Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

பதிவர்களுக்கு ஒரு அழைப்பு

பதிவுலகில் அடிக்கடி சமயங்கள் தொடர்பாக கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஒரு சமயத்தவர் இன்னொரு சமயத்தை பற்றி கேள்விகேட்பது நிச்சயம் வரவேற்கப்படவேண்டியது. இது மதம் தொடர்பான புரிதல்களை அதிகப்படுத்தும். அதேபோல் தான் பின்பற்றும் சமயம் தொடர்பாகவும் தனக்குள்ளேயே எழும் கேள்விகளை அல்லது தாம் எதிர்கொள்ளும் கேள்விகளையும் நாம் தீர்ப்பது அவசியம். இதன்மூலம் நாம் சரியான வழியில்தான் இருக்கிறோமா என்பதையும் சீர்தூக்கி பார்க்க முடியும்.

பதிவுலகில் கூட அடிக்கடி இவ்வாறான கேள்விகள் அடிக்கடி எழுப்பப்படுகின்றன. இவை காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாக கருதும் பலர் இருக்கிறார்கள். ஆனால் இக்கேள்விகளுக்கெல்லாம் தகுந்த பதில்கள் / விளக்கங்கள் இருக்குமானால் அவை அறியச்செய்யப்படல் அவசியம்.

ஆனாலும் பதிவுலகில் யாராவாது ஒருவர் தனது விளக்கத்திற்கேற்ப, புரிதல்களுக்கேற்ப சமய நம்பிக்கைகளை நோக்கிய கருத்துக்களை, விமர்சனங்களை, கேள்விகளை முன்வைப்பர். இவற்றை முதற்தடவை வாசிப்பவர்களில் எத்தனைபேர் பின்னூட்டங்களினூடாக இதற்கு சொல்லப்படும் பதில்களை தொடர்வர்? நிச்சயமாக பாதியளவேனும் இல்லை. இவ்வாறு பதில்களை தொடராதோர் இவ்விமர்சனங்களுக்கு பதில் இல்லை அல்லது அதில் நிறைய பிழைகள் இருக்ககூடும் என்று விளங்கிக்கொள்ளலாமல்லவா?

இவ்வாறான பிழையான புரிதல்களை கழையும், உங்கள் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பதில் தரும் நிகழ்வொன்று எதிர்வரும் ஞாயிறு அன்று இலங்கையில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. ஆங்கில மொழியில் அமையும் இந்நிகழ்ச்சியில் இத்துறையில் அனுபவம் மிக்க வைத்தியர் சாகிர் நாயக் அவர்கள் கலந்துகொள்கிறார்கள். கொழும்பின் சுகததாச (வெளி) மைதானத்தில் இடம்பெற ஏற்பாடாகியிருக்கும் இந்நிகழ்ச்சிக்கு ஏற்கெனவே 25,000 பேர் தம் வரவை உறுதிப்படுத்தியுள்ளார்கள் என தெரிகிறது. இந்நிகழ்வில் கலந்துகொள்ள முஸ்லிம் அல்லாதோர் ஆர்வமூட்டப்பட்டுள்ளனர். இவர்களுக்கே முன்னுரிமையும் அளிக்கப்படும். ஒரு அறிமுக உரையைத்தொடர்ந்து கேள்விநேரமும் இருப்பது இதன் விசேட அம்சம். இதன்போது கேள்விகளை நேரடியாக கேட்கமுடியும். கேள்விகளுக்கு எந்த தணிக்கையும் இல்லை. மேலதிக விபரங்கள் http://www.peacethroughreligion.info என்ற இணையத்தளத்தில் கிடைக்கும்

Dr. Zakir Naik’s lecture tour to Sri Lanka
World’s renowned Islamic scholar Dr. Zakir Abdul –Karim Naik who is based in Mumbai India is to pay a visit to Sri Lanka on the invitation of ‘Association of Muslim Youth of Sailan (Jammiyathush Shabab)’ on the 23rd of May 2010. He is to address the gathering in the Sugathadasa out door stadium on the same day at 06.30pm on the theme “Peace through religion”.

Admission is Free of Charge

Please invite your all your Muslim & Non Muslim friends.

Special Seating arrangements for ladies.

Feel free to contact:

Bro. Nilam : 0716613884

இதற்குமுன் இவ்வாறான பல நிகழ்வுகள் தமிழ்மோழியில் இலங்கையின் பல இடங்களில் நடைபெற்றுள்ளன. தொடர்ந்தும் நடைபெறைருக்கின்றன. ஆங்கில மொழியினூடான இந்நிகழ்ச்சி இவற்றை விட அதிகமானோரின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பல கேள்விகளை மனதில் வைத்திருக்கும் இலங்கையின் சகல பதிவர்களுக்கும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அழைப்புவிடுக்கிறேன். அதேபோல் நீங்களும் இவ்வாறான நிகழ்ச்சிகளை ஒழுங்குசெய்யுமாறும் வேண்டுகிறேன்.

கேள்விகள் பதிலழிக்கப்பட வேண்டும் - பதில்கள் எத்திவைக்கப்படவும்வேண்டும்

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

0 comments: