09 December 2010

3வது பதிவர் சந்திப்பு

இலங்கை தமிழ் பதிவர் சந்திப்பு என்று அழைக்கப்படும் கொழும்பு பதிவர் சந்திப்பின் 3ஆம் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இம்முறையும் நிகழ்வு கைலாசபதி கேட்போர் கூடம், தேசிய கலை இலக்கியப் பேரவை
571/15, காலி வீதி, வெள்ளவத்தை. என்ற முகவரியில் இடம்பெறும்.

Refresh Colombo

Refresh Colombo is a community of web and technology enthusiasts/professionals who come together on a monthly basis to share ideas and meet like minded individuals.

Refresh Colombo events are open to the public. We encourage you to bring a friend or two. Hackers, bloggers, coders, geeks & geek lovers, journalists, techies, entrepreneurs and venture capitalists are all welcome – you can even bring your grandma.


பதிவர் சந்திப்புகளுக்கு நான் தொடர்ந்தும் விமர்சன ஆதரவாளராகவே இருந்து வந்திருக்கிறேன். அதே பாணியை இதிலும் கடைப்பிடிக்க இருக்கிறேன்.

முதலாவது சந்திப்புக்கு பதிவர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. திருகோணமலை, கல்முனை என தூரப்பிரதேசங்களிலிருந்தெல்லாம் பதிவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

ஆயினும் இச்சந்திப்பினூடாக கொழும்பை மையப்படுத்திய ஒரு பதிவர் குழு உருவானது. அதிகாரம் போட்டியின்றி தேர்தலின்றி ஒரு குழுவுக்கு சென்றிருக்கிறது.

இக்குழுவுக்கு பன்முக விம்பம் கொடுக்க சில மூத்தவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எந்த வகையில் இச்சந்திப்புக்கு அழைக்கப்படுகிறார்கள் என்பதையும் ஏற்பாட்டுக்குழு தெரிவித்தால் நன்று.

அதோடு நடந்த சந்திப்புகளின் நிகழ்ச்சி நிரலில் எத்தனை வீதம் வெற்றிகரமாக நடைபெற்றிருக்கிறது என்று சுய விமர்சனமும் அவசியம். இல்லாவிட்டால் இதற்கும் வெள்ளவத்தை கடற்கரையிலோ காலிமுகத்திடலிலோ நடந்த / நடக்கும் சந்திப்புகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போகும் ஆபத்தும் இருக்கிறது.

இனிமேல் தொடர்ந்து கொழும்பில் சந்திப்பதை தவிர்ப்பதும் அவசியம். ஒரு குழு தனது வசதியை மையப்படுத்தி கொழும்பில் நடாத்திக்கொண்டிருக்க தூரப்பிரதேசங்களுக்கும் சம வாய்ப்பு தருவது அவசியம். தற்போதைய அதிகார மையத்திற்கு அடுத்த தெரிவு யாழ்ப்பாணமாகவே இருக்கும். அங்கும் இதே குழுவின் வசதியே முன்னிலைப்படுத்தப்படும். இலங்கையின் மத்தியில் உள்ள கண்டிக்கோ, தமிழ் மொழிபேசுவோர் செறிந்து வாழ்கின்ற மட்டக்களப்புக்கோ அடுத்த வாய்ப்பு கொடுக்கப்பட்டே ஆகவேண்டும்.

பதிவர் சந்திப்பு இலங்கையில் சகல மொழிகளிலும் முதலாக நடைபெற்றது தமிழ் பதிவர்களினுடையதாக இருக்கலாம். (பிழையாயின் திருத்தவும்). ஆனால் இதே பாணியிலான பல சந்திப்புகள் அதன்பின் நடைபெற்றுள்ளன. அவற்றின் வெற்றிகரமான அம்சங்கள் கட்டாயம் உள்வாங்கப்பட வேண்டும்.

இம்முறை சந்திப்பிலாவது காத்திரமான சுய விமர்சனம் இடம்பெறுமா? ஏற்பாட்டுக்குழுதான் செயலில் பதிலளிக்கவேண்டும்.

கேள்வி : சந்திப்புகளை ஒழுங்குபடுத்தும் குழு வெளிநாட்டு பதிவர்களை சந்திப்பதில் சகல சக பதிவர்களுக்கும் வாய்ப்பு சமமாக கொடுக்கவேண்டும். காத்திரமான கருத்துக்களை கொண்ட அகிலன் வெறுமனே இவ்வதிகார குழுவை மாத்திரம் சந்திருந்தார் என்பது ஒரு சிறந்த உதாரணம்.

31 comments:

  1. எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    கருத்தடை முறை உருவான கதை - contraception

    ReplyDelete
  2. சகோதரம் பதிவுலகம் என்ற ஒன்றிற்கு நான் புதியவன்.. இதற்கு முன்னர் வலையுலகம் பற்றியோ எனக்கு அதில் நடந்த சம்பவங்கள் பற்றியோ எதவும் தெரியாது...
    தற்போதைய சூழ் நிலையில் நாம் புது உலகம் ஒன்றிற்கு பிரவேசிப்பதே நல்லது காரணம் தமிழகம் போன்ற பகுதிகளில் பலரை ஆட்டிப்படைக்கும் ஒரு வலுவான கருவியாகவும் மாறியுள்ளது.. இன்று பதிவர் ஜனா குறிப்பிட்டள்ளது போல ஒரு தொலைக்காட்சியே சந்தர்ப்பம் அளிக்குமளவிற்கு வளர்ந்துள்ளது...

    தங்களுடைய அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் நான் ஒரு சிறியவன் தான்.. இருந்தாலும் இலங்கைப் பதிவர் என்ற முறையில் நாமும் ஏதாவது செய்ய வேண்டும்...

    ReplyDelete
  3. நண்பரே, உங்கள்ள் சில கருத்துக்களோடு ஒத்துப்போகிறேன். எல்லாவற்றுடனுமல்ல

    ///இனிமேல் தொடர்ந்து கொழும்பில் சந்திப்பதை தவிர்ப்பதும் அவசியம். ஒரு குழு தனது வசதியை மையப்படுத்தி கொழும்பில் நடாத்திக்கொண்டிருக்க தூரப்பிரதேசங்களுக்கும் சம வாய்ப்பு தருவது அவசியம். தற்போதைய அதிகார மையத்திற்கு அடுத்த தெரிவு யாழ்ப்பாணமாகவே இருக்கும். அங்கும் இதே குழுவின் வசதியே முன்னிலைப்படுத்தப்படும்.//

    இதுவரை நடாத்தப்பட்ட இரண்டு சந்திப்புகளும் சரி, நடைபெறப்போகிற மூன்றாவது சந்திப்பும் சரி வெவ்வேறான பதிவர் குழுக்களினாலேயே ஒழுங்குபடுதப்பட்டது. அத்துடன் கொழும்புக்கு வெளியே நடாத்தப்படும் சந்திப்புக்கள் அந்தந்தப் பிரதேசத்தில் இருக்கும் பதிவர்களாலேயே ஒழுங்குபடுத்தப்படல் வேண்டும். அவ்வாறு ஒழுங்குபடுத்தப்படும் சந்தர்ப்பங்களில் பங்குபற்ற வசதியுள்ள பதிவர்கள் எங்கிருந்தாலும் கலந்துகொள்வார்கள் என்றே நம்புகின்றேன்.

    //காத்திரமான கருத்துக்களை கொண்ட அகிலன் வெறுமனே இவ்வதிகார குழுவை மாத்திரம் சந்திருந்தார் என்பது ஒரு சிறந்த உதாரணம்//

    அகிலனுடனான சந்திப்பு இலங்கைத் தமிழ்ப் பதிவர் குழுமத்தில் அறிவிக்கப்பட்டே நடைபெற்றது.

    ReplyDelete
  4. உண்மை விளம்பிDecember 9, 2010 at 8:47 PM

    எல்லா சந்திப்புக்கும் வந்தவர்,வாறவர் போல சொல்றீங்களே, ஏற்பாடு செய்யும் வாய்ப்பைக் குழுமத்தில் எல்லோருக்கும் வழங்கியபோது நீங்களும் மற்றப் பிரதேச 'அதிகாரமற்ற' பதிவர்களும் ஏன் முன் வரவில்லை?
    மூலையிலிருந்து கொமென்ட் அடிக்க எல்லாருக்கும் இயலும்.யார் முன்வாறது என்பதே கேள்வி.

    முடியுமானவன் செய்யுறான்.முடியாதவன் முனகுறான்.

    ReplyDelete
  5. அன்பின் எக்சாருக்கு,
    நீங்கள் சிந்திக்கும் முறை குழப்பகரமானதா அல்லது சிந்திப்பதே குழப்பமடையச் செய்யவா என்று எனக்கு சிலவேளைகளில் புரிவதில்லை.

    ஏற்பாட்டுக்குழுவோடு நெருங்கிப் பழகியவன் என்ற ரீதியில் (நான் ஏற்பாட்டுக்குழுவில் இல்லை) சில விடயங்களை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

    இந்தப் பதிவர் சந்திப்புக்கு முன்பு திருகோணமலையில் ஓர் பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்வதாக முடிவு எடுக்கப்பட்டு (அதை முன்மொழிந்தவர்கள் நீங்கள் குறிப்பிட்ட அதே அதிகார பீடத்தினர் தான்) திகதி கூட ஓரளவு நிச்சயிக்கப்பட்டு பின்னர் தவிர்க்கவியலாத காரணங்களால் ஏற்பாட்டுக்குழுவினரால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
    திருகோணமலை தெரிவு செய்ப்பட முன்னர் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய இடங்களில் ஒன்றில் நடத்தினால் வருவோம் என்று குழுமத்தில் அறிவித்தோம் நாங்கள்.
    திருகோணமலையைச் சேர்ந்த அனுதினன், பவன் தவிர, மட்டக்களப்பைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோர் திருகோணமலையில் தாங்கள் ஏற்பாடு செய்வதாக முன்வந்தார்கள்.

    அதன்பின்னர் வேறு இடங்களில் பதிவர் சந்திப்புகள் நடத்துமாறு பகிரங்கமாக நாங்கள் கதைத்திருந்தோம்.

    அண்மையில் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் இடம்பெற்ற வடலி வெளியீடு அறிமுக விழாவில் கலந்துகொண்டுவிட்டு தமிழ்ச்சங்கத்தில் வைத்து இலண்டனிலிருந்து அப்போது தான் இலங்கை வந்திருந்த மாலவனோடு நான் தனிப்பட்டு பதிவுலகம் பற்றிக் கதைத்தேன்.
    அப்போது அவர் பதிவர் சந்திப்புக்கு ஆவலாக இருப்பதைப் புரிந்துகொண்டேன்.
    அதன் பின்னர் திகதி உட்பட ஏனைய விடயங்களை நானும், அவரும் மட்டுமே முடிவெடுத்தோம்.

    நீங்கள் சொன்ன அதிகார பீடத்துக்கு தனித்து அறிவிக்காமல் குழுமத்தில் அறிவிக்கும்போதே அவர்களுக்கு இப்படியொரு திட்டமிருப்பதே தெரியும்.

    பதிவர் சந்திப்பு ஏற்பாட்டுக்குழுவில் இருக்கிறவர்களின் பவன், அனுதினன் ஆகியோர் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள். மாலவன் 2 மாதங்களுக்கு முன்னரே கொழும்பு திரும்பிய ஒருவர். மற்றையவர் வதீஸ்.
    அடுத்தவர் எங்களோடு கருத்தியல் ரீதியாக முரண்பாடு கொண்டிருக்கும் வரோ.
    நீங்கள் சொல்கிற பிரிவினர் இந்தப் பதிவர் சந்திப்பில் ஆதிக்கம் செலுத்தியிருந்தால் அந்தக் குழுவில் வரோ எப்படி வந்தார் என்பதை சிந்திக்கவும்.

    பதிவர் சந்திப்பு ஏற்பாட்டுக்குழுக்கள் தெரியப்படுவதில்லை, அவை தானாக தங்களைத் தாங்களே உருவாக்கிக் கொண்டு திட்டங்களை முன்னெடுப்பவை.

    சில விடயங்களை நேரடியாக குற்றஞ்சாட்ட முன்பு விடயங்களை அறிந்துவிட்டு குற்றஞ்சாட்ட முற்படுவது சிறப்பு.
    ஏனென்றால் இந்தப் பதிவு உங்கள் தளத்தில் இருக்கும்வரை எக்சார் என்ற நபரின் பிற்போக்குவாத சிந்தனை உலகெங்கும் தெரிந்துகொண்டேயிருக்கும்.

    (இந்தளவு பெரிய பின்னூட்டமிடவேண்டிய அவசியம் எனக்குக் கிடையாது. உங்கள் மறைநிலைச் சிந்தனை காரணமாக உங்களில் ஏற்பட்ட இரக்கவுணர்வாலேயே இந்தப் பின்னூட்டத்தை அனுப்புகிறேன்.0

    நன்றி.

    ReplyDelete
  6. சரி அடுத்த முறை நீங்கள் கேட்கும் ஊரில் நடத்த (கொழும்பு தவிர்ந்த) நான் முழு அதரவையம் தருகிறேன். இம்முறை இந்தச் சந்திப்பிற்கு அனைவரும் ஒத்துழைத்து ஒரு புது பதிவுலகத்தை உருவாக்குவோமாக...

    முதலில் எம்மை சுற்றியுள்ள வட்டங்களுக்குள் இருந்த வெளிவந்து எமக்கென்று ஒரு திரட்டியோ அல்லது ஒரு சிறந்த குழுமத்தையோ (ஏற்கனவே இருக்கிறது) புனரமைத்து எம் பதிவர்களுக்கிடையேயான புரிந்தணர்வுடன் மீண்டும் இலங்கைப் பதிவர்கள் என்ற முத்திரையை உலக பதிவுலகத்தில் பதிப்போமா..??

    ReplyDelete
  7. சகோதரர் மதிசுதாவிற்கு,
    பதிவுலகம் சார்ந்து முடிவுகளை எடுப்பதற்கு இந்தப் பதிவோ, இந்த வலைத்தளமோ சரியான இடமாக எனக்குப் படவில்லை.

    உங்கள் கருத்துக்களை தயவுசெய்து குழுமத்தில் தனியே கலந்துரையாடல் ஒன்று ஆரம்பித்து தெரியப்படுத்துங்கள், அல்லது உங்கள் பதிவில் பதிவாக இடுங்கள்.

    தோழமையுடன்,
    Kangon.

    ReplyDelete
  8. விவாதத்தை ஆரோக்கிய்யமான பாதையில் திருப்பும் மதி சுதா அண்ணனுக்கு நன்றிகள். கன்கொன் கூறியதுபோல குழுமத்தில் விவாதிக்கலாமே?

    ReplyDelete
  9. ஆமாம் கான் கோன் ஏற்றுக் கொள்கிறேன்.. இந்தக் கருத்துக்களை அங்கேயே இட்டுக் கொள்கிறேன்...

    நன்றி சுபா...

    ReplyDelete
  10. கன்கொனை வழிமொழிகின்றேன்....

    ReplyDelete
  11. எக்சார் இங்கே பலர் (பதிவுலகுக்கு புதியவர்கள்)நினைப்பது போல அறியாமல் அல்லது விளங்காமல் கதைக்கவில்லை.
    முன்னைய பதிவர் சந்திப்புக்களில் இவர் செய்த செயற்பாடுகள், பின்னர் இட்ட குசும்புத் தனமான விமர்சனங்கள் எல்லாருக்குமே ஞாபகமிருக்கும்.

    விஷமத்தனமாக இவர் பயன்படுத்தியுள்ள சொற்றொடர்கள் நேர்மையாக சந்திப்பை ஏற்பாடு செய்துள்ள, ஏற்பாடு செய்ய எண்ணிய எல்லோருக்குமே அவமானம் தரக்கூடிய சொற்கள்.

    முன்பு யாவர் இரு சமூகங்களிடையே மேற்கொள்ள யத்தனித்த துவேஷ செய்கையை நாடு கடந்தும் விடவில்லை என்கையில் வெட்கமாயுள்ளது.

    மாற்றுக் கருத்து என்பது வேறு. வேண்டுமென்றே எதிர்ப்பது வேறு.

    குழுமத்தில் என்ன நடக்கிறது. அங்கே பல இடங்களை சேர்ந்த பதிவர்களும் பேசிய விடயங்கள் தெரியாத மாதிரி கண்டமேனிக்கு எழுதுவது நியாயமில்லை.

    இவர் மட்டும் கொழும்பை செர்ந்தவரில்லையா என்ற கேள்வி ஒரு பக்கம்,
    //தற்போதைய அதிகார மையத்திற்கு அடுத்த தெரிவு யாழ்ப்பாணமாகவே இருக்கும்.//
    இதன் மூலமாக இவர் விதைக்க எண்ணிய விஷமம் மறுபக்கம்.


    அப்பாவியாக இவரை எண்ணும் இவர் பற்றி அறியாதோர் இவரது முன்னைய இருண்ட பக்கங்களைத் தட்டிப் பாருங்கள்.

    LOSHAN
    www.arvloshan.com

    ReplyDelete
  12. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  13. என்னப்பா இது... நானும் பதிவப்படிச்சிட்டு ஏதாவது காரசாரமாக பின்னூட்டத்தில விவாதிப்பியளெண்டு பாத்தா... எல்லாரும் உருப்படியா கருத்து சொல்லிக்கொண்டிருக்கிறியள்...!!!
    இன்னும் கடுமயான வார்த்தைகள பாவிக்கோணும் கண்டியளே.!!!

    ReplyDelete
  14. உண்மை விளம்பிDecember 13, 2010 at 10:47 AM

    எக்சாரின் கருத்துக்களில் உள்ள உண்மைத் தன்மையை ஏற்றுக் கொள்கிறேன். லோசன், முதலிய பெரியவர்களின் அடிவருடிகளின் கீழாக தான் இந்த பதிவுலக சந்திப்பு இடம் பெறுகின்றது. லோசன் முதலியவர்களைக் கௌரவிப்பதற்கும், அவர்களைத் திருப்திப்படுத்துவதற்கும் தான் இந்தப் பதிவர் சந்திப்புக்கள். குழுமம் என்ற ஒன்றை உருவாக்கி அதனூடாக தங்களைத் தாமே திருப்திப்படுத்தும் வகையில்/ சுய இன்பம் காணும் வகையில் தான் இவர்களது செயற்பாடுகள் அமைகின்றன.

    ReplyDelete
  15. உண்மை விளம்பிDecember 13, 2010 at 10:47 AM

    எக்சாரின் கருத்துக்களில் உள்ள உண்மைத் தன்மையை ஏற்றுக் கொள்கிறேன். லோசன், முதலிய பெரியவர்களின் அடிவருடிகளின் கீழாக தான் இந்த பதிவுலக சந்திப்பு இடம் பெறுகின்றது. லோசன் முதலியவர்களைக் கௌரவிப்பதற்கும், அவர்களைத் திருப்திப்படுத்துவதற்கும் தான் இந்தப் பதிவர் சந்திப்புக்கள். குழுமம் என்ற ஒன்றை உருவாக்கி அதனூடாக தங்களைத் தாமே திருப்திப்படுத்தும் வகையில்/ சுய இன்பம் காணும் வகையில் தான் இவர்களது செயற்பாடுகள் அமைகின்றன.

    ReplyDelete
  16. உண்மை விளம்பிDecember 13, 2010 at 10:54 AM

    நண்பர்களே, குழுமத்தில் வாருங்கள் பேசலாம் என கன்கொன் அழைப்பு விடுக்கின்றார். இந்தக் குழுமம் என்பது யாது? இந்தக் குழுமத்தில் நடை பெறும் விவாதங்கள் எவை? ஆதிரை, லோசன், கன்கொன், வந்தியத்தேவன், பவன் இவர்களது கருத்துக்கள் தான் இந்தப் பதிவர்கள் குழுமத்தில் ஏற்றுக் கொள்ளப்படும். ஏனைய பதிவர்களின் கருத்துக்கள் புறக்கணிக்கப்படும். அண்மையில் கூட ஒரு இஸ்லாமியப் பதிவரான http://eseak.com இனைப் பற்றிய கருத்துக்கள் சக வலைப்பதிவில் வெளியாகி இருந்த போது ஓடோடி வந்த லோசன் இது தனிப்பட்ட பிரச்சினை, இதனையெல்லாம் குழுமத்தில் கொண்டு வந்து பேசக் கூடாது என்று சொன்னார். ஆக மொத்தத்தில் லோசனுக்கு ஒரு பிரச்சினை என்றால் இரவிரவாக குழுமத்தில் விவாதித்து உடனடியாக அதிரடி நடவடிக்கை எடுப்பார்கள். உதாரணம்: பதிவர் முகிலனிற்கு எதிரான தாக்குதல்கள்...
    இந்தக் குழுமம் என்பது யாருக்காக? லோசனுக்காக தானே?

    ReplyDelete
  17. உண்மை விளம்பிDecember 13, 2010 at 11:00 AM

    இலங்கைத் தமிழ்ப்பதிவர் சந்திப்பு

    இடம்: கைலாசபதி அரங்கு,
    தேசிய கலை இலக்கியப்பேரவை(ரொக்சி திரையரங்குக்கு எதிரில்),
    காலிவீதி, வெள்ளவத்தை, கொழும்பு –06
    காலம்: 19ம் திகதி, ஞாயிற்றுக்கிழமை, காலை 9.31 மணி

    நிகழ்ச்சி நிரல்


    அறிமுகவுரை


    பதிவர்கள் அறிமுகம்


    கலந்துரையாடல் 1 - கூகுல் குழுமத்தை வினைத்திறனுடன் பயன்படுத்தல் மற்றும் ஏனைய தொழிநுட்பப் பிரச்சினைகள் பற்றி ஆராய்தல். //


    குழுமத்தை வினைத்திறனுடன் பயன்படுத்துதல், அப்படியாயின் அவர்களே ஏற்றுக் கொள்கிறார்களா? குழுமம் இவ்வளவு காலமும் ஒரு சில தனிப்பட்டவர்களின் ஜால்ராக்களுக்காகத் தான் பயன்பட்டது என்று. உண்மையை ஒத்துக் கொள்ளும் நல்ல உள்ளங்களே வாழ்க.
    குழுமத்தில் கிறிக்கட் பதிவு பற்றி ஆதிரை ஆரம்பித்து வைக்க அதனைத் தொடர்ந்து நகைச்சுவையாக பின்னூட்டமிடுவது, பிறகு லோசனைப் பற்றி துதி பாடி மகிழ்வது இவ்வளவு தான் குழுமத்தின் செயற்பாடுகள். ஆக மொத்தத்தில் இந்தப் பதிவர் சந்திப்பும், குழுமமும் சுத்த வேஸ்று. இவர்கள் எவ்வளவு சொன்னாலும் திருந்தமாட்டார்கள்.

    ReplyDelete
  18. சுறனையற்றவர்களினதும், எடுபிடிகளினதும், ஜால்ராக்காரர்களினதும் ஒரு முக்கிய கூட்டம் தான் இந்த பதிவர் சந்திப்பு

    ReplyDelete
  19. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  20. கணிப்பான்December 14, 2010 at 1:54 AM

    This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  21. ஆம். சந்திப்பு ஒரு தேசிய ரீதியான நிகழ்வே.. எனவே தேசிய கீதத்தை பாடி நிகழ்ச்சியை ஆரம்பிக்க, ஏற்பாட்டு குழு ஆவன செய்யவேண்டும்.

    ReplyDelete
  22. http://www.youtube.com/watch?v=H7bflyCYVK4

    ReplyDelete
  23. புதிய கணிப்பான்December 15, 2010 at 10:44 AM

    ம்ம்ம்ம்

    வீடியோ நல்ல இருக்குது....
    Good Promo :)


    அந்த வீடியோவை upload பண்ணியவரின் profile


    Channel Views:0
    Total Upload Views:13
    Age:34
    Joined:December 14, 2010
    Last Visit Date:1 hour ago
    Subscribers:0
    Country:United Arab Emirates

    ReplyDelete
  24. தேசிய கீதம் சிங்களத்தில் இசைத்து நிகழ்வை தொடங்குமாறு ஏற்பாட்டாளர்களை வலியுறுத்துகிறேன். இல்லையேல் நடப்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

    ReplyDelete
  25. தேசிய கீதத்த சிங்களத்தில பாடாட்டி என்ன நடக்குமெண்டு சொன்னா அந்தப் பயத்திலயாவது பாடுவம்.
    சொல்லுங்கண்ணே அனானி அண்ணே...

    (@எக்சார்: இனவாதக் கருத்துக்கள் கொண்ட பின்னூட்டங்களை நீக்கிவிடவும்)

    ReplyDelete
  26. can you please stop posting the racial comments?

    ReplyDelete
  27. காணொளியை ஒழுங்க செய்திருக்கானுகளா என்று பார்த்தால் அதுவும் இல்லை...ஒரு காணொளியை வடிவா செய்ய தெரியல வந்துட்டானுகள் கதைக்கிறதுக்கு...

    ReplyDelete
  28. http://www.livestream.com/srilankantamilbloggers/video?clipId=pla_957972b4-ccbe-48ed-bdc9-8ba9a6f116e2&utm_source=lslibrary&utm_medium=ui-thumb

    ReplyDelete
  29. பிரபல வலைப் பதிவரின் ஏமாற்று வேலை
    http://newjaffnatown.blogspot.com/2010/11/blog-post_10.html


    யாழ்ப்பாணத்தில் பேஸ்புக் மூலம் தான் மொறட்டுவை பல்கலை கழகத்தில் கல்வி பயில்வதாக கூறி 17 வயது மாணவியை ஏமாற்றியவர் பாலசுப்பிரமணியம் சுபாங்கன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பேஸ்புக் மூலம் ஆரம்பித்த நட்பின் விளைவாக காதல் வசப்பட்டு, இந்த இளைஞனின் ஆசை வார்த்தையினை நம்பி ஏற்பட்ட தகாத உறவால் யாழ் நகரப் பகுதியில் தங்கி நின்று கல்வி கற்ற மாணவி கர்ப்பம் தரித்துள்ளார். விடயம் வெளியே வந்ததும், மேற்குறிப்பிட்ட மாணவனைத் தேடிப் பிடிக்க முற்பட்ட போது இந்த யாழ் மேனகன் தன்னுடைய பேஸ்புக் கணக்கினை மூடி விட்டு, அந்த மாணவியுடன் தொடர்பு கொள்ள வைத்திருந்த தொலைபேசி இலக்கத்தையும் துண்டித்து விட்டு தலை மறைவாகி விட்டார்.

    ReplyDelete

எனது வலைப்பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கு நான் எக்காரணம் கொண்டும் பொறுப்பாளியாகமாட்டேன் என்றும் இவை என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை பிரதிபலிக்காது என்பதையும் ஞாபகமூட்டுகிறேன்.