Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

Showing posts with label Islam. Show all posts
Showing posts with label Islam. Show all posts

ஒன்றில் நீங்கள் இஸ்லாத்தை ஏற்கவேண்டும் இல்லை என்றால் நான் கிறிஸ்த்த்வத்தை தழுவ வேண்டும் - சாகிர் நாயக்

என்னுடைய பிரமிக்கவைத்த மாற்று மதத்தவர்களின் கேள்விகள்
என்ற தலைப்பிலான பதிவில் சில கேள்விகள் பற்றி சிலாகித்து எழுதியிருந்தேன்.

Naik has held many debates and lectures around the world as well as in Mumbai, India. One of Naik's most cited debates took place in Chicago in April, 2000 featuring Dr. William Campbell of Pennsylvania, USA on the topic "The Qur'an and the Bible: In the Light of Science".[20] Following a lecture by Pope Benedict XVI in September 2006, Naik offered to engage in a live public debate with him, but the Pope has not responded to this invitation

அதற்கு வந்த பின்னூட்டத்தில்

Robin said...
//பைபிளில் இன்னொரு இறைதூதர் வருவார் என்பதற்கான ஆதாரங்களையும், அவர் பெயர் முஹம்மத் என்பதற்கான ஆதாரங்களையும் அள்ளி வழங்கினார்.// தெரிந்து கொள்ள ஆவல்.

என்று கேட்டிருந்தார்.

அந்த video இப்போதுதான் You tube இல் வெளியிடப்பட்டுள்ளது.

நண்பர் ரொபினுக்காகவும் இஸ்லாம் பற்றிய கேள்விகள் வைத்திருக்கும் பிற நண்பர்களுக்காகவும் அந்த வீடியோ இங்கு தரப்பட்டுள்ளது..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

பிரமிக்கவைத்த மாற்று மதத்தவர்களின் கேள்விகள்

பிரபல்யமிக்க பேச்சாளரான Dr. Zakir Naik அவர்களின் நிகழ்வொன்று நேற்று இலங்கையின் கொழும்பில் உள்ள சுகததாச வெளியரங்கில் இடம்பெற்றது.

Wiki Introduction
Zakir Abdul Karim Naik (Urdu: ذاکر عبدالکریم نائیک, Hindi: ज़ाकिर अब्दुल करीम नायक; born 18 October 1965) is a Muslim public speaker, and writer on the subject of Islam and other comparative religion. Naik is a medical doctor by profession, having attained a Bachelor of Medicine and Surgery (MBBS) from the University of Mumbai. [1][2]
Naik is the founder and president of the Islamic Research Foundation (IRF),[1][3] a non-profit organization which also owns and broadcasts the free-to-air global Peace TV channel from Mumbai.


இந்நிகழ்வுக்கு பல முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கு நேரடியாக அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டிருந்தன. ஊடகங்களினூடாக இலங்கைவாழ் சகலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

உலகின் பல மதங்களை பற்றி ஒப்பீடுகளில் (comparative religion) இவர் மிகப்பிரபலம் என்பதாலும் பார்வையாளர்களில் இருந்து நேரடியாக கேட்கப்படும் கேள்விகளுக்கு இவர் மேடையிலேயே பதிலளிப்பதாலும் நிகழ்வில் கலந்துகொண்டேன்.

மாற்றுமதத்தவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நிகழ்ச்சிகள் பல ஆண்டுகளுக்கு முன் தமிழ்மொழியில் பிஜே அவர்களால் இலங்கையின் பல பாகங்களிலும் நடைபெற்றிருந்தது. அந்நிகழ்வுகளை நிறுத்தும் முகமாக இலங்கையரசால் பிஜே அவர்கள் கைதுசெய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டிருந்தார்.

6.30க்கு நிகழ்வு ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்து. 6.30க்கு முன்னரேயே மைதானம் நிரம்பி வழிந்தது. பிந்தி வந்த பலரை அனுமதிக்க முடியாத நிலமை ஏற்பட்டது. 25,000 பார்வையாளர்கள் கலந்துகொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன்.

மைதானத்தின் பிரதான பார்வையாளர் மண்டபத்தை நோக்கியதாக அரங்கு அமைந்திருந்தது. ஏனையவர்கள் பார்ப்பதற்காக பெரிய திரைகள் மைதானத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்தன. பிரமிப்பூட்டும் மேடையமைப்பு, professional ஆன Videography என பல எதிர்பார்க்காத விஷயங்கள் இருந்தன.

நிகழ்வு 7.30க்கு சற்று பின் ஆரம்பித்தது ஒரு கவலைக்குரியது. (Dr. Zakir Naik அவர்கள் சிங்கப்பூரில் இருந்து அன்று பிற்பகலே வர இருந்தார் என கேள்விப்பட்டேன். அது காரணமாக இருந்திருக்கலாம்) ஆயினும் இயலுமானவரை நிகழ்வு குறிப்பிட்ட நேரத்தில் நடப்பதில் ஏற்பாட்டாளர்கள் கூடிய கவனம் செலுத்தியிருக்கவேண்டும். அடுத்த நாள் வேலைநாளாக இருபப்தனால் நிகழ்வு 10 மணிக்கேனும் நிறைவுசெய்யப்பட்டிருக்கவும் வேண்டும்.

ரிஸ்வி முப்தி (அகில இலங்கை ஜம்மியதுல் உலமா) அவர்களினதும் ஆளுனர் அலவி மௌலானாவினதும் பிரபலமான சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவினதும் (பிரதியமைச்சர் பைசர் முஸ்தபாவின் தந்தை) பேச்சுக்களைத்தொடர்ந்து Dr. Zakir Naik இன் 15 வயது மகன் Fariq Naik உரையை ஆரம்பித்தார். அழகான ஆங்கில உரையால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார். தந்தைக்கு பெருமை சேர்க்கும் மகன் இவர். கடவுளுக்கு இருக்க வேண்டிய பண்புகளையும், ஒருவர் கடவுள்தானா என்பதை உறுதிசெய்வதற்கு கடவுளின் பண்புகள் எப்படி இருக்கவேண்டும் என்றும் இவர் விளக்கினார். (Theology)

அதன்பின் மக்னின் பேச்சிலிருந்து அவர்கள் பேச்சை ஆரம்பித்தார்கள். கடவுள் மற்றும் மதங்களை நம்பாத விஞ்ஞானத்தை நம்பும் நாத்திகருக்கான பேச்சாக அது இருந்தது. கடவுள் நம்பிக்கை இல்லாத பதிவர்கள் இதில் கலந்துகொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

தனது பேச்சில் அவர்கள் வாதங்களை கோர்வையாக எடுத்துவைத்திருந்தார். பல சமய நூல்கள் பற்றிய அறிவு பிரமிக்கத்தக்கதாக இருந்தது. பைபிளில் இன்னொரு இறைதூதர் வருவார் என்பதற்கான ஆதாரங்களையும், அவர் பெயர் முஹம்மத் என்பதற்கான ஆதாரங்களையும் அள்ளி வழங்கினார்.

ITNஇன் "அட்டபட்டம" ஹசந்த ஹெட்டியாராசீயும் வந்திருந்தார். கேள்வி பதில் நிகழ்ச்சி கொழும்பின் பாராழுமன்ற உறுப்பினர் சுஜீவ சேரசிங்கவின் கேள்வியுடன் ஆரம்பித்தது. அதன்பின் நாத்திகர் ஒருவரின் கேள்வியும், கிறிஸ்த்தவர் ஒருவரினதும் காத்திரமான கேள்விகளுக்கு பதில்ளித்தவிதம் பிரமிப்பூட்டுவதாக் இருந்தது. இவை பற்றி சில பதிவுகளை சில தலைப்புகளின்கீழ் தனித்தனியாக தரலாம் என எண்ணுகிறேன்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

பதிவர்களுக்கு ஒரு அழைப்பு

பதிவுலகில் அடிக்கடி சமயங்கள் தொடர்பாக கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஒரு சமயத்தவர் இன்னொரு சமயத்தை பற்றி கேள்விகேட்பது நிச்சயம் வரவேற்கப்படவேண்டியது. இது மதம் தொடர்பான புரிதல்களை அதிகப்படுத்தும். அதேபோல் தான் பின்பற்றும் சமயம் தொடர்பாகவும் தனக்குள்ளேயே எழும் கேள்விகளை அல்லது தாம் எதிர்கொள்ளும் கேள்விகளையும் நாம் தீர்ப்பது அவசியம். இதன்மூலம் நாம் சரியான வழியில்தான் இருக்கிறோமா என்பதையும் சீர்தூக்கி பார்க்க முடியும்.

பதிவுலகில் கூட அடிக்கடி இவ்வாறான கேள்விகள் அடிக்கடி எழுப்பப்படுகின்றன. இவை காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாக கருதும் பலர் இருக்கிறார்கள். ஆனால் இக்கேள்விகளுக்கெல்லாம் தகுந்த பதில்கள் / விளக்கங்கள் இருக்குமானால் அவை அறியச்செய்யப்படல் அவசியம்.

ஆனாலும் பதிவுலகில் யாராவாது ஒருவர் தனது விளக்கத்திற்கேற்ப, புரிதல்களுக்கேற்ப சமய நம்பிக்கைகளை நோக்கிய கருத்துக்களை, விமர்சனங்களை, கேள்விகளை முன்வைப்பர். இவற்றை முதற்தடவை வாசிப்பவர்களில் எத்தனைபேர் பின்னூட்டங்களினூடாக இதற்கு சொல்லப்படும் பதில்களை தொடர்வர்? நிச்சயமாக பாதியளவேனும் இல்லை. இவ்வாறு பதில்களை தொடராதோர் இவ்விமர்சனங்களுக்கு பதில் இல்லை அல்லது அதில் நிறைய பிழைகள் இருக்ககூடும் என்று விளங்கிக்கொள்ளலாமல்லவா?

இவ்வாறான பிழையான புரிதல்களை கழையும், உங்கள் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பதில் தரும் நிகழ்வொன்று எதிர்வரும் ஞாயிறு அன்று இலங்கையில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. ஆங்கில மொழியில் அமையும் இந்நிகழ்ச்சியில் இத்துறையில் அனுபவம் மிக்க வைத்தியர் சாகிர் நாயக் அவர்கள் கலந்துகொள்கிறார்கள். கொழும்பின் சுகததாச (வெளி) மைதானத்தில் இடம்பெற ஏற்பாடாகியிருக்கும் இந்நிகழ்ச்சிக்கு ஏற்கெனவே 25,000 பேர் தம் வரவை உறுதிப்படுத்தியுள்ளார்கள் என தெரிகிறது. இந்நிகழ்வில் கலந்துகொள்ள முஸ்லிம் அல்லாதோர் ஆர்வமூட்டப்பட்டுள்ளனர். இவர்களுக்கே முன்னுரிமையும் அளிக்கப்படும். ஒரு அறிமுக உரையைத்தொடர்ந்து கேள்விநேரமும் இருப்பது இதன் விசேட அம்சம். இதன்போது கேள்விகளை நேரடியாக கேட்கமுடியும். கேள்விகளுக்கு எந்த தணிக்கையும் இல்லை. மேலதிக விபரங்கள் http://www.peacethroughreligion.info என்ற இணையத்தளத்தில் கிடைக்கும்

Dr. Zakir Naik’s lecture tour to Sri Lanka
World’s renowned Islamic scholar Dr. Zakir Abdul –Karim Naik who is based in Mumbai India is to pay a visit to Sri Lanka on the invitation of ‘Association of Muslim Youth of Sailan (Jammiyathush Shabab)’ on the 23rd of May 2010. He is to address the gathering in the Sugathadasa out door stadium on the same day at 06.30pm on the theme “Peace through religion”.

Admission is Free of Charge

Please invite your all your Muslim & Non Muslim friends.

Special Seating arrangements for ladies.

Feel free to contact:

Bro. Nilam : 0716613884

இதற்குமுன் இவ்வாறான பல நிகழ்வுகள் தமிழ்மோழியில் இலங்கையின் பல இடங்களில் நடைபெற்றுள்ளன. தொடர்ந்தும் நடைபெறைருக்கின்றன. ஆங்கில மொழியினூடான இந்நிகழ்ச்சி இவற்றை விட அதிகமானோரின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பல கேள்விகளை மனதில் வைத்திருக்கும் இலங்கையின் சகல பதிவர்களுக்கும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அழைப்புவிடுக்கிறேன். அதேபோல் நீங்களும் இவ்வாறான நிகழ்ச்சிகளை ஒழுங்குசெய்யுமாறும் வேண்டுகிறேன்.

கேள்விகள் பதிலழிக்கப்பட வேண்டும் - பதில்கள் எத்திவைக்கப்படவும்வேண்டும்

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்