02 June 2010

IIFA இல் தமிழ் திரையுலகின் கபடம்


இலங்கையில் நடைபெறவுள்ள இந்திய திரைப்பட விழாவான IIFA பல எதிர்ப்புகளை கடந்து நாளை ஆரம்பமாக இருக்கிறது.

The International Indian Film Academy (IIFA) Awards, are presented annually by the International Indian Film Academy to honour both artistic and technical excellence of professionals in Bollywood, the Hindi language film industry. Instituted in 2000, the ceremony is held in different countries around the world every year.

இலங்கையில் தமிழர்கள் துன்புறுவதாக கூறி தமிழ் நாட்டு திரையுலகம் இவ்விழாவையும் பங்குபற்றுபவர்களையும் பகிஷ்கரிப்பதாக அறிவித்திருக்கிறது.

இது தொடர்பாக சில கேள்விகளை நான் உங்களிடம் முன்வைக்கிறேன்..

இலங்கையில் தமிழர் துன்பத்திற்கு கவலைப்படும் தமிழ் சினிமா அமைப்புக்கள் ஏன் இலங்கையில் இசை நிகழ்ச்சி நடாத்தும் இந்திய ஜூனியர் சீனியர் யாரையும் கண்டுகொள்வதில்லை?
சிங்கம் சுறா ஆகிய படங்கள் இலங்கையில் திரைடப்படுகின்றன. இலங்கை வாழ் தமிழ் மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றம் என்ன? இதன்மூலம் இலங்கை தமிழர்களுக்கு என்ன லாபம்?

இந்திய தமிழ் சினிமா துறை இலங்கை தமிழர்களிடம் தனது பொருட்களை சந்தைப்படுத்துகிறது. அதன்மூலம் பிச்சைகாரனிடம் மாமூல் வாங்கும் பொலிஸ் போல் நடக்கிறது .

மாறாக இனால் அபிவிருத்தியடையப்போகும் சுற்றுலாத்துறை, அதில் பாதிக்கும் அதிகமாக இருக்கும் தமிழர்களின் வருமானத்தை அதிகரிக்கும். இன்னும் பல சிறுவர் போராளிகளுக்கு புனர்வாழ்வையும் வீடுகளை இலந்தவர்கட்கு வீடுகளையும் அளிக்கும். இவற்றை தடுப்பதன்மூலம் தமிழ் சினிமா உலகம் சாதிக்க நினைப்பது என்ன?

No comments:

Post a Comment

எனது வலைப்பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கு நான் எக்காரணம் கொண்டும் பொறுப்பாளியாகமாட்டேன் என்றும் இவை என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை பிரதிபலிக்காது என்பதையும் ஞாபகமூட்டுகிறேன்.