

மாறாக இனால் அபிவிருத்தியடையப்போகும் சுற்றுலாத்துறை, அதில் பாதிக்கும் அதிகமாக இருக்கும் தமிழர்களின் வருமானத்தை அதிகரிக்கும். இன்னும் பல சிறுவர் போராளிகளுக்கு புனர்வாழ்வையும் வீடுகளை இலந்தவர்கட்கு வீடுகளையும் அளிக்கும். இவற்றை தடுப்பதன்மூலம் தமிழ் சினிமா உலகம் சாதிக்க நினைப்பது என்ன?

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்