31 March 2010

நீங்களுமா

எனக்கு ஒரு நண்பர் இருக்காருங்க.. எனக்கும் மத்தவங்களோட இருக்கிற நம்பிக்கையை காட்டிலும் இவர் மேல் ஒரு படி நம்பிக்கை.

என்னை பொறுத்தவரையில் நண்பர்கள் எல்லாரும் ஒரே மாதிரி ஆக இருப்பதில் விருப்பம் இல்லை. வேற்றுமைகளுடன் ஒற்றுமையாக இருப்பதுதான் சிறப்பு என்று நம்புபவன் நான்.


ஓரிருவருக்கு மாத்திரம் தெரிஞ்ச சில விசயங்களில ஓரிரு விஷயம் இந்த நண்பருக்கும் தெரியும். என்னதான் பிரச்சினை வந்தாலும், கருத்து வேறுபாடு வந்தாலும், இந்த ரகசியமெல்லாம் பரகசியம் ஆக்கமாட்டார் என்றுதான் உறுதியாக நம்பினேன்.

இருந்தாலும் ஏறத்தாள 9 மாதங்களுக்கு முன் பலருக்கு இந்த ரகசியத்தை சொல்லியிருந்தார். ஓரிருவர்தானே என்று இருந்துவிட்டேன். (அவரைத்தவிர வேறு யாரும் சொல்லியிருக்க முடியாது)

ஆனா இன்று இந்த ரகசியத்தெல்லாம் அவர் காத்துல விட்டுடாரு. என் நம்பிக்கையையும் காத்துலயும் சொல்லிட்டாரு..

எனக்கு அவர்கிட்ட கேக்க இருக்கிறது ஒரு சொல்தான்

நீங்களுமா?

1 comment:

  1. நீங்களும் அதே நம்பிக்கையுடன் அவருடன் நடந்திருந்தால் அவரும் அப்படியே இருந்திருப்பாரே.
    உன்னைத் திருத்திக் கொள் சமுதாயம் தானாகத் திருந்தும்.

    நீ எப்படி மற்றவருடன் நடக்கிறாயோ அப்படியே மற்றவர் உன்னுடன் நடப்பார்.

    பெரியவங்க சொன்னாங்கோ..

    ReplyDelete

எனது வலைப்பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கு நான் எக்காரணம் கொண்டும் பொறுப்பாளியாகமாட்டேன் என்றும் இவை என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை பிரதிபலிக்காது என்பதையும் ஞாபகமூட்டுகிறேன்.