Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

ஆழம் பார்க்காமல் காலை விட்ட மனோ கணேசன்

தேர்தல் முடிந்த நாள்முதல் மனோகணேசனின் ஒப்பாரிச்சத்தம் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

வழமையாக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வந்த மனோ கணேசன் இம்முறை அரசியல் சூதாட்டம் ஒன்றை நடத்தினார். வெற்றிவாய்ப்பு அதிகமாக உள்ள கொழும்பை தனது தம்பிக்கு விட்டுக்கொடுத்து கண்டி மாவட்டத்தில் அவர்போட்டியிட்டார்.

கண்டி மாவட்டத்தில் ஐதேக தனது பலத்தை சரியாகவே கணித்திருந்தது என்று தெரிகிறது. 4 பேருக்கு மேல் வெற்றிபெற முடியாது என்பதை உணர்ந்த ஐதேக அங்கு போட்டியிட இருந்த திஸ்ஸ அத்தநாயக்கவை தேசியப்பட்டியலில் உள்ளடக்கியது. இது தெரியாமல் அடம்பிடித்து கண்டியை பெற்றுக்கொண்ட மனோ ஆப்பை தேடிச்சென்று சொருகிக்கொண்டார்.

ஒரு கட்சியின் தலைவராக இருப்பவருக்கு ஆகக்குறைந்தது தனது பதவியையேனும் தக்கவைக்க தெரிந்திருக்கவேண்டும். திடிரென தொகுதி மாற்றமுன் குறைந்தது தனக்குள்ள ஆதரவையாவது கணித்திருக்க வேண்டும். கம்பஹாவில் வந்து போட்டியிட்ட பசிலும் அம்பாறையில் வந்து போட்டியிட்ட வீரசேகரவும் தமது பதவிகளினூடாக பாரிய சேவைகளை செய்தே தமது வெற்றியை உறுதிசெய்தனர். ஆனால் மனோவோ எப்போதும்போல எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கண்டிக்கு சென்றுவிட்டார்.

தேர்தலில் தோல்வி உறுதியான பின்னராவது அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவி பற்றி நெருக்குதல்களை கொடுத்திருக்கவேண்டும்.. ஆனால் தனக்கு ஆசனம் கிடைக்கும் என உறுதியாக நம்பிய அவர் கொழும்பில் தோல்வியுற்ற குருபரனுக்கு அவர் யாழ் தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்கிறார் என தேசியப்பட்டியல் ஆசனம் கோரிக்கொண்டிருந்தார். அந்தோ பரிதாபம்.. அப்போதும் கூட தன்து நிலை என்ன என்பதை அறியாதவராகவே இருந்திருக்கிறார்.

இப்படி மனோ நடந்துகொண்டதால்தான் ஐதேகவும் இழக்காரமாக நினைத்திருக்கும். அவர் கொழும்பில் வெற்றிபெற்ரிருந்தால் அதைக்கொண்டு தனது தம்பிக்கு ஆசனமொன்றை பெற்றுக்கொடுத்திருக்க முடியும். ஆனால் அவர் தோற்றதால் அவர் கட்சியையே கணக்கெடுக்காமல் விட்டுவிட்டார்கள்.

அவர் கண்டியில் தோற்றாலும் தோற்றவர்களில் முதல் இடத்திலாவது இருக்கவில்லை. அதுகூட அவரை சொல்வாக்கற்றவராக ஆக்கியிருக்கலாம்.

இன்னும் கொழும்பு மாவட்டத்தில் வெற்றி பெற்றவர்களில் எல்லா கட்சிகளிலும் ஆகக்குறைய விருப்பு வாக்கு பிரபா கணேசனுக்கு கிடைத்திருந்தது. இந்த லட்சணத்தில் எப்படி ஐதேகவை நெருக்கமுடியும்?

மனோகணேசன் கொழும்பில் தனித்துப்போட்டியிட்டிருந்தால் இந்த 43,000 ஆயிரம் வாக்குகளை பெற்றீருந்தால் ஒரு ஆசனத்தையெனும் பெற்றிருக்க முடியாது. ஐதேக ஆதரவாளர்களான தமிழர்களின் வாக்குகளை கழித்தால் இந்த என்ணிக்கையையே அடைந்திருக்கமுடியாது என்பதையும் கவனத்தில்கொள்ளவேண்டும்.

இதுபோதாதென்று நுவரெலியாவில் போட்டியிட்ட இவர்களது கட்சியச்சேர்ந்த ரங்காவும் அங்கும் வெற்றிபெற்றவார்களில் ஆகக்குறைந்த வாக்குகளையே பெற்றிருந்தார் என்பதும் இங்கு கவனிக்கவேண்டியது.

இன்றும் மனோ தன்து வழமையான எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் ரணில் இருக்கும் வரை ஐதேகவோடு கூட்டு இல்லை என்றும், ஐதேகவில் இருக்கும் 5 பேரை துரத்தப்போவதாகவும் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்.

கூரையேறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானா? தனது பதவியையே காப்பாற்றத்தெரியாதவர் எப்படி அரசியல் நரியான ரணிலை வீட்டுக்கு அனுப்பப்போகிறார்?

இதுபோதாதென்று ஜனாதிபதி மஹிந்த தொலைபேசியில் துக்கம் விசாரித்ததைவேறு பகிரங்கப்படுத்தியுள்ளார். (நக்கலுக்கு கேட்டாரோ யாருக்கு தெரியும்?). இவ்வழைப்பு மூலமாக ரணில் துரோகியாக மாற ராஜபக்ச நண்பர் ஆகியுள்ளார். ஆனால் இதுவரை இவர்செய்தது ராஜபக்ச எதிர்ப்பு அரசியலே..

முதலில் மனோ அரசியலில் சில பால பாடங்களை படிக்கவேண்டும். (மனோவும் ரங்காவும் தெளிவாக பேச பழகவேண்டும். தமிழைக்குதப்பிக்கொண்டு வாக்குகேட்டால் உங்கள் நியாயமாவது மக்களுக்கு புரியுமா?)

அத்துடன் இனியாவது ஆழம் பார்க்க தெரியணும்

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

0 comments: