Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

பாபரி மஸ்ஜித் தீர்ப்பு - பதிவுலகும் கவனமாக செயல்படவேண்டும்


பாபரி மஸ்ஜித் நில உரிமை குறித்து நாளை தீர்ப்பு வெளிவரவிருக்கிறது. நாளை முழு உலகத்தின் கவனமும் இந்தியாவின் பக்கம் குவிந்திருக்கும்.

அப்துல் கலாமினால் விண்வெளிக்கு செய்மதி அனுப்பும் இந்தியாவின் நீதித்துறை எந்த ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கும்? ஒருவகையில் பார்க்கப்போனால் இந்தியா வல்லரசாகுமா, இல்லாட்டி கர்நாடகமா இருக்குமா என்பதும் நாளை உறுதியாகும்.

The Babri Mosque (Hindi: बाबरी मस्जिद, Urdu: بابری مسجد), Babri Masjid or Mosque of Babur was a mosque in Ayodhya, on Ramkot Hill ("Rama's fort"). It was destroyed in 1992 when a political rally developed into a riot involving 150,000 people,[1] despite a commitment to the Indian Supreme Court by the rally organisers that the mosque would not be harmed.[2][3] More than 2000 people were killed in ensuing riots in many major Indian cities including Mumbai and Delhi

ஆயினும் தீர்ப்பு எப்படி வந்ததாலும் ஊடகங்களின் செயற்பாடு இங்கு அதி முக்கியமாகிறது. எடுத்ததுக்கெல்லாம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்பதுபோல செய்திகலை வெளியிடாமல் பொறுப்புணர்ச்சியுடன் செய்திகளை வெளியிடுவது அவசியம். இது தொடர்பாக இந்திய அரசு கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்திருப்பதாக அறியக்கிடக்கிறது. ஆயினும் கட்டுப்பாடற்ற ஊடகமாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் பதிவுலகம் எப்படி செயற்படும், அதை யாரும் கண்காணிப்பார்களா என்று தெரியவில்லை.

பதிவுலகத்தின் கருத்துக்களால் பெரிதாக வன்முறை எழ வாய்ப்பில்லாமல் போனாலும் (எல்லாரும் வாய்ச்சொல்லில் அல்லவா வீரர்கள்?) ஏற்படக்கூடிய கசப்புணர்வுகள் காலாகாலம் நிலைக்கக்கூடியவை.

எனவே நாம் எல்லோரும் தீர்ப்பு பற்றிய எமது கருத்துக்களை, எதிர்ப்போ ஆதரவோ ஒரு நாலுவாரம் தள்ளி ஆறுதலாக சிந்தித்து எழுதினால் என்ன?

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

வாரிசு சிஸ்டர் ஆனதெப்படி?

தனுஷின் திருவிளையாடல் படத்தில் வந்த என்னம்மா கண்ணு.. சௌக்கியமா பாடல் எழுதிய கதையை கத்தாரில் நடந்த நிகழ்வில் கவிப்பேரரசு வைரமுத்து பகிர்ந்தார்.
தனிஷின் பாடி லங்வேஜ் பற்றியும் பேசினார்
அதன் ஒலி வடிவம்


அவர் நிகழ்வில் சொன்னது..
வாரித்தரும் வள்ளலுக்கு வாரிசிருக்கு..
இதைத்தான் நான் அப்பாடலை MP3 இல் Download செய்தபோதும் கேட்டேன்
ஆனால் பாடல் காட்சியில்


வாரித்தரும் வள்ளலுக்கு சிஸ்டர் இருக்கு..
என்று வந்திருக்கிறது.

யாராவது சொல்லுங்களேன்.. எப்படி வாரிசு சிஸ்டர் ஆகிச்சுன்னு..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

இதுவா அஷ்ரப் கண்ட கனவு?

அஷ்ரப் - மறக்க முடியாத ஆளுமை. இலங்கை முஸ்லிம்களின் அரசியலில் சிதறுண்டிருந்த பலத்தை ஒருமுகப்படுத்தி அதை லாவகமாக கையாண்ட ஒரு சிறந்த அரசியல்வாதி.

இன்று முஸ்லிம் அரசியலில் ஈடுபடுவோர் எல்லோருக்கும் அஷ்ரப் ஒரு மாமனிதர் என்று சொல்வதும், அவர் பாசறையில் தாம் வளர்ந்தவர்கள் என்று சொல்வதும் மிகுந்த அவசியமாகி இருக்கிறது. இது இவர்களின் அரசியலுக்கு அடிப்படையான மூலதனமாக இருந்தாலும் இதில் இருக்கும் ஆபத்தை சரியாக புரிந்துகொள்வது முஸ்லிம்களின் அரசியல் வெற்றிக்கு மிக அடிப்படையானதாகும்.

நேற்றுவரை முகவரியற்று இருந்தபலர் திடீரென தான் அஷ்ரப்பின் பாசறையில் வளர்ந்தவன் என்று சொல்லிக்கொண்டு அரசியல் செய்ய வருவதை காண்கிறோம். அல்லது ஏதாவது ஒரு அரசியல் தீர்மானத்தை ஆதரிக்க எதிர்க்க வெறுமனே அஷ்ரப் அன்று இப்படி செய்தார் என்று கூறுவதோ அல்லது ஒரு ஒலிக்கீற்றை ஒலிக்கச்செய்வதோ போதுமாக இருக்கின்றது. இதுவா அஷ்ரப் கண்ட கனவு?

ஒட்டுமொத்த முஸ்லிம்களின் வரலாற்றில் நபிகள் நாயகத்தை விட உயர்ந்த தலைவர் இல்லை. ஆனால் முஸ்லிம் சமூகம் அவருக்குப்பின் வெறுமனே வாய்ப்பேச்சால் அவரை புகழ்ந்துகொண்டு இருந்ததா? இல்லை! ஆனால் அவரின் இலட்சியங்களுக்காக ஒவ்வொரு முஸ்லிமும் தன்பங்களிப்பை வழங்க நபிகளாரின் இலட்சியத்தை இன்றுவரை மழுங்கடிக்காமல் சமூகம் முன்னேறிச்செல்கிறது.

அதேபோல் காலித் இப்னு வலீத் (ரழி) என்ற உலகவரலாற்றில் தோல்வியையே சந்திக்காத தளபதியையும் இங்கு ஞாபகப்படுத்துவதும் அவசியம். முஸ்லிம்களின் இராணுவ தளபதியாக தொடர்ச்சியாக வெற்றிகளைத்தேடித்தந்த அந்த தளபதி; அன்றைய இஸ்லாமிய ஆட்சியாளரான உமர் (ரழி) அவர்களால் பதவி நீக்கப்பட்டார். அதற்கு உமர் (ரழி) அவர்கள் சொன்ன காரணம், "வெற்றிகளை பெற்றுத்தருவது இறைவனே.. ஒரு தனிமனிதர் அல்ல என்ற நம்பிக்கையை முஸ்லிம்களிடையே பாதுபாப்பதாகும்".

I have not dismissed Khalid because of my anger or because of any dishonesty on his part, but because people glorified him and were misled.[97] I feared that people would rely on him. I want them to know that it is Allah who give us victory; and there should be no mischief in the land
—Caliph Umar.

அதனால்தான் ராணுவ தளபதியாக பதவி நீக்கப்பட்டபோதும் தனக்குப்பின் ஆட்சிசெய்ய தகுதியானவராக உமர் (ரழி) அவர்களால் காலித் இப்னு வலீத் (ரழி) அவர்கள் பெயரிடப்பட்டார்கள்.

இதன்மூலம் ஒரு தனி நபரில் ஒரு சமூகம் தங்கியிப்பதை இஸ்லாமும் அதன்பின் இஸ்லாமிய வழி வந்த இஸ்லாமிய தலைவர்களும் ஒருபோதும் ஆதரித்ததிலலை என்பது தெளிவாகின்றது.

ஆனால் இன்று அஷ்ரப் பாடுபட்ட இலட்சியங்களை சமூகம் மறந்து தனி மனித வழிபாடு போன்ற ஒன்றை செய்து கொண்டிருப்பதால்தான் அன்று அஷ்ரப்பினால் சாதிக்க முடிந்த பலவற்றை எம்மால் இன்று சாதிக்க முடியாமல் இருக்கிறது.

எனவே இன்று முஸ்லிம் சமூகம் செய்யவேண்டியிருப்பதெல்லாம் அஷ்ரப் என்ற இறந்தகாலத்தை நிகழ்காலத்தில் பேசிப்பேசி எதிர்காலத்தை இழக்காமல் அவர் பயணித்த பாதையில் பயணிக்ககூடிய தகுதியான தலைவரின்பின் அணிசேர்வதே..

அஷ்ரப் அவர்கள் மரணித்து இன்றோடு 10 வருடங்கள் ஆகியிருக்கின்றன. அதுபற்றி இரண்டு கட்டுரைகள்
அஷ்ரப் - அவர் வயற்காரனாக இருந்தார்
எம்.எச்.எம். அஷ்ரப்: கைவிடப்பட்ட சமூகத்தை முன்னிறுத்திய தலைவன்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

18 ஆவது திருத்தம்


  • ஊடகங்களின் கபட நிகழ்ச்சித்திட்டம்..
  • 18 ஆவது திருத்தம் முடியாட்சிக்கு வழிகோலுமா?
  • பதவிக்காலத்தை மட்டுப்படுத்துவது அதிகார துஷ் பிரயோகத்தை தடுக்குமா?
  • தமிழ் ஊடகங்களின் காழ்புணர்ச்சி
  • ததேகூ எதிர்க்கும்! சீ சீ இந்த பழம் புளிக்கும் !
  • இன்றைய ஆகக்குறைந்த தேவை என்ன?

அரசியல் அமைப்பில் 18 ஆவது திருத்தம் தொடர்பாக இன்று அடிக்கடி ஊடகங்களில் பேசப்படுவதை காண்கிறோம். இதில் கூட ஊடகங்களில் தமிழ் ஊடகங்கள் ஒரு திட்டத்துடனும் ஆங்கில சிங்கள ஊடகங்கள் இன்னொரு நிகழ்ச்சி திட்டத்துடனும் செயற்படுவது தெளிவாக தெரிகிறது.
Bar Association statement opposing the 18th Amendment http://bit.ly/cTEm0f

யுத்தம் முடிந்து செய்திகளுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் எதையாவது பிரச்சினையாக்கி அதை விற்று காசு சம்பாதிக்கும் மிக கீழ்த்தரமான உத்திக்கு ஜனநாயக சாயம் பூசி இவ்விரு வகை ஊடகங்களும் அதற்கு மேல் வாசனைக்கு தமது நிகழ்ச்சி திட்டத்தை கலந்து தருகின்றன. கடைசியில் கேக் ஐ தின்றாலும் ஏன் தொட்டாலும் இந்த வாசனை தொற்றிக்கொள்ளும் அபாயம்இருக்கிறது.

18 ஆவது திருத்தத்தில் வெறுமனே ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான விதி முறைகளை மாற்றுவது மட்டும் இடம்பெறவில்லை. ஒருவர் ஜனாதிபதியாக எத்தனை தடவை பதவி வகிக்கவேண்டும் என்பதை தீர்மானிப்பது மக்களே. சந்திரிக்கா போன்ற ஒரு ஜனாதிபதியும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த ஜனாதிபதி மகிந்தவும் சமமான தடவைகள் மாத்திரம் பதவி வகிப்பது என்பது பயங்கரவாதத்திட்கு ஆதரவளிக்காத மக்களுக்கு நியாயமாக தோன்றப்போவதில்லை. அதேபோல் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் அன்றி யாரும் ஜனாதிபதியாக பதவி வகிக்கவும் முடியாது. 2 தடவைக்கு மேல் மக்கள் ஆணை பெற்று பதவி வகிக்கும் ஜனாதிபதி முறை முடியாட்சி முறையும் அல்ல.

இது தேர்தல் முறைகேடுகளை அதிகரிக்கும் என்றும் அரச வளங்களை பயன்படுத்தி மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியும் என்று சிலர் சொன்ன போதும் 2 தடவைகள் பதவி வகித்த ஜனாதிபதி கூட தனது கட்சி பதவியில் இருப்பதை உறுதி செய்ய இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார் என்ற உத்தரவாதமும் இல்லை. அதேபோல் மகிந்த வுக்கு பிறகு பசில் ஜனாதிபதியாக அல்லது வேறொரு உறவினர் ஜனாதிபதியாக போட்டியிடவே வாய்ப்புள்ள நிலையில் பதவிவகிக்கும் ஜனாதிபதி ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்க மாட்டார் என்று யாரு கருதவும் முடியாது. ஆக வெறுமனே ஜனாதிபதியின் பதவிக்காலத்தை மட்டுப்படுத்துவது மட்டும் பிரச்சினைகளுக்கு தீர்வல்ல,

இன்னும் ஐதேக சின்னாபின்னமாகியுள்ள நிலையில் ஆளும் அரசாங்கத்திற்கு இன்னும் இரு மேலதிக தடவைகள் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவது ஒன்றும் கஷ்டமான காரியம் இல்லை. பொது எதிர்கட்சியாக இணைவதற்கு பொன்சேகா தரப்பு கூட கடந்த தேர்தலை காட்டிலும் மிகவும் பலமிழந்த நிலையில் இருக்கிறது.

இவ்வாறு யதார்த்தம் இருக்கும் நிலையில் சகல ஊடகங்களும் வெறுமனே ஜனாதிபதியின் பதவிக்கால எல்லை பற்றி மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிடுகிறது. இது பிள்ளையை கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவதை போன்றது. ஊடகங்களில் அதிக ஆர்வம் காட்டும் எதிர் சிந்தனை யாளர்களுக்கு செய்தி தீனியை இட்டு தமது வருமானத்தை பெருக்கி கொள்ளுகிறது. அதேவேளை ஜனரஞ்சகமான ஒரே தலைவரான மகிந்தவிற்கு ஆதரவான மக்கள் இதை கணக்கில் எடுக்காமல் ஜனாதிபதிக்கு ஆதரவு நிலையையே எடுப்பார்கள் என்தால் இவ்வெதிர்ப்பை சமாளிப்பதை இலகுவாகவும் ஆக்குகிறார்கள். மாறாக இத்திருத்தத்தில் உள்ள ஏனைய பாதகமான அம்சங்களை முன்னிலைப்படுத்துவதன் மூலம் கட்சி பேதமின்றி ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்க முடியும். இதை செய்யாமல் அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் வெற்றுக்கூச்சல் போடுகின்றன.

தமிழ் ஊடகங்கள் ஜனாதிபதி மீதான காழ்ப்புணர்ச்சியை கொட்டும் இடமாக இதை பாவிக்கிறார்கள். ததேகூ பெரும்பாலான தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்தாலும் பெருவாரியான தமிழர்கள் வாக்களிப்பதிலிருந்து தவிந்திருப்பது அவர்கள் தமிழர்களின் ஏக பிரதிநிதி இல்லை என்பதனை தெளிவாக்கும். அதேவேளை 18 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ததேகூ எதிர்ப்பு தெரிவிக்க போகின்றது என்று அறிவித்திருக்கிறது. அரச தரப்பில் இருந்து அழைப்பு வரும் என்று காத்திருந்து இன்று அதற்கான வாய்ப்பு இல்லாமல் போயுள்ள நிலையில் சீ சீ இந்த பழம் புளிக்கும் என்ற கதையாக இது இருக்கிறது. ததேகூ ஒரு கொள்கையுடைய கட்சியாக இருந்திருந்தால் ஆரம்பம் முதல் ஜனநாயகத்திற்கு எதிரான எந்தவொரு திருத்தத்தையும் ஆதரிக்கமாட்டோம் என்று (வழமை போல ) அறிக்கை விட்டிருக்கலாம் தானே ?

தேர்தல் ஆணையாளரின் சில அதிகாரங்கள் குறைக்கப்படுவதாக சிலர் அலறுகிறார்கள். ஆனால் இதுவரை இருந்த அதிகாரத்தை வைத்துக்கொண்டு அவர் எதுவும் செய்யவில்லை. வெறுமனே முன்னுக்கு பின் முரணான அறிககிகளாலும் செயல்களாலும் எரிச்சல் அடைய செய்வது மட்டுமே அவர் இதுவரை தனது அதிகாரத்தை பயன்படுத்தி செய்திருப்பது. இதைவிட முழுமையான தேர்தல் முறை மாற்றத்தை பொதுமக்கள் கோரவேண்டும். ஆக குறைந்தது எமது காலத்தை விரயம் செய்து பெரும் பொருட்செலவில் நடாத்தப்படும் இன்றைய பழைய தேர்தல் வாக்களிப்பு முறையாவது மாறவேண்டும். அதற்கு தங்கள் ஆதரவை இதன்மூலமாவதுபதிவுசெய்யலாம்..
http://www.facebook.com/home.php?#!/pages/We-want-e-voting-in-Sri-Lanka/116489728363703?ref=ts

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்