Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

கொலையாளிகளை மன்னிக்கும் உரிமை படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர்களுக்குத்தான்

தினமலரின் ராஜிவ் கொலையும் சொல்ல மறந்த கதையும் என்ற கட்டுரையில் இருந்த பின்னூட்டங்களில் சில. பின்னூட்டங்கள் சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட கருத்தாகும்.

மன்னிப்பு சிறந்தது என்பதும், அந்த மன்னிப்பை வழங்கவேண்டியது பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரே என்பதும் நமது கருத்தாகும்.

இறக்கப்போவது மனிதன் என்றால் இறந்தது மனிதன் இல்லையா ?
Sri Krishnan - Chennai,இந்தியா
எனக்கு ஓன்று புரியவில்லை தமிழர்களாய நம்மை போன்று இப்படி Emotional Idiot யை வேறு எங்கும் காணமுடியாது.கீழ் கோர்ட் இல் இருந்து சுப்ரீம் கோர்ட் வரை தீர விசாரித்து தண்டனை வழங்கி ,கருணை மனுவும் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்ட பின்னும் இப்படி வெற்று கூச்சல் போடுவது மிகவும் அநியாயம்.வன்மையாக கண்டிக்கத்தக்கது
A.SESHAGIRI - TUTICORIN,இந்தியா
கட்டுரை மிக மிக அருமையாகவும், சிந்திக்கும்படியாகவும் இருந்தது. கொலையாளிகளின் மீது கருணை காட்டு வதை விட்டு விட்டு, கொல்லப்பட்ட அப்பாவிகளுக்காக கருணையும் இரக்கமும் காட்டுங்கள் ! கொலையாளிகளை மன்னிக்கும் உரிமை ஜனாதிபதிக்கோ , நீதி மன்றத்திற்கோ , வேறு யாருக்கும் கிடையாது. அவர்களின் மன்னிக்கும் உரிமை அவர்களால் ஈவு இரக்கமில்லாமல் படுகொலை செய்யப்பட்டர்களே அவர்களின் குடும்பத்தினர்களுக்குத்தான் உண்டு.

Hajji mohamed Hidayathullah - alqassim,சவுதி அரேபியா


மிகவும் அருமையான கட்டுரை. அரசியலில் பிழைக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனையை எடுத்து மக்களை முட்டாள்களாக்கும் அரசியல்வியாதிகளை உள்ளே தள்ள இப்போது பொடா இல்லாமல் போனது வருத்தமே! இந்திய சட்டப்படி குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டு பிறகு கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டவர்களுக்காக வீதியில் இறங்கி தமிழர்கள் போராடுவது தமிழினத்திற்கே அவமானம். அவர்கள் ஏற்கனவே 20 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டனர் என என்னவோ தியாகிகளைப் போல பேசுகிறார்கள். இவர்களின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டா விட்டால் இன்னும் பல தீவிரவாத இயக்கங்கள் துளிர் விடும். என்ன செய்தாலும் உயிர் போகப்போவதில்லை என்ற எண்ணமே மேலிடும். ஒரு நாட்டின் பிரதமரையே கொன்றவர்களுக்கு கருணை மனு அளித்ததே தவறு. இவர்களை 1999-லேயே தூக்கிலிட்டு இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். 11 வருடங்களாக அமைதியாக இருந்தவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்வதன் அவசியம் என்ன? இவர்களது கருணை மனுவை நிராகரித்த மு க இன்று அவர்களை விடுதலை செய் என்று சொல்வதன் மர்மம் என்ன?

குஜராத்தில் 2000 க்கும் அதிகமான மக்களை கொன்ற தீவிரவாதிகளுக்கு என்ன தண்டனை அல்லது விசாரணைதான் என்ன?
prakash - chennai,இந்தியா
ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டவர்களின் சொந்தகாரர்கள் வாதம் மட்டுமே பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது. குண்டு வெடிப்பில் இறந்தவர்களின் குடும்பத்தினர் கருத்துகளைய்ம் கேட்க வேண்டும் . அவர்களும் தமிழ்நாட்டை சேர்ந்த தமிழர்கள் தான். அவர்களுக்காக எந்த அரசியல்வாதியும் இல்லையா? அவர்களின் பாதிப்பை பத்தி இவர்களுக்கு கவலை இல்லையா?
Divaharan - Tirunelveli,இந்தியா

இந்த வைகோ பழ நெடுமாறன் ராமதாஸ் திருமாவளவன் சீமான் கலைஞர் இவரர்கள் எப்பவாவது இலங்கை அகதி முகாம் சென்று பார்திருகிரர்களா. அகதிகளில் நன்கு படிக்கும் குழந்தைகளை தத்து , கட்சி சார்பவது தத்து எடுத்து எத்தனை குழந்தைகளை வளர்கிறார்கள். பதில் சொலுங்கள்.தலைவர்கள் பதில் சொல்லுங்கள். எல் டி டி இ தலைவர் மற்ற இயகங்களை ஒழிக்காமல் இருந்து எல்லாரையும் அரவணைத்து i p k f உடன் போரிடாமல், ராஜீவ் வை கொல்லாமல் இருந்திருந்தால் நம் இந்தியாவில் தமிழ் நாடு எப்படி ஒரு மாநிலமாக இருக்கிறதோ அது மாதிரி தமிழ் ஈழம் இந்தியாவின் ஒத்துழைப்புடன் ஒரு மாநிலமாக கிடைத்திருக்கும். எல்லாம் பிரபாகரன் சர்வதிகார போக்கு காரணம் சரியா தவறா.
vaiyapuri - coinbatore,இந்தியா

ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமென்றால் இது 'true eye opener ' . Best wishes தினமலர்..
Mukund GS - Wellington,நியூ சிலாந்து

இந்திய முழுவதும் ,,,,,,,வேண்டாம் ,,தமிழ் நாட்டில் தீர்கபடாத பிரச்சனைகள் பல உள்ளன ,,,, பேருந்து கட்டணம் சில நாட்களுக்கு முன்பு விலை அதிகம் ஆக்க பட்டு உள்ளது ,,,,கல்வி சாலைகளில் கட்டணம் மறை முகமா உயர்ந்து உள்ளது ,,கொலை கொள்ளை சொல்ல தேவை இல்லை ,,,நில அபகரிப்பு குறைய வில்லை ,,,,கேரளா ஆணை கட்டுவதை தடுத்து நிறுத்த நம்மால் முடிய வில்லை ,,விலை வாசி ஏற்றம் குறைய வில்லை ,,,,,இது போன்று பல பிரச்சனைகளை நம் சொல்லலாம் இதை கண்டித்து போராட்டம் நடத்தினால் தோல்வி அடைந்த கட்சி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது
Babu. M - tirupur,இந்தியா

விடுதலை புலிகள் செய்த கொலைகளுக்கு கணக்கே கிடையாது. இருபது வருடங்களுக்கு முன் தமிழ் பேசும் முஸ்லிம்கள் அனைவரையும் தமிழ்ப் பிரதேசங்களான வடகிழக்கு மாகனங்களிளிருந்து புலிகள் எல்லாவற்றையும் பறித்துக்கொண்டு விரட்டியபோது யாரும் மனிதாபிமானம் காட்டவில்லை. அதைப்பற்றி எந்த தமிழ் பத்திரிக்கையிலும் போடப்படவில்லை. எப்படித்தான் இந்த வைகோ , சீமான், நெடுமாறன், ராமதாஸ், கருணாநிதி , போன்றோருக்கு நீதி உணர்வு மனிதாபிமான உணர்வு வருகிறதோ தெரியவில்லை.


EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

2 comments:

Thanush said...

கொலை வழக்கை விசாரணை செய்த சி .பி. ஐ அதிகாரி ஒருவர் குமுதம் வார இதழுக்காக கொடுத்த செவ்வி ஒன்றில் விசாரணை ஒழுங்காக நடைபெறவில்லை என தனது அதிருப்தியை வெளிக்கொனர்ந்திருந்தார்.மேலதிக விசாரணைகள் தேவை என சிபாரிசுகள் வழங்கி இருக்கின்றனர்.
சுப்ரமணியன் சுவாமி, சந்திரா சுவாமி ஆகியோரிடம் இன்னும் ஒழுங்கான விசாரணைகள் நாடத்தப் படவில்லை, நட்புறவு பாராட்டும் இலங்கையில் "கைதியாக " இருக்கும் கே.பி இடம் ஏன் இன்னும் விசாரிக்க வில்லை, பிரதான கொலையாளிகளான சிவராசன் ஆகியோர் பெங்களூரில் கைதுசெய்ய வாய்ப்பிருந்தும் அதிகாரிகளின் உத்தரவு கிடைக்க தாமதமதால் வீரச்சாவு அடைகின்றனர்,
இப்படி பிரதான குற்றவாளிகள் வெளியே இருக்க பற்றரி வாங்கி கொடுத்தது-( வெடிமருந்தே கொண்டுவந்தவர்களுக்கு ஒரு பாட்டரி வாங்க தெரியாதாம்)

Anonymous said...

நியாயமான தினமலர் பின்னூட்டங்கள். கொலையாளிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் போராடுவது மிக பெரிய அவமானம்.