Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

மதுவும் பௌத்த அரசியலும்


இலங்கை அரசியலில் ஒரு உத்தியோகபூர்வமற்ற அங்கமாக இருந்துவந்த மது இந்த ஜனாதிபதித்தேர்தலில் பேசு பொருளாக்கப்பட்டுள்ளது.

இலங்கை; அரசியல் யாப்பின் படி ஒரு பௌத்த நாடாகும். பௌத்த சாசனத்தை காப்பது அரசின் கடமையாகும். இதுவரை பல பௌத்த நண்பர்களிடம் விசாரித்ததில் ஒரு சிலர் மாத்திரம் மது பௌத்த தர்மத்தில் தடை என கூறியபோதும் பலரும் கூறும் விடயம் கொஞ்சமாக பாவிக்கலாம் என்பதே. பௌத்தத்தின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதை தெளிவாக அறியும் நிலை இதுவரை எனக்கு கிட்டவில்லை. ஆனால் எல்லோருக்கும் தெரிந்த விடயம், பௌத்த புனித நாளான பூரணை நாளில் மது விற்பது சட்ட விரோதம் என்பதே.

அமைச்சர் மேர்வின் சில்வா களனி பிரதேசத்தின் சுதந்திர்க்கட்சி அமைப்பாளரானதும், செய்த முதல் காரியம் அப்பிரதேசத்தில் இருந்த மாட்டிறைச்சிக்கடைகளை அகற்றியதே. இது தொடர்பாக COFFEE WITH LAHIRU நிகழ்ச்சியில் சாராயத்தவறணைகள் இப்பிரதேசத்தில் இருந்தபோதும் மாட்டிறைச்சிக்கடைகள் மட்டும் ஏன் அகற்றப்பட்டன என் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் "எப்பவாவது மது அருந்தலாம் கொஞ்சம் fun எடுக்கலாம்" என்றிருந்தது. (இவ்வாறான விடயங்கள் தமிழின் முதன்மை ஊடகங்களில் வெளிவரவேயில்லை. என்பது கவனிக்கத்தக்கது)

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டபின் ஜனாதிபதி ஒரு கூட்டத்தில் உரையாற்றும்போது தனது அடுத்த இலக்கு மதுவை நாட்டில் இருந்து இல்லாதொழிப்பது என்றார்.

இதன் பின், ஜெனரல் சரத் பொன்சேக்காவின் முதல் ஊடகவியலாளர் மாநாட்டில் மது தொடர்பான அவரது நிலைப்பாடு கேட்கப்பட்டது. அவரும் கொஞ்சமாக அடிக்கலாம் என்றார்.

(இக்கருத்தை அவ்ர் தெரிவித்தபின் மேர்வின் சில்வா அக்கருத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டமும் நடத்தினார் என்பது ஒரு சுவாரசியம்.)

அத்துடன் அரச தமிழ் ஊடகங்களில் பொன்சேக்காவின் கருத்துக்கெதிராக மக்கள் (முஸ்லிம்கள்) எதிர்ப்புத்தெரிவிப்பதாக காண்பிக்கப்பட்டது.

அண்மையில் எதிர்கட்சி முக்கியஸ்த்தர் மங்கள சமரவீர அன்னதான சாலையாக மாறிய அலறி மாளிகையில் வெளிநாட்டு மதுவும் தாராளமாக புழங்குவதாக குற்றஞ்சாட்டி இதுதான் மதுவை ஒழிக்கப்போவதாக கூறும் அரசின் இலட்சணமா என கேள்வியெழுப்பியிருந்தார்.

இவ்வாறான சம்பவங்கள் மது பாவனை தொடர்பாக பௌத்தம் ஒரு இறுக்கமான நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை எனக்காட்டுகிறது.

ஒரு மாதத்திற்குமுன் பிரபல பொருளியலாளர் ஹர்ஷா; 31st night உம் பூரணை தினமும் ஒன்றாக வருவதை ஞாபகமூட்டியிருந்தார். பிரபல ஹொட்டேல் வர்த்தக புள்ளியான ஹார்ப்போ மது தொடர்பாக அரசு இன்னும் இறங்கிவருவது சுற்றுலா வணிகத்திற்கு மிக அவசியமானது என்றார்.

இன்று பத்திரிகைகளில்; அரசு ஹோட்டல்களுக்கு இந்த 31st night பூரணை தினத்திற்காக விசேட அனுமதிகளை ஒரு சிறு கட்டணத்திற்கு வழங்கப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக பௌத்த கடும்போக்காளர்களிடமிருந்து இதுவரை எந்த எதிர்ப்பும் வெளியாகவில்லை என்பது கவனத்திற்குள்ளாகவேண்டிய விடயமாகும்.

இவ்வாறான நிலமையில் பௌத்தத்தின் முக்கிய விடயங்கள் மாட்டிறைச்சி, சுகமளிக்கும் ஆராதனைகள், மதமாற்ற தடை சட்டம், அத்துமீறிய / திட்டமிட்ட குடியேற்றங்கள் தானா என்ற கேள்வி உருவாகிறது.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

வேட்டைக்காரன் கருத்துக்கணிப்பு


வேட்டைக்காரன் படம் பற்றி பலவாறான விமரிசனங்கள் வருகின்றன. பதிவர்களின் கருத்துக்கள் மட்டுமல்லாது வாசகர்களினது கருத்துக்களும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும் என்பதால் வேட்டைக்காரன் கருத்துக்கணிப்ப நடாத்தப்படுகிறது. இனி தெரிவு உங்களிடம்...

(இந்த idea வருவதற்கு காரணமாகிய SShathiesh இன் பதிவுக்கு இனிய, உளம் கனிந்த, மனமார்ந்த நன்றிகள்)



Q1 வேட்டைக்காரன் படம் பார்க்க மக்கள் வந்ததேன்?

1) நாங்கள் படத்தை புறக்கணிக்கவில்லை எனக்காட்ட,

2) இராஜ் இன் பாடலுக்காக,

3) நண்பன் செய்த தவறொன்றுக்கு தண்டிக்க (கூட்டிப்போய் விட்டா சரி)

4) பண்ண வேறு வழி கிடைக்கவில்லை

5) ரோமக்கால்களுக்கு காட்சியமைப்பை ரசிக்க

6) விஜய் பாவம் (விஜய் ரசிகன் / ரசிகை)

7) அருமையான படம்

8) சன் டிவி விளம்பரம்




Q2     வேட்டைக்காரன் படத்தை நீங்கள் எங்கே பார்ப்பீர்கள் / பார்த்தீர்கள்?
1) நல்ல தியேட்டரில்
2) சாதாரண தியேட்டரில்
3) அட்டு தியேட்டரில்
4) வீட்டில் VCD இல்
5) பார்க்காமல் இருப்பதே சிறந்தது


Q3    நீங்கள் படம் பார்த்திருந்தால் உங்கள் கருத்து
1) நல்ல படம்
2) பரவாயில்லை
3) தண்டம்

உங்கள் பதில்களை பின்னூட்டமாக பதிந்துகொண்டால், முடிவை தகுந்த ஆதாரங்களுடன் அறிவிக்க வசதியாக இருக்கும்.

அணிதிரண்டு வாரீர். உங்கள் கருத்துக்களை சொல்வீர்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

ஞாயிறு செய்தித்தாள்களில் - 20 Dec 2009



தேர்தல்களின் காரணமாக; தம்புள்ள பெருளாதார மத்திய நிலையத்தில் ஏப்ரல் மாதம் முதல், ஒப்பந்தங்கள் புதுபிக்கப்படாமலேயே கடைகளை வர்த்தகர்கள் உபயோகிக்கிறார்கள் . ரூபா 12,000/- வாடகை அறவிடப்படும் இக்கடைகள் ரூபா 100,000/- வரையான வாடகைக்கு உரிமையாளர்களால் விடப்பட்டுள்ளன.

Tenancy expired, but election year moves to stay on. These trade stalls whose tenancy contracts expired in April this year continue to do business. At present the monthly rent for a stall is Rs. 12,000, but some of the tenants had reportedly sub-let their premises to others at sums ranging from Rs. 75,000 to Rs. 100,000. (The Sunday Times)


 





When asked what her future plans are Susanthika quipped: “I am toying with the idea of entering politics. I am sure if President Mahinda Rajapaksa invites me to support him in his campaign I would be more than glad to join the bandwagon. I remember on my birthday, even before my mother or my father or even any of my sisters could wish me, it was the President of this country who rang me up early morning to wish me. I will never forget that gesture of his”.  

Susanthika who has a string of world records as acclaimed titles, received Rs.5 million from the President’s Fund upon her retirement from the athletics arena. She was also given a house at the Elvitigala Flats and also has several duty free permits for vehicles. (The Sunday Times)

சுசந்திக்காவிடம் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக கேட்டபோது "நான் அரசியலுக்கு வரும் எண்ணத்தில் இருக்கிறேன். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய அழைக்கும் தருணத்தில் மிகுந்த மகிழ்ச்சியடைவேன். என் பிறந்தநாளன்று என் அம்மாவோ அப்பாவோ சகோதரிகளோ வாழ்த்து தெரிவிக்குமுன் அதிகாலையில் இந்த நாட்டின் ஜனாதிபதி தொலைபேசியில் வாழ்த்தியதை நான் இன்னும் ஞாபகம் வைத்துள்ளேன்" என்று தெரிவித்தார்.

பல சாதனைகளைப்படைத்துள்ள சுசந்திக்கா  ஓய்வுபெறும்போது  ஜனாதிபதி நிதியத்திலிருந்து ரூபா 5 மில்லியனும் எல்விட்டிகல தொடர்மாடியில் ஒரு வீடும் வாகனங்களுக்கு தீர்வையின்றி இறக்குமதி செய்யவதற்காக பல பேர்மிட்களையும் பெற்றிருந்தார்.





It was none other than Police Chief Mahinda Balasuriya who ordered that all cut-outs bearing images of political personalities are removed by his men. It follows orders from President Mahinda Rajapaksa.

Mr. Balasuriya is perhaps unaware that some of his men have done just the opposite. There is a large poster pasted on the wall of the Kohuwala Police station in support of President Rajapaksa. One might say it could have failed to catch the attention of the Policemen at Kohuwala. However, that is not the case.

Printed at the bottom of the logo are the words "Sponsored by the OIC and Staff of the Kohuwala Police Station."

"He (the OIC) is sure to get a promotion soon," said a retired senior DIG who could not contain his laughter. "In our days, the chap would have been promptly moved out. But today, the Police are part of a political party," he lamented. (The Sunday Times)


ஜனாதிபதியின் உத்தரவினையடுத்து பொலிஸ்மா அதிபர் தேர்தல் பதாதைகளை அகற்றுமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். 

கொஹுவல பொலிஸ் நிலைய சுவரில் ஒட்டப்பட்டுள்ள பதாதை இது. இப்பதாதையில் அடியில் காணப்படும் வாசகம் "அனுசரணை: OIC  மற்றும் அலுவலர்கள், கொஹுவல பொலிஸ் நிலையம்"





I am an actor

The grand old man in the game has agreed to sing. When he was asked to sing for the team with colours and a symbol he had to agree, if not he would not be in the team with the emblem at the next big one that will also take place Down South.(The Sunday Times)

இது ஒரு விளையாட்டு வீரரை பற்றிய தகவல். தெரிந்தவர்கள் / விளங்கியவர்கள் சொல்லுங்கள்





President Mahinda Rajapaksa receives the blessings of First Lady Shiranthi Rajapaksa before leaving Temple Trees at an auspicious moment for the commencement of the Presidential Elections campaign. (The Sunday Observer)

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரங்களை ஆரம்பிப்பதற்காக் அலறி மாளிகைகையிலிருந்து புறப்படும் முன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவிடம் ஆசி பெறுகிறார்.



Launching their campaign rallies, President Mahinda Rajapaksa is seen waving to the crowds outside the Elections Secretariat at Rajagiriya with the Korean good-luck talisman he carried during his successful 2005 Presidential poll campaign tied to his right hand. Pix by Gemunu Wellage and J. Weerasekera (The Sunday Times)
2005ஆம் ஆண்டு தெர்தல் பிரச்சாரங்களின்போது தன்னுடன் வைத்திருந்த கொரிய அதிஷ்ட்ட இலாஞ்சனையை தன் வலது கையில் கட்டியவாறு தேர்தல்கள் செயலகத்திற்குமுன் ஆதரவாளர்கட்கு கையசைக்கும் ஜனாதிபதி ராஜபக்ஷ




Delegates sleep during a break in an all-night plenary meeting at the UN Climate Change Conference 2009 in Copenhagen on December 19, 2009. UN Secretary-General Ban Ki-mooon praised the deal at the Copenhagen climate summit as an “essential beginning” but admitted it did not achieve all that was hoped. (The Sunday Times)
காலநிலை மாற்றம் தொடர்பான கொப்பன்ஹேகன் மாநாட்டில் இடைவேளையின்போது தூங்கும் பிரதிநிதிகள்


டோனிக்கு தடை
 நாக்பூரில் நாளை 21ஆம் திகதியும், 24ஆம் திகதியும் நடைபெறவுள்ள இலங்கை-இந்திய கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் தலைவரான டோனிக்கு தடைவிதிக்கப்பட் டுள்ளது. இவருக்கு பதிலாக இவ்விரு போட்டிகளிலும் தற்காலிகமாக கெளதம் காம்பீர்,  நியமிக்கப்பட்டுள்ளார்,.(தினகரன் வாரமஞ்சரி)

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

வேட்டைக்காரனும் கவிக்கோ ரகுமானும்


கவிக்கோ ரகுமான் தன் புத்தகத்தில் எழுதியிருக்கிறார்
"ஒரு சட்டையின் அழகு சட்டையில் வந்த துணியில் மட்டுமல்ல. சட்டைக்காக வெட்டி நீக்கப்பட்ட துணியிலும் இருக்கிறது"

யதேச்சையாக இன்று காலை இவ்வரிகளை வாசிக்கச்செய்த விதிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

விஜய் படம் பார்க்கப்போகும்போது நம்மை சில தயார்படுத்தல்கட்கு உட்படுத்தவேண்டியிருக்கிறது. முதலில் சகிப்புத்தன்மை. விஜய் சுத்தி சுத்தி அடிப்பதையும் ஆப்பு வைப்பதையும் தோட்டாக்களுக்கு லாவகமாக டாட்டா காட்டுவதையும் இடுப்பில் கைவைத்தவாறு கம்பீரமாக குதிரைச்சவாரி செய்வதையும் பஞ்ச் வசனங்களையும் சகித்துக்கொள்ள எம்மனதை பக்குவப்ப்படுத்த வேண்டும். ரஜனிக்கு இதை செய்யும் நாம் ஏன் இலங்கையில் பெண்ணெடுத்த விஜய்க்கு செய்யக்கூடாது? எனவே நான் படத்துக்கு ஆஜர்.

உலகநாடுகளில் இலங்கைத்தமிழர்கள் வேட்டைக்காரனுக்கு எதிர்ப்பை காட்டப்போவதாக பதிவுலகம் அல்லோலகல்லோலப்பட்டாலும் இங்கு இலங்கையில் எல்லா திரையரங்குகளிலும் அரங்கு நிரம்பிய காட்சிதான். வரிசையில் கூட்டம்தான்.

என்னைப்பொறுத்தவரையில் போக்கிரி அளவுக்காவது படம் இருக்கவேண்டும். அதே வகையான கதை அதே வகையான காட்சியமைப்பு. ஆனால் எதோ போக்கிரியில் இருந்தது இதில் இல்லாமல் இருப்பதை உணர்ந்தேன். (முமைத் கான் என்று யாரும் நினைக்கவேண்டாம்).

வில்லன் தமிழில் சைலன்ஸ் சொல்ல விஜய் "சாக்கடைக்கு முன் அமைதியாய் இருக்கமாட்டேன்" என உறுமினார் பாருங்கள். அட விஜய் அன்று சொன்ன சைலன்ஸ்க்கு அர்த்தம் இன்றுதான் புரிந்தது போங்க.. எனவே சாக்கடை ஊடகவியலாளர்கள் இனி விவேக்குக்கு செய்வதுபோல் எதிர்ப்பை காட்டுவார்களா?

காட்சிகள் அழுக்கில்லாமல் படமாக்கப்பட்டுள்ளது. சின்னத்தாமரை பாடலில் வரும் "என் ரோமக்கால்கள்" என்ற வரி வரும்போது அனுஷ்க்காவின் கால்களை (ரோமமில்லாத) காட்டும் படப்பிடிப்பின் நுணுக்கங்கங்கள் அருமை அருமை..

இருந்தாலும் ஸ்கூட்டியில் போகும் அனுஷ்க்கா திரும்பிப்பார்ப்பது, (அயன் ஞாபகம் வருகிறது) கண்டதும் கனவில் குடும்பம் நடாத்தி பிள்ளை குட்டிகளுடன் நிற்பது (தூம் - உதய் சோப்ரா - அலி) போன்ற நேரடியான கொப்பி பேஸ்ட்களையாவது தவிர்த்திருக்கலாம்.

என்னைப்பொறுத்தவரை விஜய் ரசிகர்கட்கு வெற்றிப்படம். விஜய் எதிரிகட்கு தோல்விப்படம்.

படம் முடிந்த பின் ரகுமானின் தத்துவம் ஞாபகம் வந்தது. படத்தில் வராத வைக்காத காட்சிகளை நினைத்தேன். 300/- க்கு படம் பரம திருப்தி..


சம்பந்தமில்லாமல் ஒரு எக்ஸ்ட்ரா பிட்
தமிழ் ரசிகர்கள் ஒருவரை புகழ்வதில் உலகுக்கே உதாரன புருஷர்கள். இந்தவாரம் ரஜனியின் சிறப்பை வெற்றி வானொலியில் ரசிகர்கள் சொன்னார்கள். அதில் ஒன்று "ரஜனியின் நாவடக்கம்". ஆம் அவர் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி. அப்படித்தான் இலங்கைத்தமிழர் ஆதரவு கூட்டத்தில் பேசினார். "30 வருஷமா வெல்ல முடியல, நீங்களெல்லாம் ஆம்பளயா?".

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

போட்டி தொடங்குமுன்னே வெற்றிய தாரைவார்த்த பொன்சேக்கா


இதுவரை காலமும் எவ்வித திருப்பங்களும் இன்றி சென்றுகொண்டிருந்த இலங்கையின் அரசியல் களம் திடீரென எதிர்பார்க்காத விதமாக பொன்சேக்காவின் அரசியல் பிரவேசம் முதல் சூடுபிடித்துள்ளது.

இலங்கையின் தற்போதைய அரசியல்; யுத்த முடிவுடன் இன ரீதியான வாக்களிப்பு நடாத்தைகள் கொண்டு பிரிக்கமுடியாததாக மாறியுள்ளது. யுத்த முடிவுவரை பயங்கரவாத பிரச்சினைக்கு தீர்வுகாண எதிர்பார்க்கப்பட்ட ஒரே நோக்கிலான வெவ்வேறு அணுகுமுறைகளின் முகாம்களுக்கிடையேதான் போட்டி இருந்தது. யுத்த முடிவுக்குப்பின் "யுத்த ரீதியான தீர்வு" முகாம்; அதிகளவான "யுத்த தீர்வு எய்தப்பட முடியாதென நம்பிய" முகாமைச்சார்ந்த வாக்காளர்களை எளிதாக ஈர்த்துக்கொண்டது.

அரசு இதுவரை ஆழம் பார்த்த மாகாணசபைத்தேர்தல்களிலெல்லாம் தன் ஆதரவாளர்களிடையேயே ஓரளவு வெறுப்பையும் சம்பாதித்துக்கொண்டது. கிழக்கு மாகாண சபத்தேரதலில் முஸ்லிமா தமிழா என்று தொடங்கப்பட்ட பிள்ளையான் ஹிஸ்புல்லாஹ் சர்ச்சை முதல் தென்மாகாண சபையில் இதுவரைதொடர்கின்ற முத்துஹெட்டிகம அனார்க்கலி சண்டைகள் வரை இந்தபோக்கு நீடித்தது. இவைமூலம் இம்மாகாண சபை தேர்தல்களில் அரசுக்கு வாக்களித்தவர்களில் ஒரு பகுதியையாயினும் அடுத்த தேர்தலில் அரசு இழக்க நேரிடும்.

இவ்வாறான நிலமையில்தான் எதிர்க்கட்சிகளுக்கு ஓரளவு நம்பிக்கையிருந்தது. இதை சரியாக கணித்த அரசாங்கம் யுத்த வெற்றிமீது மக்களுக்கு பெருமையின் சூடுதணியமின்பே ஜனாதிபதித்தேர்தலை நடாத்த தீர்மானித்தது.

ஆரம்பத்தில் ஜனாதிபதிக்கெதிராக ரணிலோ அல்லது எஸ்பியோ களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியின் வெற்றி மிகத்தெளிவானதாக கணிப்பிடப்பட்டது. (இவ்வாறான தேர்தல் ஒன்றில் தன்னை பலிக்கடாவாக்க ஒருபோதும் ரணில் நினைத்திருக்கமாட்டார் என்றே எண்ணத்தோன்றுகின்றது.)

ஆயினும் எதிர்பாராத விதமாக ஒரே அணியில் இருந்த சரத் பொன்சேக்கா ஜனாதிபதிக்கெதிராக இறக்கிவிடப்பட்டார். இதன்மூலம் யுத்த வெற்றிக்கு பிரதான பங்கு வகித்தவர் யார் என்ற போட்டியாக தேர்தல் களம் மாறியது. இதன்மூலம் பெரும்பான்மை மிக்க "யுத்த தீர்வு முகாம்" இரண்டாக பிளவுற்றது.

ஆரம்பத்தில் பொன்சேக்கா அரசியலுக்கு வருவதை இம்முகாமை ஆதரிக்கும் மக்கள் விரும்பாவிடினும், அவர்களில் பாதியளவானவர்கட்காவது பொன்சேக்காவுக்கு தகுந்த மரியாதை வழங்கப்படவில்லை என்ற மனவருத்தம் இருந்தது. இது அவர் மீது களனி விஹாரையில் வைத்து சிலர் கூக்குரலிட்டதுடன் அதிகரித்தது. இதுதான் அவர்மீது ஊடகங்களின் கவனம் குவியவும் காரணமாகியது.

இம்மனப்பாங்கை அரசு சரியாக புரிந்துகொண்டது. அன்றுமுதல் அரசு பொன்சேக்காவை விமர்சிப்பதை குறைத்து அவர் ஒரு அதிகார ஆசை மிக்கவராக காண்பிப்பதற்கு மொத்த அரச அதிகாரங்களையும் பாவிக்கத்தொடங்கியது.

இருந்தும் இது ஒன்றுமட்டும் போதாது என்பதும் தெளிவானது. எனவே "மக்கள் எதிர்பார்ப்பு" என்ற தலைப்பிலான விளம்பரங்களை முடுக்கிவிலப்பட்டன. பொருட்களின் விலை குறைப்பு மற்றும் எதிர் முகாம் பிரபலங்கள் தத்து எடுக்கப்பட்டமை என்பன அரசு பொன்சேக்காவை எவ்வளவு தூரம் மதிப்பிட்டிருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.

அடிக்க வந்தவனுக்கு பொல்லைக்கொடுத்த கதையாக நேற்று பொன்சேக்கா நடாத்திய ஊடகவியலாளர் மாநாடு அமைந்தது. யுத்த குற்றங்களை அரசின்மீது முக்கியமாக பாதுக்காப்புச்செயலாளர்மீது பொன்சேக்கா சுமத்தியதாக வந்த செய்திகளை தொடர்ந்து அதுவரை இருந்த சமபல போட்டி; ஒரேயடியாக ஜனாதிபதிக்கு இலகுவான போட்டியாக மாற்றம்பெற்றது. இனிவரும்காலத்தில் தன் சுய நலத்துக்காக படைவீரர்களுக்கு எதிராக பொன்சேக்கா கருத்து தெரிவிப்பதாக மக்கள் கருதுவது அவர்மீது நிச்சயமாக சந்தேகத்தை கிளப்பும். அதை வலுவாக்குவதுதான் இனி ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரமுமாகவும் அமையும்.

இதை இன்று எதிர்க்கட்சிகள் உணர்ந்து; மறுப்புத்தெரிவிப்பதற்காக ஊடகவியலாளர் மாநாடு நடாத்தப்பட்ட்போதும் மக்கள் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்பது சந்தேகமே..

இதேவேளை எதிர்கட்சிகளுக்கு பலமான வேட்பாளர் கிடைத்தும் அவரை சரியாக சந்தைப்படுத்த முடியாததாக எதிர்க்கட்சி அணி இருக்கிறது. முக்கியமாக அவர்களுக்கு தன் பலமும் பலவீனமும் தெரியவில்லை என்பது நிதர்சனமாக தெரிகிறது. பொன்சேக்காவுக்கு தகுந்த இடம் வழங்கப்படவில்லை என்ற பிரச்சாரத்தை விடுத்து ஏனைய விடயங்களில் கவனஞ்செலுத்தினால் அவர்களால் பெரும்பான்மையான "யுத்த வெற்றிக்கு ஆதரவான அணியை" இரண்டாக பிளவுபடுத்த முடியாதுபோகும். அவ்வாறான பிளவு ஒன்று இடம்பெறாதவரை பொன்சேக்காவுக்கு வாய்ப்புகளே இல்லை. இதைவைத்து கணிக்கும்போது பொன்சேக்கா நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டுடன் போட்டிக்கு முதலேயே வெற்றியை தாரைவார்த்துவிட்டார் எனலாம். ஆயினும் எதிர்வரும் ஒருமாத அவகாசத்தில் ஏதாவது வழியொன்றையும் பிரயோகிக்கலாம்.

இதேவேளை தமிழ் ஊடகங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்கு பற்றி அதிகளவு பேசப்படுகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் நிச்சயமாக பெருவாரியாக இத்தேர்தலில் வாக்களிப்பதிலிருந்து தவிர்ந்து கொள்வார்கள். அத்துடன் இச்சந்தர்ப்பத்தில் பிரதான வேட்பாளர்களில் எவராயினும் ஒருவருக்கு ஆதரவு வழங்குவது அதன் ஆதரவுத்தளத்தில் நிச்சயமாக ஒருபின்னடைவைத்தரும். இன்னும் பொன்சேக்காவுக்கு ஆதரவு வழங்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவெடுப்பதும் அரசுக்கு உதவிசெய்வதாக அமையும். அவ்வாறான கூட்டு ஒன்று இடம்பெறும் சமயத்தில் எதிர்கட்சிகளின் முகாமை புலிகளின் முகாமாக பெயரிடுவதும் நம்பவைப்பதும் அரசுக்கு மிக எளிதானதாகும்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

இனியாவது பயனுற பதிவெழுதுவோம்..



இலங்கை பதிவர்கள் கச்சதீவு விடயத்தில் கண்மூடிய பூனையாக இருப்பது ஏன்?


இந்திய தொடரில் நடுவர்களின் குழறுபடி! கண்டுகொள்ளாத இந்திய வலைப்பதிவர்கள்

நேற்று இலங்கை அணியுடன் டுவன்டி 20 போட்டியில் இந்தியா தோற்றுப்போனது. இந்தபோட்டியிலும் நடுவர்களின் தரம் கேள்விக்குரியதாயினும் இந்திய வீரர்களால் இலங்கைக்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை.
எவ்வாறாயினும் இந்தியாவில் நடப்பதே டுவன்டி 20க்கு ஒரு விஷேசம். தென்னாபிரிக்க, இந்திய மண்ணில் ரசிகர்களும் கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபைகளும்; ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் இப்போட்டிகளுக்கு மிகுந்த ஆதரவு வழங்கிவருகின்றனர்.
இதே இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபையே டெஸ்ட் கிரிக்கட்டுக்கும் ஈமைக்கிரியைகளை நடாத்த தயாராவதுபோல் தோன்றுகின்றது.

முதல் டெஸ்ட் போட்டியில் பொருத்தமற்ற ஆடுகளம், ரிபரல் சிஸ்டத்துக்கு இந்திய வீரர்கள் ஆதரவினமை, அதனை காரணம்காட்டி அம்முறைமையை இலங்கைத்தொடரில் பிரயோகிக்காமை, இதை இந்தியாவுக்கு சாதகமாக்கிய நடுவர்களின் குருட்டு முடிவுகள் என எல்லாமே இந்திய கிரிக்கட் சபையின் professionalismஐ கேள்விக்குள்ளாக்குகிறது.
இதேவேளை ஸ்டீவ் பக்னருக்கு எதிராக கொதித்தெழுந்தவர்கள்

இதையெல்லாம் மௌனிகளாக பார்த்துக்கொண்டிருப்பது இந்தியர்களின் மனநிலையை படம்பிடித்துக்காட்டுகின்றது.







நேற்று போட்டி முடிந்தபின் ITN இலும் அதன்பின் Eye Channel இலும் இலங்கை கடற்படையின் 58ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு விவரண நிகழ்ச்சிகள் காட்டப்பட்டன. இதில் இலங்கை கடற்படை பாவிக்கும் நவீன தொழிநுட்பங்கள் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது.

இதன்போது ரேடார் திரையில் 60க்கும் மேற்பட்ட இந்திய வள்ளங்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறுவது தெளிவாக தெரிந்தது.

இலங்கையின் மூவின ஏழை மீனவர்கட்குச்சொந்தமான (முக்கியமாக வடமேற்கு பகுதியில் செறிந்துவாழும் தமிழ் பேசும் மக்களுக்கு சொந்தமான ) இலங்கையின் வடமேற்கு பகுதி மீன்வளம் இந்தியமீனவர்களால் அபகரிக்கப்படுவதை தமிழ்நாட்டு மீனவர்கள் கச்சதீவு பற்றி பேசி நியாயப்படுத்துகிறார்கள்! இந்த மீன்வள திருட்டுக்கு ஆதரவாக இந்திய வலைபூ எழுத்தாளர்கள் அதிகளவு எழுதியபோதும் அதற்கு எதிராக எமது நியாயத்தை உரத்துச்சொல்ல இலங்கயின் எந்தப்பதிவரும் முன்வராதது வெட்கக்கேடாகும். அரசாங்கமோ புலிகளோ இந்திய மீனவர்களின் இப்பகல் கொள்ளையை அனுமதித்ததில்லை என்பது இங்கு கவனத்தில் கொள்ளப்படவேண்டும்!. BBC இல் இந்தியமீனவர்கள் புலிகளால் கைதுசெய்யப்பட்டனர் என செய்திகள் வெளிவந்திருந்தன என்பதை ஆதாரமாக நான் தெரிவிக்க விரும்புகிறேன்.

தமிழ்நாட்டு மீனவர்களின் கொள்ளையை விமர்சிக்காமல் இருப்பதன்மூலம் இலங்கையின் தமிழ்மக்கட்கு சில சலுகைகளை பெற்றுத்தர இலங்கப்பதிவர்கள் நாடினால் அது முட்டாள்தனமானதும் வெட்கக்கேடானதுமாகும்.

நடுவர்கள் விடயத்தில் இந்திய வலைப்பூ எழுத்தாளர்களின் மௌனமும் இந்திய மீனவர்களின் கடற்கொள்ளை விடயத்தில் இலங்கை வலைப்பதிவர்களின் மௌனமும் வலைப்பதிவர்களின் நாணயத்திலும் நியாயத்திலும் கேள்வியெளுப்புகிறது.

இனியாவது பயனுற பதிவெழுதுவோம்..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

சம்பளம் 25,000/- ++


சில மாதங்களுக்கு முன் வீரகேசரி பத்திரிகையில் வெளியான விளம்பரம் ஒன்றை  Personal Secretry என்றால் யார்?  என்ற தலைப்பில்  தந்திருதேன். 

சென்ற ஞாயிறு The Island இல் வெளியான விளம்பரம் கீழே..

இளம் பெண் உதவியாளரை இந்த இளம் ஒண்டிக்கட்டை வர்த்தகர் தேடுகிறார். சம்பளம் 25,000/- (குறைந்தது). உணவுடன் சுடுநீர் வசதி, சலவை இயந்திரம் தொலைக்காட்சி வசதிகள் கொண்ட தங்குமிடமும் பெக்கேஜ் இல் அடங்குகிறது! 

இவ்வாறான விளம்பரத்தை வெறும் பணம் உழைக்கும் நோக்கத்திற்காக வெளியிடும் பத்திரிகை அரசியல் வாதிகளை சாடுகிறது. பத்திரிகை சுதந்திரத்துக்கு ஜேவிபி பத்வா தடை என்று தலைப்பும் எழுதுகிறது.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

பாபர் மசூதி உடைக்கப்பட்ட நாள்















இன்று பாபர் மசூதி உடைக்கப்பட்ட நாள்.

இது தொடர்பாக இயக்குனர் அமீர் கடந்த வருடம் குமுத்த்திற்கு அளித்திருந்த பேட்டியின் ஒரு பகுதி..

ஈழப் பிரச்னைக்கு நான், நீ எனப் போட்டி போட்டுக்கொண்டு குரல் கொடுத்துப் போராடியவர்கள், நம் நாட்டில் நடந்த மும்பைத் தாக்குதலுக்குக் குரல் கொடுத்துப் போராடவில்லை. மும்பைத் தாக்குதலில் கூட பணக்காரர்கள் இருந்த ஹோட்டலில் நடந்த தாக்குதல் பற்றிதான் செய்திகள் பெரிதாக வந்தன. ரயில் நிலையத்தில் சுடப்பட்டு இறந்த அப்பாவி ஏழைகளைப் பற்றி யாரும் பேசவில்லை. இந்தத் தாக்குதலுக்காக பதவியை ராஜினாமா செய்தவர்கள் குஜராத் கலவரத்தின்போது ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு ஏன் பொறுபேற்கவில்லை? இன்றைக்கும் டிசம்பர் ஆறாம் தேதி வந்தால் நம்மை நடுரோட்டில் உட்கார வைத்து உடைமைகளை அவிழ்த்து போலீஸ் சோதனை செய்கிறார்களே. அந்த பாபர் மசூதியை இடித்த போது ஏன் யாரும் ராஜினாமா செய்யவில்லை? அப்போது நடந்த கலவரத்தில் எத்தனை ஆயிரம் மக்கள் பலியா-னார்கள்? இலங்கையில் நடக்கும் அநியாயத்தைச் சொல்லும் போது, நம் நாட்டில் நடக்கும் அநியாயங்களையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.

ஒவ்வொரு இந்திய-னுக்கும் இதைக் கண்டிக்கும் பொறுப்பு உள்ளது. இந்த சுதந்திரம், உரிமை கூட இல்லை-யென்றால் வாழ்வது எதற்கு? குமுதம் 31.12.2008

இவ்வொரு வருட காலத்தில் என்ன மாற்றம் இடம்பெற்றுள்ளது என்று இந்திய வாசகர்கள்தான் சொல்ல வேண்டும்..

பாபர் மசூதி உடைக்கப்படும் படங்களைக்காண..
பாபர் மசூதி இடிப்பு விசாரணை அறிக்கை தாக்கல் - BBC
மறக்க முடியாத பாபர் மசூதி - ஒரு பார்வைதமிழகம் முழுவதும் சுமார் 40 இடங்களில் டிசம்பர் 6 போராட்டம்!

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

லோஷனின் தோராயமான மதிப்பு 9,782/-


லோஷனின் தீவிர விசிறிகளே வந்துட்டீங்களா? என்னை உங்கள் வலைப்பதிவுக்கு வரவேண்டாம் என்று சொன்னவங்களும் நல்ல chance கெடச்சிருக்கு.. கும்மலாம் என்று வந்திருப்பீங்களே..

மிச்சத்தையும் வாசிங்க..

உங்கள் வலைப்பதிவின் மதிப்பு எவ்வளவு?

அதன் Traffic Rank என்ன?

அதன் PageRank என்ன?

ஒவ்வொரு நாளும் எத்தனை பேர் பார்வையிடுகிறார்கள்

எந்த எந்த நாடுகளில் இருந்து பார்வையிடுகிறார்கள்

என்று அறியணுமா இந்த முகவரிக்கு போங்க..

http://www.websiteoutlook.com

அப்படி நான் பார்த்த லோஷன் என்ற தலைப்பிலான வலைப்பூவின் மதிப்புத்தான் தலைப்பு. அது ரூபா இல்ல அமெரிக்க டாலரில் என்பதை கவனத்தில்கொள்க..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

பதிவர் சந்திப்பு 13-12-2009

 

இடம் : தேசிய கலை இலக்கியப் பேரவை, வெள்ளவத்தை (ரொக்சி திரையரங்கு முன்னால்)

காலம் : மார்கழி பதின்மூன்று, மாலை இரண்டு மணி, ஞாயிற்றுக் கிழமை ( 13-12-2009 )



மேலதிக விபரங்கள் http://subankan.blogspot.com/2009/11/blog-post_24.html

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

வட இந்திய குஜராத் மாநிலத்தைச் சார்ந்த


அறிவிப்பாளர் லோஷனுக்கு சாகித்திய விருது கிடைப்பது பற்றிய செய்தியை நேற்று வந்தியத்தேவனின் உளறல்கள் மூலம் அறிந்தேன்.

அத்துடன் இலங்கையின் மூத்த படைப்பாளியான மேமன் கவிக்கும் சாகித்திய விருது கிடைக்கிறது.

உளறல்களில் இந்த மேமன் கவியை அறிமுகப்படுத்தும்போது பயன்படுத்திய "வட இந்திய குஜராத் மாநிலத்தைச் சார்ந்த" என்ற சொற்றொடர் எனக்கு பிடிக்கவில்லை.

இலங்கையை சேர்ந்த படைப்பாளியை வெறுமனே இலங்கையின் மேமன் சமூகத்தை சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்தியிருக்கலாம். ஆனால் இந்திய என்ற சொற்றொடர் அவரை பிரித்து வைக்கிறது என்பது என் கருத்து.

குறிப்பிட்ட் பதிவிற்கு நான் இட்ட பின்னூட்டத்தில் லோஷன் அண்ணாவுக்கு வாழ்த்து தெரிவித்தும் இச்சொற்றொடரை எதிர்த்தும் பின்னூட்டமிட்டிருந்தேன்.

இருந்தும் 24 மணித்தியாலம் கழிந்தபின்னும் அப்பின்னூட்டம் இதுவரை பிரசுரிக்கப்படவில்லை.

அத்துடன் "வட இந்திய குஜராத் மாநிலத்தைச் சார்ந்த" என்ற சொற்றொடரும் இதுவரை நீக்கப்படவில்லை. அல்லது இன்னமும் நியாயப்படுத்தப்படவில்லை.

தன்னால் எழுதப்படுத்தப்பட்ட ஒரு கருத்தை நியாயப்படுத்த முடியாத பதிவர்களுக்கும் சாகித்திய விருதுபெறும் லோஷனின் எழுத்துக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

சுவிஸ் கலநதுரையாடலும் ஊடகங்களும்



சுவிஸ்ஸில் இடம்பெற்ற தமிழ் பேசும் மக்களை பிரதிநிதிப்படுத்தும் கட்சிகளிடையேயான கலந்துரையாடல் பற்றி வித விதமான கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இது தேவையான முயற்சி என்பதில்  எவ்வித ஐயமுமில்லை. யுத்தவெற்றிக்குப்பின்; இனிவருங்காலத்தில் கூர்மையடையக்கூடிய பேரினவாதத்துக்கு எதிராக எல்லா கட்சிகளும் சேர்ந்து செயற்படுவது மிக அவசியமாகும். எல்லா விடயங்களிலும் இணக்கம் காணப்படும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனம். இருந்தும் சிறுபான்மை மக்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் விடயங்களில் கட்டாயமாக ஒத்திசையவேண்டியது அவசியமாகும். இல்லாவிட்டால் இச்சிறுபான்மை மக்களை மட்டும் அடிப்படையாகக்கொண்ட இத்தனை தலைவர்களினதும் தலைமைப்பதவியைக்கூட தக்க வைக்காமுடியாமல் போகும். எனவே பொதுவாக மக்களின் நலனுக்கும் இக்கட்சிகளின் சுயநலத்துக்கும் இவ்வாறான கலந்துரையாடல் மிக அவசியம். (WIN WIN SITUATION)


இக்கலந்துரையாடல் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதில்கூட நிறைய வேறுபாடுகளை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

Daily Mirror ஆங்கில பத்திரிகையின் இணையத்தில் வெளியான இக்கலந்துரையாடல் தொடர்பான படத்திற்கு வந்த பின்னூட்டங்கள் நடுத்தர சாமானியனின் எண்ணங்களை எல்லா திசைகளிலும் வெளிப்படுத்தின எனலாம்.

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=68620


இருந்தும் இதில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ள தமிழ் பேசும் மக்களுக்கான ஊடகங்கள் இக்கலந்துரையாடல் தொடர்பாக மக்களின் கருத்தை பிரதிபலிக்கவில்லை. அத்துடன் மக்களின் கவனத்தை இதன்மீது குவியச்செய்வதன் மூலம் இத்தலைவர்களை இணக்கப்பாடொன்றிற்காக நெருக்குதலுக்குள்ளாக்ககூடிய தார்மீக கடமையையும் செய்யவில்லை. மாறாக இதில் எதையும் எதிர்பார்க்கவேண்டாம் என்ற கருத்தையே பரப்பின.

முக்கியமாக சக்தி ஊடகங்கள் பொறுப்பற்ற முறையில் இக்கலந்திரையாடலுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டது. சம்பளப்பிரச்சினை இதில் ஆராயப்படவில்லை என்று குற்றம்சாட்டியது. இதுவரை நாளும் என்ன செய்தன இக்கட்சிகள் என்று கேள்வியெழுப்பியது.

அரசியல் பிரவேச ஆசை மிகுந்துள்ள ரங்கா இவ்வகைச்செய்திகளை வெளியிடச்செய்திருக்கலாம். மே மாத கடைசி மின்னல் நிகழ்ச்சியில் சில ஊடகங்கள் புதிய பாதைய / தலைமையை இனங்காட்டுவதாகவும் அவ்வாறு செய்யவேண்டிய அவசியமில்லை என்வும் பரப்புரை மேற்கொண்ட இவர், அண்மைக்காலமாக மக்கள் அவரை அரசியல் பிரவேசம் செய்யுமாறு வலியுறுத்துவதாக காண்பிக்க பகீரத பிரயத்தனம் செய்துகொண்டிருக்கிறார்.

அண்மையில் தென்மாகாண சபை தேர்தலின் பின்னான மின்னலில் தங்கள் ஊடக வல்லமையை காண்பிப்பதாக நினைத்து தமது அரசியல் நோக்கங்களை மரிக்காருடன் சேர்ந்து நிர்வாணமாக்கி காட்டியிருந்தார்.

இது வரை சாத்தியப்படாத தமிழ் பேசும் கட்சிகளிடையேயான கருத்தொற்றுமை இனி ஏற்படத்தேவையில்லை என்ற பாணியில் இவ்வூடகம் வெளியிடும் கருத்து இதுவரை அரசியலில் ஈடுபடாத நீரும் இனி ஈடுபடவேண்டிய அவசியம் இல்லை என்றும் சொல்வதை புரிந்துகொள்ளாமை வெட்கமே.

அத்துடன் இரண்டு நாய்களின் கதையை பெரும்பாலான நிகழ்ச்சியில் சொல்லிவரும் இவரது இதயசுத்தியையும் இச்செய்திகள் கேள்விக்குட்படுத்துவதைக்கூட இவர் அறியவில்லை.

ஒருவேளை இக்கலந்திரையாடலுக்கான EXCLUSIVE COVERAGE RIGHTஐ இந்த ஊடகத்துக்கு வழங்கியிருந்தால் எல்லாமே தலை கீழாக சொல்லப்பட்டிருக்கும்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

நிதி திரட்டும் முயற்சிகள் பற்றிய எனது பார்வை..


அண்மைக்காலமாக நான் அவதானித்த சில நிதி திரட்டும் முயற்சிகள் பற்றிய எனது பார்வை..

ஆதவன் திரைப்படம்; வெளியாவதற்கு முதல் நாளிரவு ஒரு அரச பாடசாலை சார்பான அமைப்பொன்றுக்கும் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றுக்குமாக நிதி திரட்டுமுகமாக வெவ்வேறு திரையரங்குகளில் விஷேட காட்சியாக காண்பிக்கப்பட்டது.

இதற்கான டிக்கட் ரூபா 500/- க்கு விற்கப்பட்டது. இதன் மூலம் கிடைக்கும் வருமானம் இவ்வமைப்புகளின் ஏதாவது ஒரு தேவைக்கு பயன்படும். அது ஒரு முக்கியமான தேவையாகவும் இருக்க முடியும். இருந்தாலும் இது தொடர்பாக எனது கருத்தை எழுதுவது அவசியமாகிறது.

என்னுடைய பார்வையில் இவை

பண விரயம்
ஒவ்வொருவரினதும் பொருளாதாரம் சிரிப்பா சிரிக்கும் இக்காலத்தில் விலை அதிகம் கொடுத்து திரைப்படம் பார்க்கவேண்டியதன் அவசியம் என்ன?

விலை அதிகமான இந்த டிக்கட்டை விற்க ஏமாற்றுதல் -
திரைப்படத்தின் முதற் காட்சியை காண்பது ஏதோ முக்தி பேறு போல் காண்பிக்கப்படுகிறது. விளம்பரம் செய்யப்படுகிறது. இதன் மூலம் இந்தியப்பாணியிலான மூளைச்சலவை செய்யப்பட்ட ரசிகர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.

இக்காட்சிகள் Late night show ஆகவே இருக்கின்றன. பிள்ளைகள் அடம்பிடித்து படம் பார்க்கச்செல்கிறார்கள். இரவு 1 மணிக்கு வருகிறார்கள். அதுவரை வீட்டில் அம்மா அப்பா நிம்மதியாக உறங்க முடியுமா? வயது வந்த பிள்ளைகள்தான் என்று எந்த அம்மா அப்பாவாவது நிம்மதியாக இருப்பார்களா?

டிக்கட்டுகளை விற்பதற்கு மாணவர்களை பயன்படுத்தல்

நேற்று காலையில் ஒரு வானொலி விளம்பரம். மேலே குறிப்பிட்ட தனியார் கல்வி நிறுவனம் இரவுக்களியாட்டத்திற்காக வானொலியில் விளம்பரம் செய்து அழைக்கிறது.

பெண்களுக்கு அனுமதி இலவசமாம்!

ஏன் பெண்களுக்கு அனுமதி இலவசம்? பெண்கள் வந்தால்தான் ஒரு கவர்ச்சி. பெண்கள் வருவார்கள் என்றால்தான் ஆண்களும் வருவார்கள். வந்து என்ன செய்வார்கள்? விளக்கமாக சொல்லவேண்டிய அவசியம் இல்லை.

இதை ஒரு ஒன்றுகூடல் நிகழ்வாக கூறக்கூடும். குறிப்பிட்ட நிறுவனத்தின் ஒன்று கூடலாயின் எதற்கு வானொலியில் விளம்பரம்?

எங்கள் நிறுவனத்தில் படிக்கும் fashionஆன குட்டிகள் வருவார்கள். நீங்களும் வாருங்கோ என்ற அழைப்புத்தானே இது? அல்லது ஒன்றுகூடல் நிகழ்ச்சியென்றால் எல்லாரும் அம்மா அப்பா மற்றும் மனைவி பிள்ளைகளோடு வரலாமே?

யாராவது இவர்கள் அனைவரும் வயது வந்தவர்கள் என்று வாதிடக்கூடும். ஆம் வயது வந்தவர்கள்தான். அவர்கள் விரும்பினால் எதையும் செய்யலாம். ஆனால் எதற்காக ஒரு கல்வி நிறுவனம் ஒழுங்குசெய்கிறது? மாமா வேலை!

இவ்வாறான கேவலமான சமூக விழுமியங்களை சிதைக்கும் உத்திகளை விடுத்து பணத்தேவையை வேறொரு வழியில் தீர்த்துக்கொள்ளலாமல்லவா?

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

விஜயகாந்த், கமல் + பிஜேபி






  • எழுத்தாளர் - சுஜாதா (எழுத்துக்கு மட்டுமல்ல.. தேவையற்ற விடயங்களில் மூக்கை நுழைக்காததற்கும்) ஜெயகாந்தன் இன்னும் பலர் + ஞானி

  • கவிஞர் - வாலி

  • நடிகர் - கமல் (அன்பே சிவம்), மாதவன்

  • நடிகை - எல்லாரும்

  • இயக்குனர் - மணிரத்னம், ஷங்கர், ஜீவா, சரண்

  • பாடகர்கள் , இசையமைப்பாளர்கள் - ஏறத்தாள எல்லோரையும் பிடிக்கும். பிடிக்கதவற்றை யார் பாடினார் என்று தேடுவதில்லை. இளையராஜாவை சில சமயங்களில் ரஹ்மான் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக பிடிப்பதில்லை

  • கிரிக்கெட் வீரர்கள் - இலங்கை வீரர்களுடன் ட்ராவிட், வெட்டோரி, அக்தார்

  • அரசியல்வாதிகள் - எல்லோரையும் ஒவ்வொரு காரணத்துக்காக பிடிக்கும். பிடிக்காதவர்களை தவிர






  • நடிகர் - விஜயகாந்த், கமல் (உன்னைப்போல் ஒருவன்)

  • இயக்குனர் - பேரரசு, விக்ரமன் (சென்டிமன்ட் தாங்கல), பாரதிராஜா (பிந்திய படங்களுக்காக)

  • கிரிக்கெட் வீரர்கள் - ஹர்பஜன், கில்கிரிஸ்ட் (உலக கிண்ணத்தில் தப்பாட்டம்), அர்ஜுன ரணதுங்க (சாயி பாபா காரணமாகத்தான் உலக கிண்ணம் வெல்ல முடிந்தது என்ற பேட்டி கல்கியில் வந்த நாள் முதல், அத்துடன் கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபை விவகாரங்கள்)

  • அரசியல்வாதிகள் - சிஹல உறுமய இந்திய பிஜேபி அனைவரும்

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

உனக்கு நூறு எனக்கு ஆயிரம்..


இன்று The Island பத்திரிகையில் காணக்கிடைத்த சுவாரசியமான புகைப்படம்.


ஆயிரங்க்ளை வைத்துக்கொண்டு நூறுகளை மனைவிக்கு கொடுக்கும் சங்கக்கார. 

இந்தியாவுக்கு பிரயாணிக்க தயாராகும் சங்கக்கார மனைவிக்கு காசு கொடுக்கிறார்..

லட்சக்கணக்கில் சம்பாதிப்பவர்களே நூறில் தானா கொடுக்கிறார்கள்?



EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

சுகமளிக்கும் ஆராதனையில் பங்குபற்றிய இரு பெண்கள் மரணம்


டந்த சனிக்கிழமை விஹாரமஹாதேவி திறந்தவெளியரங்கில் இடம்பெற்ற சுகப்படுத்தும் ஆராதனையின்போது மர்மமான முறையில் மரணிதத இரன்டுபெண்களினதும் உறவினர்கள் அளித்த முறைப்பாட்டின்மீது விசாரணை நடைபெறுவதாக பொலிஸ் தெரிவிக்கிறது.

இது தொடர்பாக Daily Mirror பத்திரிகை வெளியிட்ட செய்தியின் முக்கிய பகுதிகளின் மொழிபெயர்ப்பு அசல் செய்தியுடன் தரப்படுகிறது.

இப்பெண்கள் இருவரும் மயங்கி வீழ்ந்தபோது அவர்களின் உறவினர்கள் இவர்களை வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல முயற்சித்துள்ளனர்.

நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் இதனைத்தடுத்து இருவரையும் பூங்காவில் ரகசிய இடம் ஒன்றிற்கு தூக்கிச்சென்றுள்ளனர்.

இதன்பின் பொலிஸ் தலையிட்டு இருவரையும் வைத்தியசாலைக்கு கொண்டுசென்றபோது இருவரும் மரணித்திருப்பது தெரியவந்துள்ளது.

மரணவிசாரணைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கும்.

Probe into deaths at healing service

By T. Farook Thajudeen 

 An investigation is being carried out, on a complaint made by relatives, into the sudden deaths under mysterious circumstances, of two women during a healing service held at the Vihara Maha Devi open air theatre last Saturday, police said.

 Filing a report before Additional Magistrate Kumari Abeyratne, Cinnamon Gardens Police informed the Colombo Chief Magistrate’s Court that two elderly women who were said to be ailing had died under unexplained circumstances while performing some religious ritual during which sick patients were supposedly healed.

 The Police further said many people had attended the meeting as publicity had been given by the organizers of the event titled ‘Suva Kereeme Deva Meheya’ (healing service) to be held on October 31.

 The two women who attended the healing service had allegedly gone into a trance and collapsed.

 Thereafter the relatives of the two women had wanted to take them to hospital but 

 the organizers had reportedly refused to release them but had instead taken the women to some secret place at the Park.

Subsequently with the intervention of the Police the victims had been taken to hospital but had been found dead by that time.

 The magistrate ordered the Police to hand over the bodies of the victims to their relatives following the post mortem examination and postponed the case till November 13 for further inquiries.


"சுகமளிக்கும் ஆராதனைகளை நடாத்துவதை ஜனாதிபதி தடுக்கவேண்டும்" என்று கோரி ஜாதிக ஹெல உறுமயவால் உழுங்குபடுத்தப்பட்டிருந்த சமாதான பாத யாத்திரை கடைசியில் வன்முறையில் முடிவுற்றது.

இதில் பேசிய எல்லாவல மேதானந்த தேரர் "அரசு இவ்வாறான நிறுவனங்களை பௌத்தத்துக்கு எதிரான அமைப்புகளாக கருதி தடைசெய்யவேண்டும் என கோரினார். இவ்வாறான ஒழுக்கமற்ற நிறுவனங்களுக்கு எதிராக நாம் மௌனமாக இருக்கமாட்டோம் எனவும் அவர் கூறினார்.

இந்நிறுவனத்தின் பாதுகாவலரால் ஏறத்தாள 34 ஆயிரம் ரூபா பெறுமதியான சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ள்தாக பொலிஸில் முறைப்படு செய்யப்பட்டுள்ளது.


Protest against Viharamaha Devi deaths turns violent
By Supun Dias and Indika Sri Aravinda

A peace walk organized by the Jathika Hela Urumaya (JHU) urging the President to intervene and ban religious centres that conduct healing sessions such as the one which held at the Viharamaha Devi Park, at which two women lost their lives, turned violent after a clash erupted between two parties at Koswatta, Thalangama yesterday.
The clash caused severe damage to the property which is believed to be a location at which several healing sessions were held previously.

Speaking to the protesters JHU leader Ellawala Medhananda Thera urged the President to ban such disputed religious entities which are bent on converting Buddhists to their faith. “The government should ban such organizations which are considered anti- Buddhist movements. We will not keep silent against such unethical organizations which are a serious threat to religious co-existence in the country,” the Thera said.

A spokesman for the JHU said in addition to the JHU several relations of the two victims too had joined the protest and violence erupted when stones were thrown at them from the centre. In the melee that ensured the Thalangama police were called in to shield centre staff from the violent protestors, Police media spokesman DIG Nimal Mediwake said. A guardian of the centre had lodged a complaint with the Thalangama police saying they had suffered Rs.34, 000 in damages during the violence that took place, said DIG Mediwake said.

The Thalangama police are conducting further investigations into the incident.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

தமிழ் வளர்க்கும் மெட்ரோ நியூஸ

இலங்கையில் மெட்ரோ நியூஸ் என்று ஒரு பத்திரிகை வீரகேசரி பத்திரிகை குழுமத்திலிருந்து வருகிறது.

மெட்ரோ நியூஸ் என்றதுமே ஆங்கில பத்திரிகை என்று நினைத்துவிடாதீர்கள். தமிழ் கூறும் நல்லுலகுக்கான பத்திரிகையே அது. ஏன் ஆங்கில பெயர் என்று சில தமிழ் வளர்க்கும் பதிவர்கள் கேட்கமாட்டார்கள். எல்லாம் பிரபலம் எனும் போதை.

முதல் பக்கம் ஒரு பெரியபடம் அத்துடன் இரண்டுவரி செய்திகள் நடுவில் 2 பக்கம் சினிமா ஒருபக்கம் தொலக்காட்சி நிகழ்ச்சி நிரல் ஒரு பக்கம் விளையாட்டு அத்துடன் ஓரிரண்டு பக்கம் மசாலா கதை (உண்மை சம்பவமாக அல்லது துப்பறியும் கட்டுரையாக) ஏறத்தாள ஜனனி தரத்தில் இருக்கும்.

இந்தப்பத்திரிகையின் தரம் பற்றி ஒரு பானை சோற்றுக்கு இரண்டு சோறு பதம் பார்ப்போமா?

இப்பத்திரிகையில் கேள்வி பதில் அம்சமும் இருக்கிறது. அதில்



கே: இலங்கை கிரிக்கட் அணியின் எதிர்கால தலைமைப்பொறுப்பு டில்ஷானிடம் வளங்கப்படுமா?

ப: ... ஒரு நாள் போட்டி ஒன்றின்போது டில்ஷான் தலைமை ஏற்று நடத்தியபோது மிகுந்த பதற்றமடைந்தார்.



கே: இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காளியாக யாரை கருதுகிறீர்கள்?

ப: ....ஆரம்பத்தில் அதிர்ச்சி கொடுக்கும் சமிந்த வாஸ், பின்னுக்கு இடைஞ்சல் கொடுக்கும்..

இது பிரசுரமாகி ஒரு மாதம்ளவே இருக்கும். எழுதுபவர்கள் எவ்வளவு தூரம் விஷய ஞானம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்?

வீரகேசரியில் வந்த விளம்பரம் Personal Secretry ? 

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

பாலத்திற்கு பின்னாலுள்ள பெயர்!


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த சனிக்கிழமை கிண்ணியாவில் இலன்கையின் மிக நீளமான பாலத்தை திறந்துவைத்தார்.

இதன் கட்டுமானட்துக்கான நிதி சவூதி அரசால் வழங்கப்பட்டிருந்தபோதும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல்வாதிகளால் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் 18 அடிக்கல்கள் நட்டபின்பே ஆரம்பிக்கப்பட்டிருந்தது! கடைசி அடிக்கல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் அவர் சந்திரிக்கா அரசில் பெருந்தெருக்கள் அமைச்சராக இருந்தபோது நடப்பட்டிருந்தது.

இப்பிரதேச அரசியல்வாதிகள் எல்லோரும் தங்கள் பெயரை இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க பாலத்திறப்பில் பதிந்துகொள்ள ஆர்வம் காட்டினார்கள்.
அழைப்பிதழில் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் TB ஏக்கநாயக்க பிரதியமைச்சர் WB ஏக்கநாயக்க மற்றும் அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற அட்மிரல் வசந்த கருணாகொட மட்டுமே இருந்தது.

தன்னுடைய பெயர் இல்லாதது பற்றி அமைச்சரவை அந்தஸ்த்து அற்ற அமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற அட்மிரல் வசந்த கருணாகொட விடம் தொலைபேசியில் கேட்டபோது அவர் இராணுவ பாணியில் "மேலிடத்து கட்டளை" என கூறியிருக்கிறார்.

அதன்பின் அவர் ஜனாதிபதி ஆலோசகர் பசில் ராஜபக்ஷவை தொடர்புகொள்ள பிரச்சினைக்கு தீர்வு கிட்டியுள்ளது.

ஜானதிபதியால் திரைநீக்கம் செய்யப்பட்டதாக 3 மொழியிலும் அமைந்த நினைவுப்படிகத்தில் நஜீப், அமைச்சர், பிரதியமைச்சர், செயலாளர், தேச நிர்மாண அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே ஆகியோருடன் பசில் ராஜபக்ஷவின் பெயரும் சேர்ந்துகொண்டது.


ஜனாதிபதி தமிழிலும் சிலவார்த்தைகள் உரையாற்றுவார் என்றும் கதை இருந்தது. இதனால் மஜீட் அரபியில் ஒரு உரையை எழுதித்தருமாறு பிரபல மௌலவியை கோரினார். இது வாசிக்கப்பட்டபோது பலருக்கு விழங்காத போதும் சவூதி அரேபிய தூதுவர் அப்துல் அஸீஸ் அப்துல் ரஹ்மான் ஜம்னாஸ் விழங்கிக்கொண்டார்.
தூதுவர் மர்ஹபா என்று உணர்ந்த்திருக்க கூடும்.
இருந்தபோதும் ரணில் விக்ரமசிங்க அரசில் அமைச்சராக இருந்தபோது இந்த சவூதி அரேபிய உதவியை கொணர்ந்த சிறீ லங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பற்றி ஒரு வார்த்தை கூட இருக்கவில்லை!

நன்றி the SundayTimes : Talk at the Cafe Spectator : Sunday October 25, 2009

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

இருக்கிறம் சஞ்சிகையின் அச்சுவலை சந்திப்பு

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

இலங்கை பதிவர் சந்திப்பு – IAM NOT AFRAID TO BE ALONE


நம்மில் பலர் அழகிப்போட்டி பார்த்திருக்கிறோம். பல இனத்து பல தேசத்து அழகிகள் பார்த்திருக்கிறோம். அதில் யார் சிறந்த அழகி என்பதில் நீங்கள் எல்லாம் ஒரே கருத்தில் எப்போதாவது இருந்திருக்கிறீர்களா?

மனிதர்களிடையே கருத்து வேற்றுமை சாதாரணமான்தும் இயல்பானதும் என இலகுவாக விளங்கவைக்க இதைவிட இலகுவான உதாரணம் எனக்கு கிடைக்கவில்லை.

இதை மனதில் கொண்டு மேற்கொண்டு படியுங்கள்.

பதிவுலகம் - எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் யார் வேண்டும் என்றாலும் எழுதலாம் என்றாகிவிட்டது. எனக்கு பிடித்ததும் அதுதான். சிலர் நினப்பதுபோல் ஊரோடும்போது ஒத்து ஓடுவதானால் எதற்கு அது? யாராவது எழுதும்போது வாசித்து FACEBOOK வருவதுபோல் I LIKE THIS என்பதில் ஒரு ஓட்டை மட்டும் பதிந்துவிடலாமே?

ஊடக வியலாளர் அல்லது ஊடக நிறுவனத்தில் வேலை செய்பவர் மாத்திரம் அல்லது எங்காவது இதற்கும் போய் ஒரு கோஸ் முடித்து சான்றிதழ் எடுத்தவர்தான் எழுத வேண்டும் என்பதுபோல் சிலர் தன்னை தானே பிரபல பதிவர் என அழைத்துக்கொண்டு தன் கருத்தோடு மட்டும் இயைந்து வருபவர்கட்கு மாத்திரம் ஆஹா ஒஹோ என பாராட்டி வால் பிடித்துக்கொண்டு சொல்லவருவதுதான் இப்பதிவுலகின் என் மிகப்பெரிய வருத்தம்.

இலங்கை பதிவர் சந்திப்பு - ஆர்வமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு நிகழ்வு. ஆரம்பம் முதலே எனக்கு அதில் கலந்துகொள்ள எண்ணம் இல்லாமல் இருந்தாலும் அது தோல்வியுற வேண்டும் என நான் ஒருபோதும் இருக்கவில்லை. 

இலங்கையின் தமிழ் மக்களிடையே கருத்து சுதந்திரம் மதிக்கப்படும் என்பதில் எனக்கு சிறிதளவும் நம்பிக்கை இல்லாதிருந்தமைதான் பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ளாமல் ஒதுங்க நினைத்தமைக்கு காரணம். ஆயினும் அது தொடர்பான அறிவித்தல்களை என் வலைப்பதிவில் பிரசுரித்தும் நான் அறிந்திருந்த நண்பர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பியும் என் பங்களிப்பை எவ்வித குறையும் இன்றி வழங்கினேன்.

கலந்து கொள்ள ஆர்வம் இல்லாதிருந்தும் நான் மதிக்கும் அண்ணாவின் அழைப்பை மறுப்பது மரியாதையற்றது என்று கருதியமையால் சரியாக 9.05 க்கு சமூகமளித்தேன். அதை வேண்டுமானால் இதில் சந்தேகம் கொள்பவர்கள் அனைவராலும் என்னாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவரிடம் நிரூபிக்கவும் தயார்.

இப்பதிவர் சந்திப்பில் என்னை அடையாளம் காட்டுவதினின்றும் தவிர்ந்தும் கொண்டேன். ஆர்வலராக காட்டிக்கொள்ள நினைத்திருந்தபோதும், நிகழ்ச்சியை நடாத்திய ஒருவர் ஆர்வலர்களை வடை சாப்பிட வந்தவர்கள் என விளித்தமையால் அதைக்கூட நான் செய்யவில்லை.

இச்சந்திப்பு நடந்து முடிந்தபின் எல்லோரும் அதை புகழ்ந்தார்களே தவிர அதை காத்திரமாக மதிப்பீடு செய்யவில்லை. அதை செய்யாதே என்று குறிப்பால் ஏனை பதிவர்களை அச்சுறுத்தவும் என்னை வசைபாடியது வழிவகுத்தது.

பதிவர் சந்திப்பு முடிந்த கையோடு எனக்கு வசை பாட சிலர் ஆரம்பித்துவிட்டார்கள். கருத்து சுதந்திரம் தொடர்பான என் கருத்தை பரிசீலுக்க சரியான தருணம் என்பதாலும், சில பதிவர்களை தோலுரித்து அறிந்து கொள்ளவும், கடைசியாக சிரிப்பவன் பெரிதாய்ச்சிரிப்பான் என்ற ஆங்கில பழமொழியை உறுதிப்படுத்தவும், இவ்வளவு நாளும் என் மௌனம்....

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

உன்னைப்போல் ஒருவன் - GET LOST

இப்பதிவை வாசிப்பதற்குமுன் ஒரு வேண்டுகோள் : உங்களுக்கு முதற்கண் என் நன்றிகள். நீங்கள் ஒரு கமல் பக்தனாக இருந்தால் அந்த சட்டையை கழற்றிவிட்டு வருமாறு வேண்டுகிறேன்.

கமலின் இரண்டுபடங்களின் பெயரைக்கூறச்சொன்னால் எனக்கு ஞாபகம் வருவது நாயகன், அன்பே சிவம் ஆகியவையே. நாயகனில் நாலுபேருக்கு நன்மை செய்தால் எதுவுமே தப்பில்லை என்று கூறும் நாயகன் கடைசியில் எவ்வித குற்றமும் செய்யாத என்னை எதற்கு அநாதையாக்கினாய் என்ற கேள்விக்கு பலியாகிப்போகிறான். மற்றவன் வயிற்றுக்குள் உன் உணவு இல்லையப்பா என்று கூறும் அன்பே சிவம், அன்பை மட்டுமே போதிக்கின்றது என்பதில் யாருக்கும் கருத்துவேற்றுமை இல்லை.

என்னதான் நியாயம் இருந்தாலும் வன்முறையை கையிலெடுத்தவன் வன்முறைமூலமே சாவதை நியாயப்படுத்தியிருக்கும் படங்களான சுப்ரமணியபுரம், அஞ்சாதே போன்ற படங்கள் வெற்றிபெறுகின்ற; தேசபக்தி என்ற போர்வையில் மனிதர்களை சுட்டுத்தள்ளுகின்ற விஜயகாந்த், அர்ஜூன் போன்றவர்கள் காணாமல் போயிருக்கின்ற; சுருக்கமாக மக்கள் வன்முறையை நிராகரித்திருக்கிற காலப்ப்பகுதியில் சட்டத்தை உங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளுங்கள் என்று உபதேசிக்கின்ற படத்தை கமல் நமக்கு தருகிறார்.


இந்த உன்னைப்போல் ஒருவன்தான் இலங்கையின் திரையரங்குகளில் இருந்து நேற்றோடு தூக்கப்பட்டுள்ளது. பதிவுலகில் கிழி கிழியென்று கிழிக்கப்பட்ட கந்தசாமி இன்னும் ஓடிக்கொண்டிருக்க பதிவுலகால் ஆஹா ஓஹோ என்று தூக்கிப்பிடிக்கப்பட்ட உன்னைப்போல் ஒருவன் திரையரங்கை விட்டு ஓடியிருக்கிறது.

மொத்தமாக இரண்டுமணிநேரமே ஓடும் இந்த படத்தில் வானொலிகளில் ஒலிபரப்பான பிரபலமான பாடலகள் இல்லை என்றே சொல்லலாம். கதையோட்டத்திற்கு பாடல்கள் அவசியமில்லை என்று கமல் கருதியிருந்தால் சில பாடல்களை வெளியிட்டு படத்தில் பாடல்கள் இருப்பதாக மக்களை ஏமாற்றி திரையரங்குகளுக்கு வரச்செய்திருப்பது எந்த ஒரு terminology ஐ பாவித்து நியாயப்படுத்தினாலும் இலகு மொழிப்பிரயோகத்தில் ஏமாற்றுதல் என்றே சொல்லப்படமுடியும். அத்துடன் I AM NEW FACE OF TERROR என்று பலகுரல்கள் சொல்லுவதன்மூலம்; பலர் வன்முறையை கையிலெடுப்பதாக மக்களை நம்பசெய்ததும் ஏமாற்றுதலே.


படத்தில் கமல் கேட்பதுபோல் ஒரு கரப்பான்பூச்சி வீட்டுக்குள் வந்தால் உணவு கொடுத்து வளர்பீங்களா என்றகேள்விகளை அரசாங்கங்கள் கேட்கத்துவங்கினால் சிறை அலல்து திறந்த வெளிச்சிறை என்று அரசாங்கங்களுக்கு தலையிடி தரும் பிரச்சினை இருக்காதே.. இதையாவது ஏன் யாரும் எதிர்க்கவில்லை?

அதுமட்டுமா படம் முழுக்க வியாபித்திருக்கும் அபத்தங்கள் பற்றியும் பெரிதாக யாரும் பேசவில்லை.


  • குண்டுகள் இல்லாத பைகளை மக்கள் கூட்டம் மிக்க இடங்களில் கமல் வைக்கிறார். அதன் மூலம் சாதிக்க நினைப்பது என்ன?

  • உயரமான கட்டடத்தின் கமல் ஏறுகிறார். இலங்கையென்றால் எல்லா உயர்ந்த கட்டடங்களின் உச்சியிலும் நவீன கருவிகளுடன் இராணுவம் இருக்கும். ஆனால் பாகிஸ்த்தானுடனும் சீனாவுடன் சண்டையிட தயாராகும் இந்தியாவின் இராணுவம் இவ்வாறான பாதுகாப்பு ஓட்டைகள் மூலம் சிறுமைப்படுத்தப்பட்டுள்ளது.

  • அடிக்கடி ஒலிபரப்பாகும் பாங்கு ஒலியும், இன்ஷா அல்லாஹ் என்று சொல்வதும், கமலின் தாடியும், கமலின் பெயர் மறைக்கப்பட்டிருப்பதும் சொல்லவருவது என்ன?

  • படத்தில் 3 முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக காட்டப்பட்டிருக்கிறார்கள். ஒருவர் குஜாரத் கலவரங்களின் பின் வன்முறையை கையிலெடுப்பவர். இன்னொருவர் சொந்த மண்ணை இழந்து அதற்காக போராடும் ஜனநாயக ரீதியில் பலகட்சி அரசியல் முறையில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பலஸ்த்தீன இயக்கத்துடன் தொடர்புகளை பேணுவதாக காட்டப்படுகிறார். இவை இரண்டையும் படம் எவ்வாறு குற்றம்பிடிக்கிறது?

  • இன்னுமா கமலைப்பிடிக்கமுடியவில்லை என்று ஆத்திரப்படும் மோகன்லால் துப்பாக்கியையும் தூக்கிக்கொண்டு ஆவேசமாக செல்கின்றார். கமலின் கை குலுக்க..
இவ்வாறான இன்னும்பல அபத்தங்கள் படம் முழுக்க வியாபித்திருக்கின்றன.

இந்தப்படம் பற்றிய ஞானியின் கருத்தை வாசிக்க http://www.gnani.net/.

மொத்தத்தில் நரகாசுரன் அழிந்த நாளாக இந்துக்கள் கொண்டாடுகின்ற தீபாவளி பண்டிகையன்று நவீன நரகாசுரனான உன்னைபோல் ஒருவனும் தூக்கப்பட்டிருப்பது எமக்கு மகிழ்ச்சியே..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

ஆதவன், பேராண்மை மற்றும் 60வருட ARMY

இலங்கை இராணுவத்தின் 60ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டாங்களை முன்னிட்டு நடாத்தப்பட்ட கண்காட்சியை பார்க்கச்சென்றிருந்தேன். அதுக்கு என்னா எங்கிறீங்களா? கடைசியில பாருங்க..




















எதிர்வரும் 16ஆம் திகதியுடன் இலங்கை திரையரங்குகளைவிட்டு உன்னைப்போல் ஒருவனை தூக்க இருப்பதால் மறுநாள் உன்னைபோல் ஒருவன் பார்க்கச்சென்றேன். சின்னப்படம் என்பதால் என்னவோ; நிறைய trailer காட்டினார்கள். முக்கியமாக பேராண்மை மற்றும் ஆதவன். ஆனால் ஒரு விஷயம் பாருங்கோ.. இந்த படங்களில வாற மாதிரி ஆயுதங்கள் ஒண்டும் 60 வருஷ army கிட்ட இல்ல பாருங்கோ.. (இருந்தா வெச்சுகிட்டு காட்டாம வஞ்சகமா செய்றாங்க)

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்