03 April 2011

உலக கிண்ண எரிச்சல்கள் 2

உலககிண்ண இறூதிப்போட்டிகளின் முடிவுகளின்பின் பல விடயங்களில் எரிச்சலாய் வருகிறது. ஒரு பதிவுக்குரிய வசனநடையில் எழுத மூட் இல்லாததால் குறிப்புகளாக..

1. 50 ஓவர் வரை போட்டி நடக்கும் என்று சங்கக்கார கணித்து கடைசி நேரத்திற்கு மாலிங்கவினதும் முரளியினதும் விக்கட்டுகளை மிச்சம் பிடித்தது.

2. போட்டிகளை காணச்செல்லும் அரசியல்வாதிகள். 2007 இற்கும் 2011 இற்கும் ஒருவரது ராசிதான் காரணமோ..

3. அடிக்கடி அமீர்கானை காட்டிய தொலைக்காட்சி. எவ்வளவுப்பா வாங்கினீங்க

4. லதா மங்கேஸ்கரின் நோன்பு, மஹிந்தவின் திருப்பதி.. அணிக்கு உண்மையாக இருந்தால் ஏன் இந்த விளம்பர வெறி?

5. துட்டுக்கு ஆசப்பட்டு அடிக்கடி இந்தியாவுடன் போட்டிகளுக்கு போகும் இலங்கை கிரிக்கட். இலங்கையின் வெற்றியை தாரைவார்த்ததில் இதற்கும் பங்குண்டு.

6. மஹேலவை கப்டன் பதவியிலிருந்து விலகச்செய்த அரசியல். அந்த அரசியலின் மீது இடி விழ.. சங்கக்கார நல்ல தலைவர்தான்.. ஆனால் இன்று நிறைய பிழையான முடிவுகள்

7. அப்பவே சொன்னேன் என்னும் சில மேதாவிகளின் தீர்க்கதரிசனம். போடாங்...

8. இந்திய கிரிக்கட் வெலவதற்கு தோதாக போட்டிகளை திட்டமிட்ட ஐசிசி. ரவுன்ட் ரொபின் நடந்திருந்தா தெரிஞ்சிருக்கும்.

1 comment:

  1. விடுங்க பாஸ்... எனக்கும் கடுப்பாத்தான் இருக்கு... என்ன பண்ண....

    ReplyDelete

எனது வலைப்பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கு நான் எக்காரணம் கொண்டும் பொறுப்பாளியாகமாட்டேன் என்றும் இவை என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை பிரதிபலிக்காது என்பதையும் ஞாபகமூட்டுகிறேன்.