17 June 2009

தேன் தமிழின் வித்தியாசமான சட்டங்கள் : என் கேள்விகளும் comments உம்


தேன் தமிழ் இல் வித்தியாசமான சட்டங்கள் ; விபரீதமான சம்பிரதாயங்கள்...! என்ற பெயரில் ஒரு பதிவு வந்திருந்தது.. அதுக்கு comments போடுவதைவிட பதிவாகவே போடலாம் என்று இந்த முயற்சி..

தேன் தமிழ் அந்த சட்டங்களுக்கு காரணத்தையும் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. அவர் சொன்னதில் ஏதாவது புருடா இருந்தால் அவரிடம் கேட்டுக்கொள்ளவும்.

//பால்டிங் நகரில் குரைக்கும்நாயை அடக்க சட்டப்படிபோலிஸ்காரர் நாயைஅடிக்கலாம்.//
அடிச்சா நிறுத்துமா?

//கோர்ர்ன் ஐஸ்கிரிமை சட்டைப் பையில் கொண்டு செல்வது தடை செய்யப்படடுள்ளது.//
முதலில் அதை எப்படி சட்டை பையில் கொண்டுசெல்வது என்று சொல்லுங்கப்பா

//கன்னிப் பெண்கள் ஞாயிற்று கிழமைகளில் பரசூடிலிருந்து குதிப்பது சட்ட விரோதமானது//
எப்படி தெரியுமாம்?

//ஒரு பெண் ஆணின் படத்துக்குஎதிரே ஆடைகளை களைவது சட்டவிரோய்தமானது .//
ஆணுக்கு முன் முடியுமா?

//பெண் மேலாடை இல்லாமல்இருப்பது சட்ட விரோதமானதாகும். ஆனால் மீன் அங்காடியில் உள்ளபெண்களுக்கு மட்டும் விதிவிலக்கு.//
மீனுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்? liver pool fish market என்று google இல் தேடினால் அப்படி ஒரு படமும் வரவில்லையே? புருடாவா இருக்குமோ?

//இரயில் பாதையில் இரண்டு இரயில்கள் சந்தித்தால்இரண்டும் நின்று, பிறகு புறப்பட்டு செல்லும் .//
எங்க நாட்டுலையும் அப்படிதான்.. நிற்கும் accident ஆகி

//இங்கிலாந்தில் பாராளுமன்றத்தில் இறப்பது சட்ட விரோதமானது.//
மரணத்துக்கு சட்டம் போட்ட புத்திசாலி யாருங்க?

இஸ்ரேல் சட்டங்களை (மூக்கை குடைவது , முட்டையிடுவது) கேட்கும் போது ஐன்ஸ்டீன் இருந்த தேசத்திலையா என்று கேட்க தோணுது..

//மக்கள் உள்ளாடை இல்லாமல் வெளியே செல்வது சட்டவிரோதமானதாகும்.//
எப்படி check பண்ணுவாங்க?

மீண்டும் சொல்கிறேன் தேன் தமிழ் சொன்னதில் ஏதாவது புருடா இருந்தால் அவரிடம் கேட்டுக்கொள்ளவும்.

6 comments:

  1. ஐயையோ இதை நான் சுயமா யோசிச்சு எழுதல. எதோஒரு ஆங்கில பேப்பரில வந்த்ததை தமிழ்ல மாற்றி பதிவா போட்டேன். இது போன வருசம்(22 September 2008) எழுதினது.எனக்கு எந்த பேப்பர் என்ரு கூட ஞாபகம் இல்லை.ஞாபகம் வந்தா சொல்லுறன் அந்த பேப்பர் ஆசிரியரிடம் கேளுங்கோ????

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. இதைத் தான் சொல்றது மற்றவனின் பந்தியிலே பாயாசம் குடிப்பது என்று.. ;)

    அந்த மனுஷன் கஷ்டப்பட்டு ஒரு பதிவை translate பண்ணிப் போட்டா அதை வச்சு நீங்க ஹிட் தேடுறீங்க...

    நல்லா இருங்கடே.. ;)

    என்ன கொடும சார்.. (பெயர்ப் பொருத்தம் சூப்பர்...)
    என் நண்பன் ஒருத்தனும் உங்களைப் போலவே தான்.. உங்களுக்கு தெரிஞ்சவர் இல்லை.. ;)

    ReplyDelete
  4. நன்றி லோஷன் அண்ணா ஆதரவிற்கு.

    ReplyDelete
  5. LOSHAN said...
    //மற்றவனின் பந்தியிலே பாயாசம் குடிப்பது //
    அப்படி பார்க்கப்போனால் 100% ஆன பதிவர்கள் எல்லாம் அதை தான் செய்கிறார்கள்.

    யாரோ சைலன்ஸ் சொல்ல, யாரோ கஷ்டபட்டு கிரிக்கட் விளையாட, யாரோ sms அனுப்ப, எதோ ஒரு பத்திரிக்கை பிரசுரிக்க.. ஏன் சொந்த அனுபவமாக இருப்பினும் அந்த யாரோ இறைவனாக இருக்கிறது.. இல்லையா?

    மற்றப்படி இது என் கேள்விகளும் என் commentsகளும் மட்டுமே.. திருட்டு அல்ல.. என் சிந்தனைகள் எனக்கு தானே சொந்தம்.. அதற்குதானே HITS வருகிறது..

    HOW IS THAT? :-D :-D

    ReplyDelete
  6. நான் சொல்லவில்லையே இதை திருட்டு என்று. கருத்து கூறுவது என்பது அவரவரது சுதந்திரம். அதைதானே நீங்கள் செய்தீர்கள். அவற்றில் சில அந்த நாடுகளில் இன்றும் பழக்கத்தில் இருக்கின்றனவா என்பது எனக்கு தெரியாது. நமது யாழ்ப்பானத்தில் பல ச்ம்பிரதாயங்கள் இருக்கின்றன. அவற்றைப்போலவே இவையும் இருக்கலாம்.

    ReplyDelete

எனது வலைப்பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கு நான் எக்காரணம் கொண்டும் பொறுப்பாளியாகமாட்டேன் என்றும் இவை என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை பிரதிபலிக்காது என்பதையும் ஞாபகமூட்டுகிறேன்.