31 December 2008

பெட்ரோல் விலை 122 ரூபாவால் குறைப்பு



நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசாங்கம் உயர் நீதிமன்றத்தை மதிதுள்ளது தெளிவாகிறது..
அது எப்படி என்றா கேக்கிறீங்க?
முச்சக்கர வண்டிகளுக்கு 20 ரூபா குறைப்பு
மற்றவர்களுக்கு 2 ரூபா குறைப்பு
இரண்டையும் கூட்டினா? (20+2=22)
இப்ப புரிஞ்சுதா ?

30 December 2008

இலங்கையில் அதிகம் பார்க்கப்பட்ட இணையங்கள்

இலங்கையில் அதிகம் பார்க்கப்பட்ட இணையங்கள். அவற்றை வரிசைப்படி பார்ப்போமா?
1) Yahoo!
2) Google.lk
3)Google
4)Facebook
5)YouTube
6)Windows Live
7)Blogger.com
8)Microsoft Network (MSN)
9)Wikipedia
10)Elakiri.com
முதல் பத்துக்கு வராத சில இணையங்கள். (அடைப்புக்குள் தரப்பட்டிருப்பது இலங்கையில் அவற்றின் தர வரிசை.
Hi5 (13)
Cricinfo (15)
இலங்கையர் அதிகம் பார்த்த முதல் பத்து இலங்கை இணையங்கள்
1) Elakiri.com (10)
2) Defence.lk(14)
3) DailyMirror.lk (17)
4) Lankaenews.com (23)
5) Dialog.lk (24)
6) Topjobs.lk (27)
7) பெயர் குறிப்பிட பட முடியாதது - 18 வயதுக்கு மேட்பட்டோருக்கானது (28)
8) Lankadeepa.lk (33)
9) wow (34)
10) Sltnet.lk (35)



இந்த இணையங்கள் எவற்றை பற்றி என்பதை அறிய சென்றுதான் பாருங்களேன்.. (தரவுகள் அலேக்க்ஷா இணையத்தளம்.)
இந்த ஆண்டுக்கான சிறந்த அறிமுக இணையத்துக்கான தேர்வுக்கு www.nestdreams.com/ சமர்பிக்க பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த இணையம் இலங்கையில் வீடு, காணி தொடர்பான இலவச விளம்பர சேவையை வழங்குகின்றது. வாங்குதல், விற்றல், வாடகை போன்ற தேவைகளை இனிதே நிறைவு செய்கின்றது. இந்த இணையம் தொடங்கப்பட்டு சில நாட்களிலேயே Mobile Phone க்கான version ஒன்றையும் வெளியிட்டது. (http://www.nestdmobile.info/) இதன் மூலம் அதன் சேவைகள் ஒவ்வொரு இலங்கையரையும் சென்று அடைகிறது.

25 December 2008

சிலம்பாட்டம்


சிம்புவின் படங்களை எப்போதும் நான் தியேட்டர் ல பாக்கணும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.

அதே நம்பிக்கையில் சிலம்பாட்டம் பார்க்க போனேன்.. முதல் சீனே காளை part 2 என்று சொல்லிற்று.. அந்த நம்பிக்கையை படம் முடியும் வரை பொத்தி பொத்தி பாதுகாத்திருக்கிறார்கள்.

தாவதாரம், பில்லா போன்ற படங்கள் சிம்புவுக்கு பிடித்திருக்க வேண்டும். அப்படியே சில சீன்களை காப்பியடித்திருக்கிறார்.

படத்தில் இனி வரும் மொத்த தமிழ் சினிமாவும் பின்பற்றவேண்டிய முன்னுதாரணம் ஒன்றும் இருக்கிறது. வழக்கமாக பாடல்களில் பெண்கள் மட்டும் டிக்கியை ஆட்டும் பிற்போக்கு தனத்தை எதிர்த்து ஆணும் பெண்ணும் சரி நிகர் சமன் என்று அடித்து சொல்லும் விதமாக ஆண்களும் தங்கள் டிக்கியை ஆட்டுகிறார்கள். என்னே முன்மாதிரி. தமிழ் சினிமா உருப்படும் இனி.

இனி விஜய குமார் பென்ஷன் வாங்கிட்டு வீட்ல இருக்கலாம். பிரபு அந்த ரோல் க்கு அட்வான்சே கொடுத்து புக் பண்ணியிருக்கிறார்..
படம் ஆரம்பித்ததிலிருந்து where is the party பாட்டு எப்படி இந்த படத்தில் வரும் என்று மண்டையை பிய்க்காத குறையாக யோசித்து கொண்டிருந்த எனக்கு அந்த பாடலை உள் நுழைக்க இயக்குனர் கையாண்ட சமயோசிதம் புல்லரிக்க வைத்தது..
மத்தபடி படத்துல பெருசா கத இல்ல.. இயக்குனர் பேரரசு ஒரே கதைய வச்சு வித்தியாசமான நடிகர்களை பயன்படுத்தி ரசிகர்களை ஏமாத்துறவரு என்று ஹிஷாம் சொன்னதுக்கு மறுதலிப்பாக இந்த பட இயக்குனரும் பழைய கதைய வச்சு வித்தியாசமான நடிகர்களை பயன்படுத்தி ரசிகர்களை ஏமாத்த நினைத்திருக்கிறார்..

ஆனா என்ன இருந்தாலும் சிம்புவின் படங்களை எப்போதும் தியேட்டர்ல பாக்கணும் என்ற என் அசையாத நம்பிக்கைக்கு பங்கம் வரவில்லை..

ஏன்னா ....

இந்த படத்த குடும்பத்தோடு பார்த்தா செருப்பு அடி நிச்சயம்!

24 December 2008

ROBIN HOOD அரசாங்கம்











பெட்ரோல் விலை பத்தி ஒரே வாத பிரதிவாதம்.. அதுல ஒரு கருத்து என்ன கொடும சார் ரகம்..





பெட்ரோல் விலை சாதாரண மக்களை பாதிப்பதில்லை.. அது Bens car, Pajero போன்ற வாகனங்கள் ஓடும் பணக்காரங்களுக்கு மட்டும் தான்.. இந்த அரசாங்கம் ஒரு ROBIN HOOD மாதிரி.. பணக்காரங்க கிட்ட கொள்ளையடிச்சி ஏழை பாளை மக்களுக்கு ரோடு, படிப்பு எல்லாம் செய்யிது





மேலே உள்ளது தான் என்ன கொடும சார் ரகம்.. ஏதோ பணக்காரங்களுக்கு கடவுள்ற கஜானால இருந்து பைப் வழியா பேங்க் அக்கௌன்ட் க்கு காசு வாறமாதிரி பினாத்துறாங்க.. அவன் அவன் பணக்காரன் ஆவது சாதாரண மக்களை சொரன்டித்தான் என்பது எப்படி உங்களுக்கு தெரியாம போகும்.. உங்களுக்கு அதுல அனுபவம் இருக்கு இல்ல.. (படிப்பு இல்லாட்டியும்)



22 December 2008

நவீன தொடர்பாடல் தொழிநுட்பமும் பெட்ரோலும்














நவீன தொடர்பாடல் தொழிநுட்பத்தை உபயோகிப்பதில் இலங்கை எப்போதும் முன்னோடியாகவே இருக்க விளைந்திருக்கிறது. இதற்கு இலங்கையின் கல்வியறிவு வீதம் எப்போதும் உதவியே வந்திருக்கிறது..

அண்மைக்காலமாக, அதாவது மேதகு மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பதவியேற்றபின் அசுர முன்னேற்றம். பல அரச நிறுவனங்கள் இணைய பக்கங்களை திறந்தன. கிழக்கு மாகாணத்திற்கு கூட ஒரு இணையம் கடந்த மாகாண சபை தேர்தல் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. 1919 என்ற அரச தகவல் சேவை ஆரம்பிக்கப்பட்டதும் ஒரு மைல் கல்லாகும்.

இந்த இணையங்களை வடிவமைப்பதில் சில பணக்கார பையன்கள் தான் ஈடுபட்டு சம்பாதித்தார்கள் என்ற முணுப்புகள் கேட்டாலும், இது எல்லாம் சகஜம் என்ற மன நிலை இலங்கையர்களில் மிகப்பெரும்பான்மை ஆனவர்களுக்கு இருப்பதாலும், யார் குற்றினாலும் அரிசி ஆனால் சரி என்பதாலும் அவை பற்றி பெரிதான அலட்டல்கள் இல்லை.

இவ்வாறான நிகழ்வுகளால் இலங்கை பிராந்தியத்தில் நவீன தொடர்பாடல் தொழிநுட்பத்தில் முதன்மை வகிக்கிறது என்ற மிதப்பில் தான் இருந்தோம்.

இவ்வாறான சந்தர்பத்தில் பெட்ரோல் விலை தொடர்பான வழக்கின் தீர்ப்பும் மிக குறுகிய நேரத்தில் சகல நவீன தொடர்பாடல் தொழிநுட்பங்களையும் பயன்படுத்தி மக்கள் அனைவரையும் சென்றடைந்தது. தொலைக்காட்சி வானொலி முதல் sms வரை இந்த செய்திக்கு முக்கியத்துவம் அளிக்கபட்டு செய்தி மொத்த நாட்டு மக்களையும் சென்றடைந்தது.

ஆனால் கடந்த புதன் கிழமை வெளியான தீர்ப்பு இதுவரை அமைச்சரவையை சென்றடையவில்லை.

பாமர மக்கள் "ஏன் தீர்ப்பு courier மூலம் அனுப்பபடவில்லை' என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு இந்நிகழ்வு மூலம் தபால் துறை தொடர்பான அவ நம்பிக்கை மேலும் வலுப்பெறுகிறது.

.......................................................................................................

ஒரு பத்திரிகையில் கார்டூன்..

ஜனாதிபதி கேட்கிறார்
தபால்காரரிடம்
"என்ன இண்டைக்கும் கடிதம் இல்லையா"

......................................................................................................

இலங்கை நிகழ்வுகள் தொடர்பான கார்டூன்களுக்கு http://srilankanewspapercartoon.blogspot.com/

19 December 2008

என்ன கொடும சார்


உலகை படைத்த இறைவனை நினைத்தவனாக ,
என்ன கொடும சார் வசனத்துக்கு முழு உரிமை உள்ள பிரேம்ஜி க்கு நன்றி செலுத்தியவனாக (அவர் அதற்கு patent right வைத்திருந்தால் என் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்காமலிருப்பட்காக இந்த ஏற்பாடு ) இந்த வலைப்பூவை ஆரம்பிக்கின்றேன்.
இதில் என் மனதை தொட்ட சில கொடுமைகளை பதியலாம் என்றுநினைக்கின்றேன். ( கொடுமை என்றால் என்ன என்று பிரேம்ஜி இன் அகராதியில்அர்த்தம் பார்க்கவும்). முகம் காட்டாமல் இருப்பது என்னுடைய மற்றும்என்னுடைய நண்பர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு நல்லதாகயால், நான்எப்போதும் அண்ணா என்று அழைக்கும், என்னது இன்னொருபக்கத்தை எனக்கு இனங்காட்டிய ஊக்கமளித்த அண்ணாவுக்கு அவர் பெயரை குறிப்பிடாமலேஎனது நன்றியறிதலை இச்சந்தர்பத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்று முதல் சந்தர்பங்கள் கிடக்கும் போதும் நிகழ்வுகள் நிகழ்ந்தேறும் போதும்இதில் பதிவு இடப்படும். அதை வாசித்து என்ன கொடும சார் என்று புகழ்ந்தோ இகழ்ந்தோ சொன்னால் இவ் வலை பதிவு ஜன்ம சாபல்யம் பெறும்.

பெட்ரோல் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பும் அமைச்சரவையும்

பெட்ரோல் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பும் அது தொடர்பான அமைச்சரவை தீர்மானமின்மையும் முரண்பாடுகளும் ஊடகங்களுக்கு இந்த வாரத்துக்கு நல்ல தீனி. வெற்றி FM இல் தொடர்ந்தேச்சயாக "நேற்றைய நாளின் நிஜ பிரபலமாக" அது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு தொடர்ந்தேச்சயாக தேர்ந்தெடுக்கபடுவதில் இருந்து அது ஒபாமா அளவுக்கு பேசு பொருளாக மாறியிருப்பது தெரிகிறது.

இன்று காலையில் "முள் பிட்டுவ" நிகழ்ச்சியில் ஒரு சிங்கள பத்திரிகையில் வெளியான கார்டூன் ஒற்றை பார்க்க நேர்ந்தது. அதில்

ஒருவர் : பெட்ரோல் விலையை குறைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதும் முச்சக்கர வண்டி சாரதிகள் பட்டாசு கொளுத்தி கொண்டாடினார்களாமே?

மற்றவர் : பட்டாசு காசு அநியாயம்!

..............................................................................

இதே போல் இன்னொமொரு செய்தி சிங்கள பத்திரிகையில் . அதுவும் "முள் பிட்டுவ"வில் கேட்டதுதான்!

ஜனாதிபதி, அமைச்சர்கள் சிரச டிவி இல் நடக்கும் ஒரு கேள்வி நிகழ்ச்சியில் பங்குபெறுவதை தவிர்க்குமாறு கட்டளையிட்டிருக்கிறார். இந் நிகழ்ச்சியில் பிரபலங்கள் 5 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவர்களுடன் சேர்ந்து புலமை பாரிசில் பரீட்சை தரத்திலமைந்த கேள்விகளுக்கு பதிலளிக்கவேண்டும். இதில் அமைச்சர்கள் 2, 3கேள்விகளுக்கு மேல் மேல் பதில் தெரியாமல் வெளி ஏறியதை தொடர்ந்து மக்கள் அமைச்சரவையில் இருப்பவர்களுக்கு 5 ஆம் வகுப்பு அறிவு கூட இல்லை என்று பேசுவதால் அவ்வாறான கேலிக்கு உள்ளாவதை தவிர்க்கும் முகமாக இவ்வாறான கட்டளை இடப்பட்டதாக அப்பத்திரிகை சொல்லிற்று.