>கண்டி பொது வைத்தியசாலையில் Mobile phone இன் ஒளியில் சத்திர சிகிச்சை ஒன்று நடைபெற்றுள்ளது.
குறிப்பிட்ட வைத்தியசாலையில் Dr. M.M. நியாஸ்; பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கும்போது மின் தடை ஏற்பட்டது. மின் தடையின் போது பாவிக்கப்படும் Generator உம் 10 நிமிடங்களுக்கு மேல் வேலை செய்யவில்லை. இதன்போது வேறு எந்த வழியுமற்ற சத்திர சிகிச்சை குழு Mobile phone இன் ஒளியில் சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக நடாத்தியது. இவ்வாறான இக்கட்டான நிலையை சமாளிப்பதற்கு தயாராகா ஒரு Battery இல் இயங்கும் Torch கூட சத்திர சிகிச்சைக்கூடட்தில் இருக்கவில்லை.
ஏனைய காத்திருந்த நோயாளிகள் மீதான சத்திர சிகிச்சை மின்சாரம் வரும் வரை பிற்போடப்பட்டது. மின்சாரம் ஏறத்தாள ஒன்றரை மணித்தியாலத்தின் பின்பே திரும்பியது.
இவ்வாறான சம்பவம் கண்டி வைத்தியசாலை வரலாற்றில் முதற்தடவை நடைபெற்றதாக அறியக்கிடைக்கிறது.
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
