28 February 2010
ஊடகங்களில் மதத்திணிப்பா "வணக்கம்"? - சில விளக்கங்கள்
1. மொழி - மொழி கருத்துக்களை பரிமாறுவதற்கான ஒரு ஊடகம். அவ்வளவே. ஊடகம் எமக்கு வசதியானதாக இருக்கவேண்டும். தமிழிலும் வசதிக்காக பல மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. சில வருடங்களுக்கு முன் லை. ளை, ணை போன்ற எழுத்துக்கள் எழுதப்படும் விதம் வித்தியாசமாக இருந்தது. பண்டைய பேச்சு முறைக்கும் இன்றைய பேச்சு முறைக்கும் நிறைய வித்தியாசங்கள். இன்னும் சம காலத்திலும் பிரதேசத்துக்கு பிரதேசம் தமிழ் வித்தியாசமாக உச்சரிப்பு வழக்குகளை கொண்டுள்ளது.
எனவே இந்த மொழி என்ற ஊடகம், எமக்கு வசதியானதாக இருக்கவேண்டும். அதைவிடுத்து தமிழ் வழக்கம் என்பவர்கள் நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்த தமிழ் வழக்கட்தின் படியா நடந்துகொள்கிறார்கள், பேசிக்கொள்கிறார்கள், எழுதுகிறார்கள் என்ற கேள்வியெளும்புகிறது.
2. திணிப்பு - ஒருவர் ஏற்றுக்கொள்ளாத விடயத்தை கட்டாயப்படுத்தல் திணிப்பு. வர்த்தகம் படிக்க விரும்பும் மாணவனை விஞ்ஞானம் படிக்குமாறு கட்டாயப்படுத்தல், மீன் சாப்பிட விரும்பாதவரை சாப்பிடுமாறு வலியுறுத்தல் சிங்களம் பேசினால் மட்டும் காரியம் நடக்கும் என்றிருத்தல் என்பன திணிப்பாக இருந்தால் வணக்கம் சொல்ல விரும்பாதோருக்கு வணக்கம் சொல்வதன்மூலம் அவரை பதிலுக்கு வணக்கம் சொல்ல நிர்ப்பந்தித்தலும் திணிப்பே.
3. இது எந்த மதம் சரியானது என்ற விவாதமல்ல. இங்கு திணிப்பு என்பதுதான் கருப்பொருள்
4. பொதுவான - இங்கு பொதுவான, மரபான என சில வாதங்கள் வைக்கப்படுகின்றன. பொது என்றால் எல்லோரும் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். எப்போது வணக்கம் தொடர்பாக எப்போது சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது?
5. ஒருவர் செய்தார் என்பதற்காக ஒரு விடயம் சரி என்றாகாது. கருணா, டக்ளஸ், ஆனந்த சங்கரி ஆகியோர் இலங்கை அரசாங்கத்துடன் நல்லுறவில் இருப்பதால் அனைவரும் நல்லுறவில் இருக்கவேண்டும் என்று நான் கூறினால் ஒருவராவது எதிர்க்க மாட்டீர்களா?
நடந்த விவாதத்தில் பகிரப்பட்ட தலைப்புக்கு பொருத்தமான கருத்துக்களை மாத்திரம் தொகுத்து பதிவாக விரைவில் தருகிறேன். அப்போது கவன கலைப்பான்கள் இன்றி எந்த ஒரு வாசகரும் "வணக்கம்" பற்றி தனக்கான கொள்கையை வகுத்துக்கொள்ளமுடியும்.
27 February 2010
பாராளுமன்றத்தேர்தல் 2010 - 2
கட்சிகளின் தேசியப்பட்டியலில் சிறுபான்மை
ஐமசுமு (UPFA) பட்டியலில் இடம்பெறுவதற்காக போராடிக்கொண்டிருந்த கருணா தனது இடத்தை உறுதிசெய்துள்ளார். அவரையும் சேர்த்து 3 தமிழர்கட்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.
இதில் பௌத்த பிக்குகள் இருவரும் இடம்பெறுகின்றனர்.
இன்னும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவரும், பொன்சேக்காவின் ஜனாதிபதி தேர்தல் மனு நிராகரிக்கப்படவேண்டும் என ஆட்சேபனை தெரிவித்தவருமான சரத் கோங்கஹகே இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
ஐதேக வின் (UNP) தேசியப்பட்டியலில் 9 தமிழர்கட்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.
இப்பட்டியலில் இடம்பெறும் 6 முஸ்லிம்களில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த நிசாம் காரியப்பர், ஹஸன் அலி, மசூர் சின்னலெப்பை ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
ஜெனரல் சரத் பொன்சேகா போட்டியிடும் ஜனநாயக தேசிய முன்னணியில் அர்ஜுன ரணதுங்கவின் சகோதரர் சஞ்சீவ ரணதுங்க, அனுர குமார திசாநயக்க, டிரான் அலஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இப்பட்டியலில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்களது பெயர் இடம்பெறவில்லை.
26 February 2010
பாராளுமன்றத்தேர்தல் 2010 - 1
பாராளுமன்றத்தேர்தலின் வெற்றி எவர் பக்கம் என்பது அனைவருக்கும் தெரிந்த நிலையிலும், இதுவரை வெளிவராத சில சுவாரசியமான செய்திகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். அவற்றை உங்களுடன் பகிர்வதற்காக பாராளுமன்றத்தேர்தல் 2010 என்ற தொடரை ஆரம்பிக்கிறேன். உங்களின் கருத்துக்கள், எதிர்பார்ப்புகளை எனக்கு அறியத்தாருங்கள்.
இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சின்னங்களில் அரிவாள் (விவசாய அரிவாள் அல்ல) காண்டாமிருகம், நாகம், கட்டில் போன்ற சின்னங்களும் அடங்குகின்றன.
வன்முறை மிக்கதாக மாறிவரும் அரசியல் கலாச்சாரத்தில் ஆக்கூடுதலாக வன்முறையில் ஈடுபடும் கட்சிக்கு அடுத்த தேர்தலில் அரிவாள் சின்னத்தை வழங்கவேண்டும்.
25 February 2010
இழந்த சந்தோஷங்களை அனுபவிக்க உரித்துடையவன் - கருணா பதில்

கடந்த 23ஆம் திகதி ஆங்கில பத்திரிகையான Daily Mirror கருணாவை பற்றி ஒரு ஆசிரியர் தலையங்கத்தை தீட்டியிருந்தது.
தனக்கு தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் வழங்கப்படவேண்டும் எனவும் அதற்கு மறுப்பு தெரிவித்ததற்காக தனது சகோதரி தேர்தலில் போட்டியிடுவதை தடுத்ததாகவும்
பிள்ளையான் தன்து கிழக்கு மாகாண மக்களுகு நம்பிக்கையாக செயல்பட்டதாகவும், ஆனால் கருணா நகர்ப்புற வாழ்க்கை முறைக்கு தன்னை பழக்கப்படுத்திக்கொண்டதாகவும், (nightclubs, xtravagant lifestyle, urban life )
கருணாவினூடாக கிழக்கு மாகாண மக்களை கவர முடியாதென அரசு உணர்ந்துள்ளதாகவும்
அதில் கூறப்பட்டிருந்தது. முழு விபரங்களையும் http://www.dailymirror.lk/print/index.php/editorial/106-editorial/4377-future-of-karuna.html இல் வாசிக்கலாம்.
இதற்கான கருணாவின் பதில் இன்று அதே பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
புலிகளின் முடிவினூடாக இலங்கையில் சமாதானம் ஏற்பட்டமைக்கு தான் பங்களிப்பு செய்தமையை இட்டு திருப்திபடுவதாகவும்,
தன் இளமைக்காலத்தில் இழந்த சந்தோஷங்களை, இன்னும் இளமையாக இருப்பவன் என்ற வகையில் ஏனைய இலங்கையரை போலவே அனுபவிக்க உரித்துடையவன் என்றும்
அதில் அவர் பதிலளித்துள்ளார்.
முழு பதிலும் http://www.dailymirror.lk/print/index.php/opinion1/4543.html
22 February 2010
தமிழ் சினிமாவில் இன்னொரு மனப்பிரள்வு - ஆயிரத்தில் ஒருவன்
ஆனால் நான் கடவுளை சாடிய ஒரு சிலர் இப்படத்தை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்திருப்பது, ஆதரவு கொடுங்கள் என்று கேட்டிருப்பது (வர்த்தக படத்துக்கு எதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும்? வியாபாரிக்கு விற்கும் தந்திரம் தெரிந்திருக்காவிட்டால் ஏன் அவன் வணிகம் செய்யவேண்டும்?) ஏன் என்று சிந்தித்தபோது காரணம் இந்த காட்சியில் இருக்கிறது என்று தெரிகிறது.
இவ்வளவு அருவருப்பான, வன்முறையான இலக்கிய நயத்தில் படு தூஷணமாக பேசிக்கொண்டிருந்தபோது கொரித்துக்கொண்டிருந்தவர்கள் பார்த்திபன் கொல்லப்படும்போது மட்டும் துக்கம் தாளாமல் நிறுத்திவிட்டார்களாம். என்ன கொடும சார்?
21 February 2010
ஊடகங்களில் மதத்திணிப்பா "வணக்கம்"?
முஸ்லிம் மாணவி ஒருவருக்கு நிகழ்ச்சியின் அறிவிப்பாளரும் நிகழ்ச்சி நடத்துபவரும் "வணக்கம்" என்றே வரவேற்றனர். (இங்கு வரவேற்றனர் என்ற வார்த்தை பிரயோகம் சரியானதாக தெரியவில்லை.)
முதல் சந்தேகம்
வணக்கம் என்பதால் கருதப்படுவது என்ன? எனக்கு தெரிந்த தமிழின் படி வணக்கம் என்றால் வணங்குதல் என்றல்லவா பொருள்படும்? அப்படி பொருள்படுமாயின் "வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே" என்ற முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கையோடு அது முரண்படுகிறது. அதேவேளை அறிவிப்பாளர் நேயரின் மதம்தொடர்பான வரவேற்பு முறையத்தான் கையாளவேண்டும் என்பது என் வாதமல்ல. அதுவும் அறிவிப்பாளர் மீதான மத திணிப்பா என்ற கேள்வியெழுகிறது.
இரண்டாவது சந்தேகம்
இது அனுசரித்துப்போதல், இன நல்லுறவு, சகிப்புத்தன்மை போன்ற ஏதாவது ஒரு விடயத்தின் கீழ் வருகிறதா? அப்படியாயின் அறிவிப்பாளர் எம்மதத்தை சார்ந்தவராக இருக்கிறாரோ அவரது மத வழக்கப்படி உள்ள சொல்லை பிரயோகிக்கப்படவேண்டும். சகிப்புத்தன்மை, நல்லுறவு போன்றன இரு பக்கமும் இருக்கவேண்டுமல்லவா? ஒரு பக்கம் மாத்திரம் இருந்தால் அது திணிப்பாகவே அமையுமல்லவா? ஆனால் தமிழ் ஊடகங்களில் மத நிகழ்ச்சிகள் அல்லாத மற்ற நிகழ்ச்சிகளில் அவ்வாறு பிரயோகிக்கப்பட அனுமதிக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது.
மூன்றாவது சந்தேகம்
மதங்களை தாண்டிய வரவேற்புச்சொல் ஏதாவது தமிழில் இருக்கிறதா? ஏன் அவ்வாறான ஒரு ஆன சொல்லை எல்லா அறிவிப்பாளர்களும் பயன்படுத்தக்கூடாது?
குறிப்பு: சந்தேகங்களைத்தான் கேட்கிறேன். எனவே சந்தேகங்களை தீர்க்க நாகரிகமான சொற்பிரயோகங்களையே பிரயோகிக்கவும்.
20 February 2010
பொன்சேக்கா கைது - நடந்தது என்ன? பகுதி 2
"என்னைத்தொட வேண்டாம்" என் பொன்சேகா எச்சரித்தார். ஆயினும் 59வயதான இராணுவத்தளபதியின் கைகளையும் காலையும் பிடித்து தூக்கி வேனில் அடைததனர். அத்துடன் அவரின் தனிப்பட்ட செயலாளரான சில்வாவும் கைவிலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்டார். வாகனம் இராணுவ தொடரணியின் பாதுகாப்புடன் அங்கிருந்து அகன்றது. அதேசமயம் இவ்வலுவலகத்தின் ஒவ்வொரு அறையையும் இராணுவ பொலிஸ் சோதனையிட்டது.
ஏறத்தாள 45 நிமிடம் 4 அரசியல் வாதிகளும் அடைக்கப்பட்டிருந்தனர். நுழைவாயிலையும் பூட்டிவிட்டே சென்றிருந்தனர். அரசையல்வாதிகள் தத்தமது கைத்தொலைபேசியூடாக ஊடகங்களுக்கு செய்தியை அறிவித்தனர். ஊடகவியலாளர்கள் வந்தபோது அலங்கோலமான நிலையில் கைகலப்பு நடந்த இடம்போல இருந்த அறையை கண்டனர். சில ஜன்னல் கண்ணாடிகள் சேதமுற்றும் ஒரு இராணுவ அதிகாரியின் name-tag கழன்று கீழே விழுந்து கிடப்பதையும் கண்டனர். அங்கிருந்த படைவீரர்கள் ஊடகவியலாளர்களை தடுத்ததுடன், அவர்களின் கமரா மெமரி கார்ட்களையும் பறிமுதல் செய்தனர்.
இங்கு "ஒப்பரேசன் பொன்சேகா" நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அவர் வாடகைக்கு தன் மனைவியுடன் தங்கியிருந்த குயீன்ஸ் வீதியில் இருந்த வீட்டில் பொன்சேகாவுக்கு இராணுவத்தால் வழங்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியை CID யின்ர் தேடிக்கொண்டிருந்தனர். அதை கண்டுபிடித்த பின் பொன்சேக்காவின் மனைவி அனோமாவிடம் வாக்குமூலம் பெறப்பட்டபோது நடுநிசியாகியிருந்தது.
கைது பற்றிய தகவல் கிடைத்து அவ்விடத்துக்கு ரவி கருணாநாயகவுடன் வந்த மங்கள் சமரவீர "இடி அமீனின் விசாரணைக்கு வாக்குமூலம் வழங்குவதை நிறுத்துங்கள்" என கத்தினார். உடனடியா ஒரு உதவியாளர் ஒருவர் அவரை அவசரமாக அவ்விடத்தில் இருந்து கூட்டிச்சென்றார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் இச்சந்தர்ப்பத்தில் டெல்லியில் இருந்தார். கட்சியின் உபதலைவர் கரு ஜயசூரிய அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு தகவலை கூறினார். விக்கிரமசிங்க தனது பயணத்தை இடைநிறுத்தி கொழும்பு திரும்புவதாக கூறினார்.
(இது The Sunday Times இல் வெளிவந்த கட்டுரையின் சுருக்க தமிழ் வடிவம்)
17 February 2010
பொன்சேக்கா கைது - நடந்தது என்ன?
இரவு 9 மணிக்கு இக்குழு கொழும்பு கட்டளைத்தளத்தை சேர்ந்த மேஜர் ஜெனரல் சுமித் மானவடுகே தலைமையிலான 200 துருப்பினருடனும், குற்றப்புலனாய்வு அதிகாரிகளுடனும், கொழும்பு ரோயல் கொலேஜ்க்கு முன்னிருக்கும் ராஜகீய மாவத்தைக்கான பாதைகளை தடைசெய்தது.
ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் அலுவலகத்திற்கு இரண்டு சீனியர் இராணுவ அதிகாரிகளுடன் இராணுவ பொலிசாரும் சென்றனர்.
இவர்கள் இவ்வலுவலகத்தில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமினதும் தேசிய ஜனநாயக முன்னணியின் தலைவர் மனோகணேசனினதும் தனிப்பட்ட பாதுகாவலர்களாக இருக்கும் அமைச்சு பாதுகாப்பு பிரிவிநரை (MSD) கண்டனர்.
அவர்களில் (MSD) இருவர் மேல்மாடிக்கு வந்திருப்பவர்கள் பற்றிய செய்தியை அறிவிக்க மாடிப்படிகளில் ஏறியபோது நிறுத்தப்பட்டு அனைவரும் ஒரு மூலையில் நிறுத்தப்பட்டனர். இதன் மூலம் மேல்மாடியில் ஆயுததாரிக்ள் எவரும் இல்லாமல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அத்துடன் CCTV கமெராவை நிறுத்தி பதிவுசெய்யும் கருவியையும் (recording equipment) எடுத்துக்கொண்டனர்.
மேல்மாடியில் ஜேவிபியின் சேமவன்ச, சுனில் ஹந்துனெட்டி, ஹக்கீம், கணேசனுடன் ஜெனரல் பாரளுமனற தேர்தல் தொடர்பாக ஆராய்ந்துகொண்டிருந்தார்.
இராணுவ பொலீஸ் அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர்களையும் சோமவன்சவையும் அறையை விட்டகலுமாறு கூறியபோதும் அவர்கள் மறுத்துவிட்டனர்.

பொன்சேகா இராணுவதளபதியாக இருந்தபோது அப்போது கேணலாக இருந்த விஜேசிறியை இராணுவ வாகனத்தில் மாடொன்றை ஏற்றிச்சென்றதாக குற்றஞ்சாட்டி திருகோணமலை இடட்தங்கல் முகாமுக்கு மாற்றஞ்செய்திருந்தார். இவர் தனக்கு பதவியுயர்வு கிடைக்கவில்லை என்று நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து, பின் பதவியுயர்வு கிடத்ததும் வழக்கை வாபஸ் பெற்றிருந்தார். இஅவ்ர் இரு வாரங்களுக்கு முன்னரேயே மீண்டும் Provost Marshal ஆக நியமிக்கப்பட்டிருந்தார்.
மற்றும் மேஜர் ஜெனரல் மானவடுகே பொன்சேக்காவின் காலத்தில் தளபதியுடனான முரண்பாடு காரணமாக கட்டளைப்பிரிவிலிருந்து (யுத்த நடவடிக்கை தொடர்பான பிரிவு) பொதுப்பிரிவுக்கு (நிர்வாகப்பிரிவு) மாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
நான்கு அரசியல்வாதிகளும் பார்த்துக்கொண்டிருக்க; ஜெனரல் பொன்சேகா இரு இராணுவ அதிகாரிகளுடனும் "தான் சிவிலியன் என்பதால், பொலீஸ் தான் கைதுசெய்யவேண்டும்" என வாதாடினார். மேஜர் ஜெனரல் மானவடுகே பொலீஸ் (CID) கீழே காத்திருப்பதாகவும், தான் தனக்கு இடப்பட்டிருக்கும் கட்டளையையே நிறைவேற்றுவதாகவும் தயவுசெய்து வருமாறும் கூறினார். இதன் பின் பலத்த எழுதமுடியாத வார்த்தை பரிமாறல்கள் நடந்தது.
ஒரு அதிகாரி குற்றப்பத்திரிகையை வாசிக்கத்தொடங்கியிருந்தார். ஆனால் மேஜர் ஜெனரல் மானவடுகே "வாசிப்பதற்கு நேரமில்லை. அவரைப்பிடித்து தூக்கிச்செல்லுங்கள்" என்று இராணுவ பொலீஸ் அதிகாரிகளுக்கு கட்டளையிட்டதாக ஹக்கீம் சொல்கிறார்.
மிகுதி பகுதி 2 இல் தொடரும்
(இது The Sunday Times இல் வெளிவந்த கட்டுரையின் சுருக்க தமிழ் வடிவம்)
16 February 2010
வடக்கு கிழக்கின் யானைக்கும் தேவை சமாதானம்
மீள்குடியேற்றப்பட்டவர்களில் தானியங்கி துப்பாக்கிகளை வைத்திருக்கும் ஊர் காவல் படையினரும் சிவில் பாதுகாப்பு படையினரும் இருக்கின்றனர்.
"ஆம். வளர்ந்து வரும் இப்பிரச்சினையின் ஆரம்ப அறிகுறிகளை சில மீள்குடியேற்ற பிரதேசங்களில் காண்கிரோம்"
இந்த நிலமை எல்லைக்கிராமங்கள் என்று கருதப்படும் நெல் விவசாயிகளை பெரும்பான்மையாக கொண்ட பிரதேசங்களில் இன்னும் மோசமாகக்கூடும்.
யுத்தம் முடிந்து விட்டது. மக்கள் மீள் குடியமர்த்தப்படுகிறார்கள். ஆனால் வடகிழக்கு மீண்டும் மனிதனுக்கும் யானைக்குமிடையேயான முரண்பாட்டின் அரங்காக மாறுகிறதா?ஒரு வருடத்தின் முன் வன்னியில் யுத்தத்தின் உச்சம். தொலைவில் செல்களின் சத்தம் கேட்கிறது. ஆனால் இது எதுவும் வாகரைகாடுகளில் இருந்த யானைகட்கு எந்த சங்கடமும் இல்லை. ஆனால் இறுதியில் யுத்தத்தின் நிஜம் அவற்றை பீடித்துக்கொண்டது. அதன் கால் புலிகளால் வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியை மிதித்ததன் காரணமாக சிதறிப்போனது.
காயமுற்ற யானை தன்னை தானே இழுத்துக்கொண்டு அருகில் இருந்த நீர் நிலைக்கு சென்றுவிடுகிறது. ஆனால் தொற்று ஏற்பட்டுவிட்டதால் அதற்கு உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு அற்பமே. வனவிலங்கு திணைக்களத்தின் மிருக வைத்தியர்கள் செத்துக்கொண்டிருக்கும் யானை பற்றி அறிவிக்கப்படுகிறார்கள். ஆயுத படையின் உதவியுடன் அவர்கள் அதன் உயிரைக்காக்க முற்சிக்கிறார்கள். ஆனால் அது சாத்தியமாகவில்லை.
"யானையின் பாதம் எப்போதும் மண்ணுடனும் அழுக்குடனும் தொடர்பில் இருப்பது, புண்ணை ஆற்றுவதை மிக கடினமானதாக ஆக்குகிறது. காயம் பெரும்பாலும் உழைச்சலுடனான மரணத்துக்கு காரணமாகிறது. " என்று நிலக்கண்ணி வெடிகளால் பாதிக்கப்பட்டவைகளுக்கு சிகிச்சையளிக்கும் மிருகவைத்திய நிபுணர் கூறுகிறார். தொற்றினாலும் உணவைத்தேடிக்கொள்ள முடியாததாலும் அந்த வாகரை யானை மிகுந்த வலியுடன் நாட்கணக்கில் கிடந்து செத்துப்போனது.
யுத்ததின் உச்ச கட்டத்தில் முன்னேறிக்கொண்டிருந்த இராணுவத்தின் விரைவை குறைப்பதற்கு பல்லாயிரக்கணக்கான கண்ணிவெடிகள் புலிகளினால் புதைக்கப்பட்டதனால் இவ்வாறான பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. கிழக்கு மீட்கப்பட்டபின்னும் பல யானைகள் கண்ணிவெடிகளுக்கு இரையாகின. கடந்த சில வருடங்களாக வனவிலங்கு மிருக வைத்தியர்கள் ஆக குறைந்தது வருடத்துக்கு 10 சம்பவங்களேனும் இடம்பெற்றுள்ளதாக ஆவணப்படுத்தியுள்ளனர். கண்ணிவெடியை முகரும்போது ஒரு யானை தன் தும்பிக்கையைக்கூட இழந்தது.
யுத்தம் முடிந்தபின் சனத்தொகை மிக்க இடங்களை இலக்காககொண்டு கண்ணிவெடிகளை அகற்றல் ஆரம்பமானது. 20 வருடங்களுக்கு மேலாக கைவிடப்பட்டிருந்த கிராமங்களில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டனர். யானைகள் வாழும் இடங்களில் கூட பாரிய அபிவிருத்தி திட்டங்கள் வருகின்றன. இது மனிதனுக்கும் யானைக்கும் இடையேயான முறுகலின் ஆரம்பமாக அமையுமா என வனவிலங்கு ஆர்வலர்கள் கேட்கிறார்கள்.
"ஆம். வளர்ந்து வரும் இப்பிரச்சினையின் ஆரம்ப அறிகுறிகளை சில மீள்குடியேற்ற பிரதேசங்களில் காண்கிரோம்" என்று சுற்றுச்சூழல் அமைச்சின் கொள்கை திட்டமிடல் அதிகாரியும் மனித யானை முறுகலை களையும் திட்டத்மான "கஜ மித்துரொ" வை கையாள்பவருமான அஜித் சில்வா கூறுகிறார். வடக்கின் பிரதேசங்களுக்கான பயணத்தின்போது சிலாவத்துறை மற்றும் மாசை பிரதேசங்களில் மீள்குடியேறியவர்களின் யானைப்பயம் தொடர்பான முறைப்பாடுகளை சில்வாவும் அவரது குழுவினர்களும் பெற்றனர்.
வட கிழக்குக்காக பாரிய விவசாய அபிவிருத்தி திட்டங்களும் வரையப்பட்டுள்ளன.ஆனால் சோமாவதி தேசிய பூங்காவுக்கு அருகில் அமைந்த கந்தகடுவ பண்ணையைப்போன்று சூழல் பற்றிய கரிசனங்களுடன் திட்டங்கள் வரையப்பட்டனவா என்பதே விவாதத்திற்குரியதாக இருக்கின்றது. வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் போன்ற திட்டங்கள் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்புடன் கலந்தாலோசிக்கப்பட்டு மேற்கொள்ளப்படல் மீண்டும் ஒரு முறுகலை தவிர்ப்பதற்கு அதி முக்கியமாகும்.
இந்த நிலமை எல்லைக்கிராமங்கள் என்று கருதப்படும் நெல் விவசாயிகளை பெரும்பான்மையாக கொண்ட பிரதேசங்களில் இன்னும் மோசமாகக்கூடும். சிலர் தங்கள் நிலங்களை வருடங்களுக்கு முன் கைவிட்டிருந்தபோதும் குளங்களின் மீள்கட்டுமானம் முடிந்த கையோடு மீண்டும் விவசாயம் ஆரம்பிக்கும். இவ்வாறு கைவிடப்பட்டு பற்றைக்காடுகளாக மாறியிருக்கும் இடங்கள் யானைகளின் நடமாட்டத்திற்கு மிகவும் உவப்பான இடங்களாக 20 ஆண்டுகளுக்கு மேல் இருந்திருக்கின்றன.
அப்படியாயின் நிலமையை எப்படி சமாளிப்பது? யானைகள் பற்றிய வல்லுனர்களின் கருத்துப்படி சில இடங்களில் யானைகளுக்கு இடம் கொடுப்பதற்காக விவசாயம் செய்யாமல் இருப்பதும் ஒரு தீர்வாக அமையும். "கட்டாயம் சில இடங்கள் யானைகள் பிரதேசத்துக்கு பிரதேசம் செல்வதற்கு வழியாக விட்டுக்கொடுக்கப்படவேண்டும்" என்கிறார் யானை வல்லுனரான ஜயந்த ஜயவர்தன. "பாரம்பரியமான யானைப்பாதைகளில் தடைகளை ஏற்படுத்துவது வேறு பிரதேசங்களில் பிரச்சினையை ஏற்படுத்தும். இவ்வாறான தவறுகளில் இருந்து நாம் பாடம் கற்கவேண்டும்" என்கிறார் அவர். இதேவேளை வடக்கு கிழக்கு பிரதேச காடுகளில் உள்ள யானைகள் பற்றிய போதிய தகவல்களுல் அதிகாரிகளிடம் இல்லை. யானைகளின் எண்ணிக்கை தொடர்பாகவும் அவற்றின் நடத்தைகள் தொடர்பாகவும் ஒரு விரைவான மதிப்பீடு ஒன்று இந்த பிரதேசத்தில் அவசியானதாகும்.
வடக்கு கிழக்கு பிரதேச மனித யானை முறுகல் தொடர்பாக பல திட்டங்கள் வரையப்படுவதாக கஜ மித்துரோ இணைப்பதிகாரி அஜித் சில்வா கூறுகிறார். இத்திட்டங்களில் 7 பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களில் யானைக்கான சூழலை வளப்படுத்துவது முதன்மை வகிக்கிறது. இவ்விடங்களில் கிளிநொச்சி மாவட்டத்தில் சுண்டிக்குளம், முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய், மன்னாரில் மடு வீதி, பெருங்குளம், வெங்காலை என்பன அடங்குகின்றன. இப்பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள பழைய குளங்களை புனரமைப்பது இந்த சூழலை வளப்படுத்துவதில் பெரிய பங்கு வகிக்கும். இது பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களில் உணவும் தண்ணீரும் தாராளமாக கிடைப்பதை உறுதி செய்யுமென்பதால் யானைகள் கிராமங்களை ஊடுருவுவதை குறைக்கும்.
இன்னும் 100 கிலோ மீட்டருக்கும் அதிக நீளமுடைய மின்வேலிகளை வடக்கு, கிழக்கு, வட மத்தி மாகாணங்களில் அமைக்கப்படுகின்றன. அத்துடன் யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், கிராமங்களிலிருந்து யானைகளை வெளியேற்றவும் என யானை கட்டுப்பாடு அலகொன்று மட்டக்களப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இம்முறுகல் தனியே ஆல் மட்டும் கையாளப்படமுடியாது. இவற்றை தடுப்பதற்கு ஏனைய அமைச்சுக்களின் ஆதரவும் தேவை. இதன் மூலமே 30 ஆண்டுகளுக்குப்பின்னாவது இரு தரப்பும் நிம்மதியாக வாழமுடியும்.
பாதுகாப்பிற்கான அறிவு
யானை வல்லுனர்கள் DWC இன் திட்டங்கள் யானைகளை பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களில் அடைப்பதை தாண்டியும் இருக்க வேண்டும் என்கிறார்கள். "உள்ளூர்வாசிகளுக்கு யானைகளை எவ்வாறு சமாளிப்பது என்று கற்பிக்கப்படலும் முக்கியம்" என்கிறார் வல்லுனர் ஜயந்த ஜயவர்தன.
மீள்குடியேற்றப்பட்ட சில குடும்பங்கள் தம் கிராமங்களுக்கு 20 / 30 வருடங்களுக்கு பின் திரும்பியிருப்பதால் புதிய தலைமுறைக்கு யானைகளை எப்படி சமாளிப்பது என்பது தெரியாமல் இருந்திருக்கும். அண்மையில் ஒரு சிறுவன் காலை 4 மணிக்கு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது ஒரு யானையால் கொல்லப்பட்டான். இவ்வாறான சம்பவங்கள் சரியான அறிவூட்டல்கள் மூலம் தவிர்க்கப்படலாம் என்பது ஜயவர்தனவின் கருத்து.
இது தேவையற்ற மரணங்கள் யானைகளுக்கு நிகழ்வதையும் தடுக்கும். மீள்குடியேற்றப்பட்டவர்களில் தானியங்கி துப்பாக்கிகளை வைத்திருக்கும் ஊர் காவல் படையினரும் சிவில் பாதுகாப்பு படையினரும் இருக்கின்றனர். சில வருடங்களுக்கு முன் ஊர் காவற்படை வீரரொருவரால் சுடப்பட்ட கவலைக்குரிய இறப்பாகிய "குமண குறுக்கு தந்தக்காரன்" என்றழைக்கப்படும் சாதுவான ஒரு யானைக்கு நடந்ததுபோல், கண்டவுடன் சுடமுன் இன்னொரு முறை இவ்வாறான ஆயுததாரிகள் சிந்திப்பார்களா என்பதே கேள்விக்குறி
The Sunday Times இல் பிரசுரமான கட்டுரையின் மொழிபெயர்ப்பு
14 February 2010
மை நேம் இஸ் கான் இலங்கையில் சாதனை
இத்திரையரங்கின் முகாமையாளர் இத்திரையரங்கில் 3 மணிக்காட்சிக்கான வசூல் சாதனையை நிகழ்த்தியிருப்பதாக கூறுகிறார்.
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
இத்திரைப்படம் உலக அளவில் ஹிந்தி திரைப்படங்களில் முதல் நாள் வசூலில் அண்மையில் நிகழ்த்தப்பட்டிருந்த "3 இடியட்ஸ்" (3 Idiots) இன் சாதனையை மேலதிக 30 வீதத்தால் வீழ்த்தியிருக்கிறது.
காதலை அளக்க ஒரு வழி

♥♥♥♥♥ இன்று காதலர்தினம். இந்த காதலர்தினத்தில் ஒருவர் மீதான உங்கள் காதலை அளந்து பார்க்கமுடியுமா?
ஆம் என்கிறது இந்த இணையத்தளம்.
http://is.gd/8le7H
உங்கள் பெயரையும், நீங்கள் நினைப்பவரின் பெயரையும் கொடுத்து கணித்தால் விடை ஒரு செக்கனில். நீங்கள் அவரை அடிக்கை எங்கு சந்திக்கிறீர்கள் என்பதை சரியாக சொல்வதும் மிக அவசியம் என இந்த இணையத்தளம் சொல்கிறது.
முயற்சித்துதான் பாருங்களேன்..
இதையும் பாருங்க..
மை நேம் இஸ் கான் இலங்கையில் சாதனை
13 February 2010
நம்ம வெற்றி கொடி
வெற்றி FM இலங்கையில் தனியார் தமிழ் வானொலிகளின் கடைக்குட்டி. கடைக்குட்டி என்றால் எல்லாருக்கும் செல்லம் தானே..லோஷன், ஹிஷாம், சந்ரு ( இந்தப்பெயரில் சக்களத்தியும் உண்டு நேயர்கள் கவனம்) ஆகிய தனித்திறமை வாய்ந்தவர்கள் சுவாரசியமாக நிகழ்ச்சிகளை தருவது இதன் முக்கியமா plus point
எப்போதும் நாம் விரும்பும் பாடல்களை தரும் வெற்றிக்கு வித்தியாசமாக நான் தரும் பாடல்..
குஷியாகும் வாடி..
இதுபோல வருமாடி..
நீ ஏற்று நம்ம வெற்றி கொடி.. (00:34)
பாடலை கேட்டு மகிழுங்கள்..
11 February 2010
பொன்சேகா கைதுக்கெதிராக ஆர்ப்பாட்டம் - கொழும்பு
Crowds started dispersing when Police fired tear gas shells. (Photo-Kamal Bogoda)கண்ணீர்புகை - கலைந்தோடும் சனக்கூட்டம் (The Island)
Mrs Anoma Fonseka acknowledges cheers of the crowd after filing a fundamental rights application in the Supreme Court yesterday over her husband General Sarath Fonseka’s arrest and detention.(Photo-Kamal Bogoda)அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்தபின் (The Island)
A pro-Government group, armed with clubs seen shouting slogans at opposition protesters as riot police look on எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி கோஷமிடும் கூட்டம் (Daily Mirror)
An opposition protester seen dragging aside a barricade amidst firing of tear gas by the police. Pics by Samantha Perera கண்ணீர்புகைக்கு மத்தியில் போலிஸ் தடைகளை நீக்கமுயலும் எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டக்காரர் (Daily Mirror)