Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

Save TN Fisherman - பிழையான வழிநடத்தல்

தமிழ் நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுகிறார்கள் என்று குற்றம்சுமத்தி சில நாட்களாக ஒரு டுவிட்டர் பிரசாரம் தமிழ்நாட்டைச்சேர்ந்த ஒரு சிலரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதலில் தமிழ்நாட்டுமீனவர்கள் கொல்லப்படுகிறார்கள் , அவர்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடம் இல்லை. அது எந்த ஒரு நாட்டினனாக இருந்தாலும் ஒரு அப்பாவியின் உயிர் மதிக்கப்படவேண்டும் என்பதில் எந்த ஒரு மனிதனுக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

ஆயினும் இப்பிரச்சாரம் என்று இருந்தாலும் இப்பிரச்சாரத்தின் குறிக்கோள் வெறுமனே இலங்கை மீது குற்றஞ்சுமத்தி இலங்கை கடற்படையின் மீது பழி போடுவதே நோக்கமாக இருக்கிறதென்பது தெளிவு.

இது தொடர்பான ஆதாரங்களை ஆவணப்படுத்தும் நோக்குடன் கடந்த பதிவை அவசரமாக இட்டிருந்தேன்.

மிகச்சிலரால் தொடங்கப்பட்ட இவ்வியக்கம் ஏனைய தமிழ் பேசும் டுவிட்டர்கள் மீது திணிக்கப்பட்டு வருகின்றது. இவ்வியக்கத்த்திற்கு ஆதரவு வழங்காத எவரும் "இனத்துரோகி" என்ற பயங்கரவாத பாசிசப்பாணியில் முத்திரை குத்தப்படும் அச்சம் காரணமாக ஆதரவு போக்கை அல்லது மேம்போக்கான ஆதரவை நழுவல்பாணியில் அளிக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னும் இவ்வியக்கத்த்தின் பரகசியமான நோக்கம் குறித்தும் பகிரங்கமாக பேச தயங்குகிறார்கள்.

யதார்த்தம்
முதலில் கொல்பவர் யார் என்று இதுவரை எந்தவொரு விசாரணை அறிக்கையும் இல்லை. அவ்வாறு இருக்கையில் எந்த அடிப்படையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது?

மீனவர் கொலை: "ஆதாரம் வேண்டும்"



இலங்கையும் இந்தியாவும் நெருங்கிய நட்பு நாடுகள். பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தத்தில் இந்திய கடற்படை இலங்கைக்கு உதவியது. அவ்வாறிருக்கையில் இந்தியாவை ஆத்திரப்படுத்தும் விதத்தில் இலங்கை நடக்குமா?

கொலைகள் நடக்கும் விதம் - நவீன ஆயுதங்கள் வைத்திருக்கும் இலங்கை கடற்படை கயிற்றால் சுருக்கிட்டு கொன்றது என்ற குற்றச்சாட்டு

ஐநாவில் வல்லரசாக அங்கீகரிக்கப்படவேண்டும் என விரும்பும் இந்தியா, அதன் கடல் எல்லைக்குள் அல்லது அருகாமையில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருக்குமா? இவற்றை கண்காணிப்பதற்கான நவீன தொழிநுட்பம் இந்தியாவிட இல்லாமல் இருக்குமா?

இலங்கை கடற்படையின் 60ஆம் ஆண்டு பூர்த்தி தொடர்பாக இலங்கையின் ரூபவாஹினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்ட விவரணத்தில் இல்ங்கையில் கரையோரங்களில் நிறுவப்பட்டுள்ள நவீன ராடர்களின் காட்சியில் நூற்றுக்கும் அதுகமான இந்திய மீனவப்படகுகள் இலங்கை கடல் எல்லையை அண்மித்துக்கொண்டிருப்பதை விளக்கியது. (யாரும் அந்த வீடியோவின் லிங்கை தந்துதவினால் சேர்த்துக்கொள்வேன்.)

இவற்றையெல்லாம் கருத்தில் எடுக்கும்போது இவ்வியக்கத்தின் உள்நோக்கம் தொடர்பான பாரிய சந்தேகங்கள் எழுகின்றன. எனவே சில அரசியல் மற்றும் பயங்கரவாத ஆதரவு சக்திகளின் கபட நாடகத்திற்கு சாதாரண தமிழர்கள் பலியாகவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இலங்கை தமிழ் பதிவர்களே
வெறும் ஹிட்டுக்கள்தான் பதிவுலகம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா? இல்லையென்றால் உண்மையை பட்டவர்த்தனமாய் பகிரங்கமாய் சொல்லவேண்டிய கடற்பாட்டிலிருந்து விலகுவதேன்?

இலங்கையின் கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க நீங்கள் ஆதரவு வழங்குகிறீர்களா?
(In our opinion, fishermen have right to fish in sea regardless of international boundaries )


கச்சதீவு இந்தியாவுக்கு அளிக்கப்படவேண்டும் என்கிறீர்களா? Katchatheevu should be returned to Indian sovereignty from Sri Lanka (சில வருடங்களில் அமுலுக்கு வரப்போகும் ஐநா கடல் எல்லை தொடர்பான தீர்மானங்களில் இன்னும் பல க்டல்மைல்களும் தீவுகளும் எமக்கு சொந்தமாகப்போகின்றது)

இது தொடர்பான சில தகவல்களை தேடித்தெரிந்து ஒரு தெளிவான கருத்துக்கு வரலாமே.

இந்திய மீனவ்ர்கள் இலங்கையின் வளத்தை சுரண்டுகிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள்

இலங்கைக் கடற்பரப்பில் இழுவைப் படகுகளில் மீன்பிடிக்கின்ற இந்திய மீனவர்கள் கடல் வளங்களை அழித்துச் செல்லும் வகையிலான வலைகளையும், மீன்பிடி முறையையும் பயன்படுத்துவதனால் தமக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக இலங்கை மீனவர்கள் தொடர்ச்சியாக முறையிட்டு வந்துள்ளார்கள்.
http://www.bbc.co.uk/tamil/news/story/2010/11/101122_indolankafish.shtml

இந்திய மீனவர்கள் இரட்டை மடி என்று அழைக்கப்படும் மீன் வலையை பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை மீனவர்கள் முன்வைத்துள்ளனர்
http://www.bbc.co.uk/tamil/news/story/2010/08/100821_fishermantalks.shtml

இச்சுரண்டலுக்கு சுரண்டலை எதிர்ப்பதாக் கூறூ வினவு இணையத்தளம் கொண்டிருக்கும் காரணம் என்னவோ?

தொடர்புடைய ஏனைய லிங்குகள்
http://www.bbc.co.uk/tamil/search/?scope=tamil&q=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=26359

http://www.shakthienews.com/index.php?option=com_content&view=article&id=3434:2010-08-17-11-42-19&catid=42:archived-news&Itemid=159

http://www.yarl.com/forum3/index.php?showtopic=74918

http://article.wn.com/view/WNATc883bc8528d469d578bfff882a933ca7/


இலங்கை மீனவர்களின் கருத்தை பிரதிபலிக்கும் செய்திகள் விமர்சனங்களின் லிங்குகளை நண்பர்கள் தந்துதவலாம்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

"#tnfishermen" conspiracy


DMbreakingnews Daily Mirror
Mahabodhi attack ; a trap - Sri Lanka http://bit.ly/dEiHw3 #srilanka #lka

eksaar EKSaar
@thinkynt is SLN entering ur territorial waters and firing & killing ur fishermen n running away for fun? what d logic my dear..?

thinkynt Thinks Why Not
@eksaar ha ha... u mean all those fishermen who witness the shootings are stupid so that they cud not see who killed them...

eksaar EKSaar
@thinkynt i said PRO LTTE.. Seeman, vaiko, nedumaran and gangs... gt it?

eksaar EKSaar
@thinkynt No.. Pro LTTE elements killed them.. Or they may brainwashed him to suicide / suicided for some reason / internal clash...

thinkynt Thinks Why Not
@eksaar So u r saying those killed fishermen were just died (or may be just suicided). #tnfishermen

eksaar EKSaar
@ActorMadhavan plz dnt fall to traps of some political eliment. Do u thing a Navy with modern arms will kill sm1 hanging? Time to think


shameer1112004 Mohd Shameer
by ActorMadhavan
@ActorMadhavan @Actor_Siddharth Lend your hands for #tnfisherman.Your support could make a difference. http://bit.ly/ef7Lmu [pls RT this]


eksaar EKSaar
@thinkynt think in those view as your ID says.. THINK Y NOT!


eksaar EKSaar
@thinkynt No.. Pro LTTE elements killed them.. Or they may brainwashed him to suicide / suicided for some reason / internal clash...


thinkynt Thinks Why Not
@eksaar So u r saying those killed fishermen were just died (or may be just suicided). #tnfishermen

thinkynt Thinks Why Not
@eksaar so you are saying noone can talk of killings, if they do they must hv some hidden agenda or part of some group #tnfisherman



eksaar EKSaar
@TBCD @4SN @INDIRAJITH @ikingkafil neengal ilankayai nondikondirunthapothu, roofa notil iruntha tamil tholainthuponathe! :D

eksaar EKSaar
@TBCD @4SN @INDIRAJITH @ikingkafil whn u all dnt hav valid arguments to back up, u hv to say "sour grapes" n ignore! :D

4SN Senthil Nathan

eksaar EKSaar
@TBCD @4SN @INDIRAJITH @ikingkafil y u try hard guys! Jst tel ur Dr vijay! (tht dr award itself clear whr u all stays!)

eksaar EKSaar
@TBCD @4SN @INDIRAJITH @ikingkafil under UN mandate bring ur leaders 1st in front of court! V knw wht happenin in ayodya, kashmir, oriza..


4SN Senthil Nathan
நண்பர்களே தூங்க செல்கிறேன். #tnfisherman நாளையும் தொடரும். நன்றி.

4SN Senthil Nathan
@INDIRAJITH sorry. that was by mistake ur name came next to that guy. Sorry. maapu. @ikingkafil

INDIRAJITH இந்திரஜித்
@4SN @ikingkafil ஏங்க என்ன இக்னோர் பண்ண சொல்லலியே?

eksaar EKSaar
@TBCD @4SN @INDIRAJITH @ikingkafil jst google n see, in few years how territorial water agreements change! N its by UN.
eksaar EKSaar
@TBCD @4SN @INDIRAJITH @ikingkafil wht right u guys hv in our water? Y u come behind our fish if its nt spcl?

eksaar EKSaar
@TBCD @4SN @INDIRAJITH @ikingkafil same TN creatd terrorism in SL. N 2 reawake it u r trying 2 create a way to smugle arms frm TN

eksaar EKSaar
@ikingkafil dnt fabricate. Undr new UN agreement v get andaman islands undr our territory. U knw dat?



4SN Senthil Nathan
@eksaar Wht right u hv to kill a person who just touched ur water? ur fish is so costly? #tnfisherman @TBCD @INDIRAJITH @ikingkafil

4SN Senthil Nathan
@eksaar Pakistan, so called enemy of India, captures them, DOESNT torture them, returns them bk @TBCD @INDIRAJITH @ikingkafil

4SN Senthil Nathan
@eksaar correct. I agree. one q. if some1 doesnt follow basic ethic, u kill them? #tnfisherman @TBCD @INDIRAJITH @ikingkafil

eksaar EKSaar
@TBCD @4SN @INDIRAJITH @ikingkafil GUYS U better spend this time 2 educate ur fishermen.. Tel thm nt 2 steel our resources. BASIC ETHIC NA

thirumarant திரு
by INDIRAJITH
நாளை காலை #tnfisherman trending topic கில் வரும் என்ற நம்பிக்கையில் உறங்கச் செல்கிறேன் Good night

eksaar EKSaar
Dear SL Navy, y TN Fishermen telling u killd thm by hangin? TN ppl may thing we are nt technologicaly advancd! @INDIRAJITH @ikingkafil

eksaar EKSaar
@INDIRAJITH y indian fishermen crossing territorial waters? TN fishermn employd in qatar arrestd by kSa for entering their area! @ikingkafil


4SN Senthil Nathan
Facebook பக்கத்தையும் உங்கள் டுவிட்டரிலும் facebook நிலையிலும் போடா வேண்டுகிறேன். #tnfisherman

TBCD டிபிசிடி
by INDIRAJITH
Please speak for #tnfisherman by RT ing this http://bit.ly/ef7Lmu - RT Pls

4SN Senthil Nathan
அந்த டுவிட் "top tweetaa" வரும். அதில் நமது கருத்து தெளிவாய் இருக்கும்.ஒன்றுபட்டால் தேசிய தொலைகாட்சி இதை கையில் எடுக்கும் #tnfisherman

4SN Senthil Nathan
எல்லா அரட்டைகளிலும் #tnfisherman பட்டி போடவேண்டும். ஏதாவது ஒரு டுவிட்டை நாம் அனைவரும் RT செய்ய வேண்டும்

4SN Senthil Nathan
நிறைய பேர் தூங்க போய்விட்டார்கள் என்று நினைக்கிறேன். இதை கண்டிப்பாய் நாம் நாளையும் தொடர வேண்டும். #tnfisherman

oliyudayon Prasanna Rajan
by INDIRAJITH
Indian national media always have a blind eye towards #tnfihserman. So as this time...

TBCD டிபிசிடி
by INDIRAJITH
rate at which we are tweeting is not helping. am going to RT all the related tweets. My Followers please bear with me for #TNfisherman

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

சினிமா விமர்சன பதிவு எழுதுவது எப்படி?

நண்பர்களே.. சினிமா விமர்சன பதிவுகளை எழுதும் உங்களிடம் இருந்து அது தொடர்பாக கற்றுக்கொள்ள விரும்புகிறேன். ஒரு மாணவனாக நான் என் சந்தேகங்களை உங்களுக்கு சமர்ப்பித்தால் உங்கள் பதில்கள் மூலம் நான் பல விடயங்களை தெரிந்துகொள்ளலாமல்லவா?

1. படத்தை தெரிவுசெய்தல் - எந்தப்படத்தை விமர்சனம் செய்தல் என்பதில் ஒரு அளவுகோல் இருக்கொம்போல் தெரிகிறது. அவ்வளவுகேலில் தாக்கம் செலுத்தும் காரணிகள் யாவை? (இலவச டிக்கட் தவிர)

2. தொழிநுட்ப விடயங்கள் - நிறைய பதிவுகளில் ஒளிப்பதிவு கலை என பல தொழிநுட்ப விடயங்கள் பற்றி பேசுவதை கவனித்திருக்கிறேன். இவற்றையெல்லாம் எங்கு கற்றுக்கொள்ளலாம்? / கற்றுக்கொள்கிறீர்கள்?

3. திரைக்கதை - திரைக்கதைய எவ்வளவு தூரம் சொல்லலாம்? சில பதிவுகளில் முழுத்திரைக்கதையையும் எழுதிவிட்டு கடைசியில் சில வரிகளை மாத்த்திர அழித்துவிடுவது போல் தோன்றுகிறது. (அவ்விடத்தில் மிகுதியை திரையில் காண்க என்று எழுதவேண்டும்!)அவ்வாறெனில் எத்தனை வரிகளை அழிக்கவேண்டும்? அல்லது இன்ன பிற உபாயங்கள் உண்டா?

4. நடிகர்களின் / துணை நடிகர்கள் - ஹீரோக்களின் பெயர்களை தெரிந்துகொள்வது ஓரளவு இலகுவானதொன்றென்றாலும், நடைகையின் பெயரை, துணை நடிகையின் பெயரை, அவர்களின் நடித்த பிற திரைப்படங்கள் (வேற்று மொழியானபோதிலும்) அதில் அவர்கள் காட்டிய திறமைகள் பற்றி எங்கு தெரிந்துகொள்வது?

5. மேதமை - நான் சினிமாத்துறையில் கரைகண்டவன் என்று சொல்லாமல் சொல்லும் மேதமையைக்காட்டும் விடயங்களை எவ்வாறு உள்நுழைப்பது? அப்படியானால் "நீர் ஏன் இயக்குனரோ ஒளிப்பதிவாளராகவோ ஆகவில்லை? என்ற கேளிவி எழும்பாமல் எவ்வாறு தவிர்ந்துகொள்வது?

6 பாடல்கள் - உலகத்தரம், அந்த இசை இந்த இசை என்றெல்லாம் பேசுகிறார்கள். இதை எப்படி தெரிந்துகொள்வது?

7. சொல்லாடல் - சில நுணுக்கமான சொற்களை பதில் அங்கும் இங்கும் தெளிக்கவேண்டும். சில இசம்கள் பற்றியும் பேசவேண்டும். முதலில் இசம்களை எங்கு கற்றுக்கொள்ளலாம்? அவ்விசம்களின் பண்புகள் என்ன?

8. படம் பற்றிய வரலாறு - தொழில் குடும்ப வாழ்கை என்பவற்றைய்ம் தாண்டி படம் பற்றிய வரலாறு (பூஜை போட்ட நாள், அது தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இன்ன பல) பற்றி தெரிந்துகொள்ள எப்படி நேரம் கிடைக்கச்செய்தல்? அவ்வாறான நிகழ்வுகளை எவ்வாறு குறிப்பெடுத்துக்கோள்ளல்? MS Access இல் ஏதாவது புறோகிறாம் செய்யவேண்டுமா?

9. ஆலோசனை வழங்கல் - நடிகர்களுக்கு தொழிநுட்பவியலாளர்களுக்கு தயாரிப்பு நிறுவனத்திற்கு எந்தெந்தவிடயங்களில் எவ்வாறு ஆலோசனை வழங்கவேண்டும்?

10. எல்லாருக்கும் பிடித்த ஒன்று தனக்கு மட்டும் பிடிக்கவில்லை என்று சொல்லுதல்

11. நடிகையைப்பற்றி முப்பரிமாண வர்ணனைகளும், அதன்பின் அதில் எதுவும் தன்னைக்கவரவில்லை, அல்லது அதில் அக்கறை இல்லை எனக்காட்டுதல்

12. இதே கதையம்சத்தை கொண்ட ஒரு சரவதேச திரைப்படத்தை எப்படி தேடிப்பிடிப்பது? அப்படி தேடிப்பிடித்தாலும் வேற்றுமொழியில் இருந்த அத்திரைப்படம் தனக்கு எல்லாம் விழங்கியது போல் எப்படி காட்டுவது?

13. பஞ்ச் - படம் பற்றி விமர்சன முடிவில் ஒற்றை வரியில் ஒரு பஞ்ச் சொல்லுதல்

இந்த கேள்விகளுக்கு எனது நீண்ட நாள் தேடுதலே காரணம். மாறாக இன்று யாரேனும் எழுதிய திரை விமர்சனத்தை இதற்கு முடிச்சுப்போடவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் பதில்களை ஆர்வமுடன் எதிர்பார்க்கும்

எக்சார்

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

ஆடுகளம் - வெள்ளாவி வெச்சு தான் வெளுத்தாய்ங்களா ..


கடந்த வியாழன் இரவு (13) மீண்டும் மன்மதன் அம்பு படம் பார்க்க சென்ற எனக்கு பார்க்க நேர்ந்தது ஆடுகளம்.

Aadukalam Film review
Aadukalam (Tamil: ஆடுகளம்; English: Playground) is a 2011 Indian Tamil film directed by Vetrimaran, that stars Dhanush and Taapsee Pannu in lead roles. The film released on 14 January 2011 to positive reviews.

the film could be based upon a true story which occurred in Madurai in the 1970s. Story connected to incidents related to Rooster fight, But its really interesting

Really a good movie to watch with a nice song "வெள்ளாவி வெச்சு தான்". If anyone having a good translation of it please post it in comments.

படத்தின் பாடல்களை முன்னர் கேட்டிருக்காததாலும், படம் பற்றிய எந்த தகவல்களை அறிந்திராததாலும், படத்தின் போஸ்டரையும் பெயரையும் கொண்டே ஒரு கணிப்பை செய்யவேண்டியிருந்தது. போஸ்டர் ஏதோ வட்டாரக்கதை என்றும் போதியளவு கவர்ச்சி இல்லாமல் இருந்ததாலும் ரிஸ்க் எடுக்கவேண்டியிருந்தது.

ஆனால்,

படம் என் எதிர்பார்ப்புக்கு மாறாக மிகச்சிறப்பாக இருந்தது. விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லை. முக்கியமாக இடைவேளைக்கு முன்னரான சாவல்சண்டை (சேவல்சண்டை) காட்சியில் மொத்த பார்வையாளர்களும் லயித்துப்போனது இயக்குனரின் திறமைக்கு சான்று பகர்ந்தது.

ஐரீன் பாத்திரம் மிக அழகான பொருத்தமான் தேர்வு. இலங்கைப்பெண்களை ஞாபகப்படுத்தும் ஐரீனின் உடையமைப்பு, I miss Sri Lanka. உரிக்காத அழகு. இலைமறை காயாக கவர்ச்சி. இதற்கும்மேலாக "அட வெள்ளாவி வெச்சு தான் வெளுத்தாய்ங்களா... உன்னைவெயிலுக்கு காட்டாம வளத்தாய்ங்களா... " இன்னும் மனசுக்குள் நிற்கும் வரிகள். அதுவரை ஞாபகத்தில் இருந்த கத்திகளின் சகவாசத்தை மறக்க வைத்தது. தாப்சேயை விட ஐரீன் பாத்திரத்துக்கு சிறந்த தேர்வு இருந்திருக்க முடியாது.

ரத்த சரித்திரத்திற்கும் ஆடுகளத்திற்கும் இடையிலான ஒற்றுமை இரண்டிலும் நல்லவன் எப்படி கெட்டவனாகின்றான் என்பது யதார்த்தமாக காட்டப்பட்டிருக்கிறது. ஆயினும் படம் வெண்ணிலா கபடிக்குழுவை ஓரளவுக்கு ஒத்தது.

படத்தின் முடிவில் பணத்தை விட்டுவிட்டு ஓடுவதுதான் எனக்கு புரியவில்லை. வெண்ணிலா கபடிக்குழுவிலும் நாயகனின் திடீர் மரணம் போல்!

படத்தில் சாவல் சண்டைக்காட்சிகள் கிரபிக்ஸ் என்று சொல்லப்பட்டாலும் நிஜ காட்சிகள் மிருக வதை போன்ற குற்றச்சாட்டுகளை தவிர்க்க கிராபிக்ஸ்போல தோன்றச்செய்யப்படிருக்கின்றன என நினைக்கிறேன்.

பொங்கலுக்கு இப்படம் வெளியிடப்பட்டது மிகுந்த ஆச்சரியமிக்க முடிவு. பொழுதுபோக்கு படங்கள் மாத்திரம் வெற்றிபெறக்கூடிய காலப்பகுதியில் ஒரு நல்லபடம் போட்டி போட வந்திருப்பது படத்தின் வெற்றியை பாதிக்குமோ என்ற கவலை இருக்கிறது. ஆயினும் குப்பைகளை வெற்றிபெறவைத்த சன் டீவியின் விளம்பரம் கட்டாயம் இப்படத்தின் வெற்றிக்கு பங்களிப்புச்செலுத்தவேண்டும். அப்போதுதான் இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ள தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் நடிகர்களும் முன்வருவார்கள்.

** இந்தப்பதிவு முதல் தமிழ் வாசிக்கத்தெரியாத எனது நண்பர்களுக்காக பதிவின் சாராம்சம் ஆங்கிலத்தில் தரப்படும் என்பதை அறியத்தருகிறேன்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

ரத்த சரித்திரம்


இன்று மன்மதன் அம்பு பார்ப்பதற்காக ஒரு திரையரங்கிற்கு சென்றால் அங்கு அதை தூக்கிவிட்டு ரத்த சரித்திரம் போட்டிருந்தார்கள். படம் ரொம்பவே வன்முறை என்று ஒரு பதிவில் வாசித்ததால் கொஞ்சம் பயமாக இருந்தது. இருந்தாலும் இவ்வளவு தூரம் வந்த பிறகு திரும்பிச்செல்வதா என்று ரத்த சரித்திரம் பார்க்க முடிவுசெய்தேன்.

திரையரங்கில் 10க்கும் குறைவான கூட்டம். அருகில் இருந்தவர் மட்டக்களப்பு என்று அறிமுகப்படுத்திக்கொண்டார்.
The film opened to mostly positive reviews from critics, garnering particular praise for Ram Gopal Varma's direction and powerful performances from the ensemble cast. On the review-aggregation website ReviewGang, the film scored 5.0/10 based on 6 reviews.[3] Taran Adarsh of Bollywood Hungama claimed that Varma "handled a number of sequences brilliantly", drawing comparison with the filmmaker's previous successful ventures including Satya and Sarkar.


இனி படம்..

இலங்கையில் ஐபா என்றவுடன் கூடவே ரத்த சரித்திரமும் பேசப்பட்டது. நானும் ஒரு ஹிந்தி படத்தில் சூர்யா கௌரவ வேடம் என்றுதான் நினைத்திருந்தேன்.

ஆனால் படம் சூர்யாவினதும் படம் என்று நிச்சயம் சொல்லலாம். படங்களில் ஒருவரை மகானாகவும் மற்றவரை அரக்கனாகவும் காட்டும் போக்கிற்கு மாறாக யதார்த்தமாக இருக்கிறது. நிஜக்கதை வேறு என்று டைட்டில் போடுகிறார்கள்.

படம்பார்க்கும்போது நாயகன் படத்திற்கும் இதற்கும் ஒரு நெருங்கிய கதையோட்டம் இருப்பது தெளிவு. ஆனால் படம் தொடர்ந்தும் ஆர்வத்தை தூண்டுவதாகவும் அழகாகவும் இருக்கிறது. நிறைய காட்சிகள் ஸ்லோமோசனில் இருந்தாலும் அதன் அவசியம் நிச்சயமாய் உணரப்படுகிறது. நடிகர்களின் பொடி லாங்குவேஜ் பிரமாதம். பின்னணி இசையும் படத்திற்கு நன்கு பொருந்தியிருக்கிறது.

கதை?

கத்திகளின் சகவாசம்,
நித்திரையை பலி கேட்கும்...
கத்திகளின் சகவாசம்,
சத்தியமாய் எமனாகும்...
மீளாத நெடுஞ்சேற்றில் கால் வைப்பதா..
சருகாக உயிர் போவதா...




கல்யாணம் பண்ணிக்கலாமா என்று கேட்பதிலிருந்து பிரியாமணி ரொம்பவே அழகாக இருக்கிறார். ஆனால் அவர் கொல் கொல் என்று சொல்வது அவரது முகத்திற்கு பொருந்தவேயில்லை. ஒருவேளை அழகான பெண்களை அதிகமாக நம்புகிறேனோ? எதற்கும் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். நந்தினியாகவரும் ராதிகா ஒரு சாதாரண பெண்ணாக அழகாக வருகிறார்.

ஒளிப்பதிவு நிச்சயமாய் ஒரு வித்தியாசம் தெரிகிறது. ஏதேதோ செய்திருக்கிறார்கள். எல்லாம் கதைக்கு தேவை என்று தெரிகிறது.

படம் முடிந்தபின், யாராவது நிறுத்தாதவரை வன்முறைக்கு ஓய்வில்லை என்பது உறைக்கிறது. இன்னும் கொஞ்ச தூரம் வந்துவிட்டால் அதன்பிறது எதுவும் நமது கையில் இல்லை என்பதும். நான் இந்த படம் பார்க்கவும் அதுதானே காரணம்!

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

அறிவித்தல்

2011 இன் முதல் பதிவு ஒரு அறிவித்தலாக வரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.

பதிவின் கருப்பொருளுக்கு சம்பந்தம் இல்லாத பின்னூட்டங்கள் பதிவுலகில் வழமை என்றாலும், வேறொருவர் மீதான தனிப்பட்ட தாக்குதல்களுக்கு எனது வலைப்பதிவை அண்மைக்காலமாக சிலர் பாவிக்கத்தொடங்கியிருப்பதனால் இன்று முதல் பின்னூட்டங்கள் எனது அனுமதியின் பின்னரே பிரசுரிக்கப்படும் என்பதை அறியத்தருகிறேன்.

எனது கடைப்பதிவான ரத்த சரித்திரத்திற்கு தேவையற்ற பின்னூட்டங்கள் வந்திருந்தன. ஏதாவது ஒன்றை சொல்ல ஆயிரம் வழி இருக்கும் இக்காலத்தில் என்னை ஒரு கருவியாக்குவதை அனுமதிக்கப்போவதில்லை.

இதில் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்புக்கோருகிறேன்.

இன்னும் எனது வலைப்பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கு நான் எக்காரணம் கொண்டும் பொறுப்பாளியாகமாட்டேன் என்றும் இவை என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை பிரதிபலிக்காது என்பதையும் ஞாபகமூட்டுகிறேன்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்