Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

காண்டீபனின் கடப்படித்தனம், சக்தியின் சமர், கெட்டிக்கார அமைச்சர்கள். சார்க்

கெட்டிக்கார அமைச்சர்கள்

இலங்கையின் அமைச்சர்வை கடந்தவாரம் பதவியேற்றது. அதன்பின் ஊடகங்களில் அவ்வமைச்சர்கள் கூறிய கருத்துக்கள்தான் அதிசயிக்கவைத்தன. பதவியேற்பு வைபவம் முடிந்த கையோடு, அமைச்சின் எதிர்கால திட்டங்கள் பற்றி பேசினார்கள். அட.. சரியான சுட்டி.. இவ்வளவு கெட்டிக்காரர்களா?

சார்க்

சார்க் மாநாடு நாளை ஆரம்பமாகும். பாடசாலைக்காலத்தில் இருந்து சார்க் ஒரு ரோதனையாகவே இருக்கிறது. பரீட்சைகளில் அதைபற்றிய கேள்விகளை எதிர்கொண்டதை தவிர வேறு எந்த ஒரு இடத்திலும் நன்மைகளை சாதாரண பொதுமக்கள் அடைந்ததாக தெரியவில்லை. (சில பொருளாதார ஒப்பந்தங்கள் சார்க் என்ற அமைப்பு ரீதியான தோற்றமளிக்காமல் இருதரப்பு ஒப்பந்தங்களாகவே தெரிகின்றன்). கூடி கூடி என்ன செய்கிறார்கள்?

சக்தியின் சமர்

இலங்கையில் தமிழ் தொலைக்காட்சி என்று பேசும்போது சக்தியை தவிர்க்க முடியவில்லை. பல தமிழ் தொலைக்காட்சிகள் பார்வையாளர் இன்றி இயங்குகின்றன.

சக்தியில் மின்னல் நிகழ்ச்சி இல்லாமல் போனது மிக்க மகிழ்ச்சி. ஆனால் ரங்கா ஒருவரின் தனிப்பட்ட அரசியல் விருப்பு வெறுப்புகளை கழித்து பார்த்தால் அது நல்ல நிகழ்ச்சி. தமிழ் பேசும் மக்களிடையே புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்பவும், விமர்சனம் ஊடாக அரசியல்வாதிகளுக்கு கடிவாளம் போடவும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி அவசியம். துரதிஷ்டவசமாக அதை தர யாரும் தயாரில்லை.

சிரசவின் சட்டன நிகழ்ச்சியின் theme இல் சமர் நிகழ்ச்சி கடந்தவாரம் பார்க்கக்கிடைத்தது. 3 மணித்தியாலங்கள் நடக்கும் நிகழ்ச்சியை ஒரு மணித்தியாலத்திற்குள் சுருக்க முயற்சிக்கிறார்கள். ஏதாவது ஒரு குப்பை நிகழ்ச்சியை விட்டுவிட்டு இன்னொரு மணித்தியாலம் சேர்க்கலாம். அல்லது சட்டணவில் இருந்த சில (தமிழில் வெற்றிகரமாக செய்யமுடியாத) அம்சங்களை விட்டுவிடலாம்.

காண்டீபனின் கேள்வி

புத்தளத்தில் இருக்கும் முஸ்லிம் அகதிகள் வசதியாக இருப்பதாக காண்டீபன் சொன்னார். கேள்வியில் இடம்பெற்ற ஒரு விஷயமென்றாலும் முதன்மைப்படுத்தப்பட்டிருந்தது இந்த எரிச்சலே. 

ஊடகத்தில் இருக்கும் ஒருவர் (எல்லாரையும் ஊடகவியலாளர் என்று புனிதப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை). ஆண்டுகளாக மக்கள் அகதிமுகாமில் இருந்துகொண்டு பிச்சை எடுக்கவேண்டும் என்று இவர் நினைக்கிறாரா? சொந்த இடங்களில் இருந்திருந்தால் இதைவிட வசதியாக இருக்கமாட்டார்களா?

இவ்வாறு கேள்விகேட்பவர்கள் ஏன் "புலம்பெயர்ந்தவர்கள்" வசதியாக இருப்பது பற்றி பேசுவதில்லை? அவ்ர்களை வைத்துக்கொண்டு இங்கு இருப்பவர்கள் KFCஇலும் Pizza Hutஇலும் தின்று திரிவதை பற்றி பேசுவதில்லை? எல்லோரும் உப்பு புளிக்கு அரசின் கைகளையா எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்? மைக்கும் குரலும் மட்டும் இருந்தால் போதாது. மண்டையிலும் வேணும்.

அல்லது இவர்களின் நிகழ்ச்சி இதுவரை துரத்தப்பட்ட முஸ்லிம்கள் பற்றி ஒரு நிகழ்ச்சி செய்யவில்லை?
இன்னும் இந்நிகழ்ச்சி முழுவதும் முகா அரசுடன் சேரக்கூடாது, இம்முறை வாய்ப்பு ததேகூக்கு தான் என்ற தொனி விரவியிருந்தது. இந்த பிச்சைக்காரப்புத்தி எப்போது போகுமோ?

சரியான வார்த்தை "கடப்படித்தனம்" (நன்றி ஆனந்த சங்கரி அவர்கள்)

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

0 comments: