Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

தமிழ் வளர்க்கும் மெட்ரோ நியூஸ

இலங்கையில் மெட்ரோ நியூஸ் என்று ஒரு பத்திரிகை வீரகேசரி பத்திரிகை குழுமத்திலிருந்து வருகிறது.

மெட்ரோ நியூஸ் என்றதுமே ஆங்கில பத்திரிகை என்று நினைத்துவிடாதீர்கள். தமிழ் கூறும் நல்லுலகுக்கான பத்திரிகையே அது. ஏன் ஆங்கில பெயர் என்று சில தமிழ் வளர்க்கும் பதிவர்கள் கேட்கமாட்டார்கள். எல்லாம் பிரபலம் எனும் போதை.

முதல் பக்கம் ஒரு பெரியபடம் அத்துடன் இரண்டுவரி செய்திகள் நடுவில் 2 பக்கம் சினிமா ஒருபக்கம் தொலக்காட்சி நிகழ்ச்சி நிரல் ஒரு பக்கம் விளையாட்டு அத்துடன் ஓரிரண்டு பக்கம் மசாலா கதை (உண்மை சம்பவமாக அல்லது துப்பறியும் கட்டுரையாக) ஏறத்தாள ஜனனி தரத்தில் இருக்கும்.

இந்தப்பத்திரிகையின் தரம் பற்றி ஒரு பானை சோற்றுக்கு இரண்டு சோறு பதம் பார்ப்போமா?

இப்பத்திரிகையில் கேள்வி பதில் அம்சமும் இருக்கிறது. அதில்



கே: இலங்கை கிரிக்கட் அணியின் எதிர்கால தலைமைப்பொறுப்பு டில்ஷானிடம் வளங்கப்படுமா?

ப: ... ஒரு நாள் போட்டி ஒன்றின்போது டில்ஷான் தலைமை ஏற்று நடத்தியபோது மிகுந்த பதற்றமடைந்தார்.



கே: இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காளியாக யாரை கருதுகிறீர்கள்?

ப: ....ஆரம்பத்தில் அதிர்ச்சி கொடுக்கும் சமிந்த வாஸ், பின்னுக்கு இடைஞ்சல் கொடுக்கும்..

இது பிரசுரமாகி ஒரு மாதம்ளவே இருக்கும். எழுதுபவர்கள் எவ்வளவு தூரம் விஷய ஞானம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்?

வீரகேசரியில் வந்த விளம்பரம் Personal Secretry ? 

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

பாலத்திற்கு பின்னாலுள்ள பெயர்!


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த சனிக்கிழமை கிண்ணியாவில் இலன்கையின் மிக நீளமான பாலத்தை திறந்துவைத்தார்.

இதன் கட்டுமானட்துக்கான நிதி சவூதி அரசால் வழங்கப்பட்டிருந்தபோதும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல்வாதிகளால் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் 18 அடிக்கல்கள் நட்டபின்பே ஆரம்பிக்கப்பட்டிருந்தது! கடைசி அடிக்கல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் அவர் சந்திரிக்கா அரசில் பெருந்தெருக்கள் அமைச்சராக இருந்தபோது நடப்பட்டிருந்தது.

இப்பிரதேச அரசியல்வாதிகள் எல்லோரும் தங்கள் பெயரை இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க பாலத்திறப்பில் பதிந்துகொள்ள ஆர்வம் காட்டினார்கள்.
அழைப்பிதழில் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் TB ஏக்கநாயக்க பிரதியமைச்சர் WB ஏக்கநாயக்க மற்றும் அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற அட்மிரல் வசந்த கருணாகொட மட்டுமே இருந்தது.

தன்னுடைய பெயர் இல்லாதது பற்றி அமைச்சரவை அந்தஸ்த்து அற்ற அமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற அட்மிரல் வசந்த கருணாகொட விடம் தொலைபேசியில் கேட்டபோது அவர் இராணுவ பாணியில் "மேலிடத்து கட்டளை" என கூறியிருக்கிறார்.

அதன்பின் அவர் ஜனாதிபதி ஆலோசகர் பசில் ராஜபக்ஷவை தொடர்புகொள்ள பிரச்சினைக்கு தீர்வு கிட்டியுள்ளது.

ஜானதிபதியால் திரைநீக்கம் செய்யப்பட்டதாக 3 மொழியிலும் அமைந்த நினைவுப்படிகத்தில் நஜீப், அமைச்சர், பிரதியமைச்சர், செயலாளர், தேச நிர்மாண அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே ஆகியோருடன் பசில் ராஜபக்ஷவின் பெயரும் சேர்ந்துகொண்டது.


ஜனாதிபதி தமிழிலும் சிலவார்த்தைகள் உரையாற்றுவார் என்றும் கதை இருந்தது. இதனால் மஜீட் அரபியில் ஒரு உரையை எழுதித்தருமாறு பிரபல மௌலவியை கோரினார். இது வாசிக்கப்பட்டபோது பலருக்கு விழங்காத போதும் சவூதி அரேபிய தூதுவர் அப்துல் அஸீஸ் அப்துல் ரஹ்மான் ஜம்னாஸ் விழங்கிக்கொண்டார்.
தூதுவர் மர்ஹபா என்று உணர்ந்த்திருக்க கூடும்.
இருந்தபோதும் ரணில் விக்ரமசிங்க அரசில் அமைச்சராக இருந்தபோது இந்த சவூதி அரேபிய உதவியை கொணர்ந்த சிறீ லங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பற்றி ஒரு வார்த்தை கூட இருக்கவில்லை!

நன்றி the SundayTimes : Talk at the Cafe Spectator : Sunday October 25, 2009

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

இருக்கிறம் சஞ்சிகையின் அச்சுவலை சந்திப்பு

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

இலங்கை பதிவர் சந்திப்பு – IAM NOT AFRAID TO BE ALONE


நம்மில் பலர் அழகிப்போட்டி பார்த்திருக்கிறோம். பல இனத்து பல தேசத்து அழகிகள் பார்த்திருக்கிறோம். அதில் யார் சிறந்த அழகி என்பதில் நீங்கள் எல்லாம் ஒரே கருத்தில் எப்போதாவது இருந்திருக்கிறீர்களா?

மனிதர்களிடையே கருத்து வேற்றுமை சாதாரணமான்தும் இயல்பானதும் என இலகுவாக விளங்கவைக்க இதைவிட இலகுவான உதாரணம் எனக்கு கிடைக்கவில்லை.

இதை மனதில் கொண்டு மேற்கொண்டு படியுங்கள்.

பதிவுலகம் - எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் யார் வேண்டும் என்றாலும் எழுதலாம் என்றாகிவிட்டது. எனக்கு பிடித்ததும் அதுதான். சிலர் நினப்பதுபோல் ஊரோடும்போது ஒத்து ஓடுவதானால் எதற்கு அது? யாராவது எழுதும்போது வாசித்து FACEBOOK வருவதுபோல் I LIKE THIS என்பதில் ஒரு ஓட்டை மட்டும் பதிந்துவிடலாமே?

ஊடக வியலாளர் அல்லது ஊடக நிறுவனத்தில் வேலை செய்பவர் மாத்திரம் அல்லது எங்காவது இதற்கும் போய் ஒரு கோஸ் முடித்து சான்றிதழ் எடுத்தவர்தான் எழுத வேண்டும் என்பதுபோல் சிலர் தன்னை தானே பிரபல பதிவர் என அழைத்துக்கொண்டு தன் கருத்தோடு மட்டும் இயைந்து வருபவர்கட்கு மாத்திரம் ஆஹா ஒஹோ என பாராட்டி வால் பிடித்துக்கொண்டு சொல்லவருவதுதான் இப்பதிவுலகின் என் மிகப்பெரிய வருத்தம்.

இலங்கை பதிவர் சந்திப்பு - ஆர்வமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு நிகழ்வு. ஆரம்பம் முதலே எனக்கு அதில் கலந்துகொள்ள எண்ணம் இல்லாமல் இருந்தாலும் அது தோல்வியுற வேண்டும் என நான் ஒருபோதும் இருக்கவில்லை. 

இலங்கையின் தமிழ் மக்களிடையே கருத்து சுதந்திரம் மதிக்கப்படும் என்பதில் எனக்கு சிறிதளவும் நம்பிக்கை இல்லாதிருந்தமைதான் பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ளாமல் ஒதுங்க நினைத்தமைக்கு காரணம். ஆயினும் அது தொடர்பான அறிவித்தல்களை என் வலைப்பதிவில் பிரசுரித்தும் நான் அறிந்திருந்த நண்பர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பியும் என் பங்களிப்பை எவ்வித குறையும் இன்றி வழங்கினேன்.

கலந்து கொள்ள ஆர்வம் இல்லாதிருந்தும் நான் மதிக்கும் அண்ணாவின் அழைப்பை மறுப்பது மரியாதையற்றது என்று கருதியமையால் சரியாக 9.05 க்கு சமூகமளித்தேன். அதை வேண்டுமானால் இதில் சந்தேகம் கொள்பவர்கள் அனைவராலும் என்னாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவரிடம் நிரூபிக்கவும் தயார்.

இப்பதிவர் சந்திப்பில் என்னை அடையாளம் காட்டுவதினின்றும் தவிர்ந்தும் கொண்டேன். ஆர்வலராக காட்டிக்கொள்ள நினைத்திருந்தபோதும், நிகழ்ச்சியை நடாத்திய ஒருவர் ஆர்வலர்களை வடை சாப்பிட வந்தவர்கள் என விளித்தமையால் அதைக்கூட நான் செய்யவில்லை.

இச்சந்திப்பு நடந்து முடிந்தபின் எல்லோரும் அதை புகழ்ந்தார்களே தவிர அதை காத்திரமாக மதிப்பீடு செய்யவில்லை. அதை செய்யாதே என்று குறிப்பால் ஏனை பதிவர்களை அச்சுறுத்தவும் என்னை வசைபாடியது வழிவகுத்தது.

பதிவர் சந்திப்பு முடிந்த கையோடு எனக்கு வசை பாட சிலர் ஆரம்பித்துவிட்டார்கள். கருத்து சுதந்திரம் தொடர்பான என் கருத்தை பரிசீலுக்க சரியான தருணம் என்பதாலும், சில பதிவர்களை தோலுரித்து அறிந்து கொள்ளவும், கடைசியாக சிரிப்பவன் பெரிதாய்ச்சிரிப்பான் என்ற ஆங்கில பழமொழியை உறுதிப்படுத்தவும், இவ்வளவு நாளும் என் மௌனம்....

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

உன்னைப்போல் ஒருவன் - GET LOST

இப்பதிவை வாசிப்பதற்குமுன் ஒரு வேண்டுகோள் : உங்களுக்கு முதற்கண் என் நன்றிகள். நீங்கள் ஒரு கமல் பக்தனாக இருந்தால் அந்த சட்டையை கழற்றிவிட்டு வருமாறு வேண்டுகிறேன்.

கமலின் இரண்டுபடங்களின் பெயரைக்கூறச்சொன்னால் எனக்கு ஞாபகம் வருவது நாயகன், அன்பே சிவம் ஆகியவையே. நாயகனில் நாலுபேருக்கு நன்மை செய்தால் எதுவுமே தப்பில்லை என்று கூறும் நாயகன் கடைசியில் எவ்வித குற்றமும் செய்யாத என்னை எதற்கு அநாதையாக்கினாய் என்ற கேள்விக்கு பலியாகிப்போகிறான். மற்றவன் வயிற்றுக்குள் உன் உணவு இல்லையப்பா என்று கூறும் அன்பே சிவம், அன்பை மட்டுமே போதிக்கின்றது என்பதில் யாருக்கும் கருத்துவேற்றுமை இல்லை.

என்னதான் நியாயம் இருந்தாலும் வன்முறையை கையிலெடுத்தவன் வன்முறைமூலமே சாவதை நியாயப்படுத்தியிருக்கும் படங்களான சுப்ரமணியபுரம், அஞ்சாதே போன்ற படங்கள் வெற்றிபெறுகின்ற; தேசபக்தி என்ற போர்வையில் மனிதர்களை சுட்டுத்தள்ளுகின்ற விஜயகாந்த், அர்ஜூன் போன்றவர்கள் காணாமல் போயிருக்கின்ற; சுருக்கமாக மக்கள் வன்முறையை நிராகரித்திருக்கிற காலப்ப்பகுதியில் சட்டத்தை உங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளுங்கள் என்று உபதேசிக்கின்ற படத்தை கமல் நமக்கு தருகிறார்.


இந்த உன்னைப்போல் ஒருவன்தான் இலங்கையின் திரையரங்குகளில் இருந்து நேற்றோடு தூக்கப்பட்டுள்ளது. பதிவுலகில் கிழி கிழியென்று கிழிக்கப்பட்ட கந்தசாமி இன்னும் ஓடிக்கொண்டிருக்க பதிவுலகால் ஆஹா ஓஹோ என்று தூக்கிப்பிடிக்கப்பட்ட உன்னைப்போல் ஒருவன் திரையரங்கை விட்டு ஓடியிருக்கிறது.

மொத்தமாக இரண்டுமணிநேரமே ஓடும் இந்த படத்தில் வானொலிகளில் ஒலிபரப்பான பிரபலமான பாடலகள் இல்லை என்றே சொல்லலாம். கதையோட்டத்திற்கு பாடல்கள் அவசியமில்லை என்று கமல் கருதியிருந்தால் சில பாடல்களை வெளியிட்டு படத்தில் பாடல்கள் இருப்பதாக மக்களை ஏமாற்றி திரையரங்குகளுக்கு வரச்செய்திருப்பது எந்த ஒரு terminology ஐ பாவித்து நியாயப்படுத்தினாலும் இலகு மொழிப்பிரயோகத்தில் ஏமாற்றுதல் என்றே சொல்லப்படமுடியும். அத்துடன் I AM NEW FACE OF TERROR என்று பலகுரல்கள் சொல்லுவதன்மூலம்; பலர் வன்முறையை கையிலெடுப்பதாக மக்களை நம்பசெய்ததும் ஏமாற்றுதலே.


படத்தில் கமல் கேட்பதுபோல் ஒரு கரப்பான்பூச்சி வீட்டுக்குள் வந்தால் உணவு கொடுத்து வளர்பீங்களா என்றகேள்விகளை அரசாங்கங்கள் கேட்கத்துவங்கினால் சிறை அலல்து திறந்த வெளிச்சிறை என்று அரசாங்கங்களுக்கு தலையிடி தரும் பிரச்சினை இருக்காதே.. இதையாவது ஏன் யாரும் எதிர்க்கவில்லை?

அதுமட்டுமா படம் முழுக்க வியாபித்திருக்கும் அபத்தங்கள் பற்றியும் பெரிதாக யாரும் பேசவில்லை.


  • குண்டுகள் இல்லாத பைகளை மக்கள் கூட்டம் மிக்க இடங்களில் கமல் வைக்கிறார். அதன் மூலம் சாதிக்க நினைப்பது என்ன?

  • உயரமான கட்டடத்தின் கமல் ஏறுகிறார். இலங்கையென்றால் எல்லா உயர்ந்த கட்டடங்களின் உச்சியிலும் நவீன கருவிகளுடன் இராணுவம் இருக்கும். ஆனால் பாகிஸ்த்தானுடனும் சீனாவுடன் சண்டையிட தயாராகும் இந்தியாவின் இராணுவம் இவ்வாறான பாதுகாப்பு ஓட்டைகள் மூலம் சிறுமைப்படுத்தப்பட்டுள்ளது.

  • அடிக்கடி ஒலிபரப்பாகும் பாங்கு ஒலியும், இன்ஷா அல்லாஹ் என்று சொல்வதும், கமலின் தாடியும், கமலின் பெயர் மறைக்கப்பட்டிருப்பதும் சொல்லவருவது என்ன?

  • படத்தில் 3 முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக காட்டப்பட்டிருக்கிறார்கள். ஒருவர் குஜாரத் கலவரங்களின் பின் வன்முறையை கையிலெடுப்பவர். இன்னொருவர் சொந்த மண்ணை இழந்து அதற்காக போராடும் ஜனநாயக ரீதியில் பலகட்சி அரசியல் முறையில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பலஸ்த்தீன இயக்கத்துடன் தொடர்புகளை பேணுவதாக காட்டப்படுகிறார். இவை இரண்டையும் படம் எவ்வாறு குற்றம்பிடிக்கிறது?

  • இன்னுமா கமலைப்பிடிக்கமுடியவில்லை என்று ஆத்திரப்படும் மோகன்லால் துப்பாக்கியையும் தூக்கிக்கொண்டு ஆவேசமாக செல்கின்றார். கமலின் கை குலுக்க..
இவ்வாறான இன்னும்பல அபத்தங்கள் படம் முழுக்க வியாபித்திருக்கின்றன.

இந்தப்படம் பற்றிய ஞானியின் கருத்தை வாசிக்க http://www.gnani.net/.

மொத்தத்தில் நரகாசுரன் அழிந்த நாளாக இந்துக்கள் கொண்டாடுகின்ற தீபாவளி பண்டிகையன்று நவீன நரகாசுரனான உன்னைபோல் ஒருவனும் தூக்கப்பட்டிருப்பது எமக்கு மகிழ்ச்சியே..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

ஆதவன், பேராண்மை மற்றும் 60வருட ARMY

இலங்கை இராணுவத்தின் 60ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டாங்களை முன்னிட்டு நடாத்தப்பட்ட கண்காட்சியை பார்க்கச்சென்றிருந்தேன். அதுக்கு என்னா எங்கிறீங்களா? கடைசியில பாருங்க..




















எதிர்வரும் 16ஆம் திகதியுடன் இலங்கை திரையரங்குகளைவிட்டு உன்னைப்போல் ஒருவனை தூக்க இருப்பதால் மறுநாள் உன்னைபோல் ஒருவன் பார்க்கச்சென்றேன். சின்னப்படம் என்பதால் என்னவோ; நிறைய trailer காட்டினார்கள். முக்கியமாக பேராண்மை மற்றும் ஆதவன். ஆனால் ஒரு விஷயம் பாருங்கோ.. இந்த படங்களில வாற மாதிரி ஆயுதங்கள் ஒண்டும் 60 வருஷ army கிட்ட இல்ல பாருங்கோ.. (இருந்தா வெச்சுகிட்டு காட்டாம வஞ்சகமா செய்றாங்க)

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்