15 August 2011

மர்ம மனிதர்கள்

மர்ம மனிதர்கள் தொடர்பான அச்ச உணர்வுகளால் மக்கள் அடிக்கடி பாதுகாப்பு படையினரோடு மோதிவருகிறார்கள். இது தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய ஊடகங்களோ இதைவிட்டால் நல்ல வாய்ப்பு கிடைக்காது என்று நினைப்பவர்கள் போல் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகிறார்கள்.

It was funny for a while, but people are dying over what? Grease Yakas are not real. Crime is, and sometimes you have to tie people to trees, but when people are dying I think things have gotten out of hand.
indi.ca

பொத்துவிலில் அமைச்சர் பௌசி சொன்ன ஒரு உப விடயத்தை தூக்கிப்பிடித்து வெற்றி FM மற்றும் தமிழ் மிரர் ஆகியன செய்திகளை வெளியிட்டிருந்தன. (ஏனைய ஊடகங்களை பின்தொடராமையால் அவை என்ன சொன்னன என்ற நான் அறியேன்) ஒருவர் சொன்ன ஒரு விடயத்தை வித்தியாசமான சொற்களைப்பாவித்து வேறொரு கருத்து மக்களிடம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் செய்திகளை வெளியிடுவது நீண்ட கால நோக்கில் குறிப்பிட்ட ஊடகம் தொடர்பில் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை இல்லாமலாக்கி விடும் என்பதை இவ்வூடகங்களை வழிநடாத்துபவர்கள் கவனிக்கமாட்டார்களா?




மர்ம மனிதர்கள் தொடர்பாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம்

அதேவேளை இந்திய படங்களில் நடப்பதுபோல் சட்டத்தை மக்கள் கையில் எடுப்பதையும் தவிர்ந்துகொள்ளவேண்டும். அப்பாவிகளை அடித்துக்கொல்வது ஒரு நாகரீகமான சமூகத்திற்கு அழகல்ல. இன்னும் பாதுகாப்பு படையினருடனான சுமூக உறவுகளை சீர்குலைக்கும் வண்ணம் பொதுமக்கள் நடந்துகொள்வது நல்லதல்ல.

ஒருவரை பிடித்து பொலிஸில் கையளிக்க முன் அவரை படமெடுக்க கூடிய வசதி இன்று எல்லாரிடமும் மொபைல் இல் இருக்கிறது. அப்படி இருக்கும் நிலையில் பாதிகாப்பு படையினர் நியாயமாக நடக்கவில்லை என்று சந்தேகம் இருந்தால் அவ்வாறான ஆதாரங்களை பயன்படுத்தி நீதியை நிலைநாட்டலாம். பொதுமக்கள் மர்ம மனிதர்கள் தொடர்பில் கொஞ்சம் நிதானமாக இருப்பது நல்லது.

இல்லாவிட்டால் தனக்கு பிடிக்காத ஒருவரை கிறீஸ்பூதம் என சொல்லி ஊரைக்கூட்டி கொல்வது இலகுவாக போய்விடும்.

No comments:

Post a Comment

எனது வலைப்பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கு நான் எக்காரணம் கொண்டும் பொறுப்பாளியாகமாட்டேன் என்றும் இவை என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை பிரதிபலிக்காது என்பதையும் ஞாபகமூட்டுகிறேன்.