Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

மதுவும் பௌத்த அரசியலும்


இலங்கை அரசியலில் ஒரு உத்தியோகபூர்வமற்ற அங்கமாக இருந்துவந்த மது இந்த ஜனாதிபதித்தேர்தலில் பேசு பொருளாக்கப்பட்டுள்ளது.

இலங்கை; அரசியல் யாப்பின் படி ஒரு பௌத்த நாடாகும். பௌத்த சாசனத்தை காப்பது அரசின் கடமையாகும். இதுவரை பல பௌத்த நண்பர்களிடம் விசாரித்ததில் ஒரு சிலர் மாத்திரம் மது பௌத்த தர்மத்தில் தடை என கூறியபோதும் பலரும் கூறும் விடயம் கொஞ்சமாக பாவிக்கலாம் என்பதே. பௌத்தத்தின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதை தெளிவாக அறியும் நிலை இதுவரை எனக்கு கிட்டவில்லை. ஆனால் எல்லோருக்கும் தெரிந்த விடயம், பௌத்த புனித நாளான பூரணை நாளில் மது விற்பது சட்ட விரோதம் என்பதே.

அமைச்சர் மேர்வின் சில்வா களனி பிரதேசத்தின் சுதந்திர்க்கட்சி அமைப்பாளரானதும், செய்த முதல் காரியம் அப்பிரதேசத்தில் இருந்த மாட்டிறைச்சிக்கடைகளை அகற்றியதே. இது தொடர்பாக COFFEE WITH LAHIRU நிகழ்ச்சியில் சாராயத்தவறணைகள் இப்பிரதேசத்தில் இருந்தபோதும் மாட்டிறைச்சிக்கடைகள் மட்டும் ஏன் அகற்றப்பட்டன என் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் "எப்பவாவது மது அருந்தலாம் கொஞ்சம் fun எடுக்கலாம்" என்றிருந்தது. (இவ்வாறான விடயங்கள் தமிழின் முதன்மை ஊடகங்களில் வெளிவரவேயில்லை. என்பது கவனிக்கத்தக்கது)

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டபின் ஜனாதிபதி ஒரு கூட்டத்தில் உரையாற்றும்போது தனது அடுத்த இலக்கு மதுவை நாட்டில் இருந்து இல்லாதொழிப்பது என்றார்.

இதன் பின், ஜெனரல் சரத் பொன்சேக்காவின் முதல் ஊடகவியலாளர் மாநாட்டில் மது தொடர்பான அவரது நிலைப்பாடு கேட்கப்பட்டது. அவரும் கொஞ்சமாக அடிக்கலாம் என்றார்.

(இக்கருத்தை அவ்ர் தெரிவித்தபின் மேர்வின் சில்வா அக்கருத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டமும் நடத்தினார் என்பது ஒரு சுவாரசியம்.)

அத்துடன் அரச தமிழ் ஊடகங்களில் பொன்சேக்காவின் கருத்துக்கெதிராக மக்கள் (முஸ்லிம்கள்) எதிர்ப்புத்தெரிவிப்பதாக காண்பிக்கப்பட்டது.

அண்மையில் எதிர்கட்சி முக்கியஸ்த்தர் மங்கள சமரவீர அன்னதான சாலையாக மாறிய அலறி மாளிகையில் வெளிநாட்டு மதுவும் தாராளமாக புழங்குவதாக குற்றஞ்சாட்டி இதுதான் மதுவை ஒழிக்கப்போவதாக கூறும் அரசின் இலட்சணமா என கேள்வியெழுப்பியிருந்தார்.

இவ்வாறான சம்பவங்கள் மது பாவனை தொடர்பாக பௌத்தம் ஒரு இறுக்கமான நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை எனக்காட்டுகிறது.

ஒரு மாதத்திற்குமுன் பிரபல பொருளியலாளர் ஹர்ஷா; 31st night உம் பூரணை தினமும் ஒன்றாக வருவதை ஞாபகமூட்டியிருந்தார். பிரபல ஹொட்டேல் வர்த்தக புள்ளியான ஹார்ப்போ மது தொடர்பாக அரசு இன்னும் இறங்கிவருவது சுற்றுலா வணிகத்திற்கு மிக அவசியமானது என்றார்.

இன்று பத்திரிகைகளில்; அரசு ஹோட்டல்களுக்கு இந்த 31st night பூரணை தினத்திற்காக விசேட அனுமதிகளை ஒரு சிறு கட்டணத்திற்கு வழங்கப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக பௌத்த கடும்போக்காளர்களிடமிருந்து இதுவரை எந்த எதிர்ப்பும் வெளியாகவில்லை என்பது கவனத்திற்குள்ளாகவேண்டிய விடயமாகும்.

இவ்வாறான நிலமையில் பௌத்தத்தின் முக்கிய விடயங்கள் மாட்டிறைச்சி, சுகமளிக்கும் ஆராதனைகள், மதமாற்ற தடை சட்டம், அத்துமீறிய / திட்டமிட்ட குடியேற்றங்கள் தானா என்ற கேள்வி உருவாகிறது.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

வேட்டைக்காரன் கருத்துக்கணிப்பு


வேட்டைக்காரன் படம் பற்றி பலவாறான விமரிசனங்கள் வருகின்றன. பதிவர்களின் கருத்துக்கள் மட்டுமல்லாது வாசகர்களினது கருத்துக்களும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும் என்பதால் வேட்டைக்காரன் கருத்துக்கணிப்ப நடாத்தப்படுகிறது. இனி தெரிவு உங்களிடம்...

(இந்த idea வருவதற்கு காரணமாகிய SShathiesh இன் பதிவுக்கு இனிய, உளம் கனிந்த, மனமார்ந்த நன்றிகள்)



Q1 வேட்டைக்காரன் படம் பார்க்க மக்கள் வந்ததேன்?

1) நாங்கள் படத்தை புறக்கணிக்கவில்லை எனக்காட்ட,

2) இராஜ் இன் பாடலுக்காக,

3) நண்பன் செய்த தவறொன்றுக்கு தண்டிக்க (கூட்டிப்போய் விட்டா சரி)

4) பண்ண வேறு வழி கிடைக்கவில்லை

5) ரோமக்கால்களுக்கு காட்சியமைப்பை ரசிக்க

6) விஜய் பாவம் (விஜய் ரசிகன் / ரசிகை)

7) அருமையான படம்

8) சன் டிவி விளம்பரம்




Q2     வேட்டைக்காரன் படத்தை நீங்கள் எங்கே பார்ப்பீர்கள் / பார்த்தீர்கள்?
1) நல்ல தியேட்டரில்
2) சாதாரண தியேட்டரில்
3) அட்டு தியேட்டரில்
4) வீட்டில் VCD இல்
5) பார்க்காமல் இருப்பதே சிறந்தது


Q3    நீங்கள் படம் பார்த்திருந்தால் உங்கள் கருத்து
1) நல்ல படம்
2) பரவாயில்லை
3) தண்டம்

உங்கள் பதில்களை பின்னூட்டமாக பதிந்துகொண்டால், முடிவை தகுந்த ஆதாரங்களுடன் அறிவிக்க வசதியாக இருக்கும்.

அணிதிரண்டு வாரீர். உங்கள் கருத்துக்களை சொல்வீர்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

ஞாயிறு செய்தித்தாள்களில் - 20 Dec 2009



தேர்தல்களின் காரணமாக; தம்புள்ள பெருளாதார மத்திய நிலையத்தில் ஏப்ரல் மாதம் முதல், ஒப்பந்தங்கள் புதுபிக்கப்படாமலேயே கடைகளை வர்த்தகர்கள் உபயோகிக்கிறார்கள் . ரூபா 12,000/- வாடகை அறவிடப்படும் இக்கடைகள் ரூபா 100,000/- வரையான வாடகைக்கு உரிமையாளர்களால் விடப்பட்டுள்ளன.

Tenancy expired, but election year moves to stay on. These trade stalls whose tenancy contracts expired in April this year continue to do business. At present the monthly rent for a stall is Rs. 12,000, but some of the tenants had reportedly sub-let their premises to others at sums ranging from Rs. 75,000 to Rs. 100,000. (The Sunday Times)


 





When asked what her future plans are Susanthika quipped: “I am toying with the idea of entering politics. I am sure if President Mahinda Rajapaksa invites me to support him in his campaign I would be more than glad to join the bandwagon. I remember on my birthday, even before my mother or my father or even any of my sisters could wish me, it was the President of this country who rang me up early morning to wish me. I will never forget that gesture of his”.  

Susanthika who has a string of world records as acclaimed titles, received Rs.5 million from the President’s Fund upon her retirement from the athletics arena. She was also given a house at the Elvitigala Flats and also has several duty free permits for vehicles. (The Sunday Times)

சுசந்திக்காவிடம் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக கேட்டபோது "நான் அரசியலுக்கு வரும் எண்ணத்தில் இருக்கிறேன். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய அழைக்கும் தருணத்தில் மிகுந்த மகிழ்ச்சியடைவேன். என் பிறந்தநாளன்று என் அம்மாவோ அப்பாவோ சகோதரிகளோ வாழ்த்து தெரிவிக்குமுன் அதிகாலையில் இந்த நாட்டின் ஜனாதிபதி தொலைபேசியில் வாழ்த்தியதை நான் இன்னும் ஞாபகம் வைத்துள்ளேன்" என்று தெரிவித்தார்.

பல சாதனைகளைப்படைத்துள்ள சுசந்திக்கா  ஓய்வுபெறும்போது  ஜனாதிபதி நிதியத்திலிருந்து ரூபா 5 மில்லியனும் எல்விட்டிகல தொடர்மாடியில் ஒரு வீடும் வாகனங்களுக்கு தீர்வையின்றி இறக்குமதி செய்யவதற்காக பல பேர்மிட்களையும் பெற்றிருந்தார்.





It was none other than Police Chief Mahinda Balasuriya who ordered that all cut-outs bearing images of political personalities are removed by his men. It follows orders from President Mahinda Rajapaksa.

Mr. Balasuriya is perhaps unaware that some of his men have done just the opposite. There is a large poster pasted on the wall of the Kohuwala Police station in support of President Rajapaksa. One might say it could have failed to catch the attention of the Policemen at Kohuwala. However, that is not the case.

Printed at the bottom of the logo are the words "Sponsored by the OIC and Staff of the Kohuwala Police Station."

"He (the OIC) is sure to get a promotion soon," said a retired senior DIG who could not contain his laughter. "In our days, the chap would have been promptly moved out. But today, the Police are part of a political party," he lamented. (The Sunday Times)


ஜனாதிபதியின் உத்தரவினையடுத்து பொலிஸ்மா அதிபர் தேர்தல் பதாதைகளை அகற்றுமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். 

கொஹுவல பொலிஸ் நிலைய சுவரில் ஒட்டப்பட்டுள்ள பதாதை இது. இப்பதாதையில் அடியில் காணப்படும் வாசகம் "அனுசரணை: OIC  மற்றும் அலுவலர்கள், கொஹுவல பொலிஸ் நிலையம்"





I am an actor

The grand old man in the game has agreed to sing. When he was asked to sing for the team with colours and a symbol he had to agree, if not he would not be in the team with the emblem at the next big one that will also take place Down South.(The Sunday Times)

இது ஒரு விளையாட்டு வீரரை பற்றிய தகவல். தெரிந்தவர்கள் / விளங்கியவர்கள் சொல்லுங்கள்





President Mahinda Rajapaksa receives the blessings of First Lady Shiranthi Rajapaksa before leaving Temple Trees at an auspicious moment for the commencement of the Presidential Elections campaign. (The Sunday Observer)

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரங்களை ஆரம்பிப்பதற்காக் அலறி மாளிகைகையிலிருந்து புறப்படும் முன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவிடம் ஆசி பெறுகிறார்.



Launching their campaign rallies, President Mahinda Rajapaksa is seen waving to the crowds outside the Elections Secretariat at Rajagiriya with the Korean good-luck talisman he carried during his successful 2005 Presidential poll campaign tied to his right hand. Pix by Gemunu Wellage and J. Weerasekera (The Sunday Times)
2005ஆம் ஆண்டு தெர்தல் பிரச்சாரங்களின்போது தன்னுடன் வைத்திருந்த கொரிய அதிஷ்ட்ட இலாஞ்சனையை தன் வலது கையில் கட்டியவாறு தேர்தல்கள் செயலகத்திற்குமுன் ஆதரவாளர்கட்கு கையசைக்கும் ஜனாதிபதி ராஜபக்ஷ




Delegates sleep during a break in an all-night plenary meeting at the UN Climate Change Conference 2009 in Copenhagen on December 19, 2009. UN Secretary-General Ban Ki-mooon praised the deal at the Copenhagen climate summit as an “essential beginning” but admitted it did not achieve all that was hoped. (The Sunday Times)
காலநிலை மாற்றம் தொடர்பான கொப்பன்ஹேகன் மாநாட்டில் இடைவேளையின்போது தூங்கும் பிரதிநிதிகள்


டோனிக்கு தடை
 நாக்பூரில் நாளை 21ஆம் திகதியும், 24ஆம் திகதியும் நடைபெறவுள்ள இலங்கை-இந்திய கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் தலைவரான டோனிக்கு தடைவிதிக்கப்பட் டுள்ளது. இவருக்கு பதிலாக இவ்விரு போட்டிகளிலும் தற்காலிகமாக கெளதம் காம்பீர்,  நியமிக்கப்பட்டுள்ளார்,.(தினகரன் வாரமஞ்சரி)

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

வேட்டைக்காரனும் கவிக்கோ ரகுமானும்


கவிக்கோ ரகுமான் தன் புத்தகத்தில் எழுதியிருக்கிறார்
"ஒரு சட்டையின் அழகு சட்டையில் வந்த துணியில் மட்டுமல்ல. சட்டைக்காக வெட்டி நீக்கப்பட்ட துணியிலும் இருக்கிறது"

யதேச்சையாக இன்று காலை இவ்வரிகளை வாசிக்கச்செய்த விதிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

விஜய் படம் பார்க்கப்போகும்போது நம்மை சில தயார்படுத்தல்கட்கு உட்படுத்தவேண்டியிருக்கிறது. முதலில் சகிப்புத்தன்மை. விஜய் சுத்தி சுத்தி அடிப்பதையும் ஆப்பு வைப்பதையும் தோட்டாக்களுக்கு லாவகமாக டாட்டா காட்டுவதையும் இடுப்பில் கைவைத்தவாறு கம்பீரமாக குதிரைச்சவாரி செய்வதையும் பஞ்ச் வசனங்களையும் சகித்துக்கொள்ள எம்மனதை பக்குவப்ப்படுத்த வேண்டும். ரஜனிக்கு இதை செய்யும் நாம் ஏன் இலங்கையில் பெண்ணெடுத்த விஜய்க்கு செய்யக்கூடாது? எனவே நான் படத்துக்கு ஆஜர்.

உலகநாடுகளில் இலங்கைத்தமிழர்கள் வேட்டைக்காரனுக்கு எதிர்ப்பை காட்டப்போவதாக பதிவுலகம் அல்லோலகல்லோலப்பட்டாலும் இங்கு இலங்கையில் எல்லா திரையரங்குகளிலும் அரங்கு நிரம்பிய காட்சிதான். வரிசையில் கூட்டம்தான்.

என்னைப்பொறுத்தவரையில் போக்கிரி அளவுக்காவது படம் இருக்கவேண்டும். அதே வகையான கதை அதே வகையான காட்சியமைப்பு. ஆனால் எதோ போக்கிரியில் இருந்தது இதில் இல்லாமல் இருப்பதை உணர்ந்தேன். (முமைத் கான் என்று யாரும் நினைக்கவேண்டாம்).

வில்லன் தமிழில் சைலன்ஸ் சொல்ல விஜய் "சாக்கடைக்கு முன் அமைதியாய் இருக்கமாட்டேன்" என உறுமினார் பாருங்கள். அட விஜய் அன்று சொன்ன சைலன்ஸ்க்கு அர்த்தம் இன்றுதான் புரிந்தது போங்க.. எனவே சாக்கடை ஊடகவியலாளர்கள் இனி விவேக்குக்கு செய்வதுபோல் எதிர்ப்பை காட்டுவார்களா?

காட்சிகள் அழுக்கில்லாமல் படமாக்கப்பட்டுள்ளது. சின்னத்தாமரை பாடலில் வரும் "என் ரோமக்கால்கள்" என்ற வரி வரும்போது அனுஷ்க்காவின் கால்களை (ரோமமில்லாத) காட்டும் படப்பிடிப்பின் நுணுக்கங்கங்கள் அருமை அருமை..

இருந்தாலும் ஸ்கூட்டியில் போகும் அனுஷ்க்கா திரும்பிப்பார்ப்பது, (அயன் ஞாபகம் வருகிறது) கண்டதும் கனவில் குடும்பம் நடாத்தி பிள்ளை குட்டிகளுடன் நிற்பது (தூம் - உதய் சோப்ரா - அலி) போன்ற நேரடியான கொப்பி பேஸ்ட்களையாவது தவிர்த்திருக்கலாம்.

என்னைப்பொறுத்தவரை விஜய் ரசிகர்கட்கு வெற்றிப்படம். விஜய் எதிரிகட்கு தோல்விப்படம்.

படம் முடிந்த பின் ரகுமானின் தத்துவம் ஞாபகம் வந்தது. படத்தில் வராத வைக்காத காட்சிகளை நினைத்தேன். 300/- க்கு படம் பரம திருப்தி..


சம்பந்தமில்லாமல் ஒரு எக்ஸ்ட்ரா பிட்
தமிழ் ரசிகர்கள் ஒருவரை புகழ்வதில் உலகுக்கே உதாரன புருஷர்கள். இந்தவாரம் ரஜனியின் சிறப்பை வெற்றி வானொலியில் ரசிகர்கள் சொன்னார்கள். அதில் ஒன்று "ரஜனியின் நாவடக்கம்". ஆம் அவர் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி. அப்படித்தான் இலங்கைத்தமிழர் ஆதரவு கூட்டத்தில் பேசினார். "30 வருஷமா வெல்ல முடியல, நீங்களெல்லாம் ஆம்பளயா?".

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

போட்டி தொடங்குமுன்னே வெற்றிய தாரைவார்த்த பொன்சேக்கா


இதுவரை காலமும் எவ்வித திருப்பங்களும் இன்றி சென்றுகொண்டிருந்த இலங்கையின் அரசியல் களம் திடீரென எதிர்பார்க்காத விதமாக பொன்சேக்காவின் அரசியல் பிரவேசம் முதல் சூடுபிடித்துள்ளது.

இலங்கையின் தற்போதைய அரசியல்; யுத்த முடிவுடன் இன ரீதியான வாக்களிப்பு நடாத்தைகள் கொண்டு பிரிக்கமுடியாததாக மாறியுள்ளது. யுத்த முடிவுவரை பயங்கரவாத பிரச்சினைக்கு தீர்வுகாண எதிர்பார்க்கப்பட்ட ஒரே நோக்கிலான வெவ்வேறு அணுகுமுறைகளின் முகாம்களுக்கிடையேதான் போட்டி இருந்தது. யுத்த முடிவுக்குப்பின் "யுத்த ரீதியான தீர்வு" முகாம்; அதிகளவான "யுத்த தீர்வு எய்தப்பட முடியாதென நம்பிய" முகாமைச்சார்ந்த வாக்காளர்களை எளிதாக ஈர்த்துக்கொண்டது.

அரசு இதுவரை ஆழம் பார்த்த மாகாணசபைத்தேர்தல்களிலெல்லாம் தன் ஆதரவாளர்களிடையேயே ஓரளவு வெறுப்பையும் சம்பாதித்துக்கொண்டது. கிழக்கு மாகாண சபத்தேரதலில் முஸ்லிமா தமிழா என்று தொடங்கப்பட்ட பிள்ளையான் ஹிஸ்புல்லாஹ் சர்ச்சை முதல் தென்மாகாண சபையில் இதுவரைதொடர்கின்ற முத்துஹெட்டிகம அனார்க்கலி சண்டைகள் வரை இந்தபோக்கு நீடித்தது. இவைமூலம் இம்மாகாண சபை தேர்தல்களில் அரசுக்கு வாக்களித்தவர்களில் ஒரு பகுதியையாயினும் அடுத்த தேர்தலில் அரசு இழக்க நேரிடும்.

இவ்வாறான நிலமையில்தான் எதிர்க்கட்சிகளுக்கு ஓரளவு நம்பிக்கையிருந்தது. இதை சரியாக கணித்த அரசாங்கம் யுத்த வெற்றிமீது மக்களுக்கு பெருமையின் சூடுதணியமின்பே ஜனாதிபதித்தேர்தலை நடாத்த தீர்மானித்தது.

ஆரம்பத்தில் ஜனாதிபதிக்கெதிராக ரணிலோ அல்லது எஸ்பியோ களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியின் வெற்றி மிகத்தெளிவானதாக கணிப்பிடப்பட்டது. (இவ்வாறான தேர்தல் ஒன்றில் தன்னை பலிக்கடாவாக்க ஒருபோதும் ரணில் நினைத்திருக்கமாட்டார் என்றே எண்ணத்தோன்றுகின்றது.)

ஆயினும் எதிர்பாராத விதமாக ஒரே அணியில் இருந்த சரத் பொன்சேக்கா ஜனாதிபதிக்கெதிராக இறக்கிவிடப்பட்டார். இதன்மூலம் யுத்த வெற்றிக்கு பிரதான பங்கு வகித்தவர் யார் என்ற போட்டியாக தேர்தல் களம் மாறியது. இதன்மூலம் பெரும்பான்மை மிக்க "யுத்த தீர்வு முகாம்" இரண்டாக பிளவுற்றது.

ஆரம்பத்தில் பொன்சேக்கா அரசியலுக்கு வருவதை இம்முகாமை ஆதரிக்கும் மக்கள் விரும்பாவிடினும், அவர்களில் பாதியளவானவர்கட்காவது பொன்சேக்காவுக்கு தகுந்த மரியாதை வழங்கப்படவில்லை என்ற மனவருத்தம் இருந்தது. இது அவர் மீது களனி விஹாரையில் வைத்து சிலர் கூக்குரலிட்டதுடன் அதிகரித்தது. இதுதான் அவர்மீது ஊடகங்களின் கவனம் குவியவும் காரணமாகியது.

இம்மனப்பாங்கை அரசு சரியாக புரிந்துகொண்டது. அன்றுமுதல் அரசு பொன்சேக்காவை விமர்சிப்பதை குறைத்து அவர் ஒரு அதிகார ஆசை மிக்கவராக காண்பிப்பதற்கு மொத்த அரச அதிகாரங்களையும் பாவிக்கத்தொடங்கியது.

இருந்தும் இது ஒன்றுமட்டும் போதாது என்பதும் தெளிவானது. எனவே "மக்கள் எதிர்பார்ப்பு" என்ற தலைப்பிலான விளம்பரங்களை முடுக்கிவிலப்பட்டன. பொருட்களின் விலை குறைப்பு மற்றும் எதிர் முகாம் பிரபலங்கள் தத்து எடுக்கப்பட்டமை என்பன அரசு பொன்சேக்காவை எவ்வளவு தூரம் மதிப்பிட்டிருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.

அடிக்க வந்தவனுக்கு பொல்லைக்கொடுத்த கதையாக நேற்று பொன்சேக்கா நடாத்திய ஊடகவியலாளர் மாநாடு அமைந்தது. யுத்த குற்றங்களை அரசின்மீது முக்கியமாக பாதுக்காப்புச்செயலாளர்மீது பொன்சேக்கா சுமத்தியதாக வந்த செய்திகளை தொடர்ந்து அதுவரை இருந்த சமபல போட்டி; ஒரேயடியாக ஜனாதிபதிக்கு இலகுவான போட்டியாக மாற்றம்பெற்றது. இனிவரும்காலத்தில் தன் சுய நலத்துக்காக படைவீரர்களுக்கு எதிராக பொன்சேக்கா கருத்து தெரிவிப்பதாக மக்கள் கருதுவது அவர்மீது நிச்சயமாக சந்தேகத்தை கிளப்பும். அதை வலுவாக்குவதுதான் இனி ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரமுமாகவும் அமையும்.

இதை இன்று எதிர்க்கட்சிகள் உணர்ந்து; மறுப்புத்தெரிவிப்பதற்காக ஊடகவியலாளர் மாநாடு நடாத்தப்பட்ட்போதும் மக்கள் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்பது சந்தேகமே..

இதேவேளை எதிர்கட்சிகளுக்கு பலமான வேட்பாளர் கிடைத்தும் அவரை சரியாக சந்தைப்படுத்த முடியாததாக எதிர்க்கட்சி அணி இருக்கிறது. முக்கியமாக அவர்களுக்கு தன் பலமும் பலவீனமும் தெரியவில்லை என்பது நிதர்சனமாக தெரிகிறது. பொன்சேக்காவுக்கு தகுந்த இடம் வழங்கப்படவில்லை என்ற பிரச்சாரத்தை விடுத்து ஏனைய விடயங்களில் கவனஞ்செலுத்தினால் அவர்களால் பெரும்பான்மையான "யுத்த வெற்றிக்கு ஆதரவான அணியை" இரண்டாக பிளவுபடுத்த முடியாதுபோகும். அவ்வாறான பிளவு ஒன்று இடம்பெறாதவரை பொன்சேக்காவுக்கு வாய்ப்புகளே இல்லை. இதைவைத்து கணிக்கும்போது பொன்சேக்கா நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டுடன் போட்டிக்கு முதலேயே வெற்றியை தாரைவார்த்துவிட்டார் எனலாம். ஆயினும் எதிர்வரும் ஒருமாத அவகாசத்தில் ஏதாவது வழியொன்றையும் பிரயோகிக்கலாம்.

இதேவேளை தமிழ் ஊடகங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்கு பற்றி அதிகளவு பேசப்படுகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் நிச்சயமாக பெருவாரியாக இத்தேர்தலில் வாக்களிப்பதிலிருந்து தவிர்ந்து கொள்வார்கள். அத்துடன் இச்சந்தர்ப்பத்தில் பிரதான வேட்பாளர்களில் எவராயினும் ஒருவருக்கு ஆதரவு வழங்குவது அதன் ஆதரவுத்தளத்தில் நிச்சயமாக ஒருபின்னடைவைத்தரும். இன்னும் பொன்சேக்காவுக்கு ஆதரவு வழங்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவெடுப்பதும் அரசுக்கு உதவிசெய்வதாக அமையும். அவ்வாறான கூட்டு ஒன்று இடம்பெறும் சமயத்தில் எதிர்கட்சிகளின் முகாமை புலிகளின் முகாமாக பெயரிடுவதும் நம்பவைப்பதும் அரசுக்கு மிக எளிதானதாகும்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

இனியாவது பயனுற பதிவெழுதுவோம்..



இலங்கை பதிவர்கள் கச்சதீவு விடயத்தில் கண்மூடிய பூனையாக இருப்பது ஏன்?


இந்திய தொடரில் நடுவர்களின் குழறுபடி! கண்டுகொள்ளாத இந்திய வலைப்பதிவர்கள்

நேற்று இலங்கை அணியுடன் டுவன்டி 20 போட்டியில் இந்தியா தோற்றுப்போனது. இந்தபோட்டியிலும் நடுவர்களின் தரம் கேள்விக்குரியதாயினும் இந்திய வீரர்களால் இலங்கைக்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை.
எவ்வாறாயினும் இந்தியாவில் நடப்பதே டுவன்டி 20க்கு ஒரு விஷேசம். தென்னாபிரிக்க, இந்திய மண்ணில் ரசிகர்களும் கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபைகளும்; ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் இப்போட்டிகளுக்கு மிகுந்த ஆதரவு வழங்கிவருகின்றனர்.
இதே இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபையே டெஸ்ட் கிரிக்கட்டுக்கும் ஈமைக்கிரியைகளை நடாத்த தயாராவதுபோல் தோன்றுகின்றது.

முதல் டெஸ்ட் போட்டியில் பொருத்தமற்ற ஆடுகளம், ரிபரல் சிஸ்டத்துக்கு இந்திய வீரர்கள் ஆதரவினமை, அதனை காரணம்காட்டி அம்முறைமையை இலங்கைத்தொடரில் பிரயோகிக்காமை, இதை இந்தியாவுக்கு சாதகமாக்கிய நடுவர்களின் குருட்டு முடிவுகள் என எல்லாமே இந்திய கிரிக்கட் சபையின் professionalismஐ கேள்விக்குள்ளாக்குகிறது.
இதேவேளை ஸ்டீவ் பக்னருக்கு எதிராக கொதித்தெழுந்தவர்கள்

இதையெல்லாம் மௌனிகளாக பார்த்துக்கொண்டிருப்பது இந்தியர்களின் மனநிலையை படம்பிடித்துக்காட்டுகின்றது.







நேற்று போட்டி முடிந்தபின் ITN இலும் அதன்பின் Eye Channel இலும் இலங்கை கடற்படையின் 58ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு விவரண நிகழ்ச்சிகள் காட்டப்பட்டன. இதில் இலங்கை கடற்படை பாவிக்கும் நவீன தொழிநுட்பங்கள் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது.

இதன்போது ரேடார் திரையில் 60க்கும் மேற்பட்ட இந்திய வள்ளங்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறுவது தெளிவாக தெரிந்தது.

இலங்கையின் மூவின ஏழை மீனவர்கட்குச்சொந்தமான (முக்கியமாக வடமேற்கு பகுதியில் செறிந்துவாழும் தமிழ் பேசும் மக்களுக்கு சொந்தமான ) இலங்கையின் வடமேற்கு பகுதி மீன்வளம் இந்தியமீனவர்களால் அபகரிக்கப்படுவதை தமிழ்நாட்டு மீனவர்கள் கச்சதீவு பற்றி பேசி நியாயப்படுத்துகிறார்கள்! இந்த மீன்வள திருட்டுக்கு ஆதரவாக இந்திய வலைபூ எழுத்தாளர்கள் அதிகளவு எழுதியபோதும் அதற்கு எதிராக எமது நியாயத்தை உரத்துச்சொல்ல இலங்கயின் எந்தப்பதிவரும் முன்வராதது வெட்கக்கேடாகும். அரசாங்கமோ புலிகளோ இந்திய மீனவர்களின் இப்பகல் கொள்ளையை அனுமதித்ததில்லை என்பது இங்கு கவனத்தில் கொள்ளப்படவேண்டும்!. BBC இல் இந்தியமீனவர்கள் புலிகளால் கைதுசெய்யப்பட்டனர் என செய்திகள் வெளிவந்திருந்தன என்பதை ஆதாரமாக நான் தெரிவிக்க விரும்புகிறேன்.

தமிழ்நாட்டு மீனவர்களின் கொள்ளையை விமர்சிக்காமல் இருப்பதன்மூலம் இலங்கையின் தமிழ்மக்கட்கு சில சலுகைகளை பெற்றுத்தர இலங்கப்பதிவர்கள் நாடினால் அது முட்டாள்தனமானதும் வெட்கக்கேடானதுமாகும்.

நடுவர்கள் விடயத்தில் இந்திய வலைப்பூ எழுத்தாளர்களின் மௌனமும் இந்திய மீனவர்களின் கடற்கொள்ளை விடயத்தில் இலங்கை வலைப்பதிவர்களின் மௌனமும் வலைப்பதிவர்களின் நாணயத்திலும் நியாயத்திலும் கேள்வியெளுப்புகிறது.

இனியாவது பயனுற பதிவெழுதுவோம்..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

சம்பளம் 25,000/- ++


சில மாதங்களுக்கு முன் வீரகேசரி பத்திரிகையில் வெளியான விளம்பரம் ஒன்றை  Personal Secretry என்றால் யார்?  என்ற தலைப்பில்  தந்திருதேன். 

சென்ற ஞாயிறு The Island இல் வெளியான விளம்பரம் கீழே..

இளம் பெண் உதவியாளரை இந்த இளம் ஒண்டிக்கட்டை வர்த்தகர் தேடுகிறார். சம்பளம் 25,000/- (குறைந்தது). உணவுடன் சுடுநீர் வசதி, சலவை இயந்திரம் தொலைக்காட்சி வசதிகள் கொண்ட தங்குமிடமும் பெக்கேஜ் இல் அடங்குகிறது! 

இவ்வாறான விளம்பரத்தை வெறும் பணம் உழைக்கும் நோக்கத்திற்காக வெளியிடும் பத்திரிகை அரசியல் வாதிகளை சாடுகிறது. பத்திரிகை சுதந்திரத்துக்கு ஜேவிபி பத்வா தடை என்று தலைப்பும் எழுதுகிறது.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

பாபர் மசூதி உடைக்கப்பட்ட நாள்















இன்று பாபர் மசூதி உடைக்கப்பட்ட நாள்.

இது தொடர்பாக இயக்குனர் அமீர் கடந்த வருடம் குமுத்த்திற்கு அளித்திருந்த பேட்டியின் ஒரு பகுதி..

ஈழப் பிரச்னைக்கு நான், நீ எனப் போட்டி போட்டுக்கொண்டு குரல் கொடுத்துப் போராடியவர்கள், நம் நாட்டில் நடந்த மும்பைத் தாக்குதலுக்குக் குரல் கொடுத்துப் போராடவில்லை. மும்பைத் தாக்குதலில் கூட பணக்காரர்கள் இருந்த ஹோட்டலில் நடந்த தாக்குதல் பற்றிதான் செய்திகள் பெரிதாக வந்தன. ரயில் நிலையத்தில் சுடப்பட்டு இறந்த அப்பாவி ஏழைகளைப் பற்றி யாரும் பேசவில்லை. இந்தத் தாக்குதலுக்காக பதவியை ராஜினாமா செய்தவர்கள் குஜராத் கலவரத்தின்போது ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு ஏன் பொறுபேற்கவில்லை? இன்றைக்கும் டிசம்பர் ஆறாம் தேதி வந்தால் நம்மை நடுரோட்டில் உட்கார வைத்து உடைமைகளை அவிழ்த்து போலீஸ் சோதனை செய்கிறார்களே. அந்த பாபர் மசூதியை இடித்த போது ஏன் யாரும் ராஜினாமா செய்யவில்லை? அப்போது நடந்த கலவரத்தில் எத்தனை ஆயிரம் மக்கள் பலியா-னார்கள்? இலங்கையில் நடக்கும் அநியாயத்தைச் சொல்லும் போது, நம் நாட்டில் நடக்கும் அநியாயங்களையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.

ஒவ்வொரு இந்திய-னுக்கும் இதைக் கண்டிக்கும் பொறுப்பு உள்ளது. இந்த சுதந்திரம், உரிமை கூட இல்லை-யென்றால் வாழ்வது எதற்கு? குமுதம் 31.12.2008

இவ்வொரு வருட காலத்தில் என்ன மாற்றம் இடம்பெற்றுள்ளது என்று இந்திய வாசகர்கள்தான் சொல்ல வேண்டும்..

பாபர் மசூதி உடைக்கப்படும் படங்களைக்காண..
பாபர் மசூதி இடிப்பு விசாரணை அறிக்கை தாக்கல் - BBC
மறக்க முடியாத பாபர் மசூதி - ஒரு பார்வைதமிழகம் முழுவதும் சுமார் 40 இடங்களில் டிசம்பர் 6 போராட்டம்!

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்