Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

மகாவம்ச பௌத்தமும், இராமாயண ஹிந்துத்துவாவும்

டிபிஎஸ் ஜெயராஜின் வலைப்பதிவில் நேற்று The Mahavamsa mindset: Re-Visiting political Buddhism in Sri Lanka என்ற தலைப்புல் தேவானந்தா என்பவர் எழுதிய கட்டுரையை வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது.

அதைப்பற்றி கூறுமுன் அதே பக்கத்தில் காணப்படும்
"Just as Jazz demands a different way of playing and listening, blogging requires a different mode of writing and reading." - Andrew Sullivan

என்பதை கட்டாயம் கவனிக்கவும்.

மகாவம்ச பௌத்தம் பற்றிய இக்கட்டுரையின் பல விடயங்களுடன் நான் ஒத்துப்போகிறேன்.

ஆயினும்,
மகாவம்ச பௌத்தத்திற்கு சற்றும் சளைக்காத இராமாயண ஹிந்துதுவம் பற்றியும் ஞாபகத்தில் கொள்ளுதல் அவசியம். (கற்பனைக்கெட்டாதவைகள் இராமாயணத்தில் அதிகம்)

இலங்கையில் மகாவம்சம் இருக்கும் நிலையை காட்டிலும் மிக மோசமாக நீதிமன்றத்தில் ஆதாரமாக கொள்ளப்படும் நிலையில் இந்தியாவில் இராமாயணம் இருக்கிறது.


இராமர் பாலம் கட்டப்பட்டபோது எடுத்த வண்ணப்படம். அணில் அப்போது வேலையில் பிஸியாக இருந்ததால் படத்தில் இல்லை.

இதே இராமாயணம் இலங்கையிலும் சில கழகங்களாலும் இயக்கங்களாலும் ஹிந்துக்களின் மனதில் விதைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அவர்களின் ஊடக நண்பர்கள் மிக நாசூக்காக இலக்கியம் என்ற பெயரில் இராமாயண புனைவுகளை திணித்துக்கொண்டே இருக்கிறார்கள். எதையாவது பேசவேண்டிய அவசியத்தில் இருக்கும் வானொலி தொலைக்காட்சி chat showகளில் இவை அடிக்கடி இடம்பிடிப்பதை பார்க்கிறோம்.

யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டபோதும் இதே இராமாயண புனைவுகள் தமிழ் ஹிந்துக்களை மௌனிகளாக்கியிருக்கும். இல்லாவிட்டால் 83 கலவரத்தை பேசும் அதே வாய்கள் அதை விட தெளிவான இனச்சுத்திகரிப்பான** யாழ் முஸ்லிம்கள் விரட்டப்பட்ட நிகழ்வை பற்றி இன்று வரைக்கும் பேசுவதை தவிர்க்குமா?

** 83 இல் தமிழர்கள் பாரியளவில் சிங்களவர்களால் காப்பாற்றப்பட்டதுபோல் ஓரிரு நிகழ்வுகளாவது யாழ் முஸ்லிம்களின் வெளியேற்றத்தில் இடம்பெறவில்லை என்பதை கருத்தில்கொண்டு.

இன்னும் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்குடன் இலங்கை அரசு இராமாயண நிகழ்வுகளை உண்மை என்று சொல்லி அதிக இந்திய சுற்றுலாப்பயணிகளை கவரும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதையும் அண்மைக்காலத்தில் கவனிக்ககூடியதாக இருக்கிறது. இது எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்ப்பதாகவே அமையும்.

முதலில் வரலாற்று தமிழ் சிங்கள பாடநூல்களிலிருந்து தெளிவான புனைவுகள் அகற்றப்படவேண்டும்.


இன்னும் ஒரு நூறுவருடத்தில் இலங்கை தமிழ் பதிவர்கள் பற்றிய வரலாறு தேடப்படுமானல் ஒட்டுமொத்த பதிவர்களின் ஆதரவோடு சகல இலங்கை தமிழ் பதிவர்களின் கலந்துகொள்ளலோடு (கிழக்கிலிருந்து எழில்வேந்தன், முஸ்லிம்கள் சார்பாக நஸ்ருதீன், சிறுவர்கள் சார்பாக அவர் மகன், பெண்கள் சார்பாக 5 பெண்கள்.. என யாரேனும் ஒரு வரலாற்றாசிரியர் நிறுவக்கூடும் :D

வரலாறு முக்கியமல்லவா? :D

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

2010

2010 ஆம் ஆண்டு எம்மிடம் இருந்து விடைபெறப்போகிறது. ஞாபகத்தில் இருக்கும் இலங்கையரின் பதிவுகளில் சிறந்த பதிவு என்று யோசித்ததில் தான் எனக்கு உடன் ஞாபகம் வந்தது ககூனமடாட்டா . விடயதானத்தையும் அதை அழகாக ரசிக்கும்படி சொன்னதிலும் அதுதான் இவ்வாண்டின் சிறந்த பதிவு என்று நான் கருதுகிறேன்.

Christmas[3] or Christmas Day[4][5] is a holiday observed generally on December 25[6] to commemorate the birth of Jesus, the central figure of Christianity.[7][8] The date is not known to be the actual birthday of Jesus, and may have initially been chosen to correspond with either the day exactly nine months after some early Christians believed Jesus had been conceived,[9] the date of the Roman winter solstice,[10] or one of various ancient winter festivals.[9][11] Christmas is central to the Christmas and holiday season, and in Christianity marks the beginning of the larger season of Christmastide, which lasts twelve days

ஒரு சந்தேகம், புல்லட் ககூனமடாட்டா என்றுதான் பதிவுலகிலிருந்து விலகியிருக்கிறாரோ தெரியவில்லை. எதையாவது சொல்லப்போக நாற்பதுபேர் நாலுபக்கத்தால் இருந்து கடித்துக்குதற பாய்வது எனக்கு பழகியிருந்தாலும் அவர் வீண் வம்பு என்று விலகியிருக்கிறாரா? அவர் இன்னும் எழுதவேண்டும் என்பதே என் அவா.

அதற்கடுத்தபதிவு என்று யோசித்ததில் இலங்கை தமிழ் பதிவர்கள் என்று சொல்பவர்களின் வழமையான பாணிக்கும் கருப்பொருளுக்கும் மாற்றமாக வித்தியாசமான விடயத்தை பேசிய எம்.எச்.எம். அஷ்ரப்: கைவிடப்பட்ட சமூகத்தை முன்னிறுத்திய தலைவன்.
க்கு எனது பாராட்டுக்கள்.

இவரைப்போல் வேற்யாராவது பேசியிருந்தால் எனக்கு link தரவும். தவற விட்டிருந்தால் வாசிப்பேன்.

இப்பொழுதெல்லாம் கணணிக்கு முன் அதிக நேரம் செலவிடுவதில்லை. ஏதாவது ஒரு இடத்தில் காத்திருக்கும்போது அல்லது தூக்கத்திற்காக காத்திருக்கும் தருணங்களில் மொபைலினூடாக நிறைய வாசிக்கிறேன். அது வசதியாக இருக்கிறது. ஆயினும் தமிழில் வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. தமிழிற்கு kb அதிகம் செலவாகிறது என்பதால். என் பார்வையில் இலங்கைப்பதிவர்களின் ஆங்கிலப்பதிவுகளில் அதிக விடயப்பரப்பும் பரந்துபட்ட பார்வையும் கிடைக்கிறது.

வாசிப்பதற்கு ஆங்கில பதிவுகள் கிடைக்காத தருணங்களில் இப்போதெல்லாம் விரும்பி வாசிப்பது wikipedia. நிறைய விடயங்களை தெரிந்துகொள்ள முடிகிறது.

அப்படி வாசித்ததில் இரண்டு விடயங்கள்

Sri Lankan Moors
என்ற தலைப்பிலான கட்டுரையில் இலங்கை முஸ்லிம்கள் வணக்கம் என்பதை தவிர்ந்துகொள்வது பற்றியும் இருக்கிறது. என்னுடைய வணக்கம் பற்றிய பதிவுக்கு இதையும் ஆதாரமாக சேர்க்கிறேன். அதேபோல் என்னை வரவேற்கும்போது / வாழ்த்தும்போது அது எனக்கு பிடித்த விதத்தில் இருக்க வேண்டாமா என்று ஒரு கேள்வியையும் முன்வைக்கிறேன்.

Christmas பற்றி தேடியபோது பைபிளில் இதனை கொண்டாடுவதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் அவர் பிறந்த தேதி தொடர்பான மாற்றுக்கருத்துக்கள் பற்றியும் இக்கொண்டாட்டம் இங்கிலாந்தில் ஒரு காலத்தில் கிறிஸ்த்தவர்களாலேயே தடைசெய்யப்பட்டிருந்தது பற்றியும் இருந்தது. இது பேகன் இனத்த்வரின் பழக்கமாம். பரி பவுல் கூட இவ்வினத்தை சேர்ந்தவர் என்றும் கிறிஸ்த்துவத்தின் எதிரியாக இருந்தவர் என்றும் குறிப்புகள் கிடைத்தன.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

3வது பதிவர் சந்திப்பு

இலங்கை தமிழ் பதிவர் சந்திப்பு என்று அழைக்கப்படும் கொழும்பு பதிவர் சந்திப்பின் 3ஆம் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இம்முறையும் நிகழ்வு கைலாசபதி கேட்போர் கூடம், தேசிய கலை இலக்கியப் பேரவை
571/15, காலி வீதி, வெள்ளவத்தை. என்ற முகவரியில் இடம்பெறும்.

Refresh Colombo

Refresh Colombo is a community of web and technology enthusiasts/professionals who come together on a monthly basis to share ideas and meet like minded individuals.

Refresh Colombo events are open to the public. We encourage you to bring a friend or two. Hackers, bloggers, coders, geeks & geek lovers, journalists, techies, entrepreneurs and venture capitalists are all welcome – you can even bring your grandma.


பதிவர் சந்திப்புகளுக்கு நான் தொடர்ந்தும் விமர்சன ஆதரவாளராகவே இருந்து வந்திருக்கிறேன். அதே பாணியை இதிலும் கடைப்பிடிக்க இருக்கிறேன்.

முதலாவது சந்திப்புக்கு பதிவர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. திருகோணமலை, கல்முனை என தூரப்பிரதேசங்களிலிருந்தெல்லாம் பதிவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

ஆயினும் இச்சந்திப்பினூடாக கொழும்பை மையப்படுத்திய ஒரு பதிவர் குழு உருவானது. அதிகாரம் போட்டியின்றி தேர்தலின்றி ஒரு குழுவுக்கு சென்றிருக்கிறது.

இக்குழுவுக்கு பன்முக விம்பம் கொடுக்க சில மூத்தவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எந்த வகையில் இச்சந்திப்புக்கு அழைக்கப்படுகிறார்கள் என்பதையும் ஏற்பாட்டுக்குழு தெரிவித்தால் நன்று.

அதோடு நடந்த சந்திப்புகளின் நிகழ்ச்சி நிரலில் எத்தனை வீதம் வெற்றிகரமாக நடைபெற்றிருக்கிறது என்று சுய விமர்சனமும் அவசியம். இல்லாவிட்டால் இதற்கும் வெள்ளவத்தை கடற்கரையிலோ காலிமுகத்திடலிலோ நடந்த / நடக்கும் சந்திப்புகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போகும் ஆபத்தும் இருக்கிறது.

இனிமேல் தொடர்ந்து கொழும்பில் சந்திப்பதை தவிர்ப்பதும் அவசியம். ஒரு குழு தனது வசதியை மையப்படுத்தி கொழும்பில் நடாத்திக்கொண்டிருக்க தூரப்பிரதேசங்களுக்கும் சம வாய்ப்பு தருவது அவசியம். தற்போதைய அதிகார மையத்திற்கு அடுத்த தெரிவு யாழ்ப்பாணமாகவே இருக்கும். அங்கும் இதே குழுவின் வசதியே முன்னிலைப்படுத்தப்படும். இலங்கையின் மத்தியில் உள்ள கண்டிக்கோ, தமிழ் மொழிபேசுவோர் செறிந்து வாழ்கின்ற மட்டக்களப்புக்கோ அடுத்த வாய்ப்பு கொடுக்கப்பட்டே ஆகவேண்டும்.

பதிவர் சந்திப்பு இலங்கையில் சகல மொழிகளிலும் முதலாக நடைபெற்றது தமிழ் பதிவர்களினுடையதாக இருக்கலாம். (பிழையாயின் திருத்தவும்). ஆனால் இதே பாணியிலான பல சந்திப்புகள் அதன்பின் நடைபெற்றுள்ளன. அவற்றின் வெற்றிகரமான அம்சங்கள் கட்டாயம் உள்வாங்கப்பட வேண்டும்.

இம்முறை சந்திப்பிலாவது காத்திரமான சுய விமர்சனம் இடம்பெறுமா? ஏற்பாட்டுக்குழுதான் செயலில் பதிலளிக்கவேண்டும்.

கேள்வி : சந்திப்புகளை ஒழுங்குபடுத்தும் குழு வெளிநாட்டு பதிவர்களை சந்திப்பதில் சகல சக பதிவர்களுக்கும் வாய்ப்பு சமமாக கொடுக்கவேண்டும். காத்திரமான கருத்துக்களை கொண்ட அகிலன் வெறுமனே இவ்வதிகார குழுவை மாத்திரம் சந்திருந்தார் என்பது ஒரு சிறந்த உதாரணம்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்