Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

கல்வியை தனியார்மயப்படுத்தும் முயற்சி

இலங்கையில் அடிப்படைக்கல்வி இலவசமாக சகல மாணவர்களுக்கும் வழங்கப்படும் நிலையில், நவீன தீண்டாமையை வளர்க்கும் மேல்தட்டு வர்க்கத்தினரின் தேவைகளுக்காக சர்வதேசப்பாடசாலைகள் என்ற பெயரில் தனியார் கல்வி நிறுவனங்கள் நடாத்தப்படுகின்றன.

During recent years, there is a significant increase in the demand for foreign education among the students in Sri Lanka and neighbouring countries. One of the main reasons for this is the inability of providing study options as they need by the state sector Universities and private institutions for students who pass the G.C. E. Advanced Level Examination and therefore they tend to look for other options overseas. In many countries this is a common practice but unfortunately there are no proper systems to guide the potential students and parents to select the best education provider of the student and this will always depend on several important factors.


< பொதுவாக தொழிலதிபர்களான இச்சமூகம் வர்த்தகக்கல்வியை வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கற்றுக்கொள்கிறார்கள். இவர்கள் திறமையானவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இலாபமோ நட்டமோ இவர்களையே பெரிதாக பாதிப்பதால் சமூகம் இது பற்றி அலட்டிக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. ஆயினும் நேரடியாக சமுதாயத்தை பாதிக்கக்கூடிய ஆசிரியர், வைத்தியர், பொறியியலாளர் போன்ற தொழிற்துறைகளில் தனியார் நிறுவனங்கள் செல்வாக்குச்செலுத்துமானால் அது நிச்சயம் சமுதாயத்தை பாதிப்படையச்செய்யும். இவ்வாறான ஒரு கல்விமுறையை இலங்கையில் அறிமுகப்படுத்தவே எஸ்.பி. முயற்சித்துக்கொண்டிருக்கிறார். இதன்மூலம் செல்வம் கொழிக்கும் புதிய துறையொன்று இந்த வர்த்தக சமூகத்திற்கு கிடைக்கும். அதில் பலன்பெறப்போவதும் இந்த மேல்தட்டு வர்க்கமே. இவ்வாறான கல்விமுறையில் அதிகம் அக்கறை காட்டிய இன்னொருவர் "மயோன்" முஸ்தபா. இவரின் பெயரோடு ஒட்டிக்கொண்டிருக்கும் "மயோன்" என்பது அவரின் தனியார் கல்வி நிறுவனத்தின் பெயராகும். ருசி கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாமல் இருக்குமா? இதுவும் தனியார் கல்வி வலியுறுத்துபவர்களின் நோக்கத்தை தெளிவாக்குகிறது.

வெளிநாட்டுச்செலாவணி மாயை
தனியார் கல்விநிறுவனங்கள் அவசியம் என்போரின் வாதத்தில் எப்போதும் அன்னியச்செலாவணி என்ற வாதம் இடம்பெற்றிருக்கும். அதில் முதலாவது இலங்கை மாணவர்கள் வெளிநாட்டுக்கு கற்கச்செல்வதால் இலங்கைக்கு ஏற்படும் அன்னியச்செலாவணி நஷ்டம் பற்றியிருக்கும். இலங்கை மாணவர்கள்? எந்த நாட்டை அதிகம் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதையும், அவர்கள் தேர்ந்தெடுக்கும் கல்வி நிறுவனங்களையும் அவர்களின் சித்தி வீதத்தையும் கவனித்தாலே உண்மை வெளிச்சமாகிவிடும். வெளிநாடொன்றிற்கு புலம்பெயரும் இலகுவான வழியாக வெளிநாட்டுக்கல்வி இருப்பதுதான் அதிகமானோர் வெளிநாட்டு கல்வியை நாட முதற்காரணம்.

இரண்டாவது வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இலங்கையில் அமைவதன்மூலம் வெளிநாட்டு மாணவர்கள் மூலம் இலங்கைக்கு ஏற்படும் இலாபம் பற்றியது. ஆயினும் இலங்கையை நாடும் வெளிநாட்டு மாணவர்களில் பெரும்பகுதியானோர் மாலைதீவு நாட்டவர்கள். இவ்ர்கள் காலாகாலத்திற்கு இலங்கையில் படிக்கவருவார்கள் என்று எதிர்பார்க்கவும் முடியாது. இவ்வாறான வர்த்தக நோக்கு இருக்குமானால் அவ்வாய்ப்பை இலங்கைப்பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப்படிப்புக்கு வழங்கலாம். இதன்மூலம் நிச்சயம் தனியார் நிறுவனங்களைக்காட்டிலும் அதிக தெற்காசிய மாணவர்களை கவர முடியும். ஆயினும் இது மேற்றட்டு வர்க்கத்தின் நலன்களுக்கு எதிரானதால் மூடி மறைக்கப்படுகின்றது.


ஊடக விபச்சாரம்

இன்று ஊடகங்களின் வர்த்தக வெறி எல்லை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. ஒருவகையில் மேல்தட்டு வர்க்கத்தின் நலன்களை பாதுகாக்கும் பொறுப்பு இவ்வூடக முதலாளிமார்களுக்கு இருக்கிறது.

பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி என எந்த ஊடத்தை எடுத்தாலும் ஒரு விளம்பர உத்தி இருக்கிறது. நீங்கள் அதிகம் பணம் செலவு செய்து விளம்பரப்படுத்தினால் உங்கள் நிறுவனத்தைப்பற்றி ஒரு க்ட்டுரையோ, நிகழ்ச்சியோ, நேர்காணலோ இலவசமாக செய்யப்படும். இவ்வாறான நிகழ்ச்சிகளில் கட்டுரைகளில் எமது இலவசக்கல்வி ஏளனஞ்செய்யப்படுகிறது. வெளிநாட்டுக்கல்வி வலியிறுத்தப்படுகின்றது. அவ்வாறான ஒரு பத்தியை மேலே தந்திருந்தேன். போதிய புரிதல் இல்லாத ஒரு சாமானியன் இந்நயவஞ்சகத்திற்கு இலகுவில் பலியாகிப்போகிறான். இவ்வாறான ஊடகங்கள்தான் மக்களின் கருத்துச்சுதந்திரத்தை உறுதிசெய்யபாடுபடுகின்றன. இவ்வூடகங்களுக்கும் பாலியல் சுதந்திரம் கோரும் பாலியல் தொழிலாளிக்கும் என்ன வேறுபாடு இருக்கின்றது?

எனவே தனியார்க்கல்வி மாயையை எதிர்த்து நாம் எம்மாலான சகல முயற்சிகளையும் செய்யவேண்டியது நமது கடமையாகும். ஆகக்குறைந்தது எமது உறவினர் நண்பர்களிடையேயாவது இது பற்றிய உண்மையை எடுத்துச்சொல்வோமா?

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

2 comments:

Unknown said...

you are correct.. normally our people not believing our own products.they don't like to consume our own even though it is better than others.. that is the problem..

RJ Dyena said...

sattapadi..........article..