Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

தமிழ் முஸ்லிம் கூட்டு பற்றிய கூப்பாடு


கிழக்கு மாகாணசபை தேர்தலுக்கு நாள் குறிக்கப்பட்டது முதல் தமிழ் தரப்பில் இருந்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிய கூச்சல்கள் கேட்கத்தொடங்கிவிட்டன. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் கிழக்கில் ததேகூ முதலமைச்சரை பெறத்தக்கதாக முஸ்லிம் தரப்பின் காய் நகர்த்தல்கள் இருக்கவேண்டும் என்பதே.

கிழக்கில் இரு சமூகங்களினதும் சனத்தொகை ஏறத்தாள சமமானதாக இருப்பதாக கணிப்பீடுகள் காட்டியபோதும் தமிழ் தரப்பில் பாதியளவினர் வாக்களிக்கச்செல்லமாட்டார்கள் என்ற வெளிப்படையுண்மையை இவர்கள் வசதியாக மறந்துவிடுவர். இதன்மூலம் கிழக்கின் அரசியல் தலைமைத்துவம் முஸ்லிம்களுக்கானது என்பதை மறைப்பதே இவர்களது நோக்கம். இப்போக்கை சகல முன்னணி தமிழ் ஊடகங்களின் அரசியல் வித்தகர்களின் பத்திகளிலும் பேச்சிலும் காணமுடிகின்றது. இது தமிழ் தரப்பு எவ்வாறு கபட நாடகம் ஆடுகின்றது என்பதற்கு தெளிவான சான்றாகும்.

மற்றும்,
இவர்கள் கூப்பாடு போடும் முஸ்லிம் தமிழ் இன ஐக்கியம் என்பது வெறுமனே முதலமைச்சர் பதவியை தமிழருக்கு தாரைவார்ப்பதாகும். அவ்வாறு நடந்தால் அது மிகப்பெரிய விட்டுக்கொடுப்பாகும். ஆனால் அவ்விட்டுக்கொடுப்பை செய்தால் முஸ்லிம் தரப்பின் நியாயமான கோரிக்கைகளுக்கு எவ்வாறான விட்டுக்கொடுப்புகளை செய்ய தயாராக இருப்பர் என்பது பற்றிய வெறும் வாய்ப்பேச்சளவிலான வாக்குறுதிகளேனும் தமிழ் தரப்பால் முன்வைக்கப்படுவதில்லை.

ஆனால் சிங்கள தரப்போ, சில வாக்குறுதிகளை வழங்குகிறது. அதில் பல மீறப்பட்டால் கூட முஸ்லிம் தரப்பை பொறுத்தவரை சிங்கள முஸ்லிம் கூட்டில் ஒரு சில வாக்குறுதிகளாவது நடைமுறைப்படுத்தப்படும். ஒரு வாக்குறுதியும் இல்லாத கூட்டைவிட இது எவ்வளவே மேல் என்பதை சில அரசியல் வித்தகர்கள் வசதியாக மறைப்பது தமிழ் தரப்பினை இன்னும் ஏன் நாம் நம்பக்கூடிய நிலையில் இல்லை என்பதை தெளிவாக்கும்.

நிலமை இவ்வாறு இருக்க தமிழ் தரப்போ மஹிந்த அரசுடன் முஸ்லிம் தரப்பு இணைந்தால் பின்னொரு நாளில் அரசு முஸ்லிம் தரப்பை ஏமாற்றும் என்று நீலிக்கண்ணீர்வடிப்பது ஆடு ந்னைகிறதென்று ஓநாய் அழுத கதைக்கொப்பானதாகும்.

இவ்வளவு ஏன்?


மன்னாரில் மீன்பிடித்துறையொன்றினை ஒப்பந்த அடிப்படையில் பாவித்த கத்தோலிக்க மீனவர்களை ஒப்பந்தம் முடிந்ததும் விலகிச்செல்ல கோரமுடியாததாக தமிழ் தரப்பு இருக்கிறது. அது தொடர்பாக எந்தவொரு அறிக்கையும் விட அது தயாராக இல்லை. இத்தனைக்கும் இவர்கள் இதுவரை நாளும் ஒன்றறக்கலந்திருந்த புலிகளின் தர்ப்பும் இவ்வொப்பந்தத்தில் சம்பந்தப்பட்டிருக்கின்றது!! அதையேனும் மதிக்க இவர்கள் தயாராக இல்லை!

மாறாக இவர்கள் குறிப்பிட்ட மீன்பிடித்துறை பற்றிய தீர்வைப்பேசாமல் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மீது நீதிபது ஜூட்சன் சொன்ன இன்னும் நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டை வேதவாக்காக நம்பி ரிசாத் அவர்களை சிறையில் அடைப்பதற்கான முயற்சியிலேயே ஈடுபடுகிறார்கள்.

கேவல்ம் ஒரு மீன்பிடித்துறையொன்றை ஒப்பந்தப்படி கொடுத்துவிடுங்கள் என்று அறிக்கையிடாத தமிழ் தரப்போடா நாம் கூட்டுச்சேரவேண்டும்?

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

0 comments: