Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

ஐபாவைப்போல் சீபாவையும் தமிழர்கள் புறக்கணிப்பர் - சீமான்

ஐபாவை புறக்கணித்த தமிழ் உணர்வாளர்கட்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் சீமான் இப்போது சீபாவை இந்தியா நிராகரிக்கவேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதற்கு ஆயத்தம் ஆவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக தமிழின் தலை சிறந்த நடிகனான ரஜனியையும் உலகத்தர திரைப்படங்களை தந்த கமலையும் அவர் சந்தித்திருக்கிறார்.

இதன்போது எந்திரன் திரைப்படத்தினை இலங்கையில் சீபா ஊடாக நல்ல இலாபத்திற்கு விற்கமுடியுமென்றபோதும், தமிழ் உணர்வை பறைசாற்றும் முகமாக சீபாவில் இந்தியா கையெழுத்திடக்கூடாது என்ற தன் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று உறுதி மொழி வழங்கினார்.

காவிரி நீர்ப்பிரச்சினையில் தெலுங்கு தேசத்திடம் தான் மண்டியிட்டதைப்போல் இதில் மண்டியிடமாட்டேன் என்றும் உறுதிபடக்கூறினார்.

Sri Lanka's Industries and Commerce Minister Rishad Bathiudeen told the parliament today (08) that the government is yet to arrive at a final decision on signing the Comprehensive Economic Partnership Agreement (CEPA) with India.

He said the government had not made any final decision on the matter yet.

Bathiudeen further noted that the government was currently exploring the possibility of entering in to similar trade agreements with Pakistan.

Colombo Page

கமல்ஹாசன், சீபாவுக்கு இலங்கையில் எதிர்ப்பு வலுத்து வருவதால் அதை இலங்கையின் நலன்களுக்கு எதிராக பாவிக்கும் முகமாக அதை ஆதரிக்கவேண்டும் என்று கமல் சொல்லியிருக்கிறார். ஆயினும் சீமான் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

இயக்குனர் ராம் இது தொடர்பாக பல பதிவுகளை இடப்போவதாகவும், தன்னைப்போன்ற புகழ் பூத்த இயக்குனர்களை தமிழ் சினிமா உலகம் பின்பற்றும் என்றும் தெரிவித்திருந்தது அறிந்ததே..

இதேவேளை இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த சீமான், சீபா இந்தியாவின் நலன்களை உறுதிசெய்தபோதும், இலங்கை தொடர்பாக தொடர்ந்தும் எதிர்ப்போக்கை கடைப்பிடித்து தான் இலங்கையை பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கி ஈழம் பெற்றுத்தருவதாக முழங்கினார்.

தமிழ்நாட்டின் உணர்வுகளை மதித்து இந்திய நடுவன் அரசு நடந்துகொள்ளாவிடின் அது தமிழ்நாடு தனிநாடாவதற்கு சகல நியாயங்களையும் உறுதிப்படுத்தும் எனவும் தன் உயிரைக்கூட அர்ப்பணித்தேனும் அடை பெற்றுக்கொடுப்பேன் என்றும் அவர் எச்சரித்தார்..

இன்னும் இந்திய திரைப்படங்கள், முக்கியமாக தமிழ் திரைப்படங்கள் இலங்கையில் இனி இலவசமாக திரையிடப்படும் என்றும் தெரிவித்தார். இது ஐபாவை எதிர்க்கும் தமிழ் சினிமா உலகம் நிர்க்கதியான நிலையில் அநாதரவான நிலையில் பட்டினியில் இருக்கும் தமிழர்களை திரைப்படங்கள் ஊடாக சுரண்டுகிறது என்று சிலர் சக்திகள் சொல்வதை கேள்விக்குட்படுத்தும்..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

0 comments: