Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

உண்மைகள் வெல்வதில்லை. அவை நிரூபிக்கப்படுகின்றன - பஷீர் சேகுதாவூத்

நேற்று 23.08.2012 அன்று தனது பதவியை இராஜினமா செய்த பிரதியமைச்சர், முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் அவர்கள் facebook இல் சில கேள்விகளுக்கு பதிலளித்தார்கள்.

அவர் பதிலளித்த கேள்விகளை ஒரு ஒழுங்கில் பேட்டி வடிவில் தொகுத்திருக்கிறேன். இன்னும் சில கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை. ஆயினும் தற்போதைய நெருக்கடியில் அவருக்கு வேலைப்பழு இருந்திருக்கலாம் என்று கருதி பதிலளிக்கப்படாத  அக்கேள்விகளை இதில் சேர்க்கவில்லை.


Eksaar எக்சார்

அரச வளங்களை பயன்படுத்தி அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய முடியாதாம்.
அப்போ
அரச வளங்களை பயன்படுத்தி அரசாங்கத்திற்கு பிரச்சாரம் செய்வது சரியா?
Basheer Segudawood
அரச வளங்களை அரசாங்கத்தில் அமைச்சராக இருந்து கொண்டு துஷ்பிரயோகம் செய்வதும், அரசுக்கு எதிரான பிரச்சாரங்களுக்குப் பயன்படுத்துவம் குற்றம். பச்சோத்தித் தனம். என் மனசாட்சியும் ஏற்காது.

Eksaar எக்சார்

33 அரசியல் வரலாறு சொல்ல வந்த நீங்க ஏன் கடைசி 2 வருஷத்த இப்ப சொன்னீங்க? மிச்சத்த எப்ப சொல்லுவீங்க?

Basheer Segudawood
33 வருட அரசியல் வரலாற்றை ஒரே தடைவையில் பேசப்போவதாக நான் அறிவிக்க வில்லை. வாக்குமூலங்கள் எத்தனை அது எப்படி அமையப் போகிறது என்பதைப் பற்றி தெளிவாக அறிவித்த பின்னர்தான் முதலாவது வாக்குமூலம் இடம்பெற்றது. அடுத்தவை திட்டமிட்டபடி நடக்கும். இன்ஷா அல்லாஹ்!.


Eksaar எக்சார்
சார் அரசாங்கம் என்பது ஐமசுமு ஆதரவாளர்களின் சொந்த பணமா? சாப்பிடுற சாப்பாடு முதல்கொண்டு வாகனம் வரைக்கும் முஸ்லிம்களாகிய நாங்களும் நேரடியான வரி மறைமுக வரின்னு கட்டிகிட்டு இருக்கோம். அதில் எங்கள் பிரதிநிதிகளுக்கு பங்கு இருக்கிறது. எங்கள் பிரதிநிதிகள் எங்களால் கிடத்த வசதிகளை எங்களுக்காக பாவிக்க வேண்டும். ஆனால் நீங்களோ அரசு தனிப்பட்ட ரீதியில் உங்களுக்கு தந்தது மாதிரி ராஜினமா செஞ்சிருக்கீங்க. பாவிக்க விருப்பமில்லன்னா பாவிக்காம விட்டிருக்கலாம். என்ன கணக்கில ராஜினமா செய்வீங்க? உங்கட தனிப்பட்ட கருத்து முக்கியம்னா பொதுவாழ்வு சரிப்படாது சார்

Deen Noor Nagoor Kani
இவ்வளவு காலம் பதவி துறந்து தான் தேர்தல் செய்தீர்களா? வளங்கள் இருந்தால் துஷ்பிரயோகம் செய்ய வேண்டும் என்பது கட்டாய கடமையா அல்லது சட்டமா? அமைச்சுப் பதவியில் இருக்கின்ற போது துஷ்பிரயோகங்களை தவிர்த்து நேர்மையான முறையில் அரசியல் செய்ய முடியாது என்று சொல்வது கோழத்தனம். தன்னைத்தானே வெற்றி கொள்ள முடியாத உறுதியற்ற நிலை. தன்னைத்தானே வெற்றி கொள்ள முடியாத நிலயில் மக்கள் எப்படி எம்மை வெற்றி கொள்ளச் செய்வார்கள்? பதவி துறந்தால் தான் அரசியல் செய்யலாம் என்பது முட்டாள் தனம். அரசாங்கம் இந்த நாட்டில் வாழுகின்ற ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்தமானது. அது யாருடைய சொத்தும் அல்ல. அதனால் அதனுடைய பொறுப்புக்களை வரி என்று ஒவ்வொரு குடிமகனும் சுமந்துக் கொண்டிருக்கின்றான். அதே நேரம் அவற்றை உரிய முறையில் கையாளுதல் உங்களினது கடமை.

Basheer Segudawood
எனது பதவி ராஜிநாமா என் மனசாட்சிக்கு விரோதமில்லாது எடுக்கப்பட்ட முடிவுதான் என்றாலும் அது எனது தனிப்பட்ட முடிவு மாத்திரமல்ல. உள்ளாலும் புறத்தாலும் என்னை உண்மைக்கு உண்மையாக நேசிக்கின்ற நம்புகின்றவர் சமூகப் பிரஜைகளினதும் விருப்பம். பொதுவாழ்வு யாருக்கு ஒத்துவரும் வராது என்பதைத் தீர்மானிக்கின்ற வல்லமை அல்லாஹ்வுடையது. என்னைப் பொதுவாழ்வுக்குரிய எல்லா ஆளுமைகளுடனும் அல்லாஹ் படைத்திருக்கிறான். அதை நான் பல கட்டங்களில் நிரூபித்தும் இருக்கிறேன். இனியும் வல்ல அல்லாஹ் உதவியால் நிரூபிப்பேன். இன்ஷா அல்லாஹ்.


Mohamed Hatheek அரசியல்வாதிகள் எது சொன்னாலும் மக்கள் நம்புவார்கள் என்ற காலம் மலை ஏறிவிட்டது.... SLMC கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்துகொண்டு மாற்று கட்சி காரர் வெல்ல பிரார்த்திகிறேன் என்று கூறுவது நயவஞ்சகத்தின் உச்ச கட்டம். ...நீங்கள் பிரதி அமைச்சு பதவியை துறந்தததும் மக்கள் உங்களை நம்பிவிடுவார்கள? பதவியை துறந்தது அமைச்சரவை அமைச்சுக்கா ?Basheer Segudawood ‎தம்பி, என் அரசியல் அனுபவத்தில் பாதியும் உங்களுக்கு வயதில்லை என்பது இந்தக் கேள்விகளிலிருந்து புரிகிறது. நயவஞ்சகம் என்ற வார்த்தைகளுக்கு விளக்கத்தை தேடிப்படிப்பது நன்று. அல்லாஹ் பெரியவன், வாப்பா.

Eksaar எக்சார்
மௌலானாவை முதலமைச்சர் ஆன பிறகு முகாவுக்கு இழுக்கும் எண்ணம் இருந்தால் இரகசியமாக அவர் நியமனம் பெற்ற பிறகு சொல்லியிருப்பீங்க. நீங்க இப்படி போட்டு உடைத்த பிறகு மௌலானாவுக்கு கிடைக்குமா? நீங்க மௌலானாவுக்கு உதவி செஞ்சீங்களா? உபத்திரவம் செஞ்சீங்களா? என்ன இராஜதந்திர வியூகம் இது?

Basheer Segudawood
ஹாஹா.... வரி வரியாக விபரிப்பதற்குப் பெயர் வியூகமில்லை வாப்பா. நீங்கள் இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ என்றெல்லாம் மூளையத் தீட்டுகிறீர்கயே அதற்குப் பெயர்தான் வியூகம். வியூகங்களின் வெற்றி தோல்வியை அறிய பொறுமை வேண்டும்.


Rina Mohammed  
வருஷ கணக்கில் (33) அரசியல் செஞ்ச நான் வரலாற்றில் இடம் பெற, அமைச்சரவை அந்தஸ்து அமைச்சுக்கு ஆசைப்படுவது ஹராமா என்று கேட்பது எந்த வகையில் நியாயம். அது நீங்கள் பங்கு வைத்து கொள்ள கிடைத்த பரிசு இல்லை, நாங்கள் வாக்கு போட்டு கிடைத்தவை. அம்பாறையில் தொடர்ச்சியாக வென்று தரும் நாங்கள் (மக்கள்) கேட்டாலும் பரவாயில்லை, ஹராமா என்று. தேசிய பட்டியலே கதி என்று இருப்பவர்களுக்கு அதுவே வரலாறுதான்.

Basheer Segudawood
என்னுடைய தனிப்பட்ட வெற்றிகளுக்காக நான் வியூகம் அமைத்ததில்லை. என் தெளிந்த அரசியல் செயற்பாடுக்கு அல்லாஹ்வின் அன்பளிப்பு தேசியப் பட்டியல். விரும்பவும் வெறுக்கவும் மறுக்கவும் துறக்கவும் வைத்துக் கொள்ளவும் விட்டுத்தள்ளவும் எனக்கு உரிமையுண்டு.


Eksaar எக்சார்
என்ன இருந்தாலும் நமது கேள்விகளுக்கு பதில் சொல்ல முன்வந்த முதல் அரசியல்வாதி என்றவகையில் நாம் பஷீர் நானாவுக்கு நன்றி சொல்லணும்


Mohamed Hatheek
பேசி முடித்தவுடன் ஏறாவூரில் உருவ பொம்மை கட்டி எரிக்கப்பட்டதாகவும் இவருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ததாகவும் செய்திகள் வருகிறது ...இது பற்றி

Deen Noor Nagoor Kani
Sir, உங்கள் மீது எத்தனைப்பேர் பற்று வைத்திருந்துள்ளார்கள் என்பதற்கான சாட்சியே இவை அனைத்தும் . அந்தப்பற்றை நீங்கள் தொடர்ந்தும் எந்த பங்கமும் வராமல் பாதுகாப்பீர்கள் என்று நம்புகின்றோம்.


Basheer Segudawood
நான் ஜனநாயகவாதி. என்னைப் புறக்கணிக்கின்ற வெறுக்கின்ற வெட்டித்தள்ள நினைப்பவர்கள்தான் என்னைச் சுற்றிலும் அதிகம் என்பதை அறிவேன். ஆனபோதும் என்னை உண்மைக்கு உண்மையாக நெஞ்சுக்கு நேர்மையாக நேசிக்கின்ற சிலருக்காக நான் எப்போதும் நெஞ்சை நிமிர்த்தி எதையும் எதிர்கொள்வேன், ஒரு ஜனநாயக வாதியாக. இன்ஷா அல்லாஹ்.


முழு உரையாடலையும் இங்கு கிளிக் செய்வதன் மூலம் வாசிக்கலாம். சில தமிழ் பிழைகள் திருத்தப்பட்டுள்ளன.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

கிழக்கு மாகாண முஸ்லிம்களின் தேர்தல் களம்




இலங்கையிலேயே அதி சூடான தேர்தல் களமாக கிழக்கு மாகாணத்தை அப்பிரதேச மக்கள் சொல்வர். ஏட்டிக்கு போட்டியான பிரச்சாரங்களும் கைகலப்புகளும் இங்கு சகஜம்! அதேவேளை அரசியல் ரீதியாக பாமரனுக்கும் மிகப்பெரும் புரிதல் உண்டு. இனி இப்பிரதேச அரசியல் கள நிலவரம் பற்றி கொஞ்சம் பேசுவோம்.

அண்மைக்காலமாக அரச ஆதரவு சக்திகள் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுகின்றமை பற்றி முஸ்லிம்கள் மிகுந்த விசனத்தில் இருக்கிறார்கள். இதுவே இன்று முகா அலையொன்றை இங்கு ஏற்படுத்தியிருக்கிறது. ஆனாலும் வெண்ணெய்  திரளும்போது தாளியை உடைத்த கதையாக ஹக்கீம் மகா சங்கத்திடமும் ஜாதிக ஹெல உறுமயவிடமும் மன்னிப்பு கேட்ட சம்பவம் ஆகியிருக்கிறது. உன்னிச்சை சம்பவம் சிலவேளை மீண்டும் அலையை எழுச்சி கொள்ள செய்யவும் வாய்ப்பிருக்கிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.


அசாத் சாலி
கொழும்பு மாநகரசபை உறுப்பினரான அசாத் சாலி அவர்கள் இம்முறை மட்டக்களப்பில் போட்டியிடுகிறார். முஸ்லிம்களின் விடயத்தில் அக்கறை கொண்டவராயினும் இவரது அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்டிவிடும் தன்மை ஒரு பலவீனமாகும். முகாவின் வேட்புமனுவில் கைச்சாத்திட ஓரிரு நாட்களின் முன்பு முகா தலைமை ஐக்கியத்தில் ஆர்வம் காட்டவில்லை என்று குற்றஞ்சாட்டினார். அதற்குமுன் முகா பிரமுகர்களை சாடிக்கொண்டிருந்தார். இவையாவும் முகா ஆதரவாளர்களின் வாக்குகளையேனும் இவருக்கு பெற்றுதருவதில் இடைஞ்சலாக இருக்கும்.

இன்னும் இவர் கொழும்பை சேர்ந்தவர் என்பதால் கிழக்கு முஸ்லிம்களின் நிஜ பிரச்சினைகள் அவற்றின் பாரதூரம் பற்றிய புரிதல்கள் குறைவு. இதே காரணத்தால் பல பெரும் தலைகள் முன்னொரு காலத்தில் கிழக்கில் போட்டியிட்டு தோல்வியடைந்த வரலாறும் இருக்கிறது.

இவற்றையெல்லாம் சேர்த்து கணக்கொட்டால் முகா தலைமை அசாத் சாலியின் வாய்க்கொழுப்பை அடக்குவதற்காக வாய்ப்பு குறைந்த மட்டக்களப்பில் களமிறக்கியுமிருக்கலாம் என்று கருத இடமுண்டு.

அக்கரைப்பற்று
முகாவுக்கு திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 5 அல்லது 4 வேட்பாளர்களையே வெற்றி பெறச்செய்ய முடியும். இன்று அக்கரைப்பற்று அரசியல் களத்தில் நிலமை முகாவுக்கு முன்னேற்றகரமானது. பணபலம் மிக்க 2 வேட்பாளர்களையும் ஆட்பலம்  கொண்ட ஒரு வேட்பாளரையும் அதாவுல்லாவின் மண்ணில் அவருக்கெதிராக அவரது மண்ணைச்சேர்ந்த மூவரை களத்தில் இறக்கிவிட்டுள்ளது. ஆனால் அதாவுல்லாவோ அப்பிரதேசத்தில் எவரையும் களமிறக்காது தனிப்பட்டரீதியான செல்வாக்கை மோதவிட்டுள்ளார். அதனால் அதாவுல்லாவின்கட்சிக்கு பெரும்பான்மையான வாக்குகள் கிடைக்காவிட்டால் அது அவரது அரசியல் அஸ்த்தமனமாக இருக்கக்கூடும். அவ்வாறில்லாமல் அவர் வென்றால்கூட முகாவுக்கு பெருத்த சேதாரம் ஏற்பாடாது! அது எப்போதும்போல் முகா அகக்ரைப்பற்றில் தலை தூக்க முடியாமல் இருக்கிறது என்றமட்டிலுமே கணக்கிலெடுக்கப்படும்.

கறுப்பு ஆடு
அதேவேளை சாய்ந்தமருதில் முகா பிரமுகர்களிடையேயான பகை முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. ஆனால் அண்மைக்காலமாக முகா தலைவரின் பேச்சுக்கள் ஹரீஸுடனான உறவுகள் சீராகத்தான் இருக்கின்றதா என்ற கேள்வியை எழுப்புகின்றது.

அதேவேளை நிசாம் காரியப்பரும் வெளிப்படையாகவே தலைமைத்துவத்தை குற்றம் சாட்டிக்கொண்டிருந்தார். இன்று அவர் அமைதியாக இருந்ட்தாலும் உள்ளுக்கும் தணல் இருக்ககூடும். இதுவும் ஆதரவாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும்.

தோல்விகளின் நாயகன்
முகா வின் பாராளுமன்ற உறுப்பினர் பசீர் சேகுதாவூத் மீது கட்சி ஆதராவளர்களிடையே காட்டமான விமர்சனம் இருக்கிறது. இவர் தனது சொந்த ஊரில் கட்சியை வெல்லவைக்கமுடியாமல் கஷ்ட்டப்படுகிறார். தொடர்ந்து மக்கள் ஆதரவில் மிகப்பலவீனமான நிலையிலேயே அவர் இருக்கிறார். இம்முறை  முன்னேற்ற அறிகுறி எதையும் காணோம்!


தொடரும்

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

குருபரனின் கோணலான கேள்விகள்


மன்னார் கோந்தைப் பிட்டியும் கோணலாகும் இன நல்லுறவும் என்ற தலைப்பில் நடராஜா குருபரன் அவர்கள் எழுதிய கட்டுரையின் கடைசியில் சில கேள்விகளை கேட்டிருக்கிறார்.

அந்த கேள்விகளுக்கு என்னாலான பதில்களை அளித்திருக்கிறேன். ஆயினும் இது ஒரு சமூகத்தின் பிரச்சினையாக இருக்கின்றபடியால் இப்பதில்களை என்னும் கூர்மைப்படுத்த நண்பர்கள் உதவமுடியும். (உங்கள் உதவிகள் உங்களின் பெயர்குறிப்பிட்டே வெளியிட தீர்மானித்திருக்கிறேன். )


1) பிரச்சனைக்கு உரிய கோந்தைப்பிட்டி வலைப்பாடு அதாவது வாடிவீடுகள் அமைக்கப்பட்ட காணி கப்பல் கூட்டுத்தாபனத்திற்கு உரியதா இல்லையா?

இலங்கையில எங்காவது மீன்பிடி வாடி தனியார் சொத்தாக இருந்திருக்கிறதா? கடல் ஓரம் அரசாங்கத்துக்குத்தானே சொந்தம்? அவ்வாறான பொதுச்சொத்தான கடற்கரையில்தானே மீனவர்கள் வாடியமைக்கிறார்கள்? அவ்வாறு பயன்படுத்துவதற்குத்தானே அரசாங்கமும் அனுமதியளிக்கிறது?

2) இந்தக் காணியை 2006ல் தற்காலிக பாவனைக்கு என எழுத்து மூல அரசாங்க அனுமதியுடன் கப்பல் கூட்டுத்தாபனம் விடத்தல் தீவு மக்களுக்கு வழங்கிதற்கான ஆதாரம் உள்ளதை எவ்வாறு புரிகிறீர்கள்?

முஸ்லிம்களை விரட்டிவிட்டு விடத்தல்தீவு ஆட்கள் இடம்பிடித்திருக்கிறார்கள். இன்று அதே அரசாங்கம் போகச்சொன்னால் மட்டும் கசக்கிறதா?

3) விடுதலைப் புலிகளின் காலத்தில் அமுதன் முஸ்லீம்களுடன் செய்து கொண்ட உடன்பாட்டில் இந்தப் பகுதி அவர்களுடையது என கூறியதனை ஏற்றுக் கொண்டால் புலிகள் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகள் அல்லது உடன்பாடுகள் சட்ட அந்தஸ்த்து உடையவை என்று பொருள்படும் …ஏற்றுக் கொள்கிறீர்களா?

உடன்பாட்டுக்கும் நடவடிக்கைக்கும் வித்தியாசம் இருப்பது தெரியாதா? உடன்பாடு எந்த நெருக்குதல்களும் இன்றி எட்டப்பட்டிருந்தால் மதித்துத்தானே ஆகவேண்டும்?

4) அரசாங்கத்தின் கப்பற் கூட்டுத் தாபனக் காணியை புலிகள் உங்களுக்கு உரியது எனக் கூறியதற்கு சட்ட அந்தஸ்த்து கொடுக்கப் போகிறீர்களா? அரசாங்க அதிகாரிகள் குறிப்பாக அப்போது கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் இருந்த அஸங்க அபயகுணசேகர கொடுத்த அத்தாட்சிக் கடிதத்திற்கு சட்ட அந்தஸ்த்து கொடுக்கப் போகிறீர்களா?

மேலே உள்ள பதில்களை மீள வாசிக்கவும்

5) இந்தக் காணியின் பயன்பாட்டுக்கு உரிய அனுமதிப் பத்திரத்தை வைத்திருந்தும் 3 வாரத்தில் தமக்குரிய இடம் ஒதுக்கப்பட்ட பின் அங்கிருந்து வெளியேற முடியும் என நீதிமன்றிடமும் அரசாங்க அதிகாரிகளிடமும் விடத்தல் தீவு மக்கள் வாக்குறுதியை வழங்கியபின்னும் அவர்களது வாடி வீடுகளை அடித்து உடைத்து அவர்களின் வணக்க சொரூபங்களை சிதைத்து கடலில் போட்டது சரியென வாதிடுகிறீர்களா?

தற்காலிகமாக தங்க வந்தவர்கள் முஸ்லிம்கள் மீளக்குடியேறியது முதல் வாக்குறுதியை காப்பாற்றாத நிலையில் குருபரன் எந்த அடிப்படையில் நம்பவேண்டும் என்கிறார்?

6) கடற்தொழிலையே நம்பி இருக்கும் அந்த மக்களுக்கு அமைச்சர் என்ற வகையில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மாற்று ஏற்பாட்டை ரிஸாத் பதியுதீன் மேற்கொள்ளாதது இனவாதம் அல்லது தவறு இதில் எது சரி?

ஒரு இடத்தில் தீப்பற்றினால் பக்கத்தில் ஒரு வீட்டை கட்டிவிட்டுத்தான் தீயை அணைக்க முயல்வாரா குருபரன்?

7) தேசிய நூதனசாலைக் காணியை தனது நேரடி உத்தரவில் உடனடியாகப் பெற்று உங்களைக் கோந்தைப்பிட்டியில் குடியமர்த்த முடிந்த அமைச்சருக்கு விடத்தல் தீவு மக்களுக்கு உரிய மாற்று ஏற்பாட்டை உடன் ஏன் செய்யமுடியவில்லை?

முஸ்லிம்களை குடியமர்த்த அவர்செய்த முயற்சிகள்தான் குருபரனுக்கு அமைச்சர் ரிசாத் பதியுதீன்மீது குரோதம் கொள்ள காரணம் என்பது இக்கேள்வியினால் ஊர்ஜிதமாகுகிறது

8) தமிழர் அல்லாத நீதிபதி ஒருவரைக் கழுதை மற்றும் நாயின் படங்களில் அவர் பெயரைப்போட்டு அவரது பெயரைச் சொல்லி நாயே வெளியில் வா என்று கூறி நீதிமன்றத்தையும் தாக்கி இருந்தால் இப்போ நிலமை என்னவாகி இருக்கும்?

நீதிபதியொருவை அதன் வளாகத்தில் வைத்து கொன்ற ஒருவனுக்கே சட்டப்படிதான் தண்டனை வளங்கப்பட்டுள்ளது. மாறாக சுடுவதற்கான ஆணை வழங்கப்படவில்லை என்பது இவ்வளவு காலம் ஊடகத்தில் வேலை செய்த குருபரனுக்கு தெரியாதா?

9) மன்னார் சம்பவம் நடைபெற்ற போது 45 நிமிடங்களுக்கு மேலாக பதியப்பட்ட வீடியோக காட்சியை தணிக்கை இன்றி முழுமையாக  மக்கள் முன் ஒளிபரப்புவீர்களா?

தணிக்கை இன்றி நீங்கள் யூடியூப்பில் பதிவேற்றலாமே. ஏன் செய்யவில்லை?

10) மன்னாரில் நடந்த நடக்கின்ற அடாவடித் தனங்கள் குறித்து இன, மத, மொழி, மற்றும் பதவி நிலைகளின் பாதிப்பின்றிய  அரசியல் தலையீடு இன்றிய, படையினரின் ஆட்சியாளரின் மிரட்டல்கள் இன்றிய ஒரு சுயாதீன விசாரணைக்கு உத்தரவிட உங்களுக்கு முடியுமா?

அறிவு சீவி சார், இதைவிட நாட்டில் சகல பிரச்சினைக்கும் தீர்வுகண்டு அதன்பின் மன்னார் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்கிறீர்களா?

மேலே குருபரனை நோக்கிய கேள்விகளுக்கு அவர் பதில் பின்னூட்டத்தில்  அளிக்கமுடியும்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

தமிழ் முஸ்லிம் கூட்டு பற்றிய கூப்பாடு


கிழக்கு மாகாணசபை தேர்தலுக்கு நாள் குறிக்கப்பட்டது முதல் தமிழ் தரப்பில் இருந்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிய கூச்சல்கள் கேட்கத்தொடங்கிவிட்டன. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் கிழக்கில் ததேகூ முதலமைச்சரை பெறத்தக்கதாக முஸ்லிம் தரப்பின் காய் நகர்த்தல்கள் இருக்கவேண்டும் என்பதே.

கிழக்கில் இரு சமூகங்களினதும் சனத்தொகை ஏறத்தாள சமமானதாக இருப்பதாக கணிப்பீடுகள் காட்டியபோதும் தமிழ் தரப்பில் பாதியளவினர் வாக்களிக்கச்செல்லமாட்டார்கள் என்ற வெளிப்படையுண்மையை இவர்கள் வசதியாக மறந்துவிடுவர். இதன்மூலம் கிழக்கின் அரசியல் தலைமைத்துவம் முஸ்லிம்களுக்கானது என்பதை மறைப்பதே இவர்களது நோக்கம். இப்போக்கை சகல முன்னணி தமிழ் ஊடகங்களின் அரசியல் வித்தகர்களின் பத்திகளிலும் பேச்சிலும் காணமுடிகின்றது. இது தமிழ் தரப்பு எவ்வாறு கபட நாடகம் ஆடுகின்றது என்பதற்கு தெளிவான சான்றாகும்.

மற்றும்,
இவர்கள் கூப்பாடு போடும் முஸ்லிம் தமிழ் இன ஐக்கியம் என்பது வெறுமனே முதலமைச்சர் பதவியை தமிழருக்கு தாரைவார்ப்பதாகும். அவ்வாறு நடந்தால் அது மிகப்பெரிய விட்டுக்கொடுப்பாகும். ஆனால் அவ்விட்டுக்கொடுப்பை செய்தால் முஸ்லிம் தரப்பின் நியாயமான கோரிக்கைகளுக்கு எவ்வாறான விட்டுக்கொடுப்புகளை செய்ய தயாராக இருப்பர் என்பது பற்றிய வெறும் வாய்ப்பேச்சளவிலான வாக்குறுதிகளேனும் தமிழ் தரப்பால் முன்வைக்கப்படுவதில்லை.

ஆனால் சிங்கள தரப்போ, சில வாக்குறுதிகளை வழங்குகிறது. அதில் பல மீறப்பட்டால் கூட முஸ்லிம் தரப்பை பொறுத்தவரை சிங்கள முஸ்லிம் கூட்டில் ஒரு சில வாக்குறுதிகளாவது நடைமுறைப்படுத்தப்படும். ஒரு வாக்குறுதியும் இல்லாத கூட்டைவிட இது எவ்வளவே மேல் என்பதை சில அரசியல் வித்தகர்கள் வசதியாக மறைப்பது தமிழ் தரப்பினை இன்னும் ஏன் நாம் நம்பக்கூடிய நிலையில் இல்லை என்பதை தெளிவாக்கும்.

நிலமை இவ்வாறு இருக்க தமிழ் தரப்போ மஹிந்த அரசுடன் முஸ்லிம் தரப்பு இணைந்தால் பின்னொரு நாளில் அரசு முஸ்லிம் தரப்பை ஏமாற்றும் என்று நீலிக்கண்ணீர்வடிப்பது ஆடு ந்னைகிறதென்று ஓநாய் அழுத கதைக்கொப்பானதாகும்.

இவ்வளவு ஏன்?


மன்னாரில் மீன்பிடித்துறையொன்றினை ஒப்பந்த அடிப்படையில் பாவித்த கத்தோலிக்க மீனவர்களை ஒப்பந்தம் முடிந்ததும் விலகிச்செல்ல கோரமுடியாததாக தமிழ் தரப்பு இருக்கிறது. அது தொடர்பாக எந்தவொரு அறிக்கையும் விட அது தயாராக இல்லை. இத்தனைக்கும் இவர்கள் இதுவரை நாளும் ஒன்றறக்கலந்திருந்த புலிகளின் தர்ப்பும் இவ்வொப்பந்தத்தில் சம்பந்தப்பட்டிருக்கின்றது!! அதையேனும் மதிக்க இவர்கள் தயாராக இல்லை!

மாறாக இவர்கள் குறிப்பிட்ட மீன்பிடித்துறை பற்றிய தீர்வைப்பேசாமல் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மீது நீதிபது ஜூட்சன் சொன்ன இன்னும் நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டை வேதவாக்காக நம்பி ரிசாத் அவர்களை சிறையில் அடைப்பதற்கான முயற்சியிலேயே ஈடுபடுகிறார்கள்.

கேவல்ம் ஒரு மீன்பிடித்துறையொன்றை ஒப்பந்தப்படி கொடுத்துவிடுங்கள் என்று அறிக்கையிடாத தமிழ் தரப்போடா நாம் கூட்டுச்சேரவேண்டும்?

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

புலிகளின் ஆத்ம சாந்திக்கு பாடுபடுகிறாரா குருபரன்?


பிரபல ஊடகவியலாளர் நடராஜா குருபரன் அவர்கள் ரிசாட் பதியுதீனும் புலிகளின் ஆத்ம சாந்தியும் என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரை இன்று Global Tamil News இல் பிரசுரமாகியுள்ளது.

சிங்கள தரப்புடன் நீங்கள் கூட்டு சேர்ந்துள்ளீர்கள் என்ற குற்றச்சாட்டு அக்கட்டுரை முழுவதும் விரவிக்கிடக்கின்றது. தனது மீன்பிடிதுறையை கோரிய அப்பாவி முஸ்லிம் மீனவர்களிக்காக ஒரு கட்டுரையை எழுத துணியாத குருபரன் அவர்களின் யோக்கியதை குறித்த கேள்வி எழும்புகின்றபோதும் அதை வாசிக்கும் எப்பக்கத்தையும் சாராத சாதாரணர்களுக்கு தெளிவை ஏற்படுத்துவதற்காக வரிக்குவரி மறுமொழியளிக்க முயற்சிக்கிறேன்.

மிக நீண்ட கட்டிரையென்பதால் முதற்பாதிக்கு பதிலளிக்கப்படுகின்றது.


//கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும், காத்தான் குடியிலும் நிகழ்ந்த இந்தப் போராட்டத்தின் பின்னுள்ள அரசியலை நுணுக்கமாக ஆராயவேண்டியது அவசியமாகிறது.//

முஸ்லிம்கள் பிரதேச, தேச, மொழி எல்லைகளை தாண்டிய ஒரு சமூகமாகும். தம்புள்ள தாக்குதல் குறித்தும் ஆப்கானிஸ்தான் தாக்குதல் குறித்தும் ஈராக் தாக்குதல் குறித்தும் யாழ்ப்பாணம் கொழும்பு காத்தான்குடியென நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்தே வந்திருக்கிறோம். இவை பற்றி ஊடகங்களில் ஆவணப்படுத்தப்பட்டும் உள்ளது. இவ்வார்ப்பாட்டங்கள் அரசியல் நலனை முன்னிலைப்படுத்தியதல்ல என்பதை கட்டுரையாசிரியர் நன்கறிவார்.  உள்நாட்டில் அரசியல் பன்முகத்தன்மையும் சகிப்புத்தன்மையும் உள்ள ஆரோக்கியமான அரசியல் கலாச்சாரத்தை கொண்ட முஸ்லிம் மக்களிடையே, அரசியல் தலைமைகளிடையே முஸ்லிம்களின் பிரச்சினைகளையிட்டு கட்சி பேதங்களைத்தாண்டிய பொதுநலம் இருந்திருப்பதையும் அவர் அறிவார். இவை அனைத்துக்கும் பின்னால் உள்ள அதே அரசியல்தான் இவ்வார்ப்பாட்டங்களுக்கும் இருக்கிறதென்பது பழுத்த ஊடகவியலாளருக்கு விளங்கவில்லையா?

//ரிஸாத்பதியுதீனும் அவர் போன்றே அரசாங்கத்தில் ஒட்டிக் கொண்டு சலுகை காணும் ஏனைய முஸ்லீம் அரசியல்வாதிகளும் முஸ்லீம்களின் உண்மையான பிரச்சனைகளை இட்டு எந்த அக்கறையுமற்றிருக்கிறார்கள்.//

முஸ்லிம்களின் உண்மையான பிரச்சினை என்ன என்பதையிட்டு கட்டுரையாசிரியர் என்ன கருதுகிறார் என்று நாமறியோம். அது இலங்கையில் உள்ள பிரச்சினைகளை காட்டி வெளிநாடுகளில் அகதி அந்தஸ்து கோருவது போன்றதோ அல்லது தன்னை நாடு கடத்த கூடாதென்பதற்காக இலங்கையில் பிரச்சினை என்று ஊடகங்களில் ஆவணப்படுத்தப்படத்தக்கதாக கூக்குரல் இடுவதை போன்றதோ அல்ல.

இன்னும்

எழும் எப்பிரச்சினைக்கும் எவ்வித அதிகாரமுமற்ற, அதிகராம் கிடைக்கும்போது அராஜகம் செய்து வரலாறு படைத்திருக்கின்ற கூட்டத்திடம் முறையிட்டு பலன் இல்லை என்பதை நாம் அறிவோம். எனவேதான் நாம் யதார்த்தமான அணியுடன்தான் நாம் இருக்கின்றோம் என்பதும் கட்டுரையாளர் தெரிந்தே மறைத்திருக்கும் விடயமாகும்.

//மன்னாரில் உண்மையில் என்ன நடக்கிறது என்பது தெளிவற்றிருக்கிறது. இங்கே இந்தப்பிரச்சனையை புறமிருந்து பார்ப்பவர்களுக்கு பின்வரும் கேள்விகள் எழுகின்றன.//

மன்னாரில் என்ன நடக்கின்றது என்பதை அறிய நீங்கள் புறத்திலோ புலத்திலோ இருந்து பார்ப்பதை விடுத்து சம்பந்தப்பட்ட மக்களிடம் கேட்டுத்தெரிவது நல்லது. அதற்கான வாய்ப்பு இதுவரை உங்களுக்கு கிடைக்கவிலலை என்பது நகைப்புக்கிடமானது.

//மன்னாரில் முஸ்லிம் மக்கள் தமது சொந்த இடங்களில் குடியேறுவதற்கு யார் தடையாக இருக்கிறார்கள்?//

இராயப்பு ஜோசப் தலைமையிலான கத்தோலிக்க முழுவோன்றுதான் காரணமாக இருக்கின்றது. அதற்கு துப்பாக்கியேந்தாத புலிக்கூட்டம் ஒன்று உதவுகின்றது.

//எந்த வகையில் தடையாக இருக்கிறார்கள்? //

அவர்களால் முடிந்த சகல வழிகளிலும் மற்றும் அவர்கலது அதிகாரமும் செல்வாக்கும் எத்துணை தூரம் செல்லுமோ அதுவரைக்கும்.


//முஸ்லீம் மக்களை அவர்கள் பூர்வீகமாக வெளியேற்றப்படுவதற்கு முன் கடைசியாக வாழந்த சொந்த இடத்திலா அல்லது  அரசாங்கக் காணிகளிலா அல்லது தமிழ் மக்களின் காணிகளிலா  அமைச்சர் குடியேற்ற முனைகிறார்?//

இதற்கு மிகத்தெளிவாக ஆம் என்ற பதில் இருக்கிறது. யாரேனும் ஒருவர் அபகரித்த காணிகளுக்கு பினாமிகளினூடாக தனது செல்வாக்கை பயன்படுத்தி காணியுறுதியை பெற்றிருந்தால் அதை இல்லாமல் செய்வதும் எமது உரிமைக்கான போராட்டத்தில் ஒரு அங்கமாகும். அவ்வாறின்றி அமைச்சர் அவர்கள் அநியாயமாக நடந்தால் மிகத்திறமையான சட்டத்தரணிகளை கொண்ட சமூகம் நீதிமன்றினூடாக அதைபெற்றுக்கொள்ளாமல் இருக்கிறதா என்ற கேள்விக்கு கட்டுரையாசிரியரிடம் பதில் எதிர்பார்க்கிறேன்.

//மீன்பிடி உள்ளிட்ட அனைத்து தொழில் வாய்ப்புக்களும் பொதுவான வாழ்வாதாரங்களும் வளங்களும் தமிழ் முஸ்லீம் மக்களிடையே உரிய முறையில் பங்கிடப்படுகிறதா? //

குத்தகைக்கு வழங்கிய காணியில் பங்கீடு பற்றிய கேள்வியை எழுப்பும் கட்டுரையாசிரியரின் நகைச்சுவை உணர்வு மெச்சத்தக்கது. அவ்வாறன்றி அவர் தனது கேள்வி நியாயமானது என்று கருதினால் அவரின் சொந்தக்காணியில் வளப்பகிர்வாக எனக்கொரு பங்கு தர அவர் பின்னிற்க மாட்டார் என்ற உறுதிமொழியை அவர் தரவேண்டும்.

இன்னும் ஒரு சமூகத்தை துரத்தியடித்துவிட்டு அச்சமூகத்தின் வளங்களை இருதசாப்தங்களாக சுரண்டி சகல வளங்களையும் முக்கிய வசதிகளையும் கையகப்படுத்திய சமூகத்திடம் கேட்கவேண்டிய கேள்வியை பாதிக்கப்பட்ட சமூகத்திடம் முன்வைக்கிறார் கட்டுரையாசிரியர்.

//முஸ்லீம் தமிழ் மக்கள் ஒற்றுமை மிகவும் தேவைப்படுகிற ஒரு கணத்தில் இல்லாத புலிப்பூச்சாண்டி காட்டும் அரசியலை செய்வதன் நோக்கம் தான் என்ன?//

//மக்களை போராட்டத் தூண்ட முதல் புலிகளின் மறுபிறப்பு யார் என்பதை மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டிய கடமை அமைச்சருக்குள்ளது.//

குறிப்பிட்ட நிகழ்வுடன் சம்பந்தப்பட்ட நபரின் புலித்தொடர்பு மற்றும் அவரின் குடும்பத்தவ்ர்களில் யார் யார் பாசிச இயக்கத்தில் என்ன பதவிகளை வகித்தார்கள் போன்ற விபரங்கள் வெளிப்பிரதேச மக்கள் இன்றுதான் அறிந்துகொண்டாலும் புலிகளின் மேல்மட்டத்துடன் இருந்த தொடர்புகளை மறைக்காத குருபரனுக்கு தெரியாமல் இருந்தது என்பது முழுப்பூசணிக்காயையும் சோற்றில் மறைப்பதற்கு ஒப்பானதாகும்.

//நீதிபதி ஒருவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு மிரட்டித் தீர்ப்பை மாற்றி எழுதச் சொல்லியதால் ஏற்பட்ட விளைவுகளால் தனது தனிப்பட்ட அரசியல் இருப்பிற்கு கேள்வி எழுகிற போது தன்னைப் பாதுகாப்பதற்காக முஸ்லீம் மக்களின் பொதுவான பிரச்சனைகளுடன் அதனை முடிச்சு போடுவதுடன் அதற்குள் புலிகளையும் இழுக்கும் கழிசடை அரசியலை அமைச்சர் ரிட்சட் பதியுதீன் செய்வது ஒன்றும் உலக அதிசயமல்ல//

முதலில் அமைச்சர் தொடர்புகொண்டார் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக குருபரன் எவ்வாறு சந்தேகம் இன்றி அறிந்துகொண்டார் என்பதை தெளிவுபடுத்தவேண்டும். ஒரு குற்றத்துடன் சம்பந்தப்பட்ட ஒருவரை சந்தேக நபர் என்றே தீர்ப்பு வரும்வரை விளிக்கும் ஊடகதர்மத்தை மீறியதன் காரணமென்ன?

மற்றும் முஸ்லிம் மக்களின் பொதுவான பிரச்சினையான மீன்பிடித்துறையை இன்னோர் சமூகம் அபகரிப்பது அமைச்சரின் தனிப்பட்ட பிரச்சினையாக குருபரன் அவர்கள் எப்படி கருதுகிறார்? அவ்வாறு கருதுவதற்கான் முகாந்திரத்தை அவரால் முன்வைக்கமுடியுமா?

//நீதிமன்றத்தை நீதித்துறையை நீதிபதியை அச்சுறுத்தியமை குறித்து நீதி அமைச்சர் என்ற வகையில் கவலையடைவதாக அமைச்சர் றவூவ் ஹக்கீம் கூறினாரே//

ரவூப் ஹக்கீம் அவர்கள் "அப்படியான சம்பவம் நடந்திருந்தால்" என்றே கூறியிருக்கிறார். கீழே உள்ள பிபிசி செய்தி அதற்கு ஆதாரமாகும்.

"மன்னார் நீதவானுக்கு அமைச்சர் ஒருவர் அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த இலங்கையின் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், தானும் அமைச்சர் என்ற ரீதியில் இன்னொரு அமைச்சரைப் பற்றிக் கருத்துக்கூற விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

ஆனால் அப்படியான சம்பவம் நடந்திருந்தால் அதற்காக சட்டத்தரணி என்ற ரீதியில் தான் கண்டனம் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்."

அமைச்சர் ஹக்கீம் சொன்னதை சரியாக விளங்க  குருபரன் அவர்களுக்கு தமிழ் அறிவு போதாதா என்ற சந்தேகம் எழுகின்றது.

தொடரும்

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

குமார் குணரத்னம் சரணடைந்தார் - கோத்தாபய

நொயேல் முதியான்சிலாகே என்ற பெயரில் இலங்கையில் தங்கிருந்த அவுஸ்திரேலிய பிரஜையான குமார் குணரத்னம் பொலிஸில் தானாக சரணடைந்ததாக சற்றுமுன் (09 ஏப்ரல் 2012) இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய சுதீன தொலைக்காட்சி சேவையின் உரையாடல் நிகழ்ச்சியான தொரமதலாவ வில் அறிவித்திருக்கிறார். கீழே உள்ள காணொளியில் 26 ஆவது நிமிடத்தில் அவ்வறிவித்தல் வருகிறது.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

3 - Why this Kolaveri


படம் ஆரம்பிக்கிறதே ஒரு பிணத்திலதான்..
அப்பவே நாம சுதாகரிக்கவேணாமா?

3 is an upcoming a Tamil romance psycho thriller film directed by Aishwarya Dhanush.

அப்புறம் ஷ்ருதி ப்ரிஜ் திறந்து தண்ணி குடிப்பா..
ஆனா ப்ரிஜ்க்குள்ள Light எரியாதுங்க..

அப்பவே லேசான டவுட்டு

அதுக்கப்புறம் சூப்பரா லவ் சீன். ஜாலியா enjoy பண்ணி பாக்கலாம். கூடவே சிவ கார்த்திகேயனின் டைமிங் காமடி வேற..

அதுவரைக்கும் நமக்கு இரண்டு சஸ்பென்ஸ்

1. ஏன் அந்த மரணம்
2. வை திஸ் கொலவெறி பாட்டு எங்க வரும்?

ஆனா
அத சொல்றதுக்கு முன்னாடி அழுவுறாங்க, அழுவுறாங்க, அழுதுகிட்டே இருக்காங்கங்க.. முடியல..

கஸ்தூரிராஜா குடும்பத்துக்கு சைக்கோ கதை
கமல் மகளுக்கு கமல் பாணியில் ஓவென்ற அழுகை
ஒரு கட்டத்துல பார்வையாளர்களெல்லாம், யாரையாவது கொன்னு படத்த முடிங்கன்னு சொல்ற நிலமைக்கு வந்துர்ராங்க (நிஜமா சொன்னாங்க..)

நம்மளமாதிரி ஒரு சாதாரண ரசிகனால இதையெல்லாம் 3 மணிநேரம் உக்காந்து பொறுமையா பாக்க முடியாதுங்க..

கொஞ்சம் பொறுத்திருங்க.. நல்ல DVD வரும்.. அதுல நீங்க பாக்குறது பெட்டர்.

(நான்பெற்ற துன்பம் மற்றவர்கள் பெறக்கூடாதென்ற நல்லெண்ணத்தில் ஒரு அவசர பதிவு)

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

The Dirty Picture


சிறுவயது முதல் திரைப்படங்களில்மீது ஆர்வம்கொண்ட ஒரு பெண் திருமணத்திற்கு முந்திய நாள் வீட்டை விட்டு தப்பியோடி சினிமாவில் சேர்கிறாள்.


The Dirty Picture (Hindi: द डर्टी पिक्चर) is a 2011 Indian semi biographical, drama film inspired by the life of Silk Smitha, an actress noted for her erotic roles. The filmmakers, however, clarified that the story is not officially and literally based on Smitha alone, but also on many of her other Southern contemporaries like Nylon Nalini and Disco Shanthi

சினிமாவில் சேர்வதற்காக என்னவேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாக வெளிப்படையாக சொன்னாலும் அவளுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இந்நிலையில் ஒரு துணைநடிகைக்கு பதிலாக அவளுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. சாட்டையடிகளை தாங்கிக்கொண்டு கவர்ச்சியாக நடிக்கிறாள். ஆனாலும் படத்தின் டைரக்டர் அவளது காட்சிகளை கத்தரித்தே சினிமாவை வெளியிடுகிறார். படம் ஊத்திக்கொள்ள இவளது கவர்ச்சியான நடனத்தை இணைத்து மீண்டும் வெளியிடுகிறார் தயாரிப்பாளர். அதனால் படம் வசூலை அள்ளுகிறது.

அவளை தேடிப்பிடிக்கும் தயாரிப்பாளர் அவளுக்கு சில்க் (பட்டு) என்று பெயரிடுகிறார். சில்க் என்றொரு பாத்திரத்திரத்தை உருவாக்கியதால் (பட்டு) புழு என்றே என்றே அவரை அழைக்கிறாள்.

சூர்யகாந்த என்ற பிரபல நடிகருக்கு ஆசைநாயகியாக இருப்பதாக செய்யப்பட்ட ஒப்பந்த பிரகாரம் அந்நடிகர் இவளுக்கு நிறைய திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புக்களை பெற்றுக்கொள்கிறாள்.

ஒரு தருணத்தில் நடிகரின் மனைவி இவர்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு வர அவளை குளியலறையில் ஒழிந்துகொள்ளுமாறு துரத்துகிறார் நடிகர்.

அதன்பின் நடிகரை சில்க் புறக்கணிக்க அவளுக்கு வாய்ப்பே இல்லாமல் பண்ணுகிறார் அவர். தாமதமாக உண்மையை உணர்ந்துகொள்ளும் சில்க் இந்திய கலாச்சாரப்படி புடவை அணிந்து தற்கொலை செய்துகொள்கிறாள்.

இன்று பெண்ணியம் பேசுபவர்கள் காணும் கனவுப்பெண்ணுக்கு நிகரானவளாக சில்க் இருக்கிறாள். அவள் விரும்பாத திருமணத்தை அவள் செய்துகொள்ளவில்லை. அவள் ஆசைப்பட்ட துறையில் சாதிக்கவும் செய்கிறாள். தனது உடலை எவ்வளவு காட்டவேண்டும் என்று அவளே முடிவும் எடுக்கிறாள். தனது படுக்கையறையைக்கூட தான் விரும்புவோருடன் பகிர்ந்தும் கொள்கிறாள். அப்படி இருந்தும் கடைசியில் வாழ்க்கையில் விரக்தியுற்று தற்கொலை செய்ய வைப்பது எது?

இந்த சில்க் எனும் கதாபாத்திரம் வெவ்வேறு தள்ங்களில் வெவ்வேறு பெயர்களில் இருப்பதை இங்கு நான் ஞாபகப்படுத்தவேண்டும். அது ஒரு அலுவலகமாக இருக்கலாம் ஊடக நிறுவனமாக இருக்கலாம் அல்லது பேஸ்புக் டுவிட்டரில் ஏன் பதிவுலகமாகக்கூட இருக்கலாம். தளம் எவ்வாறிருந்தும் அப்பாத்திரத்தின் முடிவும் சில்க்கின் கதையை ஒத்ததாகவே இருக்கும். புழுக்களும் ஏதாவதொரு விடுதலை என்ற முகமூடியை அணிந்து வலம் வருகின்றன. அவ்வாறான புழுக்களுக்குத்தான் இங்கு பஞ்சமில்லையே..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

அப்துல் கலாமின் இலங்கை வருகை

இந்திய அணு விஞ்ஞானியும் முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல் கலாமின் வருகை தொடர்பாக தமிழ் ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.


Avul Pakir Jainulabdeen Abdul Kalam About this sound pronunciation (help·info) (Tamil: அவுல் பகீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்; born 15 October 1931) usually referred to as A. P. J. Abdul Kalam, is a renowned aerospace engineer, professor (of Aerospace engineering), and first Chancellor of the Indian Institute of Space Science and Technology Thiruvananthapuram (IIST), who served as the 11th President of India from 2002 to 2007.[1] During his term as President, he was popularly known as the People's President.[2][3] He was awarded the Bharat Ratna, India's highest civilian honour in 1997.



அவரது வருகை முன்னாள் ஜனாதிபதி என்ற வகையிலேயே அமைந்திருந்தது. இந்தியாவில்; சம்பிரதாய  ஜனாதிபதியால் கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுக்க முடியாது. அவர் ஜனாதிபதியாக இருந்ததால் இந்திய சிறுபான்மை இனங்களுக்கு முக்கியமாக முஸ்லிம்களுக்கு என்ன பயன் விளைந்திருக்கிறது என்ற ஒரு கேள்வியே இவரது வருகையின் மூலம் என்ன பயனை எதிர்பார்க்கமுடியும் என காட்டும்.

அவ்வாறான ஒருவர் எல்லை மீறும் இந்திய மீனவர்களுக்கு அங்கீகார்ரம் வாங்கிக்கொடுக்க முட்டாள்தனமான கருத்தை சொல்லியிருக்கிறார். கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக தமிழ் நாட்டை சேர்ந்தவர்களே அவரது கருத்தை ஏற்றுக்கொள்ளாத நிலையில் இலங்கை விவகாரத்தில் ஏன் மூக்கை இவர் நுழைக்கவேண்டும்? சாமானியர்களுக்கு புரியாத மேதாவித்தனமான கருத்தாக கருதுவதற்கு இதில் எதுவும் எல்லை. (கூடங்குளம் தொடர்பான கருத்து வேண்டுமானால் சாமானியனுக்கு பிரியாமல் இருந்திருக்கலாம்)

இவ்வாறான ஒருவரை தென்கிழக்கு பல்கலைக்கழகம் சந்திக்கவில்லை முஸ்லிம் அமைப்புக்கள் சந்திக்கவில்லை என்றுவேறு ஒரு சிலர் எழுதியதை வாசிக்க நேர்ந்தது. இந்த கலாமை விட அலவியால் அதிகம் செய்யமுடியும்! அலவி என்ன செய்திருக்கிறார் என்று அறிந்தவர்கள் அதை வைத்து கலாம் என்ன செய்யக்கூடும் என ஊகித்துக்கொள்ளட்டும்.

இவர் முஸ்லிம் காங்கிரசுக்கு அபிவிருத்தி அரசியலை பரிந்துரை செய்தாராம். இது தெரியாமல்தான் முஸ்லிம் காங்கிரஸ் இவரிடம் சென்று ஆலோசனை கேட்டதா? அதுபோதாதென்று சகல படங்களிலும் அஸ்வர் வேறு. கொடும சார்

அப்துல்கலாமின் முட்டாள்தனம்
இலங்கை கடற்பரப்பை இந்திய மீனவர்களுக்கு திறந்துவிட பார்க்கிறார்.

அப்படியானால் காஷ்மீரில் இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் தலா மூன்று நாட்களுக்கு வளங்களை பகிர அவர் முதலில் இந்திய அரசுக்கு ஆலோசனை கூறட்டும்

ஊடகவியலாளர்கள் வேறு முட்டாள்தனமாக எதையாவது கேட்டிருக்கிறார்கள். இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்கள் அவசியமா என்பதை நாம்தான் முடிவுசெய்யவேண்டும். எதற்கு இவரிடம் கேட்டிருக்கிறார்கள்?

இந்தியாவில் ஒரு சம்பிரதாய பதவியை வகித்த ஒருவரிடம் இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவது தொடர்பாக கேள்விகேட்ட முட்டாள் ஊடகவியலாள்ர் யார்?

மஹிந்த ராஜபக்சவை பழிவாங்கிய அப்துல் கலாம்!
அப்துல் கலாம் பேசிய சிங்களத்தை சொன்னேன் :D

தான் பேசிய தமிழ் எப்படி இருந்திருக்கும் என்பது இன்று ஜனாதிபதிக்கு புரிந்திருக்கும்

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

நண்பன்

விஜய் படம் என்பதைவிட சத்யனின் படம் என்பதே பொருத்தமானது.

இலியானா அனுஷ்காவை ஞாபகப்படுத்துகிறார்

இலியானாவின் மலையாள கிண்டல் படத்தின் ஹைலைட்

பிரசவ சீன் மகா அறுவை

பாரி பாத்திரம் மட்டுமே விஜய்க்கு பொருத்தமானது. இல்லாவிட்டால் விஜயை ஜட்டியுடன் பார்க்கும் சாபம் நமக்கு நேர்ந்திருக்கும்

பாடல்களின் காட்சியமைப்பில் மட்டும் ஷங்கர் டச். அதிலும் த்ன்னையே கிண்டலடித்திருக்கிறார் ஷங்கர்.

வழமையான விஜய் ரசிகர்களுக்கு இப்படம் பிடிக்குமா?

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

பின்னணியை ஆராய்வோர் முன்னிலைப்படுத்தியது

"தமிழ் சமூகத்திற்கும் அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்" என்ற தலைப்பில் வெளியான ஆவணத்திற்கு பதிலாக 71 பேர் கையெழுத்திட்ட "வேண்டுகோளின்" பின்னான அரசியல் பின்னணி  என்றதொரு கட்டுரை ஒன்று திரு     பி.இரயாகரன் அவர்களால் எழுதப்பட்டுள்ளது.

1.) இவ்விரு ஆவணங்களும் எத்தனைபேரால் பகிரப்பட்டது என்ற ஒரு புள்ளிவிபரமே தமிழ் சமூகத்தின் பெரும்பான்மை முகத்தை காட்டிவிடுகின்றது.

2.) கட்டுரையாளர் வேண்டுகோளின் பின்னணியை ஆராயும் ஆர்வம்கொண்ட அளவுக்கு உள்ளடக்கத்தை அறிய விளங்க ஏற்றுக்கொள்ள முயலவில்லை. அதனால்தான் வேண்டுகோளை தமிழின எதிர்ப்பு என்ற ஒன்றுடன் முடிச்சுப்போட்டு பின் உள்ளடக்கத்தை தவிர்த்து தமிழின எதிர்ப்பு என்ற ஒரு கற்பனை மீது விமரிசனம் செய்துள்ளார்.

3.)  ஒன்று தமிழ் சமூகத்திலிருக்கும் பிற்போக்குத்தனங்களுக்கு அரசு காரணம் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அவர்கள் வசதியாக இரு தசாப்தங்களுக்கு மேலாக புலிகளின் ஆட்சியில் இருந்த பிரதேசங்களிலும் சுயாதீனமாக முடிவெடுக்ககூடிய புலத்திலும் அதே பிற்போக்குத்தனங்களுக்கு அரசு காரணமா என தெளிவாக்குதல்வேண்டும்.


4.) அறிக்கைக்கு அரசியல் உண்டு அது இதிலுமுண்டு என்ற வாதம்.

ஒரு கட்சி அறிக்கை விடும்போது அக்கட்சியின் இற்றைவரையிலான அரசியல் வரலாற்றுடன் சேர்த்தே விளங்கப்படும். இதன்மூலம் உட்கருத்து சிதையும் வாய்ப்பு பெருவாரியாக இருக்கிறது. ஆனால் தனி நபர் அல்லஹு கட்சி / இய்ககம் சாராத  எனும்போது உள்ளடக்கமே முக்கியத்துவம் வகிக்கிறது என்பதை வசதியாக இவ்வாதம் மறைக்கிறது.

மொத்தத்தில் சாண் ஏற முழம் சறுக்கும் கதைதான் இதிலும் நடந்திருக்கிறது. சாண் ஏற்றிவிட்டவர்களை வாழ்த்துவது, தள்ளிவிட்டவர்களுக்காக கவலைப்படுவதும்தான் எம்மால் முடியும். அந்தோ பரிதாபம்; தள்ளிவிடுவதில் உங்கள் கவனம் ஒரு போதும் உங்களை நீங்களாவது ஏறுவதற்கான முஸ்தீவுகளில் கவனஞ்செலுத்தவிடாது என்பதாவது அவர்களுக்கு இன்னும் தெரியவில்லை.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

நாட்டு நடப்புக்கள்

உயர்தர பரீட்சை குளறுபடிகள்
இன்று நாட்டின் முக்கிய பேசுபொருளாக உயர்தர பரீட்சை குளறுபடிகள் இருக்கின்றது. உடனடியாக முடிவுகளை இரத்துச்செய்து முழுமையான விசாரணைகளின் பின் முடிவுகளை மீள வெளியிட்டிருக்கவேண்டும். ஆனால் முடிவுகளை சந்தேகத்துக்கிடமான நிலையில் வைத்திருக்கவேண்டிய அவசியம் அரசுக்கு இருப்பதாவே தெரிகிறது. எஸ்பிக்கு தனியார் பல்கலைக்கழகங்கள் மீது இருக்கும் காதல் சொல்லிமாள முடியாதது. பரீட்சை முடிவுகள் மீதான சந்தேகம் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு நல்லதொரு ஆரம்பத்தை கொடுக்கும் என்ற கணக்கு இருக்கும் போல்தான் தெரிகிறது. தேசிய சுதந்திர முன்னணி கூட முன்னாள் பரீட்சை ஆணையாளர், அமைச்சர் ஒருவர் ஆரம்பிக்கப்போகும் தனியார் பல்கலைக்கழகத்தில் முக்கிய பொறுப்பில் நியமிக்கப்படுவார் என கூறியிருப்பது இச்சதித்திட்டத்தை வெளிச்சமாக்குகின்றது.


இதேவேளை ஊடகங்கள் கூட இவ்வளவுநாளும் திறம்பட இயங்கிய பரீட்சைத்திணைக்களத்தினை மிக கேவலமாக சித்தரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. பொறுப்பற்ற தனியார் ஊடகங்கள் நாட்டின்தும் பொதுமக்களினதும் நலன்களுக்கு எதிரானவை என்பதை இது உறுதிப்படுத்துகின்றது.
தொடர்புடைய பதிவு 

தேசிய சுதந்திர முன்னணி
விமல் வீரவன்ச தலைமை வகிக்கும் தேசுமு; சமகால நிகழ்வுகளில் நியாயமான நிலைப்பாடுகளை எடுத்திருக்கிறது. தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பாக, உயர்தர பரீடசை முடிவுகள் தொடர்பாக, என்கவுன்டரில் கொல்லப்படும் பாதாள உலகம் தொடர்பாக அதன் நிலைப்பாடு நியாயமானது. சிலவேளை மஹிந்த அரசாங்கமுடன் முறுகல் ஏற்பட்டிருக்கலாம் என்ற ஊகங்கள் பரவலாக இருந்தாலும் நியாயம் நியாயம்தானே..


மக்கள் விடுதலை முன்னணி
மக்கள் விடுதலை முன்னணிக்குள்ளிருக்கும் குத்து வெட்டுக்கள் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. ரணிலைப்போல் சோமவன்சவும் அரசின் கைப்பொம்மையாக மாறிவருகின்றது என்ற சந்தேகம் வலுக்கின்றது.
ஆயினும் ஜேவிபி இன் பிரசன்னம் நாட்டின் நலன்களுக்கு மிக இன்றியமையாது. புத்தக்கப்பூச்சிகளான ரேங்க் எடுத்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களை விட ஜேவிபியின் நிகழ்ச்சி நிரலில் இயங்கும் பல்கலைக்கழக மாணவர்கள் இலவசக்கல்வியை பாதுகாக்க எடுக்கும் முனைப்புக்கள் பார்ரட்டப்படவேண்டியவை. புத்தகப்பூச்சிக்களை விட இவர்களே நாட்டின் சொத்து. இவ்வாறான தன்னலமற்ற துடிப்பான இளைஞர்களைக்கொண்ட கட்சியில் எவ்வளவுகாலத்திற்கு சோமவன்சவால் தாக்குப்பிடிக்கமுடியும்?

ஐக்கிய தேசியக் கட்சி
ஐதேகவின் நிர்வாகிக்களுக்கான தேர்தல் கரு ஜயசூரியவை பூச்சியமாக்கியிருக்கிறது. ஒரு கட்சிக்குள் வெற்றிபெறுவதற்கு சரியான வியூகம் அமைக்கத்தெரியாத சஜித்தின் திட்டத்திற்கு பலியாலிப்போன ஒருவர் எவ்வாறு சிரந்த தலைவராக இருப்பார்? அதேவேளை ஊடக வெளிச்சம்மூலம் தன்னை பிரபலம் என நினைத்துக்கொண்டிருந்த தயாசிறிக்கும் நல்ல அடி. தேவையான அடியும் கூட. வெகுஜன ஊடகங்களை மட்டும் நம்பும் அரசியல்வாதிகள் இனி சுதாகரித்துக்கொள்ளவேண்டும். ஐதேகவின் யாப்புத்தான் இத்தோல்விகளுக்கு காரணம் என பலர் நியாயம் கற்பிக்க கூடும். ஆனாலும் ஆளம் அறியாமல் காலை விடுவதும் தப்பு, ஆடத்தெரியாதவன் கூடம் கோணல் என்பது தப்பு. தகுதியான தலைவர் எந்தவொரு களத்திலும் தன்னை நிரூபிக்க கூடியவராக இருக்கவேண்டாமா?
தொடர்புடைய பதிவு 

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்