Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

சன்ல் 4 இன் கொலைக்களம்


சனல் 4; கொலைக்களம் என்ற தலைப்பில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களாக சில வீடியோக்களை ஒளிபரப்பியது.

அதற்கு முன்,

போர்க்குற்றங்கள் என்றால் என்ன என்பது பற்றிய தெளிவு முதலில் நமக்கு அவசியமாகிறது. இது தொடர்பான விவரங்களை ஆங்கில விக்கிபீடியாவிலும் தமிழில் நண்பர் அஷோக்பரனுடைய பதிவிலும் காணலாம்.

தமிழ் விக்கிபீடியாவினை இதற்கு மேற்கோள் காட்டமுடியாமை ஒரு வருந்ததகக் விடயமே. அதில்
>>ஓர் அரசு தனது சொந்த மக்கள் மீதே விமானக் குண்டுத் தாக்குதல்கள் நடாத்தினால் அது சர்வதேச போர்க் குற்றமாகும் என பராக் ஒபாமா அறிவித்துள்ளார். அதாவது எந்தவொரு நாடும் தனது சொந்த நாட்டு மக்களின் மீதே போர் விமானத்தை பயன்படுத்துதல் போர்க்குற்றம் என்ற செய்தியை தெளிவாகக் கோடிட்டு காட்டியுள்ளார். பிரிட்டன் படைத்துறை அமைச்சரும் இதனை வலியுறுத்தியுள்ளார். <<

என்ற பகுதியியை பார்க்கும்போது பல கேள்விகள் எழுகின்றன.

ஒபாமா சொல்வதெல்லாம் வரவிலக்கணமாக ஆகுமா?

அரசு அல்லாதோர்; மக்கள் மீது விமான தாக்குதல் நடாத்தினால் அது போர்க்குற்றமில்லையா?

இவ்வாறான கேள்விகளின் அடிப்படையில் நான் தமிழ் விக்கிபீடியாவின் வரைவிலக்கணத்தை தவிர்த்திருக்கிறேன்.

ஆங்கில விக்கிபீடியாவில்
War crimes are serious violations of the laws applicable in armed conflict (also known as international humanitarian law) giving rise to individual criminal responsibility. Examples of such conduct includes "murder, the ill-treatment or deportation of civilian residents of an occupied territory to slave labor camps", "the murder or ill-treatment of prisoners of war", the killing of prisoners, "the wanton destruction of cities, towns and villages, and any devastation not justified by military, or civilian necessity".[1]

இதனடிப்படயில் சிந்திக்கும்போது murder - மாற்றுக்கருத்தாளர்களை கொலை செய்தல், deportation of civilian -  இனச்சுத்திகரிப்பு, destruction  - பொதுமக்களுக்கான மின் விநியோகத்தை தடைசெய்ய transformerகளுக்கு குண்டுவைத்தல etc..

என பலவிடயங்களை இம்மூன்று தசாப்த யுத்தத்தில் இலங்கையர் அனைவரும் சந்தித்திருக்கிறோம்.

ரத்தின சுருக்கமாக போர்க்குற்றம் என்பது இராணுவ தேவைக்காகவேனும் நியாயப்படுத்த முடியாத செயல்கள் என்ற அடிப்படையில்

அப்படியென்றால் இரண்டாண்டுகளாக மட்டும் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முக்கியத்துவம் வழங்கப்படுவது


இவ்வகையான இராணுவ ரீதியாக நியாயப்படுத்தமுடியாத விடயங்கள் மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தத்தில் முதல் தடவையாக முள்ளிவாய்க்காலில்தான் இடம்பெற்றதா?

அல்லது அதற்குமுன் துன்பப்பட்டவர்கள் மக்கள்

போன்ற கேள்விகளை வாசகர்களிடமே விட்டுவிடுகிறேன்.

இருந்தும்
இவ்வாறான காட்சிகளை பார்க்கும் அளவுக்கு நம் அனைவரினதும் மனங்கள் இறுகியிருப்பதும், அதைப்பார்த்தபின் எமது வழமையான வாழ்க்கையை இயல்பாக தொடர்வதற்கும் முடிகின்றதை நினைக்கையில்  நாம் வாழும் சமூகம் மீதான அச்சம் ஏற்படுகிறது.

அதேவேளை வீடியோ தொடர்பான கேள்விகளும் இல்லாமலில்லை.

உதாரணமாக

1.) ஒரு காட்சியில் விமானத்தாக்குதல் இடம்பெறும்போது மக்கள் பங்கருக்குள் பதுங்குகையில் ஒருவர் வீடியோ எடுத்திருப்பதை காட்டுகின்றது. அப்போது ஒரு தாய் "வீடியோ எடுத்து என்னதத கண்டனீங்கள" என்று அழுகிறார்.

நமது உற்றார் உறவினர் குடும்பத்தார் உயிருக்கு பயந்து பதுங்குகையில் நாம் ஒரு கமராவை எடுத்து அதை செவ்வனே படம்பிடிப்போமா? இக்காட்சிகளை இம்மக்களின் நலனில் சிறிதேனும் அக்கறையுள்ள ஒருவரால் எடுத்திருக்க முடியுமா? இதை படம்பிடித்தவருக்கு ஒரு நோகக்ம் இருந்திருக்கும். ஒரு திருமண நிகழ்வை நண்பர்களின் ஒன்று கூடலை படம்பிடிப்பதற்கும் இதற்கும் பாரிய வித்தியாசம் இருக்கிறது.

2.) நீங்கள் வாழ்நாளில் சந்தித்த மிகப்பயங்கரமான சம்பவங்களை விளக்குகிறீர்கள். உங்கள் முகத்தில் உதடுகளின் ஓரத்தில் புன்னகை வழியுமா?

இக்கேள்விகளுடன்
The Telegraphஇல் வெளிவந்த
Serena Davies reviews Sri Lanka's Killing Fields, Jon Snow's harrowing investigation for Channel 4 என்ற கட்டுரையின் பின்வரும்பகுதியையும் கருத்தில் கொள்ளுங்கள்.

Watching these films made me retch and I wonder quite what the purpose was of viewers being exposed to such horror. Snow said he believed the films should be made public, but why to the British public? Should untutored members of another nation, one on the other side of the world and with no claims now over its former colony, be the people to bear witness to such grotesque behaviour, watching a sequence of these squalid little films and adding a final violation of the victims’ privacy? Surely they are a matter for the experts, for the international arbiters of justice and human rights. In this instance, TV, with its sensationalising soundtrack and its graphic intimacy, seemed the wrong way to present yet another reminder of man’s capacity for evil.

ரூபவாஹினியில் ஒருநாள் இளையதம்பி தயானந்தா அகதி என்பதை அந்தஸ்த்தாக கருதும் மனநிலை தொடர்பாக தனது கவலைகளை வெளியிட்டார். அம்மனநிலை தொடரும்வரை காட்சிகள் வந்துகொண்டேயிருக்கும்..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

4 comments:

Admin said...

//1.) ஒரு காட்சியில் விமானத்தாக்குதல் இடம்பெறும்போது மக்கள் பங்கருக்குள் பதுங்குகையில் ஒருவர் வீடியோ எடுத்திருப்பதை காட்டுகின்றது. அப்போது ஒரு தாய் "வீடியோ எடுத்து என்னதத கண்டனீங்கள" என்று அழுகிறார்.

நமது உற்றார் உறவினர் குடும்பத்தார் உயிருக்கு பயந்து பதுங்குகையில் நாம் ஒரு கமராவை எடுத்து அதை செவ்வனே படம்பிடிப்போமா? இக்காட்சிகளை இம்மக்களின் நலனில் சிறிதேனும் அக்கறையுள்ள ஒருவரால் எடுத்திருக்க முடியுமா? இதை படம்பிடித்தவருக்கு ஒரு நோகக்ம் இருந்திருக்கும். ஒரு திருமண நிகழ்வை நண்பர்களின் ஒன்று கூடலை படம்பிடிப்பதற்கும் இதற்கும் பாரிய வித்தியாசம் இருக்கிறது.//

இது ஒரு சாதாரண பொது மகனால எடுக்கப்பட்ட வீடியோவாகத்தான் இருக்க முடியுமா?

புலிகளின் இயக்கத்தில் பல பிரிவுகள் இருக்கின்றன. அவற்றிலே ஒன்றுதான் நிதர்சனம். இவர்கள் உக்கிர மோதல் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே அம் மோதலை ஒளிப்பதிவு செய்பவர்கள். மக்களோடு மக்களாக வாழ்பவர்கள்.

அவர்களால் இந்த வீடியோ எடுத்திருக்க முடியாதா? புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் பலர் மக்களோடு மக்களாகவே இருப்பர் அவர்களால் இந்த வீடியோ எடுத்திருக்க முடியாதா?

ஊடகவயலாளர்கள் இவ்வாறான காரியங்களைச் செய்யமாட்டார்களா?

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

சந்ரு,
இக்காட்சிகளை இம்மக்களின் நலனில் சிறிதேனும் அக்கறையுள்ள ஒருவரால் எடுத்திருக்க முடியுமா? என்ற கேள்விக்கு நீங்கள் கொடுத்த விளக்கத்தில் இருந்து புலிகள் மக்களின் நலனில் சிறிதேனும் அக்கறையற்றவர்கள் என்பதும் மக்களை துன்பபட வைத்து பிழப்பவர்கள் என்பதும் தெளிவாகிறது.
வெருகல் ஆற்றைக் கடந்து வந்து புலிகள் தங்களிடம் இருந்து பிரிந்த தமிழர்களை படுகொலை செய்த போது அந்த தங்கள் போர்க்குற்றங்களை படம் பிடிக்கவில்லை.

ராஜ நடராஜன் said...

முள்ளிவாய்க்காலுக்கும் முற்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் ராணுவம் அல்லது இலங்கை அரசு சார்ந்த எதிர்ப்பு நிலைகளே.சிலவற்றில் விடுதலைப்புலிகளின் தவறுகளும் உள்ளது என்பதில் மறுப்பதற்கில்லை.சில குண்டு வெடிப்பு குறிக்கோள்களில் மக்களும் கூட collateral damageக்கு உட்பட்டார்கள் என்பதிலும் சந்தேகமில்லை.

ஆனால் முள்ளிவாய்க்கால் துயரங்கள் மக்களைப் பற்றிக் கவலைப்படாத அரசின் தீவிரவாதம் என்பதும் போர் மரபுகளுக்கு அப்பாற்பட்டது என்பதால் மட்டுமே உலக அளவில் கவனம் பெறுகிறது.

Hope you are not advocating for Srilanka government's atrocities in the name of LTTE's mistakes.