14 September 2011

முன்னேஸ்வரம் - பௌத்த இனவாத ஜனரஞ்சக அரசியல்


இன்று சிலாபம் முன்னேஸ்வரம் சிறீ பத்திரகாளியம்மன் தேவஸ்தானத்தில் நடக்கவிருந்த மிருக பலி பூஜையை அமைச்சர் மேர்வின் சில்வா இந்திய திரைப்பட பாணியில் தடுத்திருக்கிறார்.

குறிப்பிட்ட மத நடவடிக்கை தொடர்பான இரு பார்வைகள் இருக்கின்றன.

என்ன தான் சிறு தெய்வ வழிபாடு, முன்பிருந்தே வந்தது என்று சப்பைக் கட்டு சாட்டுக்கள் சொன்னாலும் நானூறுக்கு மேற்பட்ட உயிர்கள் ஒரு ஆலயத்தில் வைத்து பக்தி என்ற பெயரில் பலி கொடுக்கப்பட்டது தவறே
என ஒருசாராரும்
Link

இதை காட்டுமிராண்டி கால பழக்கம் என்று யாழ்ப்பாணத்தில் வாழும் "இந்துக்கள்" எதிர்க்கின்றார்கள். இந்து சமூகத்தில் மாறாத சாதீய முரண்பாடு மத வழிபாட்டிலும் புகுந்துள்ளது. எனக்கு தெரிந்த வரையில், யாழ்ப்பாணத்தில் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த மக்களே இன்றைக்கும் சிறு தெய்வங்களை வழிபட்டு வருகின்றனர். ஆதிக்க சாதியினர் பெரும்பாலும் இவற்றை தவிர்த்து வந்துள்ளனர்
என மறுசாராரும் வாதிடுகின்றனர்


எது எவ்வாறிருப்பினும் ஒரு விடயத்துக்கு எதிராக கருத்து தெரிவிப்பது வேறு. அதை அடாவடியாக தவிர்ப்பது வேறு.

"...(நீங்கள் பலியிடும்) கால்நடைகளின் இறைச்சியோ இரத்தமோ அல்லாஹ்வைச் சென்றடைவதில்லை. ஆனால், உங்களின் இறையச்சம்தான் அவனைச் சென்றடையும்" - அல்குர்ஆன் 022:037

அண்மைக்காலத்தில் இச்சடங்கை எதிர்பதற்கான பூர்வாங்க வேலைகளை அரசின் ஏஜன்டுகள் ஆரம்பித்துவிட்டார்கள். மிருகபலியை எதிர்த்து போராடிய நிகழ்வுகளின் படங்களை நீங்கள் இணையத்தில் தேடிப்பார்க்கலாம். இந்நிகழ்வுகளில் பௌத்த மத குருக்களை தவிர்த்து பொதுமக்களில் ஒரு 50 பேரைத்தானும் காணமுடியவில்லை. இன்னும் கலந்துகொண்ட மதகுருமார்களில் அதிகமானோர் சிறார்கள் என்பது இங்கு கவனிக்கவேண்டிய விடயம். அப்படியான நிகழ்வுகள் ஊடகங்களில் எப்படி முதன்மைப்படுத்தப்பட்டன என்ற கேள்வி எழுகிறது.

இவற்றுக்கெல்லாம் முன்னதாக சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஒரு பௌத்த துறவியை மாடொன்று வணங்குவது போன்ற படங்களை நாடளாவியரீதியில் காட்சிப்படுத்த தொடங்கிவிட்டார்கள். நான் இவ்வாறான படங்களை பல அரச அதிகாரிகளின் மேசையின் கண்ணாடிகளில் கண்டிருக்கின்றேன். பல பொலிஸ்நிலயங்களில் இதனை பாதாதைகளாகவும் காட்சிப்படுத்தியிருந்தார்கள்.

இவ்வாறான களத்தயாரிப்புகள் இடம்பெற்றுவந்தவேலையில் இத்தேவஸ்தானத்தில் இடம்பெறும் பலிபூஜையை தடுக்குமாறு மேல்நீதிமறத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிராகரிக்கப்பட்டிருந்தது.
ஆயினும் சிலாபம் மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்திருந்ததாக தெரிகிறது. நாள் குறிப்பிடப்பட்டு நடாத்தப்படும் மதச்சடங்கொன்றிற்கு இடைக்கால தடையுத்தரவு வழங்குவது எவ்வளவுதூரம் சரியான முடிவு என்பது பற்று சட்ட வல்லுனர்கள்தான் சொல்லவேண்டும். நீதிமன்றம் அக்குறிப்பிட்ட தேதியத்தாண்டி அச்சடங்கை தடுக்க முடியாது என்று கூறினால் கூட அடுத்த வருடம்தான் அச்சடங்கை நிறைவேற்ற வாய்ப்புக்கிட்டும்.

மேர்வின் சில்வா போன்ற அரசியல்வாதிகளுக்கு மக்கள் ஆதரவு எப்போதும் இருப்பதிலை. ஆனால் தனது இருப்பை தக்கவைப்பதற்காக பாமர மக்களை உணர்ச்சியூட்டக்கூடிய மதவாதத்தை அவர்பயன்படுத்திவருகிறார். களனி தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டது அவர்செய்த முதல் காரியம் மாட்டிறைச்சிக்கடைகளை மூடியதே. இன்னும் இப்பிரதேசத்தில் உள்ள கிரிபத்கொட நகரில் சிறுபான்மையினர் எவரும் வியாபார நிறுவனங்களை நடாத்தவும் முடியாது. மீறித்திறக்கப்பட்ட விறபனை நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டது. இது சதிவேலையென்ற கருத்து இப்பிரதேசத்தை சேர்ந்த சகலரிடையேயும் இருக்கிறது.

இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெற்றபோதெல்லாம் சகல தேசிய ரீதியான ஊடகங்களும் மௌனம் சாத்தித்து வந்துள்ளன. இவர் இப்பிரதேசத்திலசில மரக்கறிகளின் விற்பனையையும் தடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்க விடயம். ஆனால் இவர் மதுபான விற்பனைக்கு தடை விதித்தபோது சகல ஊடகங்களும் வரிந்து கட்டி அரசை தலையிடச்செய்தன. செய்திகளை முக்கியத்துவப்படுத்துவதில் முதலாளிவர்க்கத்தின் பங்கை இச்சம்பவம் சுட்டிக்காட்டியது.

ஆனால் இங்கு இருக்கும் மிகப்பெரிய நெருடல், தூய பௌத்தத்தை வலியுறுத்தும் இவ்வாறான சக்திகள் மிகப்பிரபலமான பௌத்த துறவிகளின் பாலியல் நடவடிக்கைகள் தொடர்பாக மௌனம் சாதிக்கிறார்கள் என்பதே

09 September 2011

நண்பன் மருதமூரான்! அவரது பாணியில் ஒரு முயற்சி!!

இலங்கையின் பல்வேறுபட்ட தலைப்புகளில் எழுதும் பதிவர்களில் முதன்மையானவர்களில் ஒருவர் பெயர் சொல்ல சொன்னால் உங்களுக்கு கட்டாயம் மருதமூரானாகிய புருஜோத்தமன் தங்கமயில் ஞாபகம் வருவார்.

மருதமூரானை பற்றி பேசுகையில் பெண்களைப்பற்றி பேசாமல் இருக்க முடியாது. பேஸ்புக்கில இவரது ஸ்டேட்டஸ்கள் எப்போதும் ஒரு செய்தியை சொல்லும்.

அண்மையில் அவர் பதிவுகளில் நிறைய பெண்களை பற்றி இருக்கிறது. பெண்களின் சுதந்திரம் அழகு பற்றி நிறைய பேசுகிறார். அது நாம் அவரை நெடுங்காலமாக பின்தொடர்வதால் அவரது போக்கில் வித்தியாசமாக தெரிகிறது.

பெண்களைப்பற்றி பேசுவது தப்பா என்று நீங்கள் கேட்கக்கூடும். நிச்சயமாக இல்லைதான். வாழ்க்கையில் ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. ஒரு பெண்ணின் அங்கீகாரம் தேவைப்படுகிறது. பேஸ்புக்கில் நாம் சந்திக்கும் பெண்களில் சிலரது மேதமை எம்மை பிரம்மிக்க வைக்கிறது. தைரியம் பிடிக்கிறது. நம்மை அறியாமல அவர் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. அது எப்போது ஆரம்பித்தது என்று கேட்டால் சரியாக சொல்ல தெரிவதில்லை. நாம் உணர்வதை சரியாக குறிப்பிட்ட பெண்ணுக்கும் நாம் சொல்வதுமில்லை.

பேஸ்புக் காதல்கள் நிறைய இடம்பெறுகின்றன. அதனால்தான் நிறைய ஆண்கள் அங்கு அக்டிவ் ஆக இருக்கிறார்கள். என்னைக்கேட்டால் உங்களுக்கு ஒரு பெண்ணைப்பிடிக்க ஒரு பரிமாணம் போதுமாக இருக்கலாம். ஆனால் பெண்களுக்கு அப்படியல்ல. புத்திசாலி பெண்களுக்கு முப்பரிமாணமும் தேவைப்படுகிறது. ஆக பேஸ்புக் ஸ்டேட்டஸ்களால் நாம் பிரம்மித்த பெண்ணை நெருங்கமுடியாது என்பது என நான் நினைக்கிறேன். இருந்தாலும் அவர் முயற்சி தொடரட்டும்.. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். அது வேறுகதை.

மருதமூரானின் பெண்கள் பற்றிய பதிவுகள் எப்போதும் அவரை கலாய்ப்பதற்கு எனக்கொரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும். அதில் ஒரு சந்தோஷம். சிலநேரம் ரொம்ப சூடாக ஏதவது சொல்லிவிடுவார். என்னதான் இருந்தாலும் கருத்து சுதந்திரத்தில் அதிக நம்பிக்கை உடையவர். நான் நினைக்கிறேன் அதனால்தான் பிரண்ட் லிஸ்ட்டில் இன்னமும் என்னை வைத்திருக்கிறார் என்று.

அந்த நன்பண் இப்போது வடக்கு கிழக்கில் சுற்றிக்கொண்டிருக்கிறார். அவருக்கு அங்கு பல பெண்களின் அழகு பற்றிய தெளிவுகிடைக்கும். அவர் விரைவில் செட்டில் ஆக வேண்டும் என விரும்புகிறேன்.. பெஸ்ட் விசஸ் நண்பா..

06 September 2011

கொலையாளிகளை மன்னிக்கும் உரிமை படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர்களுக்குத்தான்

தினமலரின் ராஜிவ் கொலையும் சொல்ல மறந்த கதையும் என்ற கட்டுரையில் இருந்த பின்னூட்டங்களில் சில. பின்னூட்டங்கள் சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட கருத்தாகும்.

மன்னிப்பு சிறந்தது என்பதும், அந்த மன்னிப்பை வழங்கவேண்டியது பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரே என்பதும் நமது கருத்தாகும்.

இறக்கப்போவது மனிதன் என்றால் இறந்தது மனிதன் இல்லையா ?
Sri Krishnan - Chennai,இந்தியா
எனக்கு ஓன்று புரியவில்லை தமிழர்களாய நம்மை போன்று இப்படி Emotional Idiot யை வேறு எங்கும் காணமுடியாது.கீழ் கோர்ட் இல் இருந்து சுப்ரீம் கோர்ட் வரை தீர விசாரித்து தண்டனை வழங்கி ,கருணை மனுவும் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்ட பின்னும் இப்படி வெற்று கூச்சல் போடுவது மிகவும் அநியாயம்.வன்மையாக கண்டிக்கத்தக்கது
A.SESHAGIRI - TUTICORIN,இந்தியா
கட்டுரை மிக மிக அருமையாகவும், சிந்திக்கும்படியாகவும் இருந்தது. கொலையாளிகளின் மீது கருணை காட்டு வதை விட்டு விட்டு, கொல்லப்பட்ட அப்பாவிகளுக்காக கருணையும் இரக்கமும் காட்டுங்கள் ! கொலையாளிகளை மன்னிக்கும் உரிமை ஜனாதிபதிக்கோ , நீதி மன்றத்திற்கோ , வேறு யாருக்கும் கிடையாது. அவர்களின் மன்னிக்கும் உரிமை அவர்களால் ஈவு இரக்கமில்லாமல் படுகொலை செய்யப்பட்டர்களே அவர்களின் குடும்பத்தினர்களுக்குத்தான் உண்டு.

Hajji mohamed Hidayathullah - alqassim,சவுதி அரேபியா


மிகவும் அருமையான கட்டுரை. அரசியலில் பிழைக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனையை எடுத்து மக்களை முட்டாள்களாக்கும் அரசியல்வியாதிகளை உள்ளே தள்ள இப்போது பொடா இல்லாமல் போனது வருத்தமே! இந்திய சட்டப்படி குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டு பிறகு கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டவர்களுக்காக வீதியில் இறங்கி தமிழர்கள் போராடுவது தமிழினத்திற்கே அவமானம். அவர்கள் ஏற்கனவே 20 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டனர் என என்னவோ தியாகிகளைப் போல பேசுகிறார்கள். இவர்களின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டா விட்டால் இன்னும் பல தீவிரவாத இயக்கங்கள் துளிர் விடும். என்ன செய்தாலும் உயிர் போகப்போவதில்லை என்ற எண்ணமே மேலிடும். ஒரு நாட்டின் பிரதமரையே கொன்றவர்களுக்கு கருணை மனு அளித்ததே தவறு. இவர்களை 1999-லேயே தூக்கிலிட்டு இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். 11 வருடங்களாக அமைதியாக இருந்தவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்வதன் அவசியம் என்ன? இவர்களது கருணை மனுவை நிராகரித்த மு க இன்று அவர்களை விடுதலை செய் என்று சொல்வதன் மர்மம் என்ன?

குஜராத்தில் 2000 க்கும் அதிகமான மக்களை கொன்ற தீவிரவாதிகளுக்கு என்ன தண்டனை அல்லது விசாரணைதான் என்ன?
prakash - chennai,இந்தியா
ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டவர்களின் சொந்தகாரர்கள் வாதம் மட்டுமே பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது. குண்டு வெடிப்பில் இறந்தவர்களின் குடும்பத்தினர் கருத்துகளைய்ம் கேட்க வேண்டும் . அவர்களும் தமிழ்நாட்டை சேர்ந்த தமிழர்கள் தான். அவர்களுக்காக எந்த அரசியல்வாதியும் இல்லையா? அவர்களின் பாதிப்பை பத்தி இவர்களுக்கு கவலை இல்லையா?
Divaharan - Tirunelveli,இந்தியா

இந்த வைகோ பழ நெடுமாறன் ராமதாஸ் திருமாவளவன் சீமான் கலைஞர் இவரர்கள் எப்பவாவது இலங்கை அகதி முகாம் சென்று பார்திருகிரர்களா. அகதிகளில் நன்கு படிக்கும் குழந்தைகளை தத்து , கட்சி சார்பவது தத்து எடுத்து எத்தனை குழந்தைகளை வளர்கிறார்கள். பதில் சொலுங்கள்.தலைவர்கள் பதில் சொல்லுங்கள். எல் டி டி இ தலைவர் மற்ற இயகங்களை ஒழிக்காமல் இருந்து எல்லாரையும் அரவணைத்து i p k f உடன் போரிடாமல், ராஜீவ் வை கொல்லாமல் இருந்திருந்தால் நம் இந்தியாவில் தமிழ் நாடு எப்படி ஒரு மாநிலமாக இருக்கிறதோ அது மாதிரி தமிழ் ஈழம் இந்தியாவின் ஒத்துழைப்புடன் ஒரு மாநிலமாக கிடைத்திருக்கும். எல்லாம் பிரபாகரன் சர்வதிகார போக்கு காரணம் சரியா தவறா.
vaiyapuri - coinbatore,இந்தியா

ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமென்றால் இது 'true eye opener ' . Best wishes தினமலர்..
Mukund GS - Wellington,நியூ சிலாந்து

இந்திய முழுவதும் ,,,,,,,வேண்டாம் ,,தமிழ் நாட்டில் தீர்கபடாத பிரச்சனைகள் பல உள்ளன ,,,, பேருந்து கட்டணம் சில நாட்களுக்கு முன்பு விலை அதிகம் ஆக்க பட்டு உள்ளது ,,,,கல்வி சாலைகளில் கட்டணம் மறை முகமா உயர்ந்து உள்ளது ,,கொலை கொள்ளை சொல்ல தேவை இல்லை ,,,நில அபகரிப்பு குறைய வில்லை ,,,,கேரளா ஆணை கட்டுவதை தடுத்து நிறுத்த நம்மால் முடிய வில்லை ,,விலை வாசி ஏற்றம் குறைய வில்லை ,,,,,இது போன்று பல பிரச்சனைகளை நம் சொல்லலாம் இதை கண்டித்து போராட்டம் நடத்தினால் தோல்வி அடைந்த கட்சி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது
Babu. M - tirupur,இந்தியா

விடுதலை புலிகள் செய்த கொலைகளுக்கு கணக்கே கிடையாது. இருபது வருடங்களுக்கு முன் தமிழ் பேசும் முஸ்லிம்கள் அனைவரையும் தமிழ்ப் பிரதேசங்களான வடகிழக்கு மாகனங்களிளிருந்து புலிகள் எல்லாவற்றையும் பறித்துக்கொண்டு விரட்டியபோது யாரும் மனிதாபிமானம் காட்டவில்லை. அதைப்பற்றி எந்த தமிழ் பத்திரிக்கையிலும் போடப்படவில்லை. எப்படித்தான் இந்த வைகோ , சீமான், நெடுமாறன், ராமதாஸ், கருணாநிதி , போன்றோருக்கு நீதி உணர்வு மனிதாபிமான உணர்வு வருகிறதோ தெரியவில்லை.


04 September 2011

எக்சார் வீடியோ

பதிவுலக வரலாற்றில்...
முதன் முறையாக..
மெகா ஹிட் ஆகப்போகும் வீடியோ..
இப்பொழுது..
நமது எக்சாரில்..