Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

அப்துல் கலாமின் இலங்கை வருகை

இந்திய அணு விஞ்ஞானியும் முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல் கலாமின் வருகை தொடர்பாக தமிழ் ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.


Avul Pakir Jainulabdeen Abdul Kalam About this sound pronunciation (help·info) (Tamil: அவுல் பகீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்; born 15 October 1931) usually referred to as A. P. J. Abdul Kalam, is a renowned aerospace engineer, professor (of Aerospace engineering), and first Chancellor of the Indian Institute of Space Science and Technology Thiruvananthapuram (IIST), who served as the 11th President of India from 2002 to 2007.[1] During his term as President, he was popularly known as the People's President.[2][3] He was awarded the Bharat Ratna, India's highest civilian honour in 1997.



அவரது வருகை முன்னாள் ஜனாதிபதி என்ற வகையிலேயே அமைந்திருந்தது. இந்தியாவில்; சம்பிரதாய  ஜனாதிபதியால் கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுக்க முடியாது. அவர் ஜனாதிபதியாக இருந்ததால் இந்திய சிறுபான்மை இனங்களுக்கு முக்கியமாக முஸ்லிம்களுக்கு என்ன பயன் விளைந்திருக்கிறது என்ற ஒரு கேள்வியே இவரது வருகையின் மூலம் என்ன பயனை எதிர்பார்க்கமுடியும் என காட்டும்.

அவ்வாறான ஒருவர் எல்லை மீறும் இந்திய மீனவர்களுக்கு அங்கீகார்ரம் வாங்கிக்கொடுக்க முட்டாள்தனமான கருத்தை சொல்லியிருக்கிறார். கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக தமிழ் நாட்டை சேர்ந்தவர்களே அவரது கருத்தை ஏற்றுக்கொள்ளாத நிலையில் இலங்கை விவகாரத்தில் ஏன் மூக்கை இவர் நுழைக்கவேண்டும்? சாமானியர்களுக்கு புரியாத மேதாவித்தனமான கருத்தாக கருதுவதற்கு இதில் எதுவும் எல்லை. (கூடங்குளம் தொடர்பான கருத்து வேண்டுமானால் சாமானியனுக்கு பிரியாமல் இருந்திருக்கலாம்)

இவ்வாறான ஒருவரை தென்கிழக்கு பல்கலைக்கழகம் சந்திக்கவில்லை முஸ்லிம் அமைப்புக்கள் சந்திக்கவில்லை என்றுவேறு ஒரு சிலர் எழுதியதை வாசிக்க நேர்ந்தது. இந்த கலாமை விட அலவியால் அதிகம் செய்யமுடியும்! அலவி என்ன செய்திருக்கிறார் என்று அறிந்தவர்கள் அதை வைத்து கலாம் என்ன செய்யக்கூடும் என ஊகித்துக்கொள்ளட்டும்.

இவர் முஸ்லிம் காங்கிரசுக்கு அபிவிருத்தி அரசியலை பரிந்துரை செய்தாராம். இது தெரியாமல்தான் முஸ்லிம் காங்கிரஸ் இவரிடம் சென்று ஆலோசனை கேட்டதா? அதுபோதாதென்று சகல படங்களிலும் அஸ்வர் வேறு. கொடும சார்

அப்துல்கலாமின் முட்டாள்தனம்
இலங்கை கடற்பரப்பை இந்திய மீனவர்களுக்கு திறந்துவிட பார்க்கிறார்.

அப்படியானால் காஷ்மீரில் இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் தலா மூன்று நாட்களுக்கு வளங்களை பகிர அவர் முதலில் இந்திய அரசுக்கு ஆலோசனை கூறட்டும்

ஊடகவியலாளர்கள் வேறு முட்டாள்தனமாக எதையாவது கேட்டிருக்கிறார்கள். இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்கள் அவசியமா என்பதை நாம்தான் முடிவுசெய்யவேண்டும். எதற்கு இவரிடம் கேட்டிருக்கிறார்கள்?

இந்தியாவில் ஒரு சம்பிரதாய பதவியை வகித்த ஒருவரிடம் இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவது தொடர்பாக கேள்விகேட்ட முட்டாள் ஊடகவியலாள்ர் யார்?

மஹிந்த ராஜபக்சவை பழிவாங்கிய அப்துல் கலாம்!
அப்துல் கலாம் பேசிய சிங்களத்தை சொன்னேன் :D

தான் பேசிய தமிழ் எப்படி இருந்திருக்கும் என்பது இன்று ஜனாதிபதிக்கு புரிந்திருக்கும்

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

0 comments: