இச்செய்திகளில் அடிக்கடி வரும் வசனம், "அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்" என்பது. யார் அந்த அரசியல் ஆய்வாளர்கள் என்று தேடினால்
அது அந்த "இந்தவகையில்" புகழ் மின்னல் ரங்கா என ஆங்கிலப்பத்திரிகை ஒன்று தோலுரித்துள்ளது. இந்த "இந்தவகையில்" கூட தனது கட்சிக்கும் ஒரு தேசியப்பட்டியல் கேட்டுச்சாம். ஆனால் அந்த கட்சிக்கு ஒரு பிரதேச சபை உறுப்பினர் கூட இல்லையாம். எப்பிடி இருக்குது கத?
பூனை இளைச்சா எலிக்கு மச்சாள் முறையாம் எம்பாங்க.. அதமாதிரி ஐதேக தோற்க, நேத்து முழச்ச காளான் எல்லாம் விருட்சம் எங்கிறாப்பல இருக்கு. தானே அரும்பொட்டுல தெரிவாகியிருக்கிற நிலையில தேசியப்பட்டியல் ஒரு கேடு!
"இந்தவகையில்"க்கு தேசியப்பட்டியல் கிடைக்காத நிலையில்; தானும் ஒரு கட்சித்தலைவர், எனக்கும் பாராளுமன்றத்துல முன்வரிச ஆசனம் தர வேணும் எண்டும் அடம்புடிச்சுதாம். ஆனா அத கூட ஐதேக தலைமை கவனிக்கலயாம்.
இந்த ஆத்திரம்தான் அரசியல் ஆய்வாளரா தன்ன நினச்சிக்கொண்டு ஒருகட்சியின் பிரச்சினைய முக்கிய செய்தியா ஆக்கிருக்கு. இப்பவே தனக்கிருக்கிற பதவி அதிகாரம் எல்லாத்தையும் வெச்சி மக்கள ஏமாத்துறது, அமைச்சரானா எப்படி இருக்கும்?
இவருக்கு ஒரு தேசியப்பட்டியலும், முன்வரிசை ஆசனமும் குடுத்திருந்தா இன்னேரம் ரணில தலையில தூக்கி வைச்சு ஆடியிருக்கும்.
No comments:
Post a Comment
எனது வலைப்பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கு நான் எக்காரணம் கொண்டும் பொறுப்பாளியாகமாட்டேன் என்றும் இவை என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை பிரதிபலிக்காது என்பதையும் ஞாபகமூட்டுகிறேன்.