06 March 2010

பாராளுமன்றத்தேர்தல் 2010 - 3

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னரேயே ஆரம்பமான கட்சித்தாவல்


கம்பஹா மாவட்ட UNF பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் டில்ருக் ஷி, நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்து UPFA க்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

இவர் காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உருப்பினரும், மங்கள சமரவீரவுடன் செயற்பட்டவருமான சிறீபதி சூரிய ஆரச்சியின் மனைவியாவார்.

தான் போட்டியிடும் கட்சியின் கொள்கைகள் தெளிவற்றி இருப்பதன் காரணமாக UPFA க்கு ஆதரவளிக்க முடிவெடுத்ததாக கூறியதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

சிறீபதி சூரிய ஆரச்சி அவர்கள், 2005 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களை வாக்களிக்காமல் செய்வதற்காக புலிகளுக்கும், அப்போதைய ஜனாதிபதி வேட்பாளரான மஹிந்த ராஜபக்சவுக்கும் உடன்படிக்கை இருந்ததாக குற்றஞ்சாட்டியவராவார். இவர் 2007 ஆம் ஆண்டு வீதி விபத்தில் மரணமடைந்தார்.

No comments:

Post a Comment

எனது வலைப்பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கு நான் எக்காரணம் கொண்டும் பொறுப்பாளியாகமாட்டேன் என்றும் இவை என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை பிரதிபலிக்காது என்பதையும் ஞாபகமூட்டுகிறேன்.