Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

பொன்சேக்கா கைது - நடந்தது என்ன? பகுதி 2

பொன்சேக்கா கைது - நடந்தது என்ன? பகுதி 1


"என்னைத்தொட வேண்டாம்" என் பொன்சேகா எச்சரித்தார். ஆயினும் 59வயதான இராணுவத்தளபதியின் கைகளையும் காலையும் பிடித்து தூக்கி வேனில் அடைததனர். அத்துடன் அவரின் தனிப்பட்ட செயலாளரான சில்வாவும் கைவிலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்டார். வாகனம் இராணுவ தொடரணியின் பாதுகாப்புடன் அங்கிருந்து அகன்றது. அதேசமயம் இவ்வலுவலகத்தின் ஒவ்வொரு அறையையும் இராணுவ பொலிஸ் சோதனையிட்டது.

ஏறத்தாள 45 நிமிடம் 4 அரசியல் வாதிகளும் அடைக்கப்பட்டிருந்தனர். நுழைவாயிலையும் பூட்டிவிட்டே சென்றிருந்தனர். அரசையல்வாதிகள் தத்தமது கைத்தொலைபேசியூடாக ஊடகங்களுக்கு செய்தியை அறிவித்தனர். ஊடகவியலாளர்கள் வந்தபோது அலங்கோலமான நிலையில் கைகலப்பு நடந்த இடம்போல இருந்த அறையை கண்டனர். சில ஜன்னல் கண்ணாடிகள் சேதமுற்றும் ஒரு இராணுவ அதிகாரியின் name-tag கழன்று கீழே விழுந்து கிடப்பதையும் கண்டனர். அங்கிருந்த படைவீரர்கள் ஊடகவியலாளர்களை தடுத்ததுடன், அவர்களின் கமரா மெமரி கார்ட்களையும் பறிமுதல் செய்தனர்.

இங்கு "ஒப்பரேசன் பொன்சேகா" நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அவர் வாடகைக்கு தன் மனைவியுடன் தங்கியிருந்த குயீன்ஸ் வீதியில் இருந்த வீட்டில் பொன்சேகாவுக்கு இராணுவத்தால் வழங்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியை CID யின்ர் தேடிக்கொண்டிருந்தனர். அதை கண்டுபிடித்த பின் பொன்சேக்காவின் மனைவி அனோமாவிடம் வாக்குமூலம் பெறப்பட்டபோது நடுநிசியாகியிருந்தது.

கைது பற்றிய தகவல் கிடைத்து அவ்விடத்துக்கு ரவி கருணாநாயகவுடன் வந்த மங்கள் சமரவீர "இடி அமீனின் விசாரணைக்கு வாக்குமூலம் வழங்குவதை நிறுத்துங்கள்" என கத்தினார். உடனடியா ஒரு உதவியாளர் ஒருவர் அவரை அவசரமாக அவ்விடத்தில் இருந்து கூட்டிச்சென்றார்.



ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் இச்சந்தர்ப்பத்தில் டெல்லியில் இருந்தார். கட்சியின் உபதலைவர் கரு ஜயசூரிய அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு தகவலை கூறினார். விக்கிரமசிங்க தனது பயணத்தை இடைநிறுத்தி கொழும்பு திரும்புவதாக கூறினார்.


(இது The Sunday Times இல் வெளிவந்த கட்டுரையின் சுருக்க தமிழ் வடிவம்)

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

பொன்சேக்கா கைது - நடந்தது என்ன?

கடந்த திங்கட்கிழமை Provost Marshal பிரிகேடியர் ஜகத் விஜேசிறி உடனான இராணுவ பொலிஸ்குழு நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள தனது தலைமையலுவலகத்தில் ஒத்திகையில் ஈடுபட்டது.

இரவு 9 மணிக்கு இக்குழு கொழும்பு கட்டளைத்தளத்தை சேர்ந்த மேஜர் ஜெனரல் சுமித் மானவடுகே தலைமையிலான 200 துருப்பினருடனும், குற்றப்புலனாய்வு அதிகாரிகளுடனும், கொழும்பு ரோயல் கொலேஜ்க்கு முன்னிருக்கும் ராஜகீய மாவத்தைக்கான பாதைகளை தடைசெய்தது.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் அலுவலகத்திற்கு இரண்டு சீனியர் இராணுவ அதிகாரிகளுடன் இராணுவ பொலிசாரும் சென்றனர்.

இவர்கள் இவ்வலுவலகத்தில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமினதும் தேசிய ஜனநாயக முன்னணியின் தலைவர் மனோகணேசனினதும் தனிப்பட்ட பாதுகாவலர்களாக இருக்கும் அமைச்சு பாதுகாப்பு பிரிவிநரை (MSD) கண்டனர்.

அவர்களில் (MSD) இருவர் மேல்மாடிக்கு வந்திருப்பவர்கள் பற்றிய செய்தியை அறிவிக்க மாடிப்படிகளில் ஏறியபோது நிறுத்தப்பட்டு அனைவரும் ஒரு மூலையில் நிறுத்தப்பட்டனர். இதன் மூலம் மேல்மாடியில் ஆயுததாரிக்ள் எவரும் இல்லாமல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அத்துடன் CCTV கமெராவை நிறுத்தி பதிவுசெய்யும் கருவியையும் (recording equipment) எடுத்துக்கொண்டனர்.

மேல்மாடியில் ஜேவிபியின் சேமவன்ச, சுனில் ஹந்துனெட்டி, ஹக்கீம், கணேசனுடன் ஜெனரல் பாரளுமனற தேர்தல் தொடர்பாக ஆராய்ந்துகொண்டிருந்தார்.

இராணுவ பொலீஸ் அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர்களையும் சோமவன்சவையும் அறையை விட்டகலுமாறு கூறியபோதும் அவர்கள் மறுத்துவிட்டனர்.



பொன்சேகா இராணுவதளபதியாக இருந்தபோது அப்போது கேணலாக இருந்த விஜேசிறியை இராணுவ வாகனத்தில் மாடொன்றை ஏற்றிச்சென்றதாக குற்றஞ்சாட்டி திருகோணமலை இடட்தங்கல் முகாமுக்கு மாற்றஞ்செய்திருந்தார். இவர் தனக்கு பதவியுயர்வு கிடைக்கவில்லை என்று நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து, பின் பதவியுயர்வு கிடத்ததும் வழக்கை வாபஸ் பெற்றிருந்தார். இஅவ்ர் இரு வாரங்களுக்கு முன்னரேயே மீண்டும் Provost Marshal ஆக நியமிக்கப்பட்டிருந்தார்.

மற்றும் மேஜர் ஜெனரல் மானவடுகே பொன்சேக்காவின் காலத்தில் தளபதியுடனான முரண்பாடு காரணமாக கட்டளைப்பிரிவிலிருந்து (யுத்த நடவடிக்கை தொடர்பான பிரிவு) பொதுப்பிரிவுக்கு (நிர்வாகப்பிரிவு) மாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

நான்கு அரசியல்வாதிகளும் பார்த்துக்கொண்டிருக்க; ஜெனரல் பொன்சேகா இரு இராணுவ அதிகாரிகளுடனும் "தான் சிவிலியன் என்பதால், பொலீஸ் தான் கைதுசெய்யவேண்டும்" என வாதாடினார். மேஜர் ஜெனரல் மானவடுகே பொலீஸ் (CID) கீழே காத்திருப்பதாகவும், தான் தனக்கு இடப்பட்டிருக்கும் கட்டளையையே நிறைவேற்றுவதாகவும் தயவுசெய்து வருமாறும் கூறினார். இதன் பின் பலத்த எழுதமுடியாத வார்த்தை பரிமாறல்கள் நடந்தது.

ஒரு அதிகாரி குற்றப்பத்திரிகையை வாசிக்கத்தொடங்கியிருந்தார். ஆனால் மேஜர் ஜெனரல் மானவடுகே "வாசிப்பதற்கு நேரமில்லை. அவரைப்பிடித்து தூக்கிச்செல்லுங்கள்" என்று இராணுவ பொலீஸ் அதிகாரிகளுக்கு கட்டளையிட்டதாக ஹக்கீம் சொல்கிறார்.

மிகுதி பகுதி 2 இல் தொடரும்
(இது The Sunday Times இல் வெளிவந்த கட்டுரையின் சுருக்க தமிழ் வடிவம்)

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

பாலத்திற்கு பின்னாலுள்ள பெயர்!


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த சனிக்கிழமை கிண்ணியாவில் இலன்கையின் மிக நீளமான பாலத்தை திறந்துவைத்தார்.

இதன் கட்டுமானட்துக்கான நிதி சவூதி அரசால் வழங்கப்பட்டிருந்தபோதும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல்வாதிகளால் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் 18 அடிக்கல்கள் நட்டபின்பே ஆரம்பிக்கப்பட்டிருந்தது! கடைசி அடிக்கல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் அவர் சந்திரிக்கா அரசில் பெருந்தெருக்கள் அமைச்சராக இருந்தபோது நடப்பட்டிருந்தது.

இப்பிரதேச அரசியல்வாதிகள் எல்லோரும் தங்கள் பெயரை இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க பாலத்திறப்பில் பதிந்துகொள்ள ஆர்வம் காட்டினார்கள்.
அழைப்பிதழில் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் TB ஏக்கநாயக்க பிரதியமைச்சர் WB ஏக்கநாயக்க மற்றும் அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற அட்மிரல் வசந்த கருணாகொட மட்டுமே இருந்தது.

தன்னுடைய பெயர் இல்லாதது பற்றி அமைச்சரவை அந்தஸ்த்து அற்ற அமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற அட்மிரல் வசந்த கருணாகொட விடம் தொலைபேசியில் கேட்டபோது அவர் இராணுவ பாணியில் "மேலிடத்து கட்டளை" என கூறியிருக்கிறார்.

அதன்பின் அவர் ஜனாதிபதி ஆலோசகர் பசில் ராஜபக்ஷவை தொடர்புகொள்ள பிரச்சினைக்கு தீர்வு கிட்டியுள்ளது.

ஜானதிபதியால் திரைநீக்கம் செய்யப்பட்டதாக 3 மொழியிலும் அமைந்த நினைவுப்படிகத்தில் நஜீப், அமைச்சர், பிரதியமைச்சர், செயலாளர், தேச நிர்மாண அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே ஆகியோருடன் பசில் ராஜபக்ஷவின் பெயரும் சேர்ந்துகொண்டது.


ஜனாதிபதி தமிழிலும் சிலவார்த்தைகள் உரையாற்றுவார் என்றும் கதை இருந்தது. இதனால் மஜீட் அரபியில் ஒரு உரையை எழுதித்தருமாறு பிரபல மௌலவியை கோரினார். இது வாசிக்கப்பட்டபோது பலருக்கு விழங்காத போதும் சவூதி அரேபிய தூதுவர் அப்துல் அஸீஸ் அப்துல் ரஹ்மான் ஜம்னாஸ் விழங்கிக்கொண்டார்.
தூதுவர் மர்ஹபா என்று உணர்ந்த்திருக்க கூடும்.
இருந்தபோதும் ரணில் விக்ரமசிங்க அரசில் அமைச்சராக இருந்தபோது இந்த சவூதி அரேபிய உதவியை கொணர்ந்த சிறீ லங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பற்றி ஒரு வார்த்தை கூட இருக்கவில்லை!

நன்றி the SundayTimes : Talk at the Cafe Spectator : Sunday October 25, 2009

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

உன்னைப்போல் ஒருவன் - GET LOST

இப்பதிவை வாசிப்பதற்குமுன் ஒரு வேண்டுகோள் : உங்களுக்கு முதற்கண் என் நன்றிகள். நீங்கள் ஒரு கமல் பக்தனாக இருந்தால் அந்த சட்டையை கழற்றிவிட்டு வருமாறு வேண்டுகிறேன்.

கமலின் இரண்டுபடங்களின் பெயரைக்கூறச்சொன்னால் எனக்கு ஞாபகம் வருவது நாயகன், அன்பே சிவம் ஆகியவையே. நாயகனில் நாலுபேருக்கு நன்மை செய்தால் எதுவுமே தப்பில்லை என்று கூறும் நாயகன் கடைசியில் எவ்வித குற்றமும் செய்யாத என்னை எதற்கு அநாதையாக்கினாய் என்ற கேள்விக்கு பலியாகிப்போகிறான். மற்றவன் வயிற்றுக்குள் உன் உணவு இல்லையப்பா என்று கூறும் அன்பே சிவம், அன்பை மட்டுமே போதிக்கின்றது என்பதில் யாருக்கும் கருத்துவேற்றுமை இல்லை.

என்னதான் நியாயம் இருந்தாலும் வன்முறையை கையிலெடுத்தவன் வன்முறைமூலமே சாவதை நியாயப்படுத்தியிருக்கும் படங்களான சுப்ரமணியபுரம், அஞ்சாதே போன்ற படங்கள் வெற்றிபெறுகின்ற; தேசபக்தி என்ற போர்வையில் மனிதர்களை சுட்டுத்தள்ளுகின்ற விஜயகாந்த், அர்ஜூன் போன்றவர்கள் காணாமல் போயிருக்கின்ற; சுருக்கமாக மக்கள் வன்முறையை நிராகரித்திருக்கிற காலப்ப்பகுதியில் சட்டத்தை உங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளுங்கள் என்று உபதேசிக்கின்ற படத்தை கமல் நமக்கு தருகிறார்.


இந்த உன்னைப்போல் ஒருவன்தான் இலங்கையின் திரையரங்குகளில் இருந்து நேற்றோடு தூக்கப்பட்டுள்ளது. பதிவுலகில் கிழி கிழியென்று கிழிக்கப்பட்ட கந்தசாமி இன்னும் ஓடிக்கொண்டிருக்க பதிவுலகால் ஆஹா ஓஹோ என்று தூக்கிப்பிடிக்கப்பட்ட உன்னைப்போல் ஒருவன் திரையரங்கை விட்டு ஓடியிருக்கிறது.

மொத்தமாக இரண்டுமணிநேரமே ஓடும் இந்த படத்தில் வானொலிகளில் ஒலிபரப்பான பிரபலமான பாடலகள் இல்லை என்றே சொல்லலாம். கதையோட்டத்திற்கு பாடல்கள் அவசியமில்லை என்று கமல் கருதியிருந்தால் சில பாடல்களை வெளியிட்டு படத்தில் பாடல்கள் இருப்பதாக மக்களை ஏமாற்றி திரையரங்குகளுக்கு வரச்செய்திருப்பது எந்த ஒரு terminology ஐ பாவித்து நியாயப்படுத்தினாலும் இலகு மொழிப்பிரயோகத்தில் ஏமாற்றுதல் என்றே சொல்லப்படமுடியும். அத்துடன் I AM NEW FACE OF TERROR என்று பலகுரல்கள் சொல்லுவதன்மூலம்; பலர் வன்முறையை கையிலெடுப்பதாக மக்களை நம்பசெய்ததும் ஏமாற்றுதலே.


படத்தில் கமல் கேட்பதுபோல் ஒரு கரப்பான்பூச்சி வீட்டுக்குள் வந்தால் உணவு கொடுத்து வளர்பீங்களா என்றகேள்விகளை அரசாங்கங்கள் கேட்கத்துவங்கினால் சிறை அலல்து திறந்த வெளிச்சிறை என்று அரசாங்கங்களுக்கு தலையிடி தரும் பிரச்சினை இருக்காதே.. இதையாவது ஏன் யாரும் எதிர்க்கவில்லை?

அதுமட்டுமா படம் முழுக்க வியாபித்திருக்கும் அபத்தங்கள் பற்றியும் பெரிதாக யாரும் பேசவில்லை.


  • குண்டுகள் இல்லாத பைகளை மக்கள் கூட்டம் மிக்க இடங்களில் கமல் வைக்கிறார். அதன் மூலம் சாதிக்க நினைப்பது என்ன?

  • உயரமான கட்டடத்தின் கமல் ஏறுகிறார். இலங்கையென்றால் எல்லா உயர்ந்த கட்டடங்களின் உச்சியிலும் நவீன கருவிகளுடன் இராணுவம் இருக்கும். ஆனால் பாகிஸ்த்தானுடனும் சீனாவுடன் சண்டையிட தயாராகும் இந்தியாவின் இராணுவம் இவ்வாறான பாதுகாப்பு ஓட்டைகள் மூலம் சிறுமைப்படுத்தப்பட்டுள்ளது.

  • அடிக்கடி ஒலிபரப்பாகும் பாங்கு ஒலியும், இன்ஷா அல்லாஹ் என்று சொல்வதும், கமலின் தாடியும், கமலின் பெயர் மறைக்கப்பட்டிருப்பதும் சொல்லவருவது என்ன?

  • படத்தில் 3 முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக காட்டப்பட்டிருக்கிறார்கள். ஒருவர் குஜாரத் கலவரங்களின் பின் வன்முறையை கையிலெடுப்பவர். இன்னொருவர் சொந்த மண்ணை இழந்து அதற்காக போராடும் ஜனநாயக ரீதியில் பலகட்சி அரசியல் முறையில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பலஸ்த்தீன இயக்கத்துடன் தொடர்புகளை பேணுவதாக காட்டப்படுகிறார். இவை இரண்டையும் படம் எவ்வாறு குற்றம்பிடிக்கிறது?

  • இன்னுமா கமலைப்பிடிக்கமுடியவில்லை என்று ஆத்திரப்படும் மோகன்லால் துப்பாக்கியையும் தூக்கிக்கொண்டு ஆவேசமாக செல்கின்றார். கமலின் கை குலுக்க..
இவ்வாறான இன்னும்பல அபத்தங்கள் படம் முழுக்க வியாபித்திருக்கின்றன.

இந்தப்படம் பற்றிய ஞானியின் கருத்தை வாசிக்க http://www.gnani.net/.

மொத்தத்தில் நரகாசுரன் அழிந்த நாளாக இந்துக்கள் கொண்டாடுகின்ற தீபாவளி பண்டிகையன்று நவீன நரகாசுரனான உன்னைபோல் ஒருவனும் தூக்கப்பட்டிருப்பது எமக்கு மகிழ்ச்சியே..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

மின்னல் - ஆலை இல்லா ஊருக்கு


400 நிகழ்ச்சிகளை தாண்டிவிட்டதாக பெருமிதப்படும் அரசியல் நிகழ்ச்சியான மின்னல், கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக மாறிக்கொண்டு செல்கிறது. எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்க கூடிய ஒரே ஒரு நிகழ்ச்சியாக இருந்தமையை மாத்திரம் தூணாக கொண்டு இதுவரை அந்நிகழ்ச்சி நடைபெற்றாலும் அந்நிகழ்ச்சி முன்னிறுத்திய மறைமுக அரசியல் காரணமாக அரசியல் வாதிகள் யாரும் கலந்து கொள்ளாமல் வெறும் ஏட்டு சுரைக்காய்களை மாத்திரம் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியாக மாறியிருக்கிறது. இதே காரணத்திற்காக இந்நிகழ்ச்சி மக்களிடம் இருந்தும் தூரமாகியிருக்கிறது. இனியாவது மக்களிடையே மின்ன பற்றிய கருத்து என்ன என்று சுயபரிசீலனை செய்யுமா மின்னல்?


மின்னல் - ஆலை இல்லா ஊருக்கு இலுப்பை பூ சக்கரை

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்