Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

நான் வாசித்த பதிவுகள் - நேற்றும் இன்றும்

பாடசாலைக்காலத்தை பற்றி ஒரு பதிவு வந்திருந்தது. பதிவின் கடைசியில் தனக்கு காதலி இல்லை என்பதை குறிப்பால் உணர்த்தியிருந்தார். காதலி தேவையென்றால் அதுக்கேத்தமாதிரி ஏழுதுறதுதானே..

Liked My Posts? BUY ME A COFFEE என்று பதிவிற்கு பக்கத்தில் இருந்தது. என்ன இது என்று click பண்ணி பார்த்தால், காசு அனுப்பட்டாம்..

சாருவுக்கு பிறகு இவர்தான்போல.. அரசியல்வாதியின் பிள்ளையப்பா நீ..



இலங்கையில் பயம் இல்லாமல் காத்திரமாக எழுதிய ஒரு பதிவர் நீர்த்துப்போய்விட்டார் என்று தெரிகிறது. எப்போது அவர் பதிவர் சந்திப்புக்கு போனாரோ, அன்று அவரை ஜனநாயக ரீதியில் காயடித்திருப்பது தெளிவாக தெரிகிறது. அந்நியனில் கடைசியில் அம்பியை பார்த்து விவேக் சொல்வது ஞாபகம் வருகிறது.

குரங்கின் மீது பலருக்கு திடீர் பாசம். ஒரு சிலரின் பதிவில் அது வியாபித்து இருப்பதில் வியப்பு ஏதும் இல்லை. மெனக்கெட்டு video ஐ பார்த்தால் இவங்க build up கொடுக்கிற அளவுக்கு பெருசா ஒண்டும் நடக்கல எண்டு தெரியுது. சின்ன சின்ன சந்தோஷங்கள்


பதிவுலகத்தினால் சில சில்லறைப்பத்திரிகைகள் பயன்பெறுவது தெளிவாக தெரிகிறது. பதிவர்கள் தேடித்தெரிந்து எழுதுவதை அப்படியே copy பண்ணி போட்டு காசு பார்க்கும் இவர்கள் பதிவின் பெயரைப்போடுவதுமில்லை. பதிவருக்கு சன்மானம் கொடுப்பதுமில்லை. தரம்கெட்ட வியாபாரிகள்.


பிடித்த சொற்பொழிவாளர் "சுகி சிவம்" என ஒரு பதிவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ம்.. துரோகி பட்டம் தந்துடுவாங்க. பாத்து..


பதிவர்களே.. உங்க பதிவு பிடிச்சிருந்தா ஒரு ஓட்டு நிச்சயம் போடுவேன். ஆனா உங்க பதிவில ஓட்டு போடுறதுக்க இல்லாட்டா நான் என்ன செய்றது?நகைச்சுவையோடுதான் சிலர் ஓட்டுப்பட்டையும் இணைத்துள்ளார்கள்.


சுறா படத்துக்கு ஒரு சிலருக்கு ticket கிடைச்சிருக்காம். போகாட்டி வேற யாருக்காவது கொடுக்கலாமே.



இலவச ticketல படம் பார்த்துட்டு படத்தை பத்தி ஆஹா ஓஹோ என எழுதும் சில பதிவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு இலவச ticket கொடுப்பது இதுக்குத்தான் என்றாலும் ஒரு நியாயம் இருக்கவேண்டும். இலவசமா பாக்குற உங்களுக்கு எல்லாம் நல்லாத்தான் இருக்கும். 300 குடுக்கிறவனுக்கு அப்படி இருக்குமா? இலவசமா படம் பாக்குறவங்க எல்லாம் விமர்சனம் எழுதக்கூடாது என்று சுய கட்டுப்பாட்டை விதித்துக்கொள்வார்களா? அல்லது இப்படத்தை இலவசமா பார்த்தேன் என்றும் சேர்த்து எழுதமாட்டார்களா? (இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் என்று வருவதுபோல)


சைந்தவி கடிதம் கொஞ்சகாலம் hot topic ஆக இருந்துச்சு. இருந்தாலும் எதையும் வாசிக்கல. நேத்துதான் சைந்தவி பத்தி ஒருமாசம் 2 வாரத்துக்கு முந்தைய பதிவ வாசிச்சேன். ரொம்ப பிடிச்சுது. இத்தனை நாள் வாசிக்கலையே என்று கவலையும் வந்தது.

ஆனா இந்த பதிவ எழுதின பதிவர் சிங்கப்பூருக்கு பக்கத்து நாட்டுல LOVE பண்றாராமே..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

1 comments:

என்.கே.அஷோக்பரன் said...

:-D !

வெவ்வேறுபட்டவர்கள் பதிவுகளை எப்படி வெவ்வேறு கோணங்களில் பார்க்கிறார்கள் என்பது வியப்பைத் தருகிறது!

there is an English saying that
'the author is dead after the publication of the book'

so I don't really mind the readers' perspectives! Enjoy it your way!